Thursday, October 28, 2004

DRDO வெள்ளை யானையா?

சமீபத்தில் திண்ணையில் வெளியான கட்டுரை

DRDO'ல் அரசு செய்யும் முதலீட்டிற்கு தக்க பலன்கள் கிட்டவில்லை என்று அவுட்லுக்கில் 18 அக்டோபர் 04'ல் எழுதியிருக்கின்றார்கள். கட்டுரையை இணையத்திலும் படிக்கலாம்.

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ரவி கண்ணா 'மகா வாயு சக்தி' என்னும் பயிற்சியில் ஈடுபடும்போது, ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளாக இறக்கின்றார். இவ்விபத்துக்கு காரணம் என்னவென்று விசாரணை பின்னர் நடந்தது. 1000 பவுண்டு குண்டுகளில் பொருத்தப்பட்ட ப்யூஸ்தான் காரணமென்று கண்டுபிடித்தார்கள். பயிற்சியில் மாதிரி இலக்கை நோக்கி கண்ணா இக்குண்டினை வீச, குண்டு விமானத்தின் உள்ளேயே வெடித்து விட்டது. இந்த ப்யூஸை உற்பத்தி செய்தது பூனாவிலுள்ள DRDO. அவுட்லுக் பத்திரிக்கை மேலும் கூறுவது:

1. FBRN-4I என்றழைக்கப்படும் அந்த ப்யூஸில் உணர்வான்கள் (sensors) செயல்படவில்லை
2. பாதுகாப்பின்மை அல்லது அபாய சுட்டுவான்கள் (unsafe indicators) இல்லை
3. பழைய சோவியத் ப்யூஸை காப்பியடித்தது

DRDO வருடத்திற்கு 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டில், 51 அதி நவீன சோதனைச் சாலைகளை கொண்ட DRDO இன்றுவரை சாதித்தது என்ன? மிக முக்கியமான குற்றச்சாட்டு அடுத்து வருகின்றது. 1958'ல் ஆரம்பிக்கப்பட்ட DRDO'ன் தனது முக்கிய குறிக்கோளான 'அன்னிய ஆயுத இறக்குமதி குறைக்க வேண்டும்' என்பதையே மறந்து விட்டது என்று அவுட்லுக் கட்டுரை கூறுகின்றது.

இந்தியாவின் இவ்வருட இராணுவ பட்ஜெட்டான ரூ.77,000 கோடியில் பாதிக்கும் மேல் தளவாளங்கள் இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் அடுத்த 15 வருடங்களில் ரூ.1,20,000 கோடி பெறுமான இராணுவ கருவிகள் மற்றும் தளவாடங்கள் வாங்க அனுமதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. அப்படியெனில் DRDO என்னும் வெள்ளை யானை ஏன் அரசாங்கம் கட்டியழ வேண்டுமென்று கேள்வியையும் எழுப்புகின்றது. DRDO'வை தனியார் மயமாக்க யோசனையையும் முன் வைக்கின்றது.
DRDO'ல் பிரச்சினைகளே இல்லை என்று நற்சான்றிதழ் வழங்கிவிட முடியாது.
அதே போல் DRDO'வே தேவையேயில்லை அல்லது தனியார் மயமாக்கி விடுங்கள் என்ற வாதமும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அமெரிக்காவில் தயாரான சாதாரண திருப்புளி குறைந்தது $5 இருக்கும். ஆனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதே திருப்புளி வெறும் 99 செண்ட்தான். இதே நிலைதான் ஆயுதங்களுக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதம், இறக்குமதி செய்யப்படுவதை விட விலை அதிகம்தான். அதனால் ஆயுதங்களை இறக்குமதி மட்டுமே செய்ய முடியுமா?

இறக்குமதியும், தனியார் மயமாக்கலும்

கேளா கொடுத்து வேளா வாங்கினோம் என்று கப்பற் படையில் கிண்டலாக கூறுவார்கள். இந்தியில் வாழைப்பழத்தை கேளா என்பார்கள். வேளா என்பது ஒருவகை நீர்மூழ்கி (Vela class submarines).முன்னால் சோவியத் யூனியனுக்கும் நமக்கும் இருந்த புரிதல் காரணத்தால் கடனுக்கே, இராணுவ சமாச்சாரம் வாங்க முடிந்தது என்பதைதான் கூடுதல் நகைச்சுவையுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் இன்று நிலைமையோ தலை கீழ். கப்பலிலிருந்து வீசப்படும் P வகை ஏவுகணைகளுக்கு (SSM) புதிய ரேடார் தேவைப்பட்டது. ரஷ்யாவை அணுகியபோது அவர்கள் சொன்ன விலையில் கப்பற் படைக்கு தலை கிர்ரடித்து விட்டது. ஒரு ரேடார் ஒரு லட்சம் டாலர்களை விட அதிகம். அதுவும் முழுக்காசையும் மொத்தமாக என்ணி வைக்கச் சொல்லி விட்டது. இறக்குமதி செய்வதினால் விளையும் அபாயம் இது. மைக்ரோசாப்டில் மென்பொருள் வாங்கினால், நம்மை அறியாமல் அந்த நிறுவனத்திடம் நாம் அடமானம் போகின்றோம். நாளை அவர்கள் வேறு மென்பொருளுக்கு மாறச் சொன்னால் மாறத்தான் வேண்டும். ஏனெனில் முதலீடு செய்தாகி விட்டதே? இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து ராணுவ தளவாடங்களுக்கும் இது பொருந்தும். எவ்வளவு நாட்கள்தான் இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளையே நம்பிக்கொண்டு நாட்களை ஓட்டுவது?

சரி 'நமக்கு நாமே' என்ற திட்டத்தை செயல்படுத்தி, DRDO'வை தனியார் மயமும் ஆக்குவோம். அயல் நாட்டிற்கு புலம் பெயரும் இளம் விஞ்ஞானிகள் இந்தியாவிலேயே தங்கி விடுவார்களா? இந்தியாவின் பாதுகாப்பை தனியார் மயமாக்கலாமா? அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அனைத்துமே தனியார் மயம்தானே போன்ற கேள்விகளில் நியாயம் தென்படும். மற்ற நாடுகளில் இருக்கும் தனியார் நிறுவனங்களின் தணிக்கை இந்தியாவில் இல்லை. இருக்கும் தணிக்கைகளும் வெறும் பேப்பர் ஆணைகளாகவும், அதிகார மட்டத்தில் சிலருக்கு வரும்படி வருவதற்கு உதவும் வகையில் தான் உள்ளன. இந்திய பாதுகாப்புக்கு எப்படி வெறும் இறக்குமதி பயன்படாதோ அதே போல் முற்றிலும் தனியார் மயமாக்குதலும் உதவாது. தெளிவான விதிகள் ஏற்படுத்தாவரை உடனடி, முற்றிலும் தனியார் மயமாக்குவது விஷப்பரீட்சையாகவே முடியலாம். ஆனால் தனியார் நிறுவனங்களை இராணுவத் தளவாடத் தயாரிப்பிற்கு தேவை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக ஏவுகணை தயாரிப்பில் ரேடாரையோ அல்லது வேறு உபகரணங்களையோ தயாரிக்குமாறு சொல்லலாம். இது கண்டிப்பாக தயாரிப்பை துரிதப்படுத்த உதவும். GSLV ராக்கெட் இஞ்சின்கள் தயாரிப்பில் கோத்ரெஜ் மற்றும் Machine Tools and Reconditioning (MTAR) நிறுவனங்கள் ISRO'விற்கு உதவி செய்கின்றன.

ஆனால் அமெரிக்காவில் உள்ள ஏற்றுமதி/இறக்குமதி விதிகள் பற்றி தெரியுமா? சூப்பர் கணிணிகளை இந்தியாவிற்கு தரக் கூடாது என்று தனியார் நிறுவனங்களுக்கு தடா போட்டிருக்கின்றார்கள். ஏனென்றால் அக்கணிணிகள் கல்விக்கு மட்டுமின்றி அணு ஆயுத திட்டத்திற்கு இந்தியா பயன்படுத்தும் என்று காரணம் கற்பிக்கப்பட்டது. கடைசியில் நடந்தது என்ன? 2003'ல் பூனாவின் C-DAC (Centre for the Development of Advanced Computing) நிறுவனம் பரம் பத்மா (Param Padma) எனப்படும் சூப்பர் கணிணியை கண்டுபிடித்தது. அணுகுண்டு சோதனையில் இந்தியா சேகரித்த தகவல்களை இது போன்ற சூப்பர் கணிணிகளில் உள்ளீடு செய்து ஆராய்ச்சி செய்யலாம். வரும் நாட்களில் பாலைவனத்தில் அணுகுண்டு வெடித்துதான் சோதனை செய்ய வேண்டுமென்பது இருக்காது.

மிகுந்த தட்பத்தை உண்டு பண்ணும் தொழில்நுட்பத்தை (Cryogenic Technology) நமக்குத் தரக் கூடாதென்று அமெரிக்கா போட்ட கட்டளைக்கு ரஷ்யா தலை வணங்கியது. ஏன்? GSLV என்னும் சாடிலைட் ஏவ உதவும் ராக்கெட்டை பயன்படுத்தி நாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்து விடுவோமென்ற பயம். 2005'ல் இவ்வித ராக்கெட்டை நாமே தயாரிக்க முடியுமென்ற நிலையில் இருப்பதாக ISRO சொல்கின்றது. அமெரிக்காவின் தடை நமக்கு அதீத உத்வேகம் தந்ததை மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இதேபோல் DRDO'வின் திட்டங்கள் நிறைவேறினால் இந்தியா பாதுகாப்புத்துறையில் தன்னிறைவடைந்துவிடும். ஆயுத இடைத்தரகர்களின் லாபி இதை சுத்தமாக விரும்பவில்லை.

DRDO'வின் பிரச்சினைகள்

முன்னாள் தரைப்படை தலைவரான ஜெனரல் எஸ்.ஆர். சௌத்திரி கூறுவதாவது:"DRDO பேராசை நோக்கம் கொண்டிருக்கின்றது. மேலும் பயன்பாட்டாளரையும், DRDO'வையும் இயைந்து இயக்கும் சக்தி இல்லை." இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. DRDO மற்றும் NSTL (Naval Scientific and Technological Laboratory) போன்ற நிறுவனங்களுடன் எனக்கு ஓரளவு பரிச்சயமுண்டு. திட்டங்கள் வகுக்கப்பட்டவுடன் அவற்றை செயல்படுத்துவதில் இந்நிறுவனங்கள் பயன்பாட்டாளர்களுடன் ஒருமித்து செயல்படுவதில்லை. இது வெறும் 'சிவிலியன்' மற்றும் 'மிலிட்டரிக்காரன்' வேற்றுமையென்று ஒதுக்கிவிட முடியாது.

தனது வலைப்பூவில் வெங்கட் அவுட்லுக்கின் கட்டுரையை அலச ஆரம்பித்து இருக்கின்றார். முப்படைகளிள் மற்றும் DRDO அதிகாரிகள் மற்றும் அகங்காரம் (Ego) குறித்து எழுதியுள்ளார். மிலிட்டரிக்காரனிடம் இயல்பாகவே கொஞ்சம் Ego அதிகம்தான். ஆனால் இத்தைய திட்டங்களில் பெரும்பாலும் அனுபவமிக்க இராணுவத்தின் உயரதிகாரிகளே இருப்பார்கள். நாட்டின் தன்னிறைவுக்காக நடத்தப்படும் இத்தகைய திட்டங்களில் ஈகோ ஒரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. கப்பல் மராமத்து (Naval Dockyard) செய்யும் இடங்களில் வேலை பார்த்த அனுபவத்தில் சொல்கின்றேன். தெளிவான புரிதலை ஏற்படுத்திக் கொண்டால் சிவிலியன்கள் ஒத்துழைப்பு அபரிமிதமாக இருக்கும். நாட்டிற்காக உழைக்கின்றோம் என்ற தேசப் பற்று ஒன்று போதும். தேவையில்லாத ஈகோ பறந்து விடும்.

கடற்படையின் தரை விட்டு தரை பாயும் ரஷ்ய ஏவுகணைகள் இன்றைக்கு ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்டவை. ரஷ்ய விதிகளின் படி இந்த ஏவுகணைகளின் வாழ்க்கை (Shelf Life Period) ஏறத்தாழ முடிந்து விட்டது. கடற்படையில் இரண்டு தளங்களில் இந்த ஏவுகணைகள் அனைத்தும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். சோதனையின் போது NAI எனப்படும் (Naval Armament Inspectorate) தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் உடனிருப்பார்கள். ஆய்வாளர்களில் கடற்படை அதிகாரிகளும், சிவிலியன் அதிகாரிகளும் அடங்குவர். ஆதலால் தரக்கட்டுப்பாட்டு சோதனையில் வெற்றி பெறும் ஏவுகணைகளே கப்பலில் பொருத்தப்படும். பேப்பர் விதிகளின் படி வாழ்க்கை முடிந்த இந்த ஏவுகணைகள் சோதனை ஓட்டத்தில் பழுதுகளின்றி தேர்வாகியது. ரஷ்யாவின் உதவியுடன் அனைத்து ஏவுகணைகளுக்கும் மறுவாழ்வு (Life Extension) அளிக்க முடிவெடுக்கப்பட்டது. பயன்படுத்தப்படாமல் ஹேங்கரில் இருப்பினும், நுட்பமான சோதனைகளைக் கடந்தாலும், ஏவுகணைகளின் மூலப்பொருள் சோதனைக்கு (Material Test) உட்படுத்த முடிவெடுக்கப்பட்டது. DRDO'வின் உதவி நாடப்பட்டது. மிகவும் உயர்ந்த பதவியிலிருந்த DRDO அதிகாரி பலமுறை வந்து சென்றார். அவரின் குறிக்கோளெல்லால் இத்திட்டதிற்கான ஒதுக்கப்பட்ட தொகையினை செலவுக்கணக்கு காட்டுவதில்தான். உச்சக்கட்ட கோபத்தை அடக்கி கேள்விகள் கேட்டால் புரிந்து கொள்ள கடினமான தூய வேதியியல் காரணங்கள் சொல்வார். கடைசியில் ஏவுகணைகள் மூலப் பொருள் சோதனைகளில் வெற்றி பெற்றதாய் கூறினார். எந்த விதமான சோதனைகள் செய்யப்பட்டன? விளைவுகள் என்ன? எவ்வித காரணிகள் அடைப்படையாய் எடுத்துக் கொள்ளப்பட்டன? ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்த ஒரு காரணத்தால் DRDO என்னும் ஒட்டு மொத்த நிறுவனத்தையே குறை சொல்ல முடியாதுதான்.

ஆயினும் DRDO ஒரு வெற்று வேட்டு என்று ஒதுக்கி விடவும் முடியாது. 1958'ல் தரைப்படையின் TDE (Technical Development Establishment), DTDP (Directorate of Technical Development & Production), DSO (Defence Science Organisation) போன்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து DRDO உருவாக்கப்பட்டது. இன்று சுமார் 5000 விஞ்ஞானிகள் மற்றும் 25,000 தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பிருமாண்டமாய் DRDO வளர்ந்து நிற்கின்றது. விண்கலன்கள், வெடிப்பொருட்கள், மின்ணுவியல், போர் வாகனங்கள், மின்னணு கருவிகள், ஏவுகணைகள், அதி நவீன கணிணியல், கடற்படை சாதனங்கள், வாழ்வியல், தகவல் தொழில் நுட்பம் மற்றும் விவசாயத் துரை என்று DRDO பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை சிரத்தையாக செய்து வருகின்றது.

DRDO'வின் தொலை நோக்குப் பார்வையும் (Vision), செயல் படுத்தும் நடைமுறையும் (Mission) படிக்க மிகவும் சிறப்பாக இருக்கின்றது. ஆனால் நிதர்சனத்தில் குறைபாடுகள் உள்ளதை மறுக்கவும் முடியாது. உதாரணமாக ஜெனரல் சவுத்திரியின் ஆதங்கத்தை எடுத்துக் கொள்வோம். பயன்பாட்டாளர்களையும், DRDO'வையும் இயைந்து பணி புரிய தடையாக உள்ளது எது? தவறு யாருடையது? NSTL விசாகப்பட்டினம் நிறுவனத்தை நடத்திச் செல்பவர் அட்மிரல் மொகப்பத்ரா. இவ்வாறு முக்கியமான உயர்பதவிகளில் அனுபவமிக்க, சிவிலியன்களை புரிந்த இராணுவ அதிகாரிகளை நியமித்தால் குழப்பங்கள் குறையலாம். முன்னேறிய நாடுகள் கடை பிடிக்கும் கொள்கையைத்தான் கூறுகின்றேன். பாதுகாப்புத்துறை மந்திரி, செயளாலர் போன்ற பதவிகளுக்கு, பதவி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிக்கலாம். முக்கியமான திட்டங்களில் ஒருங்கிணைப்பாளர்களாகவும் இவர்களின் சேவை பயன்படுத்தப்படலாம்.

அர்ஜூன் டாங்குகள்

அவுட்லுக்கில் கூறியபடி தரைப்படை 1983'ல் குறைந்த எடை டாங்குகள் தேவையென்று கூறியது. பின்னர் இரு வருடங்களில் தேவையில்லையென்று கூறிவிட்டது. 1993'ல் மீண்டும் த்ரைபடை இக்கருத்தையே உறுதிப்படுத்த, DRDO தலைவரும் ஒத்துக்கொண்டார். 1995'ல் தரை சோதனைகளுக்குப் பின்னரே DRDO இத்திட்டத்தைக் கைவிட்டது. இந்தியாவின் உயரிய தணிக்கை நிறுவனமான Comptroller and Auditor General (CAG), DRDO'வை தேவையின்றி செலவு செய்ததற்காக கடுமையாக இடித்துரைத்தது. இதற்காக யாரும் தண்டிக்கப்படவோ குறைந்தபட்சம் கண்டிக்கப்படவோ இல்லையென்பதுதான் வேதனை தரும் விடயம். நமது ஜனநாயகத்தில் இவையெல்லாம் சகஜமானது என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. இரண்டு வருடம் கழித்து CAG கருத்தை ஆமோதித்த பார்லிமெண்ட் குழுவொன்று, முப்படைகளையும் கண்டிக்கத் தயங்கவில்லை. வெறும் துண்டுப் பிரசுரங்களை எடுத்துக் கொண்டு, DRDO'விடம் கொடுத்தால் விளைவுகள் மோசமானதாகத்தானிருக்கும் என்றது. இக்காரணங்களால் வெறும் DRDO'வை குற்றங் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.

அர்ஜூன் டாங்குகளைப் பற்றி அவுட்லுக்கில் கூறப்பட்ட கருத்துகளில் உண்மை இல்லாமல் இல்லை. இந்த டாங்குகளின் எடை அதிகமென்று முதல் குற்றச்சாட்டு. உண்மைதான். 58.5 டன் எடையிருக்க வேண்டியது 61.5 டன் ஆகிவிட்டது. ஜெர்மனியிலிருந்து தருவிக்கப்பட்ட இஞ்சினால் அவதானிக்கப்பட்ட முழு வேகம் தரமுடியவில்லை. மேலும் எடை கூடிய காரனத்தால் அவற்றை பாலங்கள் மூலம் குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு எடுத்துப் போக முடியாதென்று தரைப்படை கூறுகின்றது. 1974'ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் பலமுறை தாமதப்பட்டது. இன்றும் டாங்கிகளின் முழு உற்பத்தித்திறனை DRDO எட்டவில்லை. தாமதங்களினால் விளைந்த அதீத செலவினங்கள் யானையைக் கட்டி தீனி போடுகின்றோமே என்று நினைக்குமளவிற்கு போய்விட்டது. நடுவில் பாகிஸ்தான் உக்ரைனிடமிருந்து T-84 டாங்குகளை வாங்க, இந்தியாவிற்கு வேறு வழியின்றி T--90 டாங்குகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க வேண்டியதாகி விட்டது. பீஷ்மா என்று பெயரிடப்பட்ட இந்த டாங்குகள் அதிநவீனமானது. எடையோ 48.5 டன்கள் மட்டுமே.

மேலும் அர்ஜூனின் சோதனை ஓட்டத்தில் பல்வேறு குறைபாடுகளை தரைப்படை பட்டியலிட்டது. நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். அர்ஜூனைப் போலவே ஜெர்மனிக்கு லெப்பேர்டு - II (Leopard II) டாங்குகளை தயாரிக்க ஆன காலம் மற்றும் செலவு என்ன? மேலும் பணம் ஒதுக்குவது, திட்டத்தை விரைந்து நடத்த ஒத்துழைப்பென்று ஜெர்மனியின் கொள்கைகளை இந்திய அரசாங்கம் பின்பற்றியதா?

இன்று கையில் ஒரு டாங்கு உள்ளது; ஆனால் குறைபாடுகளுடன். You will have to live with ugly baby என்றில்லாமல், குறைபாடுகளை உடனடியாகக் களைவோம். T-90 டாங்குகளின் இறக்குமதி இடைத்தீர்வுதானென்று அறிவோம். பராமரிக்கும் நேரம் (Maintenance Time) அர்ஜூன் டாங்குகளில் அதிகமென்ற தரைப் படையின் குற்றச்சாட்டில் எவ்வளவு வலுவுள்ளதென்றும் தெரியவில்லை. முழு உற்பத்தி திறனை எட்டியபின்தான் இக்குறைப்பாடைப் பற்றி பேச முடியும். முதலில் DRDO குறைகளை நிவர்த்தி செய்ய முடுக்கி விடப்பட வேண்டும்.

Tejas எனப்படும் LCA திட்டம்

அவுட்லுக்கின் அடுத்த பெரிய விமர்சனம் Tejas எனப்படும் LCA (Light Combat Aircraft) பற்றியது. LCA என்பது உலகிலேயே மிகச் சிறிய, குறைந்த எடை கொண்ட, பன்முனை தாக்குதலுக்காக உருவாக்கப்பட்ட விமானம். DRDO' இணைய தளம் தரும் தகவலின்படி 1983'ல் கருக்கொண்ட இத்திட்டத்தின் தேவைகளை ஆவணமாக்கும் போது 1989 ஆகிவிட்டது. ஒரு திட்டத்தின் தேவைகளை நிர்ணயிக்க ஆறு ஆண்டுகளா? இதற்கு DRDO'வை மட்டும் பொறுப்பாக்க முடியுமா? ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாய் வந்த LCA'விற்கு அரசாங்கம் தந்த முக்கியத்துவமென்ன? 04 ஜனவரி 2001'ல் சுமார் பதினெட்டு நிமிடங்களுக்கு LCA'வின் சோதனையோட்டம் வெற்றிகரமாக நடந்தது. விமானப்படையின் தலைமைத் தளபதி எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியதாய் அவுட்லுக்கில் பதிவானது,"LCA கொஞ்சம் மெதுவாக நகருகின்றது. காவேரி எஞ்சினை நடுமுறை தரக்கட்டுப்பாடு மறு ஆய்வு (mid-term quality review) செய்யப்பட கோரியிருக்கின்றேன்."

தரைப்படையின் அர்ஜூன் டாங்குகள் சந்தித்த எதிர்ப்புகளை விட, விமானப்படையிடம் LCA சந்தித்த எதிர்ப்புகள் குறைவே. இத்திட்டமும் பலமுறை காலதாமதமானதுதான். அமெரிக்காவின் தடை காரணமாக GE-404 எஞ்சின் கிடைப்பதில் தாமதம்; காவேரி எஞ்சின் 18,000 அடிக்கு மேல் சரியாக செயல்படுவதில்லை போன்ற காரணங்களால் Tejas தாமதமாகின்றது. நமது தேவைகளை முறைப்படுத்தி LCA'வை நேர்ப்படுத்துவோம். கையிலிருக்கும் வெண்ணையை சரிப்படுத்தி நெய் எடுப்போம். இடை நிவாரணமாக மிராஜ் 2000 வாங்கவும் தயங்கக் கூடாது.

ஏவுகணைகள்

ISRO மற்றும் அதன் தலைவராயிருந்த அப்துல் கலாம் இல்லாமலிருந்தால் ஏவுகணைத் திட்டங்களும் செயலிழந்து போயிருக்குமென்று அவுட்லுக் குற்றம் சாட்டுகின்றது. ப்ரித்வி (Prithvi) ஏவுகணை மட்டுமே வெற்றிகரமாக அமைந்தது என்று சொல்லிவிட்டு அக்னி, ஆகாஷ், திரிசூல் வெற்றிகள் பற்றி அவுட்லுக் மறந்துவிடுகின்றது. நாக் (Nag) முழுமையாக வெற்றியடையவில்லைதான். ஆனால் தளச் சோதனைகள் தொடர்கின்றன.
கடற்படைக்காக திரிசூலை (Trishul) தரையிலிருந்து வானம் நோக்கித் தாக்கும் ஏவுகணையாக மாற்றம் செய்ய DRDO முடிவெடுத்தது. பிப்ரவரி 2001'ல் திரிசூலின் கடற்படை வடிவம் தயாரிப்பு முடிந்து, பிரம்மபுத்திரா வகைக் கப்பல்களில் நிறுவப்படுமென்று திட்டமிடப்பட்டது. ஆனால் 15 மார்ச் 01 அன்று முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஜார்ஜ் பெர்னான்டஸ் திரிசூலின் சோதனைகள் தொடர்வதாக அறிவித்தார். அதன் பின்னர் இடைக்கால நடவடிக்கையாக பராக் (Barak) ஏவுகணைகளை இஸ்ரேலிடமிருந்து வாங்கி இணைத்துள்ளார்கள். இதில் தவறேதும் இருப்பதாக எனக்குப் படவில்லை. நவம்பர்'03 அன்று இந்தியா பிரம்மபுத்திரா வகை கப்பல்களில் பராக் ஏவுகணைகளை பொருத்துவதற்காக 100 மில்லியன் டாலர் ஒப்பந்தம் போட்டது. ஏற்கெனவே இந்திய தரைப்படையானது 260 மில்லியன் டாலர்களுக்கு இதே ரக ஏவுகணைகளை வாங்கியிருந்தது. மேலும் விமானந்தாங்கிக் கப்பலான விராட்டில் பராக் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. திரிசூலுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பிரம்மபுத்திரா கப்பல் வகைகளை நிறுத்தியா வைக்க முடியும்? ஏற்கெனவே சோதிக்கப்பட்ட பராக்கை பொருத்தி பிரம்மபுத்திரா கப்பலை கடற்படையின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது சரியான முடிவே. திரிசூலின் கடற்படை வடிவம் முழுமை பெற அரசு மற்றும் DRDO அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

அணுசக்தி நீர்மூழ்கித் திட்டம்

இன்னொரு பெரிய தாக்குதல் ரூ.7,500 கோடி செலவு செய்தும் அணுசக்தி நீர்மூழ்கி திட்டத்தில் முன்னேற்றம் ஏதுமில்லையென்பது. 2008'ல் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கட்டி விடுவோமென்று DRDO மார் தட்டுகின்றது. அவுட்லுக்கோ இத்திட்டத்திலும் 'இறக்குமதி சாதனங்களே' பிரதானமாயிருக்கும் என்று ஆருடம் கூறுகின்றது. LCA, அர்ஜூன் மற்றும் திரிசூல் சோதனைகளை ஏன் நிறுத்தக் கூடாதென்று கூறிய காரணங்கள் இவ்விஷயத்திற்கும் பொருந்தும். முதலில் நீர்மூழ்கியைக் கொண்டுவருவோம். அதே நேரத்தில் உள்நாட்டிலேயே உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் திறனையும் வளர்த்துக் கொள்வோம். அணுசக்தி நீர்மூழ்கி கட்டும் திட்டம் மிகவும் 'ரகசியமாய்தான்' உள்ளது. இதனால் எவ்வாறு பணம் வருகின்றது, செலவு செய்யப்படுகின்றது என்பதை தணிக்கை செய்ய முடியவில்லை என்பதும் உண்மைதான். தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதென்னும் வாதத்தில் சுரத்துண்டு. ஆனால் இதையே கவசமாக DRDO எடுத்துக்கொள்ளக் கூடாது. வெகு விரைவில் 'நம்பக்கூடிய' முடிவு தேதியை அறிவித்து சுறுசுறுப்பாய் திட்டத்தை நகர்த்த வேண்டும்.

அகலக்கால்

வெங்கட் தனது கட்டுரையில் இன்னொரு சுவாரஸியமான தகவலை முன்வைக்கின்றார். ஒரே நேரத்தில் விமானம், ஏவுகணைகள், டாங்குகள், அணுசக்தி நீர்மூழ்கி, ஆளில்லாத விமானம் என்று DRDO பேராசையுடன் அகலக்கால் வைக்கின்றதென்று. அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற பெரிய நாடுகள்தான் இவ்வாறு செய்தன என்று குறிப்பிடுகின்றார். தனது கருத்திற்கு வலு சேர்க்க பிரேசில், இஸ்ரேல், நெதர்லாந்து போன்ற நாடுகளை சுட்டிக்காட்டி, குறிப்பிட்ட ஒரு துறையில் தனித்துவம் பெறவேண்டுமென்று கூறுகின்றார். நமது நாட்டின் இறையாண்மைக்காக DRDO'வின் திட்டங்கள் அகலக்கால் போல் தோன்றினாலும் இன்றியமையாதது. மேலும் DRDO போன்ற பெரிய நிறுவனத்தால் இத்திட்டங்களை வெற்றிகரமாக செயலாக்கும் தகுதி வேண்டும். அகலக்கால் என்பதைவிட சரியாகத் திட்டமிடாமல், முடியாத இலக்குகளை நிர்ணயித்து இன்று DRDO அவதிப்படுவதாகவே நான் கருதுகின்றேன். இதனால் தனது நம்பகத்தன்மையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இன்று இப்படி ஒரு கையாலாகாத அரசு நிறுவனம் தேவையா என்ற கேள்வியில் சிக்கித் தவிக்கின்றது. DRDO ஊழியர்கள் அரசாங்கத்தின் வருடாந்திர நிதி ஒதுக்கீட்டை எப்படிப் பெறுவது, செலவு செய்வது என்பதிலேயே குறியாக இருக்கக்கூடாது. மேலும் தான் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு பொறுப்பும் ஏற்க வேண்டும். திட்டம் தள்ளிப் போகின்றது என்ற மேம்போக்கான பதிலைத் தராமல், குறித்த தேதியில் சொன்னதைச் செய்யாவிட்டால், காரணமானவர்களை கண்டிக்கவோ தண்டிக்கவோ வேண்டும். அதே போல் தேவைப்படும்போது, இலக்குகளை அடைந்ததற்கு பாராட்டி கௌரவிக்கவும் தயங்கக் கூடாது. முன்னது நடக்கின்றதோ இல்லையோ, இரண்டாவது தவறாமல் நடக்கின்றது.

DRDO'ல் குறைபாடுகளே இல்லையென்று சொல்லிவிட முடியாது. அரசின் கட்டுப்பாடுகள், குறித்த நேரத்தில் பட்ஜெட் கிடைக்காமை, முக்கிய மூலப்பொருட்கள் மீது அமெரிக்காவின் தடை, முப்படைகளுடன் திட்ட ஒருங்கிணைப்பின்மை என்று பலகுறைகளை களையும் நேரம் வந்து விட்டது. பங்கு பத்திர ஊழல், பங்குச்சந்தை ஊழல் இவற்றிலே பல்லாயிர கோடிக்கணக்கான ரூபாய்களைப் பறி கொடுத்தோம். ஆனால் ரூ 34 கோடி ரூபாய் கொடுத்து விட்டு, 'ஆளிள்ளாமல் பறக்கும் விமானம் என்னாச்சு?' என்று கேள்விகள் கேட்கின்றோம். செலவிடப்பட்டது மக்களின் வரிப்பணம். ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு கேட்கத்தான் வேண்டும். அதில் சந்தேகமில்லை. ஆனால் DRDO'வை முற்றிலும் வேண்டமென்பது மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை கொளுத்தும் கதைக்கு சமானம். ஆயுத வியாபரமென்பது கோடிகள் புரளும் சமாச்சாரம். இடைத்தரகர்கள் அனைவரும் DRDO ஒழிந்தால் நல்லதென்று என்ணுகின்றார்கள். வெறும் இறக்குமதி மட்டும் நமது சிரமங்களையும், செலவீனங்களையும் குறைத்து விடாது.

இங்கிலாந்திலிருந்து கடற்படைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 'Sea Eagle' என்னும் ஏவுகணை இன்னமும் சோதனைகளில் சொதப்புகின்றது. ஆனால் இறக்குமதி செய்து விட்டோம். DRDO'வை முற்றிலும் தனியார் மயமாக்குதலும் சரியான வாதமாய்ப் படவில்லை. இப்போதைக்கு கொஞ்சம் இறக்குமதி, கொஞ்சம் தனியாரிடம் DRDO பணிகள் ஒப்படைப்பு என்று செல்வது சரியாகப் படுகின்றது.

DRDO சோதனைகளில் செலவழிப்பது சராசரி இந்தியனின் வரிப் பணம் என்பதை உணர்ந்து இன்னும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். செயல்பட வேண்டுமென்பது கோடிக்கணக்கான மக்களின் ஆசை. செய்யுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஆதாரம்/நன்றி
http://www.israeli-weapons.com/weapons/missile_systems/sea_missiles/barak/Barak.htmlhttp://www.outlookindia.com/rants.asp?date=11/01/2004&type=magazinehttp://www.drdo.org/http://fecolumnists.expressindia.com/full_column.php?content_id=60088http://www.fas.org/spp/guide/india/launch/gslv.htmhttp://www.domesticatedonion.net/blog/index.php?itemid=315

Wednesday, October 27, 2004

சாபம் ஓய்ந்தது

பாஸ்டனின் ரெட் சாக்ஸ் அணி பேஸ்பாலில் இன்று உலக தொடரில் (வெறும் அமெரிக்கா அணிகளே விளையாடினாலும்!) வெற்றி பெற்று விட்டது. செயிண்ட் லூயியைச் சேர்ந்த கார்டினல்ஸ் அணியை முதல் 4 ஆட்டங்களில் (மொத்தம் 7 ஆட்டங்கள் கொண்ட தொடரிது) வென்றது. கர்ட் ஷில்லிங்கின் பங்கும், ஏனைய ஆட்டக்களர்கள் பங்களிப்பும் மிக முக்கியமானது. இந்த அணியின் கடைசி 8 ஆட்டங்களில் பெற்ற வெற்றி வரலாற்றில் நிற்கும். 1918'ற்கு பிறகு கிடைத்த சாம்பியன்ஷிப் பட்டம் இதுவென்றால் அதன் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.

பாஸ்டன் பாலா துள்ளிக் குதிப்பது தெரிகின்றது. வாழ்த்துக்கள் !!!

ஆனால், இந்தியா கிரிக்கெட்டில் மிக மோசமாக ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்குவதைக் கண்டால் வருத்தமாக இருக்கின்றது. ரெட் சாக்ஸ் அணியிடம் தன்னம்பிக்கையை நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

Tuesday, October 26, 2004

DRDO கட்டுரை

ஐகாரஸ் விருப்பப்படி அவுட்லுக்கில் வெளியான கட்டுரை இதோ:

R. S Kumar COVER STORY No Bang For The Buck An annual budget of Rs 4,000 crore, 51 hi-tech laboratories... Yet India's premier defence R&D organisation—DRDO—has little to show for it.
SAIKAT DATTA, RAJESH RAMACHANDRAN

It was a cold, clear February morning when Wing Commander Ravi Khanna took off from Bikaner on a routine flight commanding the Jaguar squadron. He was preparing for the Maha Vayu Shakti 2004 air exercise, the first major one in the new millennium. Except that plane and pilot exploded in an angry fireball over the desertscape.

Now, an official court of inquiry (CoI) has identified a fuse as the culprit for the February 26 mishap. Of course, no one will be punished for the failure of the fuse. Yet, the inquiry into the air crash has for the first time held the Defence Research and Development Organisation's Pune laboratory responsible for the accident. "Sure, it's a heavy tank...but Arjun can go over terrain few tanks can, because of its power to weight ratio." Dr V.K. Atre, Ex-DRDO Chief The report, which was sourced by Outlook, recreates the incident in damning detail. Soon after takeoff, Khanna followed the lead aircraft in the squadron, flying at a distance of 13 km. His target located, Khanna released the bomb. In less than one-tenth of a second, the fighter pilot and his plane exploded.

The report blamed the FBRN-4I fuse, fitted on all 1,000-pound bombs used by the IAF. The fuse had inherent design deficiencies. It didn't have any "unsafe indicators" nor were its sensors functioning. This, said the report, was what caused the explosion. The fuse was designed by the Armament Research and Development Establishment, DRDO's Pune-based lab, which had copied it from an old Soviet design.

Thanks to the Jaguar incident, DRDO and its functioning have come under the scanner. Despite being India's 'premier' defence R&D organisation, DRDO has consistently failed to deliver. And it's not for want of infrastructure or funds, given its annual budget of Rs 4,000 crore and its 51 hi-tech laboratories. But set up in 1958 with the aim of cutting down on arms imports through indigenisation, it's this very objective that the DRDO seems to have lost sight of.
Almost half of this year's Rs 77,000-crore defence budget is earmarked for imports. In fact, the organisation's first major act in the new millennium was to approve a perspective plan from the services entailing defence imports worth Rs 1,20,000 crore for the next 15 years. Today, everything that matters in the Indian military is imported, be it the Russian main battle tanks, Swedish artillery, British aircraft carriers, Russian and German submarines, Russian and French fighters, Israeli electronic warfare systems or British jet trainers.

"The problem with DRDO is that it is over-ambitious. There is no coordination between the DRDO and the users." Gen S.R. Chowdhury, Ex-Army Chief

Its harshest critics describe the DRDO as a white elephant. Others see it as an organisation which begins with grandiose plans but ends up with just copying dated Soviet designs. Says former army chief Shankar Roy Chowdhury, "The biggest problem with the DRDO is that it is over-ambitious. There is no coordination between the DRDO and the users." Consequently, programmes are launched or prototypes are developed which are out of sync with the requirements of the services.

A special review in 2000 by the Comptroller and Auditor General (CAG) of DRDO's Vehicles Research and Development Establishment, Ahmedabad, says it all. According to the CAG, this lab developed a light tank the army did not need. The project was sanctioned in 1983, the army wanted it scrapped in two years. In 1993, the army reiterated its stand and the DRDO chief also recommended its closure. But it was only after firing trial rounds for two more years that the DRDO finally called a halt to the project. The CAG report noted, "The fact remained that R&D efforts and money were spent on equipment the need for which had ceased." The CAG also found 48.76 per cent of the lab's budget spent on salaries; with a ratio of 11 non-scientists for every scientist. In 10 years, from 1988 to 1998, only 18 of the lab's projects were completed, of which only four went into bulk production.

Two years later, in 2002, the parliamentary standing committee on defence reached similar conclusions. "It seems that sometimes priorities are missing," it noted."The poor conceptualisation and over-ambition in trying to make world-class products had sometimes resulted in delays and slip-ups in completion of projects which are vital for modernisation of the forces indigenously. The users—the army, navy and air force—too should share the blame because they pick up brochures abroad and insist the DRDO fulfil all claims made by foreign manufacturers."

There is much the DRDO lists among its achievements: the Integrated Guided Missile Development Programme, the Main Battle Tank (MBT) Arjun, the Light Combat Aircraft (LCA) Tejas, the Remotely Piloted Vehicle (RPV) Nishant and the pilotless target vehicle Lakshya. "The LCA is going a bit slow and I have asked the DRDO for a mid-term quality review of Kaveri." S. Krishnaswamy, Chief of Air Staff But the army is hesitant to operationalise MBT Arjun and has instead gone in for Russian T-90s, while the LCA is still years away from completion. Why, but for fundamental support from ISRO, A.P.J. Abdul Kalam's missiles too would not have taken off. And even among them, it's just Prithvi, with a range of 250-300 km, that can count as a success; its naval version is yet to be perfected. In fact, as DRDO chief, it was Kalam himself who cleared the import of Barak missiles worth Rs 1,250 crore from Israel as a substitute. There is little therefore that can be said about its successes, but plenty about the
DRDO's duds:

Nuclear Submarine Project

INS Chakra It was taken on lease from the erstwhile Soviet Union midway through the nuclear submarine project. But 30 years and Rs 7,500 crore later, India may still have to rely on imports.

It was in 1975 that then prime minister Indira Gandhi gave the go-ahead for the Advanced Technology Vessel (ATV) project to develop an indigenous nuclear-powered submarine. But 30 years on and Rs 7,500 crore later, the DRDO's most prestigious project is yet to materialise. The latest projection is that the country will have a nuclear sub by 2008. But this could well be another case of "indigenous" technology with its vital equipment imported.
Controversy has dogged the project all along. There was even a move to refer it to the central vigilance commissioner in the late 1990s to investigate the "leakage of funds". Though serious allegations were raised, the project was too "hot" for the vigilance commission. In 1992, the CAG attempted an audit, but the report remained unpublished. This makes it the only major military project left unreported by the CAG.

The submarine project's 'top secret' label puts it effectively beyond scrutiny. Till 1983, funds for it were routed through various ministries—surface transport, shipping and atomic energy. An attempt in 1996 to get a techno-economic study done by eminent technocrats was scuttled, with the DRDO conveniently invoking the secrecy clause.

According to those involved with the project, lack of coordination and focus marked the ATV project out as a failure from day one. The first 10 years were wasted in debating what reactor would suit the vessel. The navy, the Bhabha Atomic Research Centre (BARC) and the DRDO failed to agree on crucial issues. The navy was supposed to provide the design, BARC the reactor. Raja Ramanna, then the director of BARC and also the chairman of the Atomic Energy Commission, simply told the navy to keep off the reactor design.

The Soviets had informally offered India a fleet of nuclear subs way back in 1979. But the DRDO and the scientific advisors claimed it could be built indigenously. Says a senior official associated with the project, "Eight years later, in 1987, the Soviet offer was renewed. This time Ramanna and others at an apex board meeting said we'd produce it in no time. ..all that was required was to lease a Soviet vessel."

That happened in 1988. The intention was to copy the design and to train Indian officers to operate the indigenous version as soon as it was ready.All the manuals and detailed documentation were studied but nothing much came out of it. INS Chakra, as the leased sub was called, was a symbol of India's presence in the Indian Ocean till 1991.Thereafter, the lease lapsed.

When Kalam took over DRDO in 1992, the project was still plagued with reactor and design problems.His first deadline was 1995-96; extensions were given continuously. Then PM H.D. Deve Gowda agreed to pump in Rs 2,500 crore. The first trials were a scream—the reactor would not fit into the hull of the submarine! Soviet scientists had pointed to this design discrepancy earlier itself but, alas, too late. The DRDO design was based on the conventional battery-charged SSK class of subs and the reactor was a derivative of BARC's Apsara reactor. A patent mismatch.

For a while, the NDA government toyed with a proposal to lease two Akula class nuclear subs and to acquire technology through reverse engineering, with critical parts imported from Russia. The new proposals would keep the middlemen in defence deals happy and the DRDO 'proud' of building an 'indigenous' nuclear submarine. But the proposals haven't materialised.
--------------------------------------------------------------------------------
Main Battle Tank Arjun

MBT Arjun "Officially handed over" to the army in August 2004 after 30 years and Rs 307.48 crore. Time overrun forced army to import T-90s from Russia. Also unsuitable for prime tank country.

Two months ago, defence minister Pranab Mukherjee "officially" handed over the first set of MBT Arjuns to the army. As the minister and his retinue left the venue, the tanks were promptly rolled back into the factory at Avadi, Tamil Nadu. The army said it was not ready to deploy it in a war theatre. This is the story of one of DRDO's biggest 'successes', a project sanctioned in 1974, expected to go into production in 1984, handed over to the prime minister in 1995 and exhibited at Republic Day parades since 1996.

The director-general of quality assurance has still not given the tank the clearance, a mandatory requirement before any weapon system is inducted into the armed forces. From the initial sanctioned budget of Rs 15.5 crore, the DRDO ended up spending Rs 307.48 crore for a tank which is useless to the army. A former project manager of MBT Arjun had in 1997 said he would never take the tank to war. The DRDO's failure obviously resulted in the country importing Russian T-90s at a cost of over Rs 3,000 crore. For all practical purposes, T-90 will remain
India's main tank for more than a decade.

Arjun, senior army officers say, cannot be used in classic 'tank country'. At 58.5 tonnes, it cannot be ferried across bridges which lead to Hanumangarh and Suratgarh in Rajasthan, considered prime tank battlefields by military planners. Concedes Dr V.K. Atre, who retired last month as DRDO chief and scientific advisor to the defence minister, "Sure, it is a heavy tank and we will have to reinforce the bridges." But he defends the tank stating that "it can go over terrain few tanks can because of its power-to-weight ratio". But weight alone is not the tank's failure. In listing its major deficiencies in 1998, the CAG cited the lack of "accuracy of gun at battle ranges, mission reliability, lethality of ammunition bin, emergency traverse, etc".
So much so that Parliament's public accounts committee which looked into the CAG report was categorical that no R&D benefit was derived out of the Arjun project even 26 years after it was sanctioned.

In 2000, the committee had said that "the delay in development and productionisation of MBT Arjun was attributable, to a considerable extent, to deficient project management and monitoring.Underlining the need to review the existing institutional mechanism for management and monitoring of the project".Needless to say, vital components like engine, fire control system, transmission unit, tracks, thermal sight and night sight were all imported and that too in the early 1980s.

Now, the army is only prepared to use the tank to train its personnel. The limited series production of 124 tanks would thus imply a colossal waste of money. But Dr Atre believes the project has "given us the capability and the confidence to develop better tanks.We have made major strides in self-reliance in defence technology". Sure. The next-generation tanks have already been imported.
--------------------------------------------------------------------------------
Guided Missile Programme

Akash Part of the Rs 2,000-crore Integrated Guided Missile Development Programme, the missile is still awaiting development trials after 20 years. It’s also yet to prove its mettle against multiple targets.

You could call the Agni and the Prithvi surface-to-surface missiles reasonable successes.But the lack of progress in the smaller missiles vexes the army and the navy because they desperately seek a missile cover which the DRDO promised long ago. Trishul, Akash and Nag, part of the DRDO's surface-to-air guided missile programme, have already consumed RS 2,000 crore—and they are yet to be delivered.

In fact, the DRDO went so far as to promise a Rs 6,000-crore anti-ballistic missile defence system in 1998. The presentation was simple, an arrow drawn towards the Rashtrapati Bhawan and another arrow intercepting the first one. Politicians were impressed because Delhi's safety has always been selfishly given exaggerated priority. But the service chiefs opposed this grand idea pointing out that even superpowers have not yet produced any credible missile umbrella against ballistic missiles.

Rather than ballistic missiles, what the army was looking for was a replacement for its ageing Kvadrath and Strella missile of the '60s vintage. The navy wanted a surface-to-air missile for its frigate, INS Brahmaputra. With the DRDO failing to deliver, the navy had to finally go in for the Israeli Baraks.
--------------------------------------------------------------------------------
Light Combat Aircraft

Sanctioned in 1983, the Light Combat Aircraft (Tejas) was to replace the MiG-21 fighters. But 21 years down the line, that seems an even more distant possibility. After an investment of nearly Rs 5,500 crore, the parliamentary standing committee in 2002 noted considerable cost and time overruns in the LCAs. One valid reason for the delay was the US sanctions on critical components, including the GE-404 engines which were to power the Tejas.

Simultaneously, the DRDO began work on an indigenous engine called the Kaveri. However, just last week, the Kaveri engine had another setback when it failed at a height of 18,000 feet while being tested in Russia. With delays in the programme, the IAF is desperately looking for 126 Mirage 2000s to make up for the lack of the Tejas. While addressing the media on October 6, prior to the Air Force Day, Air Chief Marshal S. Krishnaswamy had said, "The LCA is going a bit slow and I have asked the DRDO for a mid-term quality review of the Kaveri aero engine to accelerate its development. Since there will be a delay, we will have to get other aircraft and we are awaiting government approval."
--------------------------------------------------------------------------------
Remotely Piloted Vehicle

RPV Nishant Sanctioned Rs 35 crore initially, 14 years down the line, the army has been forced to scale down nearly 20 original parameters.
Hailed as India's first Unmanned Aerial Vehicle (UAV), Nishant was first conceptualised in May 1990.Sanctioned by the government in October 1991 with an initial budget of Rs 34 crore, it is far from induction by the Indian army 14 years later. It is understood that the army had to waive off nearly 20 parameters it had set in the original quality requirements framed in 1990. In short, it was waiving technical specifications it had set 14 years ago! Meanwhile, much foreign exchange has been lost as all three services have sourced their UAVs from Israel.
So, if we all know what is wrong with DRDO, why isn't someone setting it right? Some would say this is how the powerful arms import lobby would like things to remain. As they see it, as long as India sources its defence requirements from the international market, they're in business. As for arms-exporting countries, it is important that the developing world does not become self-sufficient. The US has to export one fighter plane for every plane inducted into its air force; in France, the ratio is 3:1. This explains how important DRDO's failures are to exporters. But arms exporters and middlemen alone aren't to blame. The bigger goons are the corrupt politicians and bureaucrat, who collect kickbacks.An incompetent DRDO, it suits them just fine.
--------------------------------------------------------------------------------

Saikat Datta And Rajesh Ramachandran

Monday, October 25, 2004

DRDO'வை தனியார்மயமாக்க வேண்டுமா?

DRDO'ல் அரசு செய்யும் முதலீட்டிற்கு தக்க பலன்கள் கிட்டவில்லை என்று அவுட்லுக்கில் 18 அக்டோபர் 04'ல் எழுதியிருக்கின்றார்கள். இது குறித்து எழுதுமாறு ராஜ் கேட்டவுடன் அவுட்லுக்கை இணையத்தில் தேடிப் பிடித்து படித்தேன். ஒரு பத்தியில் பதில் கூற முடியாது. இதைப் பற்றி பல அத்தியாயங்கள் எழுத வேண்டும். ஆரம்பித்து விட்டேன். புலிவாலைப் பிடித்தது போல் ஓடிக்கொண்டு இருக்கின்றேன். விரைவில் சந்திக்கின்றேன்.

இது குறித்து வலைப்பதிவுகளில் கருத்துகள் உலவுகின்றனவா என்று அறிய விருப்பம். பத்ரி, பாரா, பரி, பாட்டில் பாலா, கலெக்டர் பாலா, அருண், நாமக்கல் ராஜா போன்ற பலரின் கருத்தறியவும் அவா.

Thursday, October 21, 2004

அக்கினி நட்சத்திரம்

That's Tamil.Com இணைய தளத்தில் சமீபத்தில் வெளியான கவிதை

ஆசை மொழி பேசவும்
ஆதுரமாய் அணைக்கவும்
அப்பா வேண்டுமென்று
அழுதது ஆயிரம் முறை

பள்ளிக்கும் பார்க்குக்கும்
கைகோர்க்கும் பாக்கியமில்லை
எனக்குத் தந்தை
இனிஷியலில் மட்டும்தான்

அப்பன் பெயராவது
அறிந்த விஷயம்
அதிக சந்தோஷம்
அளிக்கவில்லை

தொடுப்பு மகனென்று
ஊர்தூற்றும் போது
துக்கம் அடைக்க
தூக்கம் தொலைத்தேனே

கொஞ்சம் கொஞ்சமாய்
நடக்கும் கொலைக்கு
கர்ப்பத்திலேயே என்னை
கலைத்திருக்கலாமே?

அறியாத இரவுகளில்
புரியாத சப்தம்
காலையில் எழுந்தவுடன்
கனவுகள் வலிக்கும்

அப்பா வந்து வழமையாய்
அவசரமாய் வெளியூர் போகும்
அம்மா சொன்ன பொய்யின்
உண்மை சுடும்

உன் உயிலில்
பங்கு வேண்டாம்
உன் சொந்தங்களின்
பந்தமும் வேண்டாம்

அரையிருட்டு உறவுக்கு
அர்த்தம் கொடுப்பாயா?
உந்தன் விந்தினில் விளைந்ததை
உலகிற்கு உரைப்பாயா?

மகனேவென்று மடியில் கிடத்தி
ஆண் குந்தியாய்
அழுவேனென்று சொல்
மரிக்கின்றேன் இப்போதே

முடியாவிடில் சொல்லி விடு
விபரம் தெரியும் வயதில்
கரத்திற்கு வலு வரும்
காத்திருப்பேன் அதுவரை

Friday, October 15, 2004

நிதர்சனம்

காலுக்கு கிடைத்த கல்லை
உதைக்கும் உத்வேகம்
விளையாட்டாய் பிறந்த
வினையாய் காதல்

உயர உயரப் பறந்த
உணர்வுகளுக்குத் தெரியாது
தவறி விழுந்தால்
அடி பலமென்று

திகட்ட திகட்ட
திகழ்ந்த இனிப்புத்தான்
பகுத்தறிவு மட்டும்
பல்லிளித்த காலம்

எனக்கு நீ
உனக்கு நான்
அந்தம் கண்டோம்
ஆதியே அறியாமல்

உன் குற்றமா
என் குற்றமா
நதி மூலமா
ரிஷிமூலமா

என் வீட்டு ரோஜா
மணத்தாய் நீ
மல்லிகையாய்
மாற்றான் தோட்டத்தில்

கிட்டாத மாத்திரத்தில்
வெட்டென மறக்காமல்
மௌன அழுகையின் நீட்சியாய்
கேவும் மனம்

Thursday, October 07, 2004

அப்புசாமியும் சனிப் பெயர்ச்சியும்

சமீபத்தில் திண்ணையில் வெளியான நகைச்சுவை கட்டுரை

எ.பி. (எலக்ஷனுக்குப் பின்) அம்மா தான் போட்டிருந்த பல சட்டங்களை வாபஸ் வாங்கும் காலகட்டம். H முத்திரை, மத மாற்ற தடை சட்டத்தோடு லாட்டரிச் சட்டத்தையும் வாபஸ் வாங்க (இப்போ கற்பனைதான் சீக்கிரமே உண்மையாகலாம்!), ஆம்பூர் அப்புசாமிக்கு லட்சுமி கடாட்சமடித்தது. அதனால் ஹாலிவுட்டில் ஒருவருக்கு சனி பிடித்ததென்றால் நம்ப முடிகின்றதா? விரிவாகப் பார்ப்போம்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் லாட்டரி தடைச் சட்டம் விலக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துமிணைந்து ஸ்பெஷல் சீட்டு ஒன்றை வெளியிட்டது. 'பூமிமாதா' என்று நாமகரணமிட்ட அந்த சீட்டின் முதல் பரிசினைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவீர்கள். ஒரு கோடி, இரண்டு கோடி ஆறு கோடியில்லை. மொத்தம் நூறு கோடி. பெட்டிக்கடையிலிருந்து, பஸ் ஸ்டாண்டு வரை, சிறுவர் முதல் பெரியவர் வரை உச்சரித்த ஒரே பெயர் 'பூமி மாதா'.

ஆம்பூர் அப்புசாமி முடிவு செய்து விட்டார். பென்ஷன் பணமான இரண்டாயிரம் ரூபாயையும் பூமிமாதா சீட்டுகளிலேயே முதலீடு (?) செய்ய வேண்டுமென்று. மகன் கேட்டால் வழியில் பிக்பாக்கெட் அடித்துவிட்டார்களென்று சொல்லிவிட வேண்டியதுதான். விதவிதமான வரிசைகளில் மொத்தம் 20 சீட்டுகள் வாங்கி, குலுக்கல் தினம் வரை பெட்டைக்கோழியாய் அடைகாத்தார். யார் அதிர்ஷ்டமோ முதல் பரிசு கிடைத்தும் விட்டது.

பரிசு கிடைத்த அதிர்ச்சியில் கொஞ்சநாளில் கிழம் மண்டையைப் போட்டு விடுமென்று எதிர்பார்த்த மருமகளுக்கு பெருத்த ஏமாற்றம். அப்புசாமியின் திடகாத்திரம் கூடியதோடு மட்டுமின்றி, தினமும் உடற்பயிற்சியையும் ஆரம்பித்து விட்டிருந்தார். ஒரு ஆங்கில வீடியோ கேஸட் பார்த்து குனிந்து நிமிர்ந்து கொண்டிருக்கும் போதுதான் அந்த ஐடியா பளிச்சிட்டது.

உடனே மகனை அழைத்தார். "டேய் ராமசாமி, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். உடனே ஒரு படம் எடுக்கப்போறேன். இப்ப என் ரேஞ்சுக்கு ஹாலிவுட் ஆளுங்களைப் போட்டு தமிழ் படம் எடுக்கணும். சமீபத்துலதான் ஆனந்த விகடன்ல படிச்சேன். யாரோ சியாமளாவாம். அவங்களை உடனே புக் பண்ணப் போறேன்."

"தாத்தா அது சியாமளா இல்லை. சியாமளன். அப்புறம் அவரு டைரக்டர்", படித்துக் கொண்டிருந்த பேரன் திருத்தினான்.

"சரி. அப்ப நான் படத்தை தயாரிக்க மட்டும் செய்யிறேன். கிளம்பு"

"எங்கப்பா?"

"சியாமளாவை... இல்லை... இல்லை... சியாமளனை புக் பண்ணத்தான்"

"தாத்தா சியாமளன் அமெரிக்காவுல இருக்காரு"

மகனை விட பேரனின் இன்வால்வ்மெண்ட் தாத்தாவுக்கு உற்சாகம் தந்தது.
"பேராண்டி என்ன பண்றதுன்னு நீயே ஐடியா கொடு"

"தாத்தா முதல்ல விளம்பரம் கொடுப்போம். பெரிய ப்ரொஜெக்ட்ங்றதால ஒரு கன்சல்டண்ட் கம்பெனிய ஹயர் பண்ணிடுவோம்."

"என்ன இழவோ...ஒண்ணுமே புரியல. பாத்து செய்யுடா பேராண்டி."

பத்து நாட்களில் பன்முனை (Multi-Prong?) வேலைகள் துரிதமாய் நடந்தேறின. நாத் சினி கன்சல்டண்ட்ஸ் தேவையான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தார்கள். ஒருவழியாய் சியாமளனின் அப்பாயிண்ட்மெண்டையும் வாங்கிவிட்டார்கள். ஆனால் உடனடியாக பயணம் செய்ய முடியாத காரணத்தால் ஒரு பெரிய ஹாலில் லைவ் சாடிலைட் மூலம் கான்பரன்ஸ¤க்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

எப்படியாவது சியாமளனை வளைக்கும் எண்ணத்தில் கோடம்பாக்கமே குழுமியிருந்தது.

நடிகர் சங்க தலைவரான விஜயகாந்த் ஆரம்பித்தார். "அமெரிக்க சினிமாவை ஆளும் சியாமளருக்கு அடியேனின் வணக்கங்கள். ஒரு அருமையான கதை கைவசமிருக்கு. மக்கள் சேவையே குறிக்கோளாய் பிறந்து வளரும் இளைஞன், ஒரு துடிப்பான புரட்சி எழுத்தாளனாகின்றான். அவனது எழுத்து ஒரு அரசியல் தலைவரை உசுப்பிவிட, பிரச்சினைகள் ஆரம்பமாகின்றது. பிரச்சினை என்றவுடன் இமயமலைக்கு ஓடி விடாமல், ஐ.நா. சபை வரை நீதி கேட்டுப் போராடுகின்றான். இதனால் கவரப்பட்ட உலக வங்கி அவனுக்கு கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட நிதியையும் லோனாக வழங்குகின்றது. பின்னர் அந்த ஏழை எழுத்தாளன் முதலமைச்சராகி லோனை அடைக்கின்றான். எழுத்தாளனாகவும், அவனது பெரிய அண்ணனாகவும் நானே நடிக்கப் போகின்றேன். தம்பி லியாகத் அலி கான் வசனத்தைப் பார்த்துக்குவார். நீங்க இங்க வந்துதான் டைரக்ட் செய்ய கட்டாயமேதுமில்ல. அப்பப்போ இப்படி சாடிலைட்ல கூட ரஷ் போட்டுப் பாத்துக்கலாம். என்ன சொல்றீங்க?"

சியாமளன் அவசர அவசரமாக பக்கத்திலிருந்த கிளாசிலிருந்து நீரோ, என்னமோ பருகினார்.

சிம்பு துள்ளியெழுந்து ஆரம்பித்தார். "இது நம்மைப் போல இளைஞர்கள் காலம். சூப்பரான சப்ஜெக்ட் வெச்சு அசத்திடலாம். ரெஸ்டாரண்ட்டில் டேபிள் துடைக்கும் பையன் சூப்பர் நடிகர் ஒருவரின் மகளைக் காதலிக்கின்றான். இதனிடையே ஒரு ஒரிஜினல் சினிமா டைரக்டரின் ஒல்லிப்பிச்சா பையனும் அதே பெண்ணைக் காதலிக்கின்றான். அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து டேபிள் பையன் சூப்பர் ஸ்டாரின் பெண்ணைக் கைப்பிடிப்பதுதான் கதை. ஒரு டைரக்டரா பிலடெல்பியாவில் டூயட் பாட மட்டும் ஏற்பாடு செய்ங்க. ஜமாய்ச்சுடலாம்."

ஒரு பெரிய கர்ச்சீப்பை அவசர அவசரமாய் எடுத்து சியாமளன் முகம் துடைப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது.

நடுவிலே முரளியின் கல்லூரி காதல் கதை, விஜய்யின் கிட்டிப்புள்ளை மையமாய்க் கொண்ட 'கபடி'க் கதை, பிரஷாந்த்தின் 'காக்கி'க் கதையெல்லாம் முடிந்தது.

சியாமளன் அஷ்டகோணலுடன் நெளிய ஆரம்பித்தார்.

பின்னர் நீளமான முடியுடன் விக்ரம் வந்தார். பிரஷாந்த் மட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டார். "உங்களை மாதிரியே படமெடுக்கணும்னு நினைச்சு இங்கே சிலர் படமெடுத்து மக்களுக்கு 'ஷாக்' கொடுக்கிறாங்க. என்னோடது ஒரு சூனியக்காரன் கதை. ஆனா நல்ல சூனியக்காரன். சிறிய வயதிலில் ஒரு ஏரியில் தவறி விழுந்து இறக்கும் தருவாயில் மருத்துவர்கள் அச்சிறுவனைக் காப்பாற்றுகின்றனர். இருப்பினும் மரணிக்கும் நிலை வரை சென்றதால் அமானுஷ்யங்களுடன் பரிச்சயம் ஏற்பட அதை வைத்து ஊருக்குள் சூனியங்களை எடுப்பதுதான் ஹீரோவின் வேலை. சிக்கனமாக ஓட்டேரி மற்றும் பெரம்பூர் மயானங்களிலேயே முழுப்படப்பிடிப்பையும் முடிச்சிடலாம். மேலும் வித்தியாசமா இப்படத்தில் ஹீரோ மட்டும்தான் பேசுவான். கண்டிப்பாய் நேஷனல் அவார்டுதான். என்ன சொல்றீங்க?"

"அடப் பாவிங்களா. என்னோட Sci-Fi சேனல் பேட்டியைப் பாத்துட்டு எனக்கே அல்வா கொடுக்கிறீங்களே", சியாமளன் நினைத்து முடிக்கவில்லை.

"அதனாலென்ன தப்பு", என்றபடி எழுந்தார் கமலஹாசன். "என்னோட 'சிப்பிக்குள் முத்து' பாத்துட்டு உங்காளுங்க Forrest Gump எடுக்கலியா? தமிழன்

வெறும் ஹாலிவுட் படங்கள் சுட்டது போக இப்போது மெக்ஸிகோ படங்களையும் தழுவ ஆரம்பித்தது பரிணாம வளர்ச்சிதானே? திருட்டு தப்பேயில்ல. ஆனா திருட்டு விசிடி தான் தப்பு. ஹாலிவுட்லயிருந்து வந்து எடுத்தாலும் படத்துக்கு தமிழ் பேருதான் வைக்கணும். தமிழ்நாட்டுக்கு தமிழனுக்குத்தான் சொரணையில்ல. அதுனால உங்களுக்கு இருக்கும்னு நம்பறேன்."

"கமலஹாசன் என்பது தமிழ்ப் பெயரா?" கூட்டத்துல யாரோ முணுமுணுக்க கோபப்பார்வை வீசினார் கமல்.

"சரி படத்துக்கு வருகின்றேன். திருட்டு விசிடி பார்த்துவிட்டு அதன்படியே ஒரு கொலை நிகழ்வதை சிறுவன் கமல் பார்த்துவிடுகின்றான். அதனால் வளர்ந்து பெரியாளானவுடன் விசிடி, டிவிடி ஏன் கிராமபோன் ரெக்கார்ட் வைத்திருப்பவனைக் கண்டாலும் கொடூரமாக கொலை செய்து விட்டு, நினைவுச் சின்னமாக ஏதாவதொரு டிஸ்க்கை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொள்(ல்)கின்றான். ஒரு நாள் கொலை செய்யப்படுபவன் முகம் தன்னைப் போலவே இருக்க, சில மணித்துளிகள் நிதானிக்கின்றான். அவன் வேறு யாருமல்ல. அவன் அவனுடைய பெரியம்மாவின் பையன்தான். அதாவது அதுவும் நான்தான். I mean Spilit or multiple Personality. கொலை செய்யும் ஹீரோவுக்கு மொட்டைத்தலை. அவனது மார்பு முடியை சுருட்டி அலங்காரம் செய்ய ஹாலந்து ஹேர் டிசைனர், மற்றும் ஆயிரமாயிரம் அடிகளில் கிராபிக்ஸ் கொலை'ன்னு கலக்கிடலாம். போலீஸ் இன்ஸ்பெக்டராக அப் பாச்சினோவை பேசி முடிக்கலாம். அப்புறம் ஒரு சின்ன ரோலில் கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ¤டன் முத்தக் காட்சியை சிம்பிளாக வைக்கலாம். என்ன சொல்றீங்க?"

"என்ன இழவுடா இது? வசமா மாட்டிக்கிட்டோமே?", சியாமளன் பரிதவிக்கத் தொடங்கினார்.

வருவாரா மாட்டாரா என்று உலகமே குழம்பிக் கிடக்க கடைசியில் வந்தே விட்டார் ரஜினி. மேக்கப் போடாத ரஜினியை யாரென்று முதலில் சியாமளனுக்குப் புரியவில்லை. இருப்பினும் ஒருவாறு சமாளித்து சிரிப்பை உதிர்த்தார்.

ரஜினி தான் எழுதி வந்திருந்ததை கிடுகிடுவென்று படிக்க ஆரம்பித்தார். "திரு. சியாமளன் அவர்களே! ஜக்குபாய் படமெடுப்பதாய் இருந்தேன். ஜக்கு என்றால் இந்து. பாய் என்றால் முஸ்லிம். இரண்டையும் இணைத்து இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் கூற நினைத்தேன். நண்பர் கூட்டத்தில் அடைக்கலம் புகுந்த எதிரிகள் சிலர் தடுத்து விட்டனர். நான் கன்னடனா? மராட்டியனா? தமிழனா? இல்லை. எதுவுமே இல்லை. நான் 'மனிதன்'. இதை மீண்டும் நிரூபிக்க டைரக்டர் வாசுவிடம் பொறுப்பைத் தந்துள்ளேன். சந்திரமுகியோடு ஒரு 'சர்வநிவாரணி' படமும் தருவேன். நன்றி, வணக்கம்."

"ஆனா கதைய சொல்லவேயில்லியே?" சியாமளன் பதறினார்.

"அதை ஷ¥ட்டிங் ஸ்பாட்ல டெவலப் பண்ணுவோமே."

"என்னது கதையை டெவலப் பண்றது ஷீட்டிங் ஸ்பாட்டிலேயா?"
கரன் தாப்பர் முன்னே பேட்டி கொடுத்த கபிலைப் போல் தேம்பியழும் சியாமளனை பெரிய ஸ்கீரினில் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.

விவேக் உச்சஸ்தாதியில் குரல் கொடுத்தார், "அப்பவே சொன்னேனடா....எஸ்கேப்".

சாமிக்குத்தம்

சமீபத்தில் திண்ணையில் வெளியான கவிதை

நேந்துக்கிட்டதை நேர்த்தியா முடிக்கோணுமில்ல?
அம்ம வாத்த புள்ளைய ஆத்தா காப்பாத்துன்னு
ஒண்ணாத்தானே கூவினோம்?
விசனப்பட்டாள் மனைவி

மூணாந் தண்ணி முடிஞ்ச கையோட
சிதறுகா அடிக்கறோமுன்னு கதறினோமே
மூணு மாசதுக்கப்புறமும் போவ முடியலியே
ஆத்தா கோவம் ஆவாதுங்க

அண்ணாநகரில் புது அபார்ட்மெண்ட்
ஆயிரம் சித்தாட்களில் ஆறுமுவம் ஒருவன்
ஆத்தா கடன் தீர்க்க தேவையென்னவோ
அரைநாளு விடுப்புத்தான்

என்னா கலீக்டருன்னு நினப்பா?
ஒப்பந்த மேஸ்திரி
ஸ்டாலினாய் கொக்கரித்தான்

நாள் கூலியில்தான் காயும்
வீட்டின் உலை இல்லாவிடில் வயிறு
இன்னைக்கு முடிச்சிடுதேன சொன்னாலும்
குழப்ப முடிச்சில் ஆறுமுவம்
குஷியில் மனையாள்

கூரைத்தள வேயும் நாள்
கூவி சேவலழலைக்கு முன்னே
கூலி சேவகம் செய்ய ஆறுமுவம்

கலவையெந்திரம் அவனின் கவலை அறியவில்லை
காலம் கரைந்தது
பாக்கெட்டில் பத்துரூவாய்
காரணத்துடன் கனத்தது

ஆத்தாவைவிட பயமுறுத்தினாள் மனைவி
களைப்புடன் ஊர்ந்தான்
வேல் நிறுத்திய தெருக்கோயில்
அருகே பரிச்சயமான பிச்சைக்காரன்

எட்டுமாதமாய் எட்டிப்போன பாதைதான்
தானத்தைப் பசி தோற்கடிக்கும் அவலம்
பொட்டிலடிபட்டதுபோல் சிலிர்த்தான் ஆறுமுவம்

வெத்திலப்பாக்கு மடிப்பிலிருந்து
விபூதி குங்குமம் பூசி
கடனடைத்த பெருமையில் பெண்டாட்டி

சக்கரக்கட்டை பிச்சைக்காரன் மட்டும்
பத்து ரூபாயை பார்த்து இன்னும் குழம்பியபடி