tag:blogger.com,1999:blog-7023621.post114469760245021679..comments2023-10-31T05:35:01.568-07:00Comments on தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன்: விவாதக் கூ(கு)த்துகள் - 3Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7023621.post-1144793419547212302006-04-11T15:10:00.000-07:002006-04-11T15:10:00.000-07:00உண்மையான தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி... தேசியம் பே...உண்மையான தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி... தேசியம் பேசும்போதே வந்தியத்தேவன் காவி கட்சி ஆளாத்தான் இருக்க வேண்டுமென்று நாம் சந்தேகப்பட்டோம்.. சந்தேகம் உறுதியாகும் வகையிலே ஒரு செய்தி இன்று தினமணியில் வந்திருக்கிறது... செய்திக்கு போவதற்கு முன் கச்சத்தீவு என்ற வார்த்தையை வந்தியத்தேவனும் அம்மாவும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பேசுவதால் ஒருவேளை வந்தியத்தேவன் = அம்மா என்ற சநதேகம் மற்றவர்களுக்கு வருவதை பற்றி நமக்கு ஆட்சேபம் எதுவுமில்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்...<BR/><BR/><A HREF="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20060411123208&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=-66" REL="nofollow">கச்சத் தீவை நிரந்தர குத்தகையில் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்: ஜெயலலிதா பேச்சு</A><BR/><BR/>நாகர்கோவில், ஏப்.12: கச்சத் தீவுப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பெறுவதற்காக, கச்சத் தீவை நிரந்தர குத்தகை அடிப்படையில் பெற வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். <BR/><BR/>கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து, அஞ்சுகிராமத்தில் செவ்வாய்க்கிழமை அவர் பேசியது: <BR/><BR/>மீனவர் நலனுக்காக சேமிப்பு, நிவாரணத் திட்டம், மீனவர் குழுக் காப்புறுதித் திட்டம், இலவச வீட்டு வசதித் திட்டம், மீனவ மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறுத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. <BR/><BR/>இதுமட்டுமின்றி மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் உபயோகப்படுத்தும் டீசலுக்கு விற்பனை வரியை முழுவதுமாக நீக்கி, விற்பனை வரியில்லாமல் மீனவர்களுக்கு அதிமுக அரசு டீசல் வழங்கி வருகிறது. <BR/><BR/>கச்சத் தீவுப் பகுதியில், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பெறுவதற்காக கச்சத் தீவை நிரந்தர குத்தகை அடிப்படையில் பெறவேண்டும் என்று மத்திய அரசை அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். <BR/><BR/>மீனவர் பாதுகாப்பு திட்டம்:உழவர் பாதுகாப்புத் திட்டம் போன்று மீனவர் பாதுகாப்புத் திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் ஜெயலலிதா.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144762015938301062006-04-11T06:26:00.000-07:002006-04-11T06:26:00.000-07:00Anony,piss off!Anony,<BR/>piss off!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144755106380629772006-04-11T04:31:00.000-07:002006-04-11T04:31:00.000-07:00முத்து (தமிழினி),பொறுப்பான பின்னூட்டத்திற்கு நன்றி...முத்து (தமிழினி),<BR/><BR/>பொறுப்பான பின்னூட்டத்திற்கு நன்றி. தெரிந்தோ, தெரியாமலோ பஸ்ஸில் ஏறிவிட்டீர்கள்.காசில்லாவிடினும் கவலை வேண்டாம். இப்பிரயாணம் இலவசம். இப்போது இலவசம் என்று சொல்லிவிட்டு நடுவழியில் நீ இறங்கு என்று இணையத்தில் சிலர் போல இறக்கி விடவும் மாட்டேன்.<BR/><BR/>ரோஸா தெளிவாகக் கூறியிருக்கின்றார். சாரு நிவேதிதா பற்றிய பதிவில் என்று நினைக்கின்றேன். எழுதியவரின் பின்புலத்தையும் வைத்துதான் அவர் கூறும் கருத்தை தான் எடை போடுவதாக. அக்கருத்தோடு முழுமையாக நான் ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும், இனம், ஈழம் குறித்த முக்கிய விஷயங்களில் ரோஸாவும், தங்கமணியும் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பது சிதம்பர இரகஸியம். தங்கமணி இந்திய இறையாண்மையைக் குறித்து விசனப்பட்டால் அதை "முதலைக் கண்ணீர்" வகையில் கூட சேர்க்க முடியாது. சௌகர்யமாக இதற்கெல்லாம் அவர் பதில் கூட எழுத மாட்டார். நீங்களாவது இது குறித்து அவரிடம் கேட்டுச் சொல்லுங்களேன். <BR/><BR/>உங்களது கருத்துகளுக்கு நான் மதிப்பளிப்பதால்தான் இன்னமும் எனது தரப்பை விளக்கிக் கொண்டுள்ளேன். மாற்றுகருத்துகளை வரவவேற்க வேண்டும். அப்போதுதான் விவாதம் செழுமையுற்று, முடிவு/தீர்வு என்று நகர முடியும். ஆனால் கிராமத்து வைத்தியரின் "ஒரு சூரணம் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்துவது போல" எல்லாப் பிரச்சினைகளுக்கும் பொதுக்காரணிகளாக தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்று பேசப்படும் போது பிரச்சினைகளையே திசை திருப்பிவிடுவது ஆகாதா? இதே கோணத்தில் நானும் சிந்தித்து இருந்தால் இத்தொடர்களை எழுதுவதும் சாத்தியமா? நீங்களே கூறுங்கள்.<BR/><BR/>ஏற்கெனவே நான் எழுதியபடி கச்சத்தீவை திருப்பித் தர இலங்கை முன்வராது. மேலும் பேராசிரியர் சூர்யநாராயணன் கூறுவது போல நிரந்தரக் குத்தகைக்கு இலங்கையிடமிருந்து பெற அரசாங்கம் முயலலாம். நீங்கள் கேள்விகளை முன்வைத்தது குறித்து சந்தோஷமே. பதிலளிப்பதும் சிரமமென்று கருதியதில்லை.<BR/><BR/>1974/76 ஒப்பந்தத்தை வலியுறுத்த எந்த நடுவண் அரசும் முயலாதது விந்தையே. இடைப்பட்ட முதல்வர்கள்/பிரதமர்கள் குறித்து எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. ஒப்பந்தம் காலாவதியாகவில்லை. ஆனால் இன்னமும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதைத்தூசி தட்டி செயல்முறைப்படுத்தினால் நிரந்தத் தீர்வு வரும் வரையில் சில பிரச்சினைகளை (இந்திய தரப்பிற்கு) தடுக்கமுடியும். ஆனால் இலங்கை மீனவர்கள் இதை ஒரு இடைக்காலத் தீர்வு என்று ஒத்துக் கொள்ளச் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் எழலாம். எனவே எந்த முடிவையும் எடுக்கு முன்னர் இருதரப்பும் உடனடியாக பேச்சு வார்த்தைகளையாவது தொடங்கவேண்டும். இலங்கை கடற்படை கடலெல்லைகள் மீறும் இந்திய மீனவர்களைச் சுடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது குறித்து இந்திய அரசு மௌனம் காத்தால் அதை விட அசிங்கம் கிடையாதென்று சொல்வதில் எனக்கு பிரச்சினையில்லை.<BR/><BR/>பார்வைக்கும், பதிலுக்கும் நன்றி.Vanthiyathevanhttps://www.blogger.com/profile/13950291478217501072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144719221925864192006-04-10T18:33:00.000-07:002006-04-10T18:33:00.000-07:00அந்த காலாவதியான ஒப்பந்தம் மேட்டர் பத்தி நான் கேட்ட...அந்த காலாவதியான ஒப்பந்தம் மேட்டர் பத்தி நான் கேட்டதற்கு மட்டும் உங்க பார்வையை சொல்லுங்க.மீதியெல்லாம் ஓ.கே.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144718897609850582006-04-10T18:28:00.000-07:002006-04-10T18:28:00.000-07:00வந்தியதேவன்,நன்றி.பேருந்தில் கூட்டமில்லை என்று ஏறி...வந்தியதேவன்,<BR/><BR/>நன்றி.<BR/><BR/>பேருந்தில் கூட்டமில்லை என்று ஏறிவிட்டு டிக்கெட் எடுக்க காசில்லாமல் இருந்தால் என்ன செய்வது என்பது என் கவலை:))<BR/><BR/>சரி விடுங்கள்.<BR/><BR/>1,3,4,5(b) இதையேதான் அவரும் கேட்டார்.பிரச்சினையின் டோட்டாலிட்டியை பார்த்தால் இந்த இனம்,ஈழம் போன்ற விஷயங்கள் வருவது தவிர்ககமுடியாதது என்பதுதான் உண்மை.விடுதலைபுலிகள் பெட்ரோல் கடத்தியதால்தான் சுட்டுகொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் காரணம் வரும்போது அதன்பின்னால் அணிவகுத்து இவையும் உள்ளே வருகின்றன.முக்கியமான குற்றச்சாட்டுக்கள் இவை.மக்கள் மனதில் அடிப்படையாக இருப்பவை இவை.தேசிய நீரோட்டத்தில் நாம் இணைந்து சரியாக துடுப்பு போடுவதில்லை என்பதால் நாம் ஒதுக்கப்படுகிறோம் என்பதான ஒரு பார்வை இருக்கிறதா இல்லையா?<BR/>தப்பாகவே இருக்கட்டும்.பொதுவாக இருக்கும் ஒரு பார்வையை ஒரு பார்வையாளன் வைத்தால் அது அப்படி இல்லை என்று சொல்லுங்கள். அப்படியெல்லாம் சொல்லவேக்கூடாது உட்கார் என்று கூறிகிறீர்கள் வந்தியதேவன்.<BR/><BR/>2.நீங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எங்காவது வைத்தீர்கள் என்று நான் சொன்னேனா? தனிப்பட்ட சில கூ(கு)த்துக்கள் தவிர யாரையும் குற்றச்சாட்டியது போல் இல்லை.செய்திகளை கூறுவதுபோலத்தான் இருந்தது. இது ஒரு பாஸிடிவ் கட்டுரை என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும்.(ஐந்து பாகத்தை மூன்று பாகத்தில் முடித்தீர்கள் என்றால் பின்னர் ஏதாவது புத்தகம் எழுதினால் ஒரு அத்தியாயமாக போடலாம்)<BR/><BR/>4(b)என்னிடம் அதிகாரம் இருந்தால் முதலில் கச்சதீவை திரும்ப வாங்க முயற்சிப்பேன்.<BR/><BR/>5.இந்தியாவை கீள்ளுகீரையாக யாரும் நினைக்கவில்லை என்றால் சந்தோஷம் பங்களாதேஷ் காரன் கண்ணை நோண்டுறான், இலங்கை காரன் மீனவர்ளை சுடறான்,பாகிஸ்காரன் சீனாகாரன் சொல்லவே வேண்டாம்.<BR/><BR/>6.நல்லவேளை என்னை மண்டுகம் என்று சொல்லாமல் விட்டீர்கள்:))<BR/>யாரும் யாருக்கும் ஆசானாக முடியாது அய்யா. ஆனால் ரோசாவின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும்.இதிலென்ன வெட்கம்.நான் புதுசுங்க.<BR/>நீங்க கூட நல்லாத்தான் எழுதறீங்க.<BR/><BR/>நான் வந்து எழுதியதில் உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லையே.மிக்க நன்றி.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144705258701907082006-04-10T14:40:00.000-07:002006-04-10T14:40:00.000-07:00Hello Vanthiyathevan, I don't understand why all t...Hello Vanthiyathevan,<BR/><BR/> I don't understand why all these idiots are talking bad against you. Since you were a lieutenant in Indian Navy, you know the depth of this problem very well more than any other idiot in the tamil blogspot world. But I think they want to treat you like a north Indian and say bad about you. <BR/><BR/>Your way of touching the crux of the problem is not understandable by all these "Mandoohams". But that will never stop you in bringing out the truth in these matters. <BR/><BR/>You are really doing a favor for tamil community. Please do continue your postings. WE all love that.Anonymousnoreply@blogger.com