Tuesday, November 16, 2004

எங்கே செல்லும் இந்த பாதை?

கடன் தராதால்
சிலுப்பிக் கொண்ட
பங்காளிகள்

கடனைத் தராமல்
ஒதுங்கப் பார்க்கும்
கருங்காலிகள்

உயிலில் அடிபட்டு
உறுமுகின்ற
உடன்பிறப்புக்கள்

தொடர்நாடக மோகத்தில்
அந்நியாமாகிப் போன
அக்கம்பக்கத்தோர்

எஞ்சியவை
மதம் மயக்கத்தில்
மிஞ்சியவை
லோகாதாயக் குழிகளில்

அப்பா நாளும் அரற்றுகின்றார்
தூக்குவதற்கு வேண்டுமே
நாலு பேரென்று

Wednesday, November 03, 2004

பாபாராஜ் கவிதைகள்

கை, கால்களை உதைத்து மகிழும் பிஞ்சிற்கு முதன்முறை 'குப்புறத்' திரும்பும் போது இனம்புரியாத ஒரு மகிழ்வேற்படும். அதே நிலைதான் தவழும் போதும், தடுமாறி நடக்கும் போதும், பின்னர் உலக நிகழ்வுகள் கண்டு ஓடும்போதும். ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரிடமிருந்தேனும் ஏதேனும் ஒரு வகை உதவி தேவைப்படுகின்றது.

வெகு நாட்களுக்கு முன்னர் கவிஞர் பாபாராஜ் பதில் மடல் அனுப்பியிருந்தார். தக்க சமயத்தில் அது குறித்து எழுத ஆசைப்பட்டதால் சிறிதே தாமதமாகிவிட்டது. தம்பியாய் பாவித்து அவர் எழுதிய மடல் ஓடும் குழந்தைக்கு சிறகு தந்தது போலிருந்தது. காலம் நகர்த்தும் காய்களாக இருந்தாலும், தமிழுணர்வால் என்னை அணைத்துக் கொள்கின்றார். எனது பொழுதுபோக்குத் தமிழிலும் அழகு கண்டு ஊக்கப்படுத்துகின்றார். ஊக்கம் தந்த தைரியத்தில் இன்று வலைப்பூவில் நூறு பதிவுகளைத் தாண்டி விட்டேன். எழுதுவதற்கு இதை விட நல்ல விடயம் கிடைக்காதென்றுதான் இன்றுவரை காத்திருந்தேன்.

அவரது சில கவிதை நல்முத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். பகைவனையும் நண்பனாக்கும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. ஆனால் இவரின் கவிதையைப் படியுங்கள்.

பகைவனையும் நண்பனாக்கு !

பகைவனையும் நண்பனாக்கும் பக்குவத்தை ஏற்று
சிகரத்தை நோக்கித்தான் செல்க -- புகைச்சல்
எரிச்சலை விட்டுவிடு ! என்றென்றும் இங்கே
பெருந்தன்மைப் பண்புகளைப் பேண் .

பகைவனை நண்பனாக்கும் பெருந்தன்மை வேண்டுமென்னும் கவிஞர், அப்பண்பினையும் யாதென்று விளக்குகின்றார். கனிவும், கருணையும் கூட்டான வீரமென்று காந்தீயத்திற்கு புது விளக்கம் தருகின்றார்.

பெருந்தன்மை கோழைத்தனமல்ல !

பெருந்தன்மை இங்கே பெருங்கடலைப் போல
கரைகாணல் ஏது ? கனிவும் - கருணையும்
கூட்டான வீரந்தான் ! கோழைத் தனமல்ல !
போற்றும் உலகம் புகழ்ந்து

சோர்ந்து போகும் நேரங்களில் புத்துயிர் ஊட்டும் கவிதைகள் 'எங்கே? எப்படி?' மற்றும் 'நிழலல்ல உண்மை'. நம்பிக்கைதான் நாற்று என்று கட்டியம் கூறும் கவிஞர், இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்காதே என்னும் நிதர்சனமும் காட்டுகின்றார்.

எங்கே ? எப்படி ?

என்னென்ன சாதனைகள் எங்கெங்கே தோன்றுமோ ?
என்னென்ன வேதனைகள் எங்கெங்கே ஊன்றுமோ ?
மண்ணகத்து மக்களெல்லாம் வாழ்க்கையிலே ஏந்துகின்ற
நம்பிக்கை மட்டுந்தான் நாற்று.

நிழலல்ல உண்மை !

இழந்ததை எண்ணி இருப்பதை விட்டுப்
புலம்பாதே என்றே புகன்று - வலமா ?
இடமா ? எதையும் எதிர்கொள் ! தடையைக்
கடந்துவிடு ! வாழ்க களித்து.

சுதந்திர இந்தியாவின் படமாய் அந்நிய நாடுகளில் அடிக்கடி காட்டப்படுவது 'நடுத்தெரு வாசிகளும்', 'பாம்பாட்டிகளும்'தான். பாம்பாட்டி பாடாவது பரவாயில்லை. ஆனால் நடுத்தெருவாசிகளின் அவலமோ கொடுமையிலும் கொடுமை. கவிஞரும் குமுறுகின்றார்:

கொடுமை !

விடியலைத் தேடும் விழிகளின் ஏக்கம்
நடுத்தெரு வாசியின் நற்றமிழ்ப் பிஞ்சின்
துடிப்பை உணர்ந்தால் துடிக்கும் இதயம்
கொடுமை இதுவென்று கூறு.

இன்று புத்தகங்கள் குறித்து பல்வேறு சர்ச்சகைகளே கிளப்பப்படும்போது, கவிஞரின் நோக்கோ 'மனிதன் மனிதனாக வாழவழி காட்டும் தினமாக', உலக புத்தக நாளைக் குறிப்பிடுகின்றார்.

உலகப்புத்தக நாள் ! 23.04.04

அறிவுச் சுடரேற்றி ஆக்கபூர்வ வாழ்வின்
நெறியில் நடைபோட நித்தம் - சிறப்பாய்
மனிதன் மனிதனாக வாழவழி காட்டும்
புனிதநாள் இந்தநாள் ! போற்று.

மென்மையும், கடுமையும் அடுத்தடுத்து தமிழ் குழைத்து தரும் வித்தை பாபாராஜுக்கு கை வந்த கலை. 'அ·றிணையாய் மாற்று' என்று தலைப்பிட்டு, துளையிட்ட மூங்கிலை சிலாகிக்கும் போது ஏற்படும் குழப்ப முடிச்சை அடுத்த இரண்டு வரிகளில் காணாமல் அடிக்கின்றார்.

அஃறிணையாய் மாற்று !

துளையிட்ட மூங்கிலில் தோன்றுவது கானம் !
மலைக்கவைத்து நெஞ்சை மயக்கும் - துளைகொண்ட
மேனியுள்ள மாந்தரின் வேடமெல்லாம் வக்கிரங்கள் !
மானிடனை அஃறிணையாய் மாற்று.

மத நல்லிணக்கம் அமைதிக்கு அடிப்படை என்று பகர்கின்றார் இதோ:

நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்று !

அனைத்துமத நல்லிணக்கம் அன்றாடம் பூத்துக்
கனிந்துவிட்டால் நல்லமைதி காண்போம் -- அனைவரும்
ஏட்டளவில் இந்தியராய் இன்றி , இமையனால்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்று.

சொற்களை செட்டுக் கட்டி இல்லறம், இன்ப துன்பம், பிள்ளைப்பேறு, முதுமை, கூட்டை விட்டுப் ப(இ) றத்தல் என்ற ஒரு வாழ்க்கையே எட்டு வரிகளில் கண்முன் நிறுத்துகின்றார்.

புறப்படத்தயாராய்

ஆண்பெண் படைப்பு அற்புதப்படைப்பு
படிப்படியாக வளர்ச்சிப் பயணம்
இல்லறக் கூட்டில் இணைந்திடும் பறவைகள்
இன்பமும் துன்பமும் கூட்டின் நிகழ்வுகள்
குழந்தைத் தளிர்கள் வாழ்க்கையின் விழுதுகள்
விழுதுகள் அமைக்கும் தனித்தனி வாழ்க்கை
தாயும் தந்தையும் முதுமையின் நிழலில்
கூட்டைவிட்டுப் புறப்படத்தயாராய் !

பி.கு. வலைப்பூ வடிவம் தந்து, தமிழ்ச் செயலிகள் மற்றும் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தி, உதைத்த உந்துசக்தியான திரு. சுந்தரராஜனுக்கு நன்றி !!!

Tuesday, November 02, 2004

அமெரிக்கா - தேர்தல்

நவம்பர் 3, 2004 2:32 AM ET

மிசிகன், மின்னசோட்டா, ஹவாய் கெர்ரிக்கு:

நிலைமை:

புஷ்: 249
கெர்ரி: 242

ஓஹையோவில் புஷ் இன்னும் முன்னணி. அநேகமாக கெர்ரி ஓஹையோவில் மறு-கணக்கு கோரலாம். விஸ்கான்ஸினில் 10 ஓட்டுகள் கெர்ரிக்குக் கிடைக்கலாம்.

ஆனால் அயோவாவில் 7 வோட்டுகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஓட்டு இயந்திரப் பழுதுகளாலும், தேர்தல் அதிகாரிகளின் 'அதீத பணியாலும்' முடிவு ஒத்திபோடப்பட்டிருக்கின்றது.

ஆஹா மண்டை காய்கிறது. துணை ஜனாதிபதிக்குப் போட்டியிடும் எட்வர்ட்ஸ் முஷ்டி உயர்த்தி கூறினார்,"Every vote counts. And every vote will be counted."

"மறுபடியும்"???

அமெரிக்கா - தேர்தல்

நவம்பர் 3, 2004 1:38 AM ET

வாஷிங்டன் மாநிலம் கெர்ரிக்கு:

நிலைமை:

புஷ்: 249
கெர்ரி: 211

ஓஹையோவில் புஷ் இன்னும் முன்னணி...

அமெரிக்கா - தேர்தல்

நவம்பர் 3, 2004 1:21 AM ET

நியூ ஹாம்ப்ஷயர் கெர்ரிக்கு:

நிலைமை:

புஷ்: 249
கெர்ரி: 200

ஓஹையோவில் புஷ் முன்னணி...

அமெரிக்கா - தேர்தல்

நவம்பர் 3, 2004 1:00 AM ET

அலாஸ்கா புஷ்ஷ¥க்கு:

நிலைமை:

புஷ்: 249
கெர்ரி: 195

ஓஹையோ (20 பாப்புலர் ஓட்டுகள்) யாருக்குக் போகும்???

அமெரிக்கா - தேர்தல்

நவம்பர் 3, 2004 00:42 ET

ஓரெகான் கெர்ரிக்கு

நிலைமை:

புஷ்: 246
கெர்ரி: 195

ஓஹையோ யாருக்குக் போகும்???

அமெரிக்கா - தேர்தல் 00:08 ET

அரிசோனா, புளோரிடா புஷ்ஷ¤க்கு போகின்றது.

நிலைமை:

புஷ்: 234
கெர்ரி: 188

Monday, November 01, 2004

ஒன்பது கோடி மக்களின் ஒருமித்த குரல்

தனிநாடு வேண்டுமென்று ஒருகாலத்தில் திராவிடக் கட்சிகள் குரல் கொடுத்து வந்தன. பின்னாளில் இக்கொள்கை காற்றில் பறக்க விடப்பட்டது நிதர்சனம். காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்திலிருந்து விரட்ட பகுத்தறிவுக் கொள்கையும், ஹிந்தி எதிர்ப்பும், தனித் தமிழகமும் நல்ல ஆயுதங்களாகப் பயன்பட்டன. இன்று இக்கொள்கைகளை மஞ்சள் துண்டும், கண்ணகி சிலை அகற்றலும், அலகு குத்தி தேரிழுக்கும் அமைச்சர்களும் காற்றில், பறக்க விட்டதை அனைவரும் அறிவர்.

எனது அறிவுக்கண்களை(?) திறக்கும் கட்டுரை ஒன்று சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அமெரிக்காவிற்கு கியூபா போல இந்தியாவிற்கு தமிழ் ஈழம் இருக்குமாம். ஆஹா என்னே அருமையான தத்துவம்!!! உணர்வுகளால் ஒன்றுபடாத போது பிரிவது இயல்பென்று இந்திய (குறிப்பாக தமிழக) இணைய அறிவிஜீவிகள் 'கதைப்பது' சகஜம்தான். மணிப்பூர் மற்றும் அனைத்து லாட்டரி மாநிலங்களும் உணர்வுகள் ஒன்றுபடாத காரணத்தால் 'விட்டு விடு பேராண்டி' என்று கூறுவது 'இணையப் பெருசுகள்' மட்டுமே சொல்லும் சங்கதி.

இந்தியாவின் கியூபா தமிழ் ஈழமாம்!!! இதற்கு 9 கோடி தமிழரின் ஆதரவாம். உலகில் தமிழ் பேசும் அறிவு ஜீவிகளின் எண்ணிக்கை ஒம்போது (pun intended) கோடியா?

புலி யாருக்கு கிலி ஏற்படுத்துகின்றது? ராம் (ஹிந்து), லலிதா (ஜெய), ராமசாமி (சோ)... என்னப்பா? எல்லோரும் அவா. அதாவது ஆரியர்கள். பூணூல் பார்ட்டி. அடடே திராவிட மடத்(!) தமிழா... சூழ்ச்சி அறிந்து கொள்!!! மறைமுக நிகழ்ச்சி நிரல் அறிந்து கொ(ல்)ள்!!!

கருங்காலிச் சோழர்களும், தமிழ்நாட்டில் வாழ்ந்தும் உணர்வுகளால் ஒன்றாத இணைய ஜீவிகளும், கொள்கைப் பிடிப்பு ஏதுமில்லாத தான் தோன்றிவாதிகளும், இந்திய ரூபாயில் குதம் துடைப்பவர்களும், தோல்பாவைக் கூத்தடிப்பவர்களும், முலைக் கணக்கு அறிய ஆர்வமிக்கவர்களும், சொல்வது கேட்போம். குண்டு கட்டிக் கொல்வதை மறைத்து மனித உரிமை பேசும் மகாத்மாக்கள் சொல்வதைக் கேட்போம்.

பிள்ளை கொடுப்பதே பிரதானமாய்க் கொண்டு, அமைதி காக்கச் சென்று விரை வீங்கிய (பிள்ளைகள் எக்கச்சக்கமாய் கொடுத்ததால்) இந்தியாவிற்கு இதுவொரு எச்சரிக்கை. பிழைத்துக்கொள். யோனியில் வெடியோடு உன்னருகே அமெரிக்க க்யூபாவாய் நான்!!! மீண்டும் பிள்ளை கொடுக்க முயலாதே. இலக்கிய எச்சரிக்கை இல்லை இது!!! விரைகள் வெடித்து விடும்!!!

ஹே ராம்! நீ "தமிழனில்லை". நீயொரு பூணூல் புனைந்த "ஆரியன்". அதனாலே உனக்கு அறிவிருப்பினும் தகுதியில்லை. ஒதுங்கிக் கொள். சோ... "நீ சும்மா இரு". லலிதா நீ ஒரு "நடிகை". இலங்கை பிரச்னை பற்றி பேச உனக்கு தகுதியில்லை. உப்புமா படம் எடுக்கும் மணிரத்னம் போல். ரங்கராஜனே (சுஜாதா) உனக்கு வயதாகிவிட்டது. இனிமேல் சினிமா வசனம் எழுதினால் 'கன்னத்தில் சம்மிவிட்டால்' அப்படியென்று 'கற்றதும் பெற்றதும்' தொடரில் எழுத வேண்டியிருக்கும். எச்சரிக்கின்றேன்.

நான் இந்தியாவின் கியூபா எச்சரிக்கின்றேன்.