சமீபத்தில் திண்ணையில் வெளியான நகைச்சுவை கட்டுரை
எ.பி. (எலக்ஷனுக்குப் பின்) அம்மா தான் போட்டிருந்த பல சட்டங்களை வாபஸ் வாங்கும் காலகட்டம். H முத்திரை, மத மாற்ற தடை சட்டத்தோடு லாட்டரிச் சட்டத்தையும் வாபஸ் வாங்க (இப்போ கற்பனைதான் சீக்கிரமே உண்மையாகலாம்!), ஆம்பூர் அப்புசாமிக்கு லட்சுமி கடாட்சமடித்தது. அதனால் ஹாலிவுட்டில் ஒருவருக்கு சனி பிடித்ததென்றால் நம்ப முடிகின்றதா? விரிவாகப் பார்ப்போம்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் லாட்டரி தடைச் சட்டம் விலக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துமிணைந்து ஸ்பெஷல் சீட்டு ஒன்றை வெளியிட்டது. 'பூமிமாதா' என்று நாமகரணமிட்ட அந்த சீட்டின் முதல் பரிசினைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவீர்கள். ஒரு கோடி, இரண்டு கோடி ஆறு கோடியில்லை. மொத்தம் நூறு கோடி. பெட்டிக்கடையிலிருந்து, பஸ் ஸ்டாண்டு வரை, சிறுவர் முதல் பெரியவர் வரை உச்சரித்த ஒரே பெயர் 'பூமி மாதா'.
ஆம்பூர் அப்புசாமி முடிவு செய்து விட்டார். பென்ஷன் பணமான இரண்டாயிரம் ரூபாயையும் பூமிமாதா சீட்டுகளிலேயே முதலீடு (?) செய்ய வேண்டுமென்று. மகன் கேட்டால் வழியில் பிக்பாக்கெட் அடித்துவிட்டார்களென்று சொல்லிவிட வேண்டியதுதான். விதவிதமான வரிசைகளில் மொத்தம் 20 சீட்டுகள் வாங்கி, குலுக்கல் தினம் வரை பெட்டைக்கோழியாய் அடைகாத்தார். யார் அதிர்ஷ்டமோ முதல் பரிசு கிடைத்தும் விட்டது.
பரிசு கிடைத்த அதிர்ச்சியில் கொஞ்சநாளில் கிழம் மண்டையைப் போட்டு விடுமென்று எதிர்பார்த்த மருமகளுக்கு பெருத்த ஏமாற்றம். அப்புசாமியின் திடகாத்திரம் கூடியதோடு மட்டுமின்றி, தினமும் உடற்பயிற்சியையும் ஆரம்பித்து விட்டிருந்தார். ஒரு ஆங்கில வீடியோ கேஸட் பார்த்து குனிந்து நிமிர்ந்து கொண்டிருக்கும் போதுதான் அந்த ஐடியா பளிச்சிட்டது.
உடனே மகனை அழைத்தார். "டேய் ராமசாமி, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். உடனே ஒரு படம் எடுக்கப்போறேன். இப்ப என் ரேஞ்சுக்கு ஹாலிவுட் ஆளுங்களைப் போட்டு தமிழ் படம் எடுக்கணும். சமீபத்துலதான் ஆனந்த விகடன்ல படிச்சேன். யாரோ சியாமளாவாம். அவங்களை உடனே புக் பண்ணப் போறேன்."
"தாத்தா அது சியாமளா இல்லை. சியாமளன். அப்புறம் அவரு டைரக்டர்", படித்துக் கொண்டிருந்த பேரன் திருத்தினான்.
"சரி. அப்ப நான் படத்தை தயாரிக்க மட்டும் செய்யிறேன். கிளம்பு"
"எங்கப்பா?"
"சியாமளாவை... இல்லை... இல்லை... சியாமளனை புக் பண்ணத்தான்"
"தாத்தா சியாமளன் அமெரிக்காவுல இருக்காரு"
மகனை விட பேரனின் இன்வால்வ்மெண்ட் தாத்தாவுக்கு உற்சாகம் தந்தது.
"பேராண்டி என்ன பண்றதுன்னு நீயே ஐடியா கொடு"
"தாத்தா முதல்ல விளம்பரம் கொடுப்போம். பெரிய ப்ரொஜெக்ட்ங்றதால ஒரு கன்சல்டண்ட் கம்பெனிய ஹயர் பண்ணிடுவோம்."
"என்ன இழவோ...ஒண்ணுமே புரியல. பாத்து செய்யுடா பேராண்டி."
பத்து நாட்களில் பன்முனை (Multi-Prong?) வேலைகள் துரிதமாய் நடந்தேறின. நாத் சினி கன்சல்டண்ட்ஸ் தேவையான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தார்கள். ஒருவழியாய் சியாமளனின் அப்பாயிண்ட்மெண்டையும் வாங்கிவிட்டார்கள். ஆனால் உடனடியாக பயணம் செய்ய முடியாத காரணத்தால் ஒரு பெரிய ஹாலில் லைவ் சாடிலைட் மூலம் கான்பரன்ஸ¤க்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
எப்படியாவது சியாமளனை வளைக்கும் எண்ணத்தில் கோடம்பாக்கமே குழுமியிருந்தது.
நடிகர் சங்க தலைவரான விஜயகாந்த் ஆரம்பித்தார். "அமெரிக்க சினிமாவை ஆளும் சியாமளருக்கு அடியேனின் வணக்கங்கள். ஒரு அருமையான கதை கைவசமிருக்கு. மக்கள் சேவையே குறிக்கோளாய் பிறந்து வளரும் இளைஞன், ஒரு துடிப்பான புரட்சி எழுத்தாளனாகின்றான். அவனது எழுத்து ஒரு அரசியல் தலைவரை உசுப்பிவிட, பிரச்சினைகள் ஆரம்பமாகின்றது. பிரச்சினை என்றவுடன் இமயமலைக்கு ஓடி விடாமல், ஐ.நா. சபை வரை நீதி கேட்டுப் போராடுகின்றான். இதனால் கவரப்பட்ட உலக வங்கி அவனுக்கு கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட நிதியையும் லோனாக வழங்குகின்றது. பின்னர் அந்த ஏழை எழுத்தாளன் முதலமைச்சராகி லோனை அடைக்கின்றான். எழுத்தாளனாகவும், அவனது பெரிய அண்ணனாகவும் நானே நடிக்கப் போகின்றேன். தம்பி லியாகத் அலி கான் வசனத்தைப் பார்த்துக்குவார். நீங்க இங்க வந்துதான் டைரக்ட் செய்ய கட்டாயமேதுமில்ல. அப்பப்போ இப்படி சாடிலைட்ல கூட ரஷ் போட்டுப் பாத்துக்கலாம். என்ன சொல்றீங்க?"
சியாமளன் அவசர அவசரமாக பக்கத்திலிருந்த கிளாசிலிருந்து நீரோ, என்னமோ பருகினார்.
சிம்பு துள்ளியெழுந்து ஆரம்பித்தார். "இது நம்மைப் போல இளைஞர்கள் காலம். சூப்பரான சப்ஜெக்ட் வெச்சு அசத்திடலாம். ரெஸ்டாரண்ட்டில் டேபிள் துடைக்கும் பையன் சூப்பர் நடிகர் ஒருவரின் மகளைக் காதலிக்கின்றான். இதனிடையே ஒரு ஒரிஜினல் சினிமா டைரக்டரின் ஒல்லிப்பிச்சா பையனும் அதே பெண்ணைக் காதலிக்கின்றான். அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து டேபிள் பையன் சூப்பர் ஸ்டாரின் பெண்ணைக் கைப்பிடிப்பதுதான் கதை. ஒரு டைரக்டரா பிலடெல்பியாவில் டூயட் பாட மட்டும் ஏற்பாடு செய்ங்க. ஜமாய்ச்சுடலாம்."
ஒரு பெரிய கர்ச்சீப்பை அவசர அவசரமாய் எடுத்து சியாமளன் முகம் துடைப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது.
நடுவிலே முரளியின் கல்லூரி காதல் கதை, விஜய்யின் கிட்டிப்புள்ளை மையமாய்க் கொண்ட 'கபடி'க் கதை, பிரஷாந்த்தின் 'காக்கி'க் கதையெல்லாம் முடிந்தது.
சியாமளன் அஷ்டகோணலுடன் நெளிய ஆரம்பித்தார்.
பின்னர் நீளமான முடியுடன் விக்ரம் வந்தார். பிரஷாந்த் மட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டார். "உங்களை மாதிரியே படமெடுக்கணும்னு நினைச்சு இங்கே சிலர் படமெடுத்து மக்களுக்கு 'ஷாக்' கொடுக்கிறாங்க. என்னோடது ஒரு சூனியக்காரன் கதை. ஆனா நல்ல சூனியக்காரன். சிறிய வயதிலில் ஒரு ஏரியில் தவறி விழுந்து இறக்கும் தருவாயில் மருத்துவர்கள் அச்சிறுவனைக் காப்பாற்றுகின்றனர். இருப்பினும் மரணிக்கும் நிலை வரை சென்றதால் அமானுஷ்யங்களுடன் பரிச்சயம் ஏற்பட அதை வைத்து ஊருக்குள் சூனியங்களை எடுப்பதுதான் ஹீரோவின் வேலை. சிக்கனமாக ஓட்டேரி மற்றும் பெரம்பூர் மயானங்களிலேயே முழுப்படப்பிடிப்பையும் முடிச்சிடலாம். மேலும் வித்தியாசமா இப்படத்தில் ஹீரோ மட்டும்தான் பேசுவான். கண்டிப்பாய் நேஷனல் அவார்டுதான். என்ன சொல்றீங்க?"
"அடப் பாவிங்களா. என்னோட Sci-Fi சேனல் பேட்டியைப் பாத்துட்டு எனக்கே அல்வா கொடுக்கிறீங்களே", சியாமளன் நினைத்து முடிக்கவில்லை.
"அதனாலென்ன தப்பு", என்றபடி எழுந்தார் கமலஹாசன். "என்னோட 'சிப்பிக்குள் முத்து' பாத்துட்டு உங்காளுங்க Forrest Gump எடுக்கலியா? தமிழன்
வெறும் ஹாலிவுட் படங்கள் சுட்டது போக இப்போது மெக்ஸிகோ படங்களையும் தழுவ ஆரம்பித்தது பரிணாம வளர்ச்சிதானே? திருட்டு தப்பேயில்ல. ஆனா திருட்டு விசிடி தான் தப்பு. ஹாலிவுட்லயிருந்து வந்து எடுத்தாலும் படத்துக்கு தமிழ் பேருதான் வைக்கணும். தமிழ்நாட்டுக்கு தமிழனுக்குத்தான் சொரணையில்ல. அதுனால உங்களுக்கு இருக்கும்னு நம்பறேன்."
"கமலஹாசன் என்பது தமிழ்ப் பெயரா?" கூட்டத்துல யாரோ முணுமுணுக்க கோபப்பார்வை வீசினார் கமல்.
"சரி படத்துக்கு வருகின்றேன். திருட்டு விசிடி பார்த்துவிட்டு அதன்படியே ஒரு கொலை நிகழ்வதை சிறுவன் கமல் பார்த்துவிடுகின்றான். அதனால் வளர்ந்து பெரியாளானவுடன் விசிடி, டிவிடி ஏன் கிராமபோன் ரெக்கார்ட் வைத்திருப்பவனைக் கண்டாலும் கொடூரமாக கொலை செய்து விட்டு, நினைவுச் சின்னமாக ஏதாவதொரு டிஸ்க்கை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொள்(ல்)கின்றான். ஒரு நாள் கொலை செய்யப்படுபவன் முகம் தன்னைப் போலவே இருக்க, சில மணித்துளிகள் நிதானிக்கின்றான். அவன் வேறு யாருமல்ல. அவன் அவனுடைய பெரியம்மாவின் பையன்தான். அதாவது அதுவும் நான்தான். I mean Spilit or multiple Personality. கொலை செய்யும் ஹீரோவுக்கு மொட்டைத்தலை. அவனது மார்பு முடியை சுருட்டி அலங்காரம் செய்ய ஹாலந்து ஹேர் டிசைனர், மற்றும் ஆயிரமாயிரம் அடிகளில் கிராபிக்ஸ் கொலை'ன்னு கலக்கிடலாம். போலீஸ் இன்ஸ்பெக்டராக அப் பாச்சினோவை பேசி முடிக்கலாம். அப்புறம் ஒரு சின்ன ரோலில் கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ¤டன் முத்தக் காட்சியை சிம்பிளாக வைக்கலாம். என்ன சொல்றீங்க?"
"என்ன இழவுடா இது? வசமா மாட்டிக்கிட்டோமே?", சியாமளன் பரிதவிக்கத் தொடங்கினார்.
வருவாரா மாட்டாரா என்று உலகமே குழம்பிக் கிடக்க கடைசியில் வந்தே விட்டார் ரஜினி. மேக்கப் போடாத ரஜினியை யாரென்று முதலில் சியாமளனுக்குப் புரியவில்லை. இருப்பினும் ஒருவாறு சமாளித்து சிரிப்பை உதிர்த்தார்.
ரஜினி தான் எழுதி வந்திருந்ததை கிடுகிடுவென்று படிக்க ஆரம்பித்தார். "திரு. சியாமளன் அவர்களே! ஜக்குபாய் படமெடுப்பதாய் இருந்தேன். ஜக்கு என்றால் இந்து. பாய் என்றால் முஸ்லிம். இரண்டையும் இணைத்து இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் கூற நினைத்தேன். நண்பர் கூட்டத்தில் அடைக்கலம் புகுந்த எதிரிகள் சிலர் தடுத்து விட்டனர். நான் கன்னடனா? மராட்டியனா? தமிழனா? இல்லை. எதுவுமே இல்லை. நான் 'மனிதன்'. இதை மீண்டும் நிரூபிக்க டைரக்டர் வாசுவிடம் பொறுப்பைத் தந்துள்ளேன். சந்திரமுகியோடு ஒரு 'சர்வநிவாரணி' படமும் தருவேன். நன்றி, வணக்கம்."
"ஆனா கதைய சொல்லவேயில்லியே?" சியாமளன் பதறினார்.
"அதை ஷ¥ட்டிங் ஸ்பாட்ல டெவலப் பண்ணுவோமே."
"என்னது கதையை டெவலப் பண்றது ஷீட்டிங் ஸ்பாட்டிலேயா?"
கரன் தாப்பர் முன்னே பேட்டி கொடுத்த கபிலைப் போல் தேம்பியழும் சியாமளனை பெரிய ஸ்கீரினில் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.
விவேக் உச்சஸ்தாதியில் குரல் கொடுத்தார், "அப்பவே சொன்னேனடா....எஸ்கேப்".
Thursday, October 07, 2004
சாமிக்குத்தம்
சமீபத்தில் திண்ணையில் வெளியான கவிதை
நேந்துக்கிட்டதை நேர்த்தியா முடிக்கோணுமில்ல?
அம்ம வாத்த புள்ளைய ஆத்தா காப்பாத்துன்னு
ஒண்ணாத்தானே கூவினோம்?
விசனப்பட்டாள் மனைவி
மூணாந் தண்ணி முடிஞ்ச கையோட
சிதறுகா அடிக்கறோமுன்னு கதறினோமே
மூணு மாசதுக்கப்புறமும் போவ முடியலியே
ஆத்தா கோவம் ஆவாதுங்க
அண்ணாநகரில் புது அபார்ட்மெண்ட்
ஆயிரம் சித்தாட்களில் ஆறுமுவம் ஒருவன்
ஆத்தா கடன் தீர்க்க தேவையென்னவோ
அரைநாளு விடுப்புத்தான்
என்னா கலீக்டருன்னு நினப்பா?
ஒப்பந்த மேஸ்திரி
ஸ்டாலினாய் கொக்கரித்தான்
நாள் கூலியில்தான் காயும்
வீட்டின் உலை இல்லாவிடில் வயிறு
இன்னைக்கு முடிச்சிடுதேன சொன்னாலும்
குழப்ப முடிச்சில் ஆறுமுவம்
குஷியில் மனையாள்
கூரைத்தள வேயும் நாள்
கூவி சேவலழலைக்கு முன்னே
கூலி சேவகம் செய்ய ஆறுமுவம்
கலவையெந்திரம் அவனின் கவலை அறியவில்லை
காலம் கரைந்தது
பாக்கெட்டில் பத்துரூவாய்
காரணத்துடன் கனத்தது
ஆத்தாவைவிட பயமுறுத்தினாள் மனைவி
களைப்புடன் ஊர்ந்தான்
வேல் நிறுத்திய தெருக்கோயில்
அருகே பரிச்சயமான பிச்சைக்காரன்
எட்டுமாதமாய் எட்டிப்போன பாதைதான்
தானத்தைப் பசி தோற்கடிக்கும் அவலம்
பொட்டிலடிபட்டதுபோல் சிலிர்த்தான் ஆறுமுவம்
வெத்திலப்பாக்கு மடிப்பிலிருந்து
விபூதி குங்குமம் பூசி
கடனடைத்த பெருமையில் பெண்டாட்டி
சக்கரக்கட்டை பிச்சைக்காரன் மட்டும்
பத்து ரூபாயை பார்த்து இன்னும் குழம்பியபடி
நேந்துக்கிட்டதை நேர்த்தியா முடிக்கோணுமில்ல?
அம்ம வாத்த புள்ளைய ஆத்தா காப்பாத்துன்னு
ஒண்ணாத்தானே கூவினோம்?
விசனப்பட்டாள் மனைவி
மூணாந் தண்ணி முடிஞ்ச கையோட
சிதறுகா அடிக்கறோமுன்னு கதறினோமே
மூணு மாசதுக்கப்புறமும் போவ முடியலியே
ஆத்தா கோவம் ஆவாதுங்க
அண்ணாநகரில் புது அபார்ட்மெண்ட்
ஆயிரம் சித்தாட்களில் ஆறுமுவம் ஒருவன்
ஆத்தா கடன் தீர்க்க தேவையென்னவோ
அரைநாளு விடுப்புத்தான்
என்னா கலீக்டருன்னு நினப்பா?
ஒப்பந்த மேஸ்திரி
ஸ்டாலினாய் கொக்கரித்தான்
நாள் கூலியில்தான் காயும்
வீட்டின் உலை இல்லாவிடில் வயிறு
இன்னைக்கு முடிச்சிடுதேன சொன்னாலும்
குழப்ப முடிச்சில் ஆறுமுவம்
குஷியில் மனையாள்
கூரைத்தள வேயும் நாள்
கூவி சேவலழலைக்கு முன்னே
கூலி சேவகம் செய்ய ஆறுமுவம்
கலவையெந்திரம் அவனின் கவலை அறியவில்லை
காலம் கரைந்தது
பாக்கெட்டில் பத்துரூவாய்
காரணத்துடன் கனத்தது
ஆத்தாவைவிட பயமுறுத்தினாள் மனைவி
களைப்புடன் ஊர்ந்தான்
வேல் நிறுத்திய தெருக்கோயில்
அருகே பரிச்சயமான பிச்சைக்காரன்
எட்டுமாதமாய் எட்டிப்போன பாதைதான்
தானத்தைப் பசி தோற்கடிக்கும் அவலம்
பொட்டிலடிபட்டதுபோல் சிலிர்த்தான் ஆறுமுவம்
வெத்திலப்பாக்கு மடிப்பிலிருந்து
விபூதி குங்குமம் பூசி
கடனடைத்த பெருமையில் பெண்டாட்டி
சக்கரக்கட்டை பிச்சைக்காரன் மட்டும்
பத்து ரூபாயை பார்த்து இன்னும் குழம்பியபடி
Wednesday, September 15, 2004
சமீபத்திய பதிவுகள்
தமிழோவியம்: கவிதை - அது ஒரு வசந்தகாலம்
thatstamil.com: சிறுகதை - அக்கரைப்பச்சை
திண்ணை: கட்டுரை - சரித்திரப் பதிவுகள் - பிஸ்மார்க்
நேரம் கிட்டினால் எட்டிப் பாருங்கள்.
thatstamil.com: சிறுகதை - அக்கரைப்பச்சை
திண்ணை: கட்டுரை - சரித்திரப் பதிவுகள் - பிஸ்மார்க்
நேரம் கிட்டினால் எட்டிப் பாருங்கள்.
Monday, September 13, 2004
செல்லுலாய்டு கனவுகள்
உண்மையை மிஞ்சிய பிரமை
உற்சாகத்திற்கும் குறையேதுமில்லை
வானமும் தொட்டுவிடும் தூரம்தான்
பாடலாசிரியன் வரிகளிலாவது
இயல்பே திரிபாக பிம்பம் உருவாக்கி
நிதர்சனத்தை நிழல் வெற்றி காணும்
கிராமக் காட்சி முடிந்ததும் வெளிநாட்டில் டூயட்
தயாரிப்பாளனின் சுருக்குப்பை எதிர்பார்ப்பில் விரியும்
ஆழம் பற்றி அதீத கவலையில்லை
சட்டிகாலியானதால் அகப்பைக்கும் அவஸ்தையில்லை
கருவே இல்லாததால் கலைப்பதில் கடினமில்லை
எழுதச் சொன்னால் கதை விடும் ஆசிரியர்கள்
கடைசியாய் வருதல் கழிசடை களைதல்
ஏகலைவன் வில்லும் எவனது சொல்லும்
என்முன் என்றும் ஜெயிக்காது
குத்தும் வசன கர்த்தாவின் வரிகள்
விரலசைவில் உலகம் வைத்திருப்பினும்
புகழெனக்கு அதீத போதையூட்டுவதில்லை
ஆகாயத்தில் பறந்து அந்தர் பல்டியடிக்கும்
அசல் நாயகனுக்கு நகல் நடிகன்தானே நான்
உற்சாகத்திற்கும் குறையேதுமில்லை
வானமும் தொட்டுவிடும் தூரம்தான்
பாடலாசிரியன் வரிகளிலாவது
இயல்பே திரிபாக பிம்பம் உருவாக்கி
நிதர்சனத்தை நிழல் வெற்றி காணும்
கிராமக் காட்சி முடிந்ததும் வெளிநாட்டில் டூயட்
தயாரிப்பாளனின் சுருக்குப்பை எதிர்பார்ப்பில் விரியும்
ஆழம் பற்றி அதீத கவலையில்லை
சட்டிகாலியானதால் அகப்பைக்கும் அவஸ்தையில்லை
கருவே இல்லாததால் கலைப்பதில் கடினமில்லை
எழுதச் சொன்னால் கதை விடும் ஆசிரியர்கள்
கடைசியாய் வருதல் கழிசடை களைதல்
ஏகலைவன் வில்லும் எவனது சொல்லும்
என்முன் என்றும் ஜெயிக்காது
குத்தும் வசன கர்த்தாவின் வரிகள்
விரலசைவில் உலகம் வைத்திருப்பினும்
புகழெனக்கு அதீத போதையூட்டுவதில்லை
ஆகாயத்தில் பறந்து அந்தர் பல்டியடிக்கும்
அசல் நாயகனுக்கு நகல் நடிகன்தானே நான்
Friday, September 10, 2004
மனித நேயம்
இவ்வாரம் திண்ணையில் வெளியான கவிதை
புழக்கடை இறுக்கமாயிருந்தது வெக்கை வெளியிலா
துணைவியின் இடை வெளியிலா
விளங்கவில்லை வெளியே வந்தேன்
மாதக்கடைசியாய் கும்மிருட்டு பயமுறுத்தியது
ஈனஸ்வரத்தில் நம்பிக்கை தெருவிளக்காய் மினுக்கியது
சேருமிடம் தெரியாமல் நடக்கும்போது
ஞானியாயுணர்ந்தேன் நம்புங்கள்
கழுதை விட்டுப்போன குட்டிச்சுவற்றில் சப்தம்
இதென்ன ஒன்று இரண்டென கதம்பக் குரல்கள்?
பொதுக்கழிப்பறை சுவாரசியத்தில்
எட்டிப் பார்க்கும் மனம் கட்டுப்படவில்லை
கார்த்திகை மாதக் களைப்பில் தாய்
குட்டிகள் முலைக்காம்புகளுடன் மோதல் நடத்தின
தெரு நாய்க்கு உணவில்லையெனில்
ஜகத்தினையழிக்க எவனாவது சபதமா பூண்டான்?
உள்ளுணர்வு உந்த ஆபத்தோவென
தாய்நாய் எழும்ப குலைப்பு மட்டும் பயமாயில்லை
கர்ப்பத்தில் ஊட்டச்சத்துணவு கிட்டவில்லை போலும்
இல்லத்தில் பழையது இரவு வைத்தால் ஊசிவிடும்
நாய்க்கிடலாமென்றால் வெக்கை மீண்டும் வெளிப்பட்டது
போன பிறவியில் புரவலனாய் நொந்திருப்பேன்
ஆந்தையாய் மாறி உலவியபின் இரவில் கோழித்தூக்கம்
புழுக்கம் மட்டும் இன்னும் இறுக்கமாய்
அன்றாட அலுவலுக்கு பலியாடாய் சிங்காரிப்பு
பழக்கமான பாதை பார்த்துச் சலித்த முகங்கள்
கேட்டு மரத்த சப்தங்களில் மொய்க்கும் ஈக்களின் சப்தசுரம்
நிமிர்ந்து பார்த்தேன் ஏதாலோ அடிபட்டிறந்த தாய்நாய்
உள்ளே புரியாத பாகமொன்று மளுக்கென்று ஒடிந்தது
பழசு போட்டிருந்தா புழக்கடையிலே தூங்கியிருக்குமோ?
புதுசாய் கண் திறந்த குட்டி முறைத்தது
வளர்ந்தபின் என்னை கட்டாயம் கடிக்கலாம்
எதிலும் அடிபட்டிறக்காமலிருந்தால்
புழக்கடை இறுக்கமாயிருந்தது வெக்கை வெளியிலா
துணைவியின் இடை வெளியிலா
விளங்கவில்லை வெளியே வந்தேன்
மாதக்கடைசியாய் கும்மிருட்டு பயமுறுத்தியது
ஈனஸ்வரத்தில் நம்பிக்கை தெருவிளக்காய் மினுக்கியது
சேருமிடம் தெரியாமல் நடக்கும்போது
ஞானியாயுணர்ந்தேன் நம்புங்கள்
கழுதை விட்டுப்போன குட்டிச்சுவற்றில் சப்தம்
இதென்ன ஒன்று இரண்டென கதம்பக் குரல்கள்?
பொதுக்கழிப்பறை சுவாரசியத்தில்
எட்டிப் பார்க்கும் மனம் கட்டுப்படவில்லை
கார்த்திகை மாதக் களைப்பில் தாய்
குட்டிகள் முலைக்காம்புகளுடன் மோதல் நடத்தின
தெரு நாய்க்கு உணவில்லையெனில்
ஜகத்தினையழிக்க எவனாவது சபதமா பூண்டான்?
உள்ளுணர்வு உந்த ஆபத்தோவென
தாய்நாய் எழும்ப குலைப்பு மட்டும் பயமாயில்லை
கர்ப்பத்தில் ஊட்டச்சத்துணவு கிட்டவில்லை போலும்
இல்லத்தில் பழையது இரவு வைத்தால் ஊசிவிடும்
நாய்க்கிடலாமென்றால் வெக்கை மீண்டும் வெளிப்பட்டது
போன பிறவியில் புரவலனாய் நொந்திருப்பேன்
ஆந்தையாய் மாறி உலவியபின் இரவில் கோழித்தூக்கம்
புழுக்கம் மட்டும் இன்னும் இறுக்கமாய்
அன்றாட அலுவலுக்கு பலியாடாய் சிங்காரிப்பு
பழக்கமான பாதை பார்த்துச் சலித்த முகங்கள்
கேட்டு மரத்த சப்தங்களில் மொய்க்கும் ஈக்களின் சப்தசுரம்
நிமிர்ந்து பார்த்தேன் ஏதாலோ அடிபட்டிறந்த தாய்நாய்
உள்ளே புரியாத பாகமொன்று மளுக்கென்று ஒடிந்தது
பழசு போட்டிருந்தா புழக்கடையிலே தூங்கியிருக்குமோ?
புதுசாய் கண் திறந்த குட்டி முறைத்தது
வளர்ந்தபின் என்னை கட்டாயம் கடிக்கலாம்
எதிலும் அடிபட்டிறக்காமலிருந்தால்
Thursday, September 09, 2004
இயல்பும் திரிபும்
விஞ்ஞானத்தால் அஞ்ஞானம் போக்கி
ஊர் போற்றும் உபாத்தியார்
பிள்ளையின் கேள்விக்கு சிடுசிடுப்பார்
பிணி நீக்கிக் களி காண்பார்
பெருமருத்துவர் பெயரும் கண்டார்
சளியிருந்தால் வரத்தான் செய்யுமென்பார்
தளர்ந்து கிடந்த தந்தையை நோக்கி
வீடு மறந்து நாட்டை கவனிக்கும் சேவகி
இல்லாதவனை விட்டு பெருமாளுக்கு பிச்சையிடும் பக்தன்
இச்செயல்கள் இயல்புகளா இல்லை திரிபுகளா?
ஊர் போற்றும் உபாத்தியார்
பிள்ளையின் கேள்விக்கு சிடுசிடுப்பார்
பிணி நீக்கிக் களி காண்பார்
பெருமருத்துவர் பெயரும் கண்டார்
சளியிருந்தால் வரத்தான் செய்யுமென்பார்
தளர்ந்து கிடந்த தந்தையை நோக்கி
வீடு மறந்து நாட்டை கவனிக்கும் சேவகி
இல்லாதவனை விட்டு பெருமாளுக்கு பிச்சையிடும் பக்தன்
இச்செயல்கள் இயல்புகளா இல்லை திரிபுகளா?
நேர் கோடுகள்
கல்வியே மாசிலா மருந்து கவனமாய்த்தான் பருகினேன்
எட்டிஉதைத்ததொதுக்கீடு இன்னும் வலிக்கின்றது
பாதி மதிப்பெண்ணில் பாதை மாறியதால்
கூலிக்கு மாரடிக்க தொலையூரில் வாய்ப்பு
நெடிதுயர்ந்த தகப்பனின் பிம்பம் குறுக்கே
சிபாரிசு மடல் சுக்கலாய் இரங்கல் பாடியது
பெருந்தன்மையாய் மாமா தன்பெண் விடுத்தார்
கணிணி தெரியாத கயவனெனக்கும் ஒருவழியாய் கண்ணாலம்
கைக்கும் வாய்க்கும் சண்டை கிழிந்தது சம்பளக்கவர்
ஆசை அறுபது மோகம் முப்பது பாதிக்கணக்கானது
கேள்விகளே வாழ்க்கையான போது அரிதாய் விடையும்
அழகான நல்முத்து தாரத்தின் பரிசாய் சிரித்தது
சிறிதே வளையலாம் தப்பில்லைதான்
சண்டமாருதத்தில் மரமொடிய புல் சிரிக்கும் ஆனால்
தண்டவாளங்கள் வளைந்தால் பயணமே பாழன்றோ?
நானும் ஆரம்பித்தேன் நல்முத்துவிடம்
கல்வியே மாசிலா மருந்து
தகப்பன் பிம்பம் தடையாய்த் தெரியவில்லை
கல்வியே மாசிலா மருந்து கவனமாய்த்தான் பருகினேன்
எட்டிஉதைத்ததொதுக்கீடு இன்னும் வலிக்கின்றது
பாதி மதிப்பெண்ணில் பாதை மாறியதால்
கூலிக்கு மாரடிக்க தொலையூரில் வாய்ப்பு
நெடிதுயர்ந்த தகப்பனின் பிம்பம் குறுக்கே
சிபாரிசு மடல் சுக்கலாய் இரங்கல் பாடியது
பெருந்தன்மையாய் மாமா தன்பெண் விடுத்தார்
கணிணி தெரியாத கயவனெனக்கும் ஒருவழியாய் கண்ணாலம்
கைக்கும் வாய்க்கும் சண்டை கிழிந்தது சம்பளக்கவர்
ஆசை அறுபது மோகம் முப்பது பாதிக்கணக்கானது
கேள்விகளே வாழ்க்கையான போது அரிதாய் விடையும்
அழகான நல்முத்து தாரத்தின் பரிசாய் சிரித்தது
சிறிதே வளையலாம் தப்பில்லைதான்
சண்டமாருதத்தில் மரமொடிய புல் சிரிக்கும் ஆனால்
தண்டவாளங்கள் வளைந்தால் பயணமே பாழன்றோ?
நானும் ஆரம்பித்தேன் நல்முத்துவிடம்
கல்வியே மாசிலா மருந்து
தகப்பன் பிம்பம் தடையாய்த் தெரியவில்லை
Saturday, September 04, 2004
ரஷ்யாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்
இரு விமானங்கள், ஒரு சுரங்கப் பாதை குண்டுவெடிப்பு கடைசியாக முன்னூறுக்கும் அதிகமானோரை (அவற்றில் பாதி குழந்தைகள்) பலி கண்டது தீவிரவாதம். ரஷ்ய அதிபர் புடின் பொறி கலங்கிப் போய்விட்டார்.
புது முறையாக தீவிரவாதம் இப்போது ரஷ்யாவில் 'இறக்குமதி' செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது அல்-கொய்தா தீவிரவாதிகள் (சௌதி அரேபியாவைச் சேர்ந்தவர்) பங்கு பெற்றுள்ளார்களாம். ரஷ்யாவின் அதிரடிப்படையினர் அவசரம் காட்டியதால் இவ்வளவு சேதாரமெனச் சொல்லப்படுகின்றது. இருப்பினும் ஒரு பள்ளியில் குண்டுகளை விதைத்து ஆயிரக்கணக்கான மக்களை, குழந்தைகளை பிணைக்கைதிகளாய் வைப்பதற்கு ஒரு 'மனம்' வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் ஆப்கானியர் மற்றும் பாகிஸ்தானியர் தீவிரவாத 'இறக்குமதி' காலங்காலமாக செய்து வருகின்றார்கள். மனித நேயம் மிக்கோரே!!! பாருங்கள் தீவிரவாதத்தின் கோரக் காட்சிகளை...


எங்கும், எப்பொழுதும், தீவிரவாதம் ஒரு தீர்வாகாது. புரிந்தால் சரி...
இரு விமானங்கள், ஒரு சுரங்கப் பாதை குண்டுவெடிப்பு கடைசியாக முன்னூறுக்கும் அதிகமானோரை (அவற்றில் பாதி குழந்தைகள்) பலி கண்டது தீவிரவாதம். ரஷ்ய அதிபர் புடின் பொறி கலங்கிப் போய்விட்டார்.
புது முறையாக தீவிரவாதம் இப்போது ரஷ்யாவில் 'இறக்குமதி' செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது அல்-கொய்தா தீவிரவாதிகள் (சௌதி அரேபியாவைச் சேர்ந்தவர்) பங்கு பெற்றுள்ளார்களாம். ரஷ்யாவின் அதிரடிப்படையினர் அவசரம் காட்டியதால் இவ்வளவு சேதாரமெனச் சொல்லப்படுகின்றது. இருப்பினும் ஒரு பள்ளியில் குண்டுகளை விதைத்து ஆயிரக்கணக்கான மக்களை, குழந்தைகளை பிணைக்கைதிகளாய் வைப்பதற்கு ஒரு 'மனம்' வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் ஆப்கானியர் மற்றும் பாகிஸ்தானியர் தீவிரவாத 'இறக்குமதி' காலங்காலமாக செய்து வருகின்றார்கள். மனித நேயம் மிக்கோரே!!! பாருங்கள் தீவிரவாதத்தின் கோரக் காட்சிகளை...
எங்கும், எப்பொழுதும், தீவிரவாதம் ஒரு தீர்வாகாது. புரிந்தால் சரி...
மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி
நான் எழுதிய சிறுகதையும், புதுக்கவிதையும்:
மௌன சாட்சிகள் (சிறுகதை) http://www.maraththadi.com/article.asp?id=1931
முக்கோணங்கள் (புதுக் கவிதை) http://www.maraththadi.com/article.asp?id=1935
வந்தியத்தேவன்.
நான் எழுதிய சிறுகதையும், புதுக்கவிதையும்:
மௌன சாட்சிகள் (சிறுகதை) http://www.maraththadi.com/article.asp?id=1931
முக்கோணங்கள் (புதுக் கவிதை) http://www.maraththadi.com/article.asp?id=1935
வந்தியத்தேவன்.
கோணல் புத்தி கோயபல்சுகளுக்கு
என்னை முன்னாள் நண்பராகவும் இன்று எட்டப்பராகவும் சித்தரித்த திருமிகு சுந்தரராஜன் பசுபதி என்ற மூக்கருக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.
நடைச்சித்திரத்தில் ஊர்க்குருவி உங்களை நேரடியாக எதுவும் சொல்லாமல் முதுகில் குத்திவிட்டதென்றீர்கள். கொள்கை என்பது முதுகெலும்பு. ஆனால் கொள்கை ஏதுமில்லாத உங்களுக்கு வலி அதிகம் இருக்காதென நம்புகின்றேன். சிநேகமே இல்லாதபோது துரோகமெங்கிருந்து வந்தது? யாம் துரோகம் செய்தால் தாங்கும் சக்தி உமக்குண்டோ?
தடியால் அடித்து கனிய வைத்தீர்கள். மிக்க நன்றி. அதற்காக 'பொத்திக்கொண்டும்', 'காரமாகவும்' பிறர் திருப்திக்கு எழுத எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆமாம் வலைப்பூக்களில் எழுதுபவரென்ன சாகித்திய அகாதமிக்கும், நோபல் பரிசுக்குமா எழுதுகிறோம்? வர்த்தகக் கட்டாயம், பத்திரிக்கை நடத்துகின்றேன் என்ற பேத்தல்கள் வேண்டாமே? அது சரி உங்கள் வலைப்பூ அல்லவா? உங்கள் சுதந்திரத்தில் தலையிட எனக்கென்ன உரிமை?
வாப்பாவின் கட்டுரையில் இரண்டு இடங்கள் இடித்தன. ராஜபாளையத்தில் பிரபாகரன் சீருடையில் வைகோ மற்றும் இறுதியில் 'குடத்திலிட்ட விளக்குகள்' முடிவு. முன்னது கட்டுரையின் போக்கை திசை திருப்ப முடிவில் வாப்பா ஈழத்தமிழரின் நலனிலிருந்து பிசகி தீவிரவாதத்தை சிலாகிப்பது போலிருந்தது. அதைத்தான் அவரது பாணியிலிலே 'நடைச்சித்திர பாணியில்' ஊர்க்குருவியாய் சொன்னேன். இதில் ஊர்க்குருவியார் மூக்கன் வலைப்பதிவைப் படித்தார் என்று சொன்னால் கோர்வை இடிக்குமென்று விகடனில் 'மாணவ நிருபராயிருந்த' உனக்குத் தெரியாததா?
சரி உங்களோட சமீபத்திய பதிவுகளைப் பார்ப்போமா?
அது எப்படிங்கோ?
"எங்க ஊர் பிரச்சினை பிடிச்சது தான் சாமி. திண்ணியத்துல பீயைக் கரைச்சுஊத்துவாங்க. கோயில்கள்ள தமிழ்ல மந்திரம் சொன்னா தீட்டும்பாங்க. தமிழனை எல்லாம் இந்தி படிக்காதன்னு சொல்லிட்டு, பேரனுக்கு இந்தி சொல்லிக் கொடுத்து அமைச்சராக்குவாங்க. தேர்தலுக்கு தேர்தல் விதவிதமா பிரியாணியும் சாராயமும் ஊத்தி மாறி மாறி சவாரி பண்ணுவாங்க. பவுடர் மூஞ்சிக்கு ஏமாந்து போய் அரசுப் பொறுப்பை கையில் குடுப்பாங்க. பெரிய வீட்டு மனுசஙக வப்பாட்டி கதையை பத்தி பத்தியா எழுதுவாங்க. இரட்டை டம்ளர் முறை இன்னமும் இருக்கு எங்க கிராமங்கள்ள...மணிப்பூரில கலவரம்தான். குஜராத்துல கொடுமைதான்( அந்தக் கட்சிக்கு தேர்தல என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா)"
இந்த அத்தனை குறையும் எதிர்த்துக்கிட்டும், எழுதிக்கிட்டும், என்னைக்காவது இதையெல்லாம் மாத்திடலாம்ங்கிற நம்பிக்கையோடும், ஜனநாயகத்துலயும் , பேச்சு வார்த்தையிலயும் இதெல்லாம் எதிர்கொள்ளலாம் என்ற சாத்வீகமான நம்பிக்கைகளோடவும் எங்க திருக்கூட்டம் வாழ்ந்துகிட்டிருக்கு. மாறும்ங்கிற நம்பிக்கைதாம் ஆதாரம் எங்களுக்கு அம்மா குணம் சரியில்லைனா, பக்கத்து வீட்டுக்காரிய அம்மாவா ஏத்துக்க முடியாது எங்களால - தங்கமணி மாதிரியும், சுந்தரவடிவேலு மாதிரியும்."
ஆமாம் கொள்கைச் சிங்கம் யாருங்கோ?
"தமிழ்நாடு என் தாய். இந்தியா என் தகப்பன். ஈழத்தமிழன், கொஞ்சம் வளர்ந்து விட்ட என் முரட்டுச் சகோதரன். இவர்களில் யாருக்கு
ஏதாவதென்றாலும் எங்கள் நெஞ்சம் பதறும். அந்த உணர்வு உங்களுக்கும் வர, எனக்கு வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கு மேல் இது விஷயமாக பின்னூட்டம் கொடுப்பதற்கும், மறு பதிவு போட்டு லாவணி பாடுவதற்கு எனக்கு இது Time pass விஷயமில்லை. உணர்ந்தால் உணருங்கள். இல்லாவிட்டால் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டிருங்கள். பொத்திக் கொண்டு போகச் சொல்கிறவர்கள் தன் கவிதையையே மறுபடி வாசியுங்கள். கைகள் தானாகவே செல்லுமிடம் விளங்கும்.
பெரிய்ய்ய்ய்ய்..ய்ய்ய்ய்ய்ய் கும்பிடு எல்லாருக்கும்...."
அடேங்கப்பா அசத்திட்டீங்க!!!
"நிறைய படிக்க ஆசை. நிறைய தெரிந்து கொள்ள ஆசை. கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு அதற்காக கட்சி கட்டுவதை விட எதையும் மறுபார்வை பார்க்க ஆசை. யாருக்கும், எக்காலத்திலும் எதற்காகவும் சார்பு நிலை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நான் எந்தக் குழாமிலும், எந்தப் பொறுப்பிலும் இல்லை. எழுத்தாளனாகி பெரிய பேர் வாங்கும் ஆசை இல்லை. புத்த்கம் போட்டு முகவாய்க்கட்டையில் பேனாவோடு, புத்தகங்களின் பின்னட்டைகளில் போஸ் பொடுக்கும் ஆசை இல்லை. கொள்கைகளை உருவாக்கி, என் பேனாவை வைத்து உலகத்தை ஒரு "பெரட்டு பெரட்டிவிட" எனக்கு ஊக்கம் ஒன்றும் இல்லை. சுத்தம் காரணமாக பல் துலக்க முற்பட்டு, அது அனிச்சை செயலாகி, தினமும் பல் விளக்கியும் , காரணம் தெரியாமல் கடனே என்று செய்வதால் நாம் ஊத்தைவாயர்களாக ஆவதைபோல, எழுத்து எனக்கு இல்லை. என் பிள்ளையை கொஞ்சுவது எனக்கு எத்த்னை உவப்பானதோ, அதைப் போலவே நான் நினைப்பதையெல்லாம் எழுதுவதும்..... எழுத்தாள, சிந்தனையாள சித்தாந்த சுழல்களுக்குள் சிக்காத, policy based என்றில்லாமல் issue based நிலை எடுக்கும் ஒரு சாதாரண, சராசரிக்கும் கீழான வாசகன். வரிக்கு வரி எனக்கு ஒப்புமை இல்லை என்றாலும் ஜப்பார் வாப்பாவின் கட்டுரையில் இருந்த நிஜம் என்னை அசைத்தது. உடனே என் உணர்ச்சி அதை இங்கே சுட்டிட செய்தது. மிஞ்சிப்போன மண், சூளைக்கு வெளியே விழுந்தால் அது சாக்கடை வண்டலோடு கலந்து நாறிப்போகவும்வாய்ப்பிருக்கிறது அல்லவா....!! எதுக்காச்சும் ஆகும் என்று அதையே கொண்டை செய்யச் சொன்ன ஒரு தாய்மனசு போல தெரிந்தது வாப்பாவின் மனசெனக்கு..."
அடடே எங்கேயோ பலமா இடிச்சு உதைக்குதே?
இப்போ பெரியார் கருத்துடன் பிராமணா எதிர்ப்பு. ஆமாம் இது எவ்வளவு நாளக்கு? யாரோ ஒரு மாமாவோ, மாமியோ உனது மனக்கதவுகளை
திறக்கும் வரையிலா? அது சரி. அது உன் மனக்கதவுகள். எப்போ திறக்கணும், மூடணும்ங்ற சுதந்திரம் உன்னுடையதல்லவா?
அப்புறம் யாரும் இணையத்துல ஓடி ஓடி எனக்கு பின்னூட்டம் 'கொடுங்கண்ணா அல்லது கொடுங்கக்கா'ன்னு கேட்கிற மாதிரி தெரியவில்லை.
இந்த மாதிரி அசிங்கமான பதிவிற்கு எனக்கு நானே மாப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது நண்பர்கள் கண்டிப்பாய் இப்பதிவைப் பற்றி தொலைபேசுவார்கள். பிறகு நானும்(!) இப்பதிவை நீக்கிவிடுவேன்.
மற்றபடி இப்பதிவிற்கு எதிர்வினைகளுக்கோ, பின்னூட்டங்களுக்கோ பதில் கிடையாது.
அடடே முடிவு சுவாரசியமாய் வரவில்லை...
நானும் எதற்கும் தயார்!!!
(அட காசா பணமா சொல்லித்தான் வைப்போமே ;-))
என்னை முன்னாள் நண்பராகவும் இன்று எட்டப்பராகவும் சித்தரித்த திருமிகு சுந்தரராஜன் பசுபதி என்ற மூக்கருக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.
நடைச்சித்திரத்தில் ஊர்க்குருவி உங்களை நேரடியாக எதுவும் சொல்லாமல் முதுகில் குத்திவிட்டதென்றீர்கள். கொள்கை என்பது முதுகெலும்பு. ஆனால் கொள்கை ஏதுமில்லாத உங்களுக்கு வலி அதிகம் இருக்காதென நம்புகின்றேன். சிநேகமே இல்லாதபோது துரோகமெங்கிருந்து வந்தது? யாம் துரோகம் செய்தால் தாங்கும் சக்தி உமக்குண்டோ?
தடியால் அடித்து கனிய வைத்தீர்கள். மிக்க நன்றி. அதற்காக 'பொத்திக்கொண்டும்', 'காரமாகவும்' பிறர் திருப்திக்கு எழுத எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆமாம் வலைப்பூக்களில் எழுதுபவரென்ன சாகித்திய அகாதமிக்கும், நோபல் பரிசுக்குமா எழுதுகிறோம்? வர்த்தகக் கட்டாயம், பத்திரிக்கை நடத்துகின்றேன் என்ற பேத்தல்கள் வேண்டாமே? அது சரி உங்கள் வலைப்பூ அல்லவா? உங்கள் சுதந்திரத்தில் தலையிட எனக்கென்ன உரிமை?
வாப்பாவின் கட்டுரையில் இரண்டு இடங்கள் இடித்தன. ராஜபாளையத்தில் பிரபாகரன் சீருடையில் வைகோ மற்றும் இறுதியில் 'குடத்திலிட்ட விளக்குகள்' முடிவு. முன்னது கட்டுரையின் போக்கை திசை திருப்ப முடிவில் வாப்பா ஈழத்தமிழரின் நலனிலிருந்து பிசகி தீவிரவாதத்தை சிலாகிப்பது போலிருந்தது. அதைத்தான் அவரது பாணியிலிலே 'நடைச்சித்திர பாணியில்' ஊர்க்குருவியாய் சொன்னேன். இதில் ஊர்க்குருவியார் மூக்கன் வலைப்பதிவைப் படித்தார் என்று சொன்னால் கோர்வை இடிக்குமென்று விகடனில் 'மாணவ நிருபராயிருந்த' உனக்குத் தெரியாததா?
சரி உங்களோட சமீபத்திய பதிவுகளைப் பார்ப்போமா?
அது எப்படிங்கோ?
"எங்க ஊர் பிரச்சினை பிடிச்சது தான் சாமி. திண்ணியத்துல பீயைக் கரைச்சுஊத்துவாங்க. கோயில்கள்ள தமிழ்ல மந்திரம் சொன்னா தீட்டும்பாங்க. தமிழனை எல்லாம் இந்தி படிக்காதன்னு சொல்லிட்டு, பேரனுக்கு இந்தி சொல்லிக் கொடுத்து அமைச்சராக்குவாங்க. தேர்தலுக்கு தேர்தல் விதவிதமா பிரியாணியும் சாராயமும் ஊத்தி மாறி மாறி சவாரி பண்ணுவாங்க. பவுடர் மூஞ்சிக்கு ஏமாந்து போய் அரசுப் பொறுப்பை கையில் குடுப்பாங்க. பெரிய வீட்டு மனுசஙக வப்பாட்டி கதையை பத்தி பத்தியா எழுதுவாங்க. இரட்டை டம்ளர் முறை இன்னமும் இருக்கு எங்க கிராமங்கள்ள...மணிப்பூரில கலவரம்தான். குஜராத்துல கொடுமைதான்( அந்தக் கட்சிக்கு தேர்தல என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா)"
இந்த அத்தனை குறையும் எதிர்த்துக்கிட்டும், எழுதிக்கிட்டும், என்னைக்காவது இதையெல்லாம் மாத்திடலாம்ங்கிற நம்பிக்கையோடும், ஜனநாயகத்துலயும் , பேச்சு வார்த்தையிலயும் இதெல்லாம் எதிர்கொள்ளலாம் என்ற சாத்வீகமான நம்பிக்கைகளோடவும் எங்க திருக்கூட்டம் வாழ்ந்துகிட்டிருக்கு. மாறும்ங்கிற நம்பிக்கைதாம் ஆதாரம் எங்களுக்கு அம்மா குணம் சரியில்லைனா, பக்கத்து வீட்டுக்காரிய அம்மாவா ஏத்துக்க முடியாது எங்களால - தங்கமணி மாதிரியும், சுந்தரவடிவேலு மாதிரியும்."
ஆமாம் கொள்கைச் சிங்கம் யாருங்கோ?
"தமிழ்நாடு என் தாய். இந்தியா என் தகப்பன். ஈழத்தமிழன், கொஞ்சம் வளர்ந்து விட்ட என் முரட்டுச் சகோதரன். இவர்களில் யாருக்கு
ஏதாவதென்றாலும் எங்கள் நெஞ்சம் பதறும். அந்த உணர்வு உங்களுக்கும் வர, எனக்கு வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கு மேல் இது விஷயமாக பின்னூட்டம் கொடுப்பதற்கும், மறு பதிவு போட்டு லாவணி பாடுவதற்கு எனக்கு இது Time pass விஷயமில்லை. உணர்ந்தால் உணருங்கள். இல்லாவிட்டால் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டிருங்கள். பொத்திக் கொண்டு போகச் சொல்கிறவர்கள் தன் கவிதையையே மறுபடி வாசியுங்கள். கைகள் தானாகவே செல்லுமிடம் விளங்கும்.
பெரிய்ய்ய்ய்ய்..ய்ய்ய்ய்ய்ய் கும்பிடு எல்லாருக்கும்...."
அடேங்கப்பா அசத்திட்டீங்க!!!
"நிறைய படிக்க ஆசை. நிறைய தெரிந்து கொள்ள ஆசை. கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு அதற்காக கட்சி கட்டுவதை விட எதையும் மறுபார்வை பார்க்க ஆசை. யாருக்கும், எக்காலத்திலும் எதற்காகவும் சார்பு நிலை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நான் எந்தக் குழாமிலும், எந்தப் பொறுப்பிலும் இல்லை. எழுத்தாளனாகி பெரிய பேர் வாங்கும் ஆசை இல்லை. புத்த்கம் போட்டு முகவாய்க்கட்டையில் பேனாவோடு, புத்தகங்களின் பின்னட்டைகளில் போஸ் பொடுக்கும் ஆசை இல்லை. கொள்கைகளை உருவாக்கி, என் பேனாவை வைத்து உலகத்தை ஒரு "பெரட்டு பெரட்டிவிட" எனக்கு ஊக்கம் ஒன்றும் இல்லை. சுத்தம் காரணமாக பல் துலக்க முற்பட்டு, அது அனிச்சை செயலாகி, தினமும் பல் விளக்கியும் , காரணம் தெரியாமல் கடனே என்று செய்வதால் நாம் ஊத்தைவாயர்களாக ஆவதைபோல, எழுத்து எனக்கு இல்லை. என் பிள்ளையை கொஞ்சுவது எனக்கு எத்த்னை உவப்பானதோ, அதைப் போலவே நான் நினைப்பதையெல்லாம் எழுதுவதும்..... எழுத்தாள, சிந்தனையாள சித்தாந்த சுழல்களுக்குள் சிக்காத, policy based என்றில்லாமல் issue based நிலை எடுக்கும் ஒரு சாதாரண, சராசரிக்கும் கீழான வாசகன். வரிக்கு வரி எனக்கு ஒப்புமை இல்லை என்றாலும் ஜப்பார் வாப்பாவின் கட்டுரையில் இருந்த நிஜம் என்னை அசைத்தது. உடனே என் உணர்ச்சி அதை இங்கே சுட்டிட செய்தது. மிஞ்சிப்போன மண், சூளைக்கு வெளியே விழுந்தால் அது சாக்கடை வண்டலோடு கலந்து நாறிப்போகவும்வாய்ப்பிருக்கிறது அல்லவா....!! எதுக்காச்சும் ஆகும் என்று அதையே கொண்டை செய்யச் சொன்ன ஒரு தாய்மனசு போல தெரிந்தது வாப்பாவின் மனசெனக்கு..."
அடடே எங்கேயோ பலமா இடிச்சு உதைக்குதே?
இப்போ பெரியார் கருத்துடன் பிராமணா எதிர்ப்பு. ஆமாம் இது எவ்வளவு நாளக்கு? யாரோ ஒரு மாமாவோ, மாமியோ உனது மனக்கதவுகளை
திறக்கும் வரையிலா? அது சரி. அது உன் மனக்கதவுகள். எப்போ திறக்கணும், மூடணும்ங்ற சுதந்திரம் உன்னுடையதல்லவா?
அப்புறம் யாரும் இணையத்துல ஓடி ஓடி எனக்கு பின்னூட்டம் 'கொடுங்கண்ணா அல்லது கொடுங்கக்கா'ன்னு கேட்கிற மாதிரி தெரியவில்லை.
இந்த மாதிரி அசிங்கமான பதிவிற்கு எனக்கு நானே மாப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது நண்பர்கள் கண்டிப்பாய் இப்பதிவைப் பற்றி தொலைபேசுவார்கள். பிறகு நானும்(!) இப்பதிவை நீக்கிவிடுவேன்.
மற்றபடி இப்பதிவிற்கு எதிர்வினைகளுக்கோ, பின்னூட்டங்களுக்கோ பதில் கிடையாது.
அடடே முடிவு சுவாரசியமாய் வரவில்லை...
நானும் எதற்கும் தயார்!!!
(அட காசா பணமா சொல்லித்தான் வைப்போமே ;-))
பின்னூட்டங்கள்
யதேச்சையாய் சுந்தரவடிவேல் அவர்களின் நண்பர் சுந்தர்ராஜனுக்கு பதிவின் பின்னூட்டங்களைப் படிக்க நேர்ந்தது. ஆச்சிமகன் பட்டையை கிளைப்பியிருக்கிறார். ஆச்சிமகன் சொல்வது இதுதான்:"வங்கதேச விடுதலைப்போரின் போதே இந்திய ராணுவத்தின் அட்டூழியங்கள் பற்றிய தகவல்கள் வெளியாயின. உள்நாட்டு கலவரங்களின் போது பணியமர்த்தப்படும் ராணுவம் தம் மக்களிடமே மிருகத்தனமாக நடந்து கொள்வதைத்தான் கண்டு வந்திருக்கிறோம். ராணுவத்திற்கும் - ஏன் காவல் துறைக்கும் கூட - மனித நாகரிகத்தையும் மனிதப் பண்புகளையும் பயிற்றுவிப்பது முதலாவது தேவை. அதில் அவர் தேறிய பிறகு ஆயுத பயிற்சி மேற்கொண்டால் போதும் என்ற நிலை வர வேண்டும்..."
மேலும் செ(சொ)ல்லும் ஆச்சிமகன்,"நான் ஒன்றும் சர்வாதிகார நாட்டில் வாழவில்லை. நமது தேச பக்தியை புலப்படுத்த நமது ராணுவத்தின் தவறுகளை மூடி மறைக்க வேண்டியதில்லை" என்று முழங்குகிறார்.
அவரது கருத்துகளுக்கு தலைவணங்குகின்றேன்.
தேசியப் பாதுகாப்பு பயிற்சிக்கூடத்தின் தலைமைக் கனவானாய் ஆச்சிமகன் ஆகக் கடவ. இருபத்தி ஓராம் நூற்றாண்டில் மனித நாகரிகம்/மனிதப் பண்பு பேசுமுன் தனது இணையப் பெயரையாவது மாற்றி வரட்டும். திருமலை ரா.கா.கி.'ல் கூறியது போல் நரகலை மிதிப்பது போலுள்ளது.
நல்லா ஜம்முன்னு சாப்பிட்டு, கும்முன்னு தூங்கி, தும்மல் சரித்திரம் எழுதுங்கள் ஆச்சிமகனாரே!!! அதை விட்டு விட்டு ராணுவப் பயிற்சியெல்லாம் உமக்கெதற்கு?
இன்னும் வேடிக்கை என்னவெனில் ஜனா என்பவர் சொல்லியது,"உண்மையை ஆண்மையுடன் அறிதலும், ஏற்றுக்கொள்வதும், வெளிப்படுத்துவதும் எல்லாராலும் முடியாத ஒன்று. அதை நீங்கள் செய்வதற்கு நன்றி. உங்களின் மத்த ஆக்கபூர்வமான பதிவுகளுக்கும் நன்றிகள்." இப்பின்னூட்டத்தின் மின்னஞ்சல் முகவரி sundara@email.com மற்றும் வலைப்பூ முகவரி http://sundaravadivel.blogspot.com/.
கண்டிப்பாக நண்பர் சுந்தரவடிவேல் தனக்குத் தானே 'தட்டிக் கொடுத்துக்கொள்ள' அவசியமில்லை. அப்படியெனில் ஜனா அல்லது ஜானா யார்? விஷமியோ?
இப்பதிவினால் என்ன லாபம் என்று கேட்போருக்கு...
எனக்கு 'கொள்கைச் சிங்கம்', 'கருத்து வெறி கொண்ட மிருகம்', போன்ற புதிய பட்டங்கள் சமீபத்தில் அளிக்கப்பட்டன.
இப்பதிவின் காரணமாய் முதலாவதாய் என் வலைப்பூவில் தோன்றும் ஆச்சிமகனின் சுட்டியோ, சுந்தரவடிவேலுவின் சுட்டியோ நான் நீக்க மாட்டேன்.
யதேச்சையாய் சுந்தரவடிவேல் அவர்களின் நண்பர் சுந்தர்ராஜனுக்கு பதிவின் பின்னூட்டங்களைப் படிக்க நேர்ந்தது. ஆச்சிமகன் பட்டையை கிளைப்பியிருக்கிறார். ஆச்சிமகன் சொல்வது இதுதான்:"வங்கதேச விடுதலைப்போரின் போதே இந்திய ராணுவத்தின் அட்டூழியங்கள் பற்றிய தகவல்கள் வெளியாயின. உள்நாட்டு கலவரங்களின் போது பணியமர்த்தப்படும் ராணுவம் தம் மக்களிடமே மிருகத்தனமாக நடந்து கொள்வதைத்தான் கண்டு வந்திருக்கிறோம். ராணுவத்திற்கும் - ஏன் காவல் துறைக்கும் கூட - மனித நாகரிகத்தையும் மனிதப் பண்புகளையும் பயிற்றுவிப்பது முதலாவது தேவை. அதில் அவர் தேறிய பிறகு ஆயுத பயிற்சி மேற்கொண்டால் போதும் என்ற நிலை வர வேண்டும்..."
மேலும் செ(சொ)ல்லும் ஆச்சிமகன்,"நான் ஒன்றும் சர்வாதிகார நாட்டில் வாழவில்லை. நமது தேச பக்தியை புலப்படுத்த நமது ராணுவத்தின் தவறுகளை மூடி மறைக்க வேண்டியதில்லை" என்று முழங்குகிறார்.
அவரது கருத்துகளுக்கு தலைவணங்குகின்றேன்.
தேசியப் பாதுகாப்பு பயிற்சிக்கூடத்தின் தலைமைக் கனவானாய் ஆச்சிமகன் ஆகக் கடவ. இருபத்தி ஓராம் நூற்றாண்டில் மனித நாகரிகம்/மனிதப் பண்பு பேசுமுன் தனது இணையப் பெயரையாவது மாற்றி வரட்டும். திருமலை ரா.கா.கி.'ல் கூறியது போல் நரகலை மிதிப்பது போலுள்ளது.
நல்லா ஜம்முன்னு சாப்பிட்டு, கும்முன்னு தூங்கி, தும்மல் சரித்திரம் எழுதுங்கள் ஆச்சிமகனாரே!!! அதை விட்டு விட்டு ராணுவப் பயிற்சியெல்லாம் உமக்கெதற்கு?
இன்னும் வேடிக்கை என்னவெனில் ஜனா என்பவர் சொல்லியது,"உண்மையை ஆண்மையுடன் அறிதலும், ஏற்றுக்கொள்வதும், வெளிப்படுத்துவதும் எல்லாராலும் முடியாத ஒன்று. அதை நீங்கள் செய்வதற்கு நன்றி. உங்களின் மத்த ஆக்கபூர்வமான பதிவுகளுக்கும் நன்றிகள்." இப்பின்னூட்டத்தின் மின்னஞ்சல் முகவரி sundara@email.com மற்றும் வலைப்பூ முகவரி http://sundaravadivel.blogspot.com/.
கண்டிப்பாக நண்பர் சுந்தரவடிவேல் தனக்குத் தானே 'தட்டிக் கொடுத்துக்கொள்ள' அவசியமில்லை. அப்படியெனில் ஜனா அல்லது ஜானா யார்? விஷமியோ?
இப்பதிவினால் என்ன லாபம் என்று கேட்போருக்கு...
எனக்கு 'கொள்கைச் சிங்கம்', 'கருத்து வெறி கொண்ட மிருகம்', போன்ற புதிய பட்டங்கள் சமீபத்தில் அளிக்கப்பட்டன.
இப்பதிவின் காரணமாய் முதலாவதாய் என் வலைப்பூவில் தோன்றும் ஆச்சிமகனின் சுட்டியோ, சுந்தரவடிவேலுவின் சுட்டியோ நான் நீக்க மாட்டேன்.
Tuesday, August 31, 2004
ரிப்பளிக்கன் கன்வென்ஷன்
நியூயார்க்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்து விட்டது. அரிசோனா செனட்டர் ஜான் மெக்கெயினும், முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி ஜூலியானியும் முதல் நாளின் முக்கியப் பேச்சாளர்கள். ஜான் மெக்கெயினும்,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜான் கெர்ரியும் நல்ல நண்பர்கள். கெர்ரியின் வியட்நாம் போரில் பெற்ற மெடல்களைக் பற்றிய கீழ்த்தரமான தொலைக்காட்சி விளம்பரங்களைக் கண்டித்து புஷ்ஷிடம் பேசியவர் மெக்கெயின். மேலும் ரிப்பளிக்கன் கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு புஷ்ஷோடு உரசியவர் மெக்கெயின். கெர்ரியைப் போலவே வியட்நாம் யுத்ததில் பங்கு கொண்டு பிணைக்கைதியாய் பலநாட்கள் சித்திரவதை அனுபவித்தவர். அவரது கருத்துகளை மதிக்கும் அமெரிக்கர்கள் பலர்.
உன்னைப் பிடி என்னைப்பிடி'யென்று இருக்கும் தேர்தல் கணக்குகளைக் கண்டு புஷ் பதற ஆரம்பித்துவிட்டார். எப்பாடுபட்டாவது நடுத்தர மிதவாத மற்றும் முடிவு எடுக்காத மக்களின் ஓட்டைப் பெற மெக்கெயின் மற்றும் ஜூலியானியைப் பயன்படுத்த முடிவு செய்து களம் காணவும் வைத்து விட்டனர்.
முதலில் பேசிய மெக்கெயின் புஷ் புகழ் பாடினாலும் அடக்கியே வாசித்தார். எதிரி டெமாக்ரட்டுகளில்லை, தீவிரவாதிகளென்றார். புஷ்தான் நம்மை வழி நடத்தக்கூடியவரென்றார்.
ஆனால் ஜூலியானியோ சும்மா 'குளிர/உறைய' வைத்துவிட்டார் புஷ் புகழ் மழையில். இத் தேர்தலில் புஷ் ஜெயித்தால் 2008'ல் போட்டியிடமுடியாது. அப்போது ஜூலியானிதான் ரிப்பளிக்கன் தேர்வாக
அமையலாம். புஷ் தோற்றுவிட்டால் டெக்ஸாஸ் என்ணைக் கிணறுகளைப் பார்த்துக் கொள்ள கிளம்பி விடலாம். அப்புறமென்ன ஜூலியானி காட்டில் மழைதான்.
அதே போன்று கெர்ரியை, பில் கிளிண்டன் பின்புலத்தில் குழிபறிப்பாரென ஆருடம் சொல்கிறார்கள். கெர்ரி ஜெயித்தால் 2008'ல் மீண்டும் போட்டியிடுவார். தனது மனைவியை (ஹில்லாரியை) அப்போது
போட்டியிட வைக்கலாமென்று கிளிண்டனது அபிப்பிராயம். தலை சுற்றுகிறதா?
NBC சேனலுக்களித்த பேட்டியில் 'தீவிரவாதிகளுக்கெதிரான போரில் வெற்றி கிட்டுமா?" என்ற கேள்விக்கு 'கிட்டாது' என்று புஷ் உளற பற்றிக் கொண்டது. இன்று அதைத் திருத்திக் கொண்டார். அதே
போல் மற்றொரு பேட்டியில் 'ஈராக்கில் யுத்ததை தவறாக கணித்து விட்டோம்' என்றார்.
கெர்ரியும் சோடை போகவில்லை. அவரது ஈராக் யுத்தம் பற்றிய கொள்கை பச்சோந்தியை விட மோசமாக நிறம் மாறுகிறது.
ஆக இத்தேர்தலில் வேலையில்லா திண்டாட்டம், திணரும் வர்த்தகம், திரியும் மனித உறவுகள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னே நிற்பது தீவிரவாத ஒழிப்பு முத்திரையுடன் நடக்கும்
'ஈராக் யுத்தம்' என்ற கூத்து மட்டும்தான்.
நியூயார்க்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்து விட்டது. அரிசோனா செனட்டர் ஜான் மெக்கெயினும், முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி ஜூலியானியும் முதல் நாளின் முக்கியப் பேச்சாளர்கள். ஜான் மெக்கெயினும்,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜான் கெர்ரியும் நல்ல நண்பர்கள். கெர்ரியின் வியட்நாம் போரில் பெற்ற மெடல்களைக் பற்றிய கீழ்த்தரமான தொலைக்காட்சி விளம்பரங்களைக் கண்டித்து புஷ்ஷிடம் பேசியவர் மெக்கெயின். மேலும் ரிப்பளிக்கன் கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு புஷ்ஷோடு உரசியவர் மெக்கெயின். கெர்ரியைப் போலவே வியட்நாம் யுத்ததில் பங்கு கொண்டு பிணைக்கைதியாய் பலநாட்கள் சித்திரவதை அனுபவித்தவர். அவரது கருத்துகளை மதிக்கும் அமெரிக்கர்கள் பலர்.
உன்னைப் பிடி என்னைப்பிடி'யென்று இருக்கும் தேர்தல் கணக்குகளைக் கண்டு புஷ் பதற ஆரம்பித்துவிட்டார். எப்பாடுபட்டாவது நடுத்தர மிதவாத மற்றும் முடிவு எடுக்காத மக்களின் ஓட்டைப் பெற மெக்கெயின் மற்றும் ஜூலியானியைப் பயன்படுத்த முடிவு செய்து களம் காணவும் வைத்து விட்டனர்.
முதலில் பேசிய மெக்கெயின் புஷ் புகழ் பாடினாலும் அடக்கியே வாசித்தார். எதிரி டெமாக்ரட்டுகளில்லை, தீவிரவாதிகளென்றார். புஷ்தான் நம்மை வழி நடத்தக்கூடியவரென்றார்.
ஆனால் ஜூலியானியோ சும்மா 'குளிர/உறைய' வைத்துவிட்டார் புஷ் புகழ் மழையில். இத் தேர்தலில் புஷ் ஜெயித்தால் 2008'ல் போட்டியிடமுடியாது. அப்போது ஜூலியானிதான் ரிப்பளிக்கன் தேர்வாக
அமையலாம். புஷ் தோற்றுவிட்டால் டெக்ஸாஸ் என்ணைக் கிணறுகளைப் பார்த்துக் கொள்ள கிளம்பி விடலாம். அப்புறமென்ன ஜூலியானி காட்டில் மழைதான்.
அதே போன்று கெர்ரியை, பில் கிளிண்டன் பின்புலத்தில் குழிபறிப்பாரென ஆருடம் சொல்கிறார்கள். கெர்ரி ஜெயித்தால் 2008'ல் மீண்டும் போட்டியிடுவார். தனது மனைவியை (ஹில்லாரியை) அப்போது
போட்டியிட வைக்கலாமென்று கிளிண்டனது அபிப்பிராயம். தலை சுற்றுகிறதா?
NBC சேனலுக்களித்த பேட்டியில் 'தீவிரவாதிகளுக்கெதிரான போரில் வெற்றி கிட்டுமா?" என்ற கேள்விக்கு 'கிட்டாது' என்று புஷ் உளற பற்றிக் கொண்டது. இன்று அதைத் திருத்திக் கொண்டார். அதே
போல் மற்றொரு பேட்டியில் 'ஈராக்கில் யுத்ததை தவறாக கணித்து விட்டோம்' என்றார்.
கெர்ரியும் சோடை போகவில்லை. அவரது ஈராக் யுத்தம் பற்றிய கொள்கை பச்சோந்தியை விட மோசமாக நிறம் மாறுகிறது.
ஆக இத்தேர்தலில் வேலையில்லா திண்டாட்டம், திணரும் வர்த்தகம், திரியும் மனித உறவுகள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னே நிற்பது தீவிரவாத ஒழிப்பு முத்திரையுடன் நடக்கும்
'ஈராக் யுத்தம்' என்ற கூத்து மட்டும்தான்.
Monday, August 30, 2004
Thursday, August 26, 2004
ஊர்க்குருவி (ஜீனியர் விகடன் கழுகாரின் முகமூடி!!!)
ஊர்க்குருவியார் ஒரு வாரமாய் தமிழகம் பறந்து, கையில் குடத்துடன் வந்து சேர்ந்தார். 'உஸ் அப்பாடா', என்றவுடன் தயாராயிருந்த கரும்பு ஜீஸை நீட்டினோம். ஒரே மடக்கில் காலி செய்து "எழுதிக்கொள்ளும்" என்றார்.
"என்ன கையில் குடம்? சிங்காரச் சென்னையில் நீர் பஞ்சமானதால் சைத்தான் குளத்திலிருந்து தேவாமிர்த நீரா?" வெனக் கிண்டினோம். ஊர்க்குருவியார் முறைத்தவுடன் அமைதியானோம். செய்தி முக்கியமல்லவா?
உலகத் தமிழரில் சிறந்தவர் யார் தெரியுமா? குருவியார் சவாலுக்கு அம்மா முன் கைமெய் பொத்திய தமிழக மந்திரிகளானோம்.
"வைகோ. இணைய சர்வே இது."
"அப்படியானால் குரு/அண்ணன் கலைஞர்?"
"தமிழகத் தமிழரே ஐந்தாம் இடத்தில் தள்ளி 'குலுக்கல்பட்டர்' ஆக்கிவிட்டனர்"
"குரு எட்டடியென்றால் சிஷ்யன்...?" ஐஸ் வைத்தோம். குருவியார் சிறிதே ஆசுவாசமடைந்தார்.
"பொடாவை போடா சொல்லிவிட்டதே தமிழக அரசு?" நாம் கிண்டினோம்.
"என்ன ஓய்? நக்ஸலைட் கத்தார் சொல்லவில்லையா? வாஞ்சிநாதன், பகத்சிங் போன்றோர் நேற்று தீவிரவாதிகள். இன்று தியாகிகள். உமது பப்ளிகேஷனை நீரே படிப்பதில்லையா?"
சிறிதே வெட்கமானோம். குருவியாரை சிறிதே கார்னர் செய்ய வினவினோம்,"ஆமாம் வைகோ ராஜபாளையம் சீருடை கட்வுட் பற்றிய உமது கருத்தென்ன?"
தனது முயற்சியில் சற்றும் அயராத பதில்,"சனநாயகத்தில் சகஜமப்பா! உமது சனநாயகத்தில் லல்லூ போனால் ராப்ரி. அம்மா போனால் ஓ.பன்னீர்செல்வம்."
"குருவியாரே அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன முடிச்சு?"
"அது சரி. வெங்கடேச பண்ணையார் தியாகியா?"
"குருவியாரே என்ன சொல்கிறீர்?"
"சும்மா பம்மாதேயும். பண்ணையார் என்கௌண்டர்ல பலன் என்ன? ராதிகா செல்வி திருச்செந்தூர் திமுக எம்.பி. முரட்டு பக்தரெல்லாம் சேவகம் செய்றாங்க."
"குழப்புகின்றீரே குருவியாரே?"
"புரியரவங்களுக்குப் புரியும். தடா பொடா'ன்னு பொருமுறீங்களே முதல்ல தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் எது தெரியுமா?"
"மதிமுக வா?" அப்பாவியாய் நோக்கினோம்.
கலகலவெனச் சிரித்தார் குருவியார். "அடடே ரொம்ப பயந்துட்டீங்களா? நம்ம ஜனநாயகப்படி ஆளுங்கட்சியெல்லாம் எதிர்கட்சிகளை எல்லாத்தையும் ஏதாவதொரு காரணம் காட்டி தடை செய்யணும்." புரியாமல் விழித்தோம்.
சப்ஜெக்ட் மாற்ற வேண்டி,"மதுர நியூஸ் ஏதும் உண்டா?" என்றோம்.
சினிமா ஜிகிடி (இளைய தளபதி விஜய்யின் படம் மதுர) அறியாத குருவியார், "ஓ...ஜெயலஷ்மி நியூஸ் ஏராளமாயுண்டு. கேளும். காக்கி சட்டைகளின் காமாக்னி பட்டவர்த்தனமாய் தெரியுது." இது பற்றி இராமேஸ்வரம் நிர்விலா கிட்ட கேட்டேன். "இதுவரை இந்திய சிப்பாய்களோட (குறிப்பா மணிப்பூர்) பெண்கொடுமை (வன்புணர்ச்சி) தெரியும். ஆனால் போலீஸ¤மா? தமிழ்நாட்டுல சட்ட ஒழுங்கு கேடுன்னு சொல்லிட்டு இந்திய ராணுவம் வந்துட்டா எங்க கற்புக்கு என்ன பாதுகாப்பு?", அப்படின்னு அவங்க கேட்டப்போ குன்றிப்போய்விட்டேன். நிதர்சனம் சுட்டது. "காக்கிச்சட்டைய்யும் ஆலீவ் உடையானதோ?", கவித்துவமானார் குருவியார்.
"என்ன இப்படி சொல்லிவிட்டீர். பங்களாதேஷை உருவாக்கவில்லையா நம் சிப்பாய்கள்? பலனென்ன இன்று? பார்டர் போர்சை பலி க(கொ)ண்டார். நதி பங்கீடு கூடாதென்றார். வேலியெதற்கென்றார். பெண் எழுத்தை (தஸ்லிமா நஸ்ரீன்) தடை கண்டார். சரி அதெல்லாம் விடும். உமது நவீன கவித்துவத்திற்கு விடைதான் என்ன?", அப்பாவியாய் கேட்டோம்.
"கணிதத்துக்கென்ன என்ன முக்கியம்? மெஜாரிட்டிதானே? எல்லாம் கணித ஆட்டமல்லவா? நீர் சொல்லும் 40,000 பெரிசா 5,00,000 பெரிசா?"
"வாழ்க்கை வயசுன்னா 5,00,000 வகுப்பில ரேங்குன்னா 40,000!", லாஜிக் திறமைமையைக் காட்ட குருவியார் மறுபடி காட்டமானார்.
மறுபடி பேச்சை மாற்ற,"சரி சரி வெளிநாட்டு விவகாரமுண்டோ?"
கடுப்பு மாறாத குருவியார் சொன்னார்,"சும்மா ஆரியன் மாதிரி பேசாதீர்".
லேட்டஸ்ட் அமிதாப்பச்சன், பிபாஷா பாசு பட வில்லனாய் நினைத்துவிட்டாரோ? "குருவியாரே நான் திராவிடன். என் மூக்கை (இந்திரா மற்றும் ஜெயவர்த்தனே மூக்கு போலல்லாமல்) நல்லா பாருங்க." என்றோம்.
"சும்மா இந்தியன் மாதிரி பேசாதீர். திராவிடனாய் பேசும்."
"அப்போ இந்தியன்னா (டைரக்டர் சங்கர் படமாய் நினைத்து) ஆரியனா குருவியாரே? கமலஹாசன் சொந்த ஊர் பள்ளத்தூர் தெரியுமா? திராவிடன்னா யார் தமிழன் மட்டுமா? திராவிடர்னா மலையாளி, கன்னடர், தெலுங்கரும் அடங்குவாரென எமது வரலாற்று ஆசிரியர் சொன்னாரே? அப்படின்னா காவேரியில ஏன் கர்நாடகம் தண்னீர் விடல? ஒரு காலத்துல கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டுல தமிழன்(?) குண்டு வைக்கப்போறதா பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதே? இதெல்லாம் ஏன்? கிருஷ்ணா நீர் ஏன் தமிழ்நாட்டுல பாயவில்லை? தமிழ்நாட்டுக்காரங்களை பட்டி'ன்னு ஏன் மலையாளிங்க ஏசுறாங்க?", கேள்விகளின் நாயகர்களாய் மூச்சிறைத்தது எமக்கு.
"வெப்பு தாங்கலை உமக்கு. இந்தா குடியும் என்னோட நீர்மோர். ரொம்பப் பேசினா பெரிய ஆளானதா நினைப்பா?"
பறந்துபோக எத்தனித்த குருவியார்க்கு கதவைத் திறந்தோம்.
ஆஹா...இந்த ஊர்க்குருவி போல் எத்தனை உயரப் பறக்க எத்தனித்த பருந்துகளோ இந்த நாட்டிலே?
கும்மென்று காற்றடித்தது கதவங்களைத் யாம் திறந்ததும்.
அப்புறம்தான் குருவியார் கொண்டு வந்து வைத்த குடத்தை நோக்கினோம்.
அடடே எத்தனை எத்தனை தீபங்கள்!!! அதுவும் இந்தக் காற்றுக்கு ஒன்று கூட அணையவேவில்லையே!!!
ஓ...அவைதான் குடத்தினுள்ளே இன்னும் இருக்கின்றனவல்லவா?
ஊர்க்குருவியார் ஒரு வாரமாய் தமிழகம் பறந்து, கையில் குடத்துடன் வந்து சேர்ந்தார். 'உஸ் அப்பாடா', என்றவுடன் தயாராயிருந்த கரும்பு ஜீஸை நீட்டினோம். ஒரே மடக்கில் காலி செய்து "எழுதிக்கொள்ளும்" என்றார்.
"என்ன கையில் குடம்? சிங்காரச் சென்னையில் நீர் பஞ்சமானதால் சைத்தான் குளத்திலிருந்து தேவாமிர்த நீரா?" வெனக் கிண்டினோம். ஊர்க்குருவியார் முறைத்தவுடன் அமைதியானோம். செய்தி முக்கியமல்லவா?
உலகத் தமிழரில் சிறந்தவர் யார் தெரியுமா? குருவியார் சவாலுக்கு அம்மா முன் கைமெய் பொத்திய தமிழக மந்திரிகளானோம்.
"வைகோ. இணைய சர்வே இது."
"அப்படியானால் குரு/அண்ணன் கலைஞர்?"
"தமிழகத் தமிழரே ஐந்தாம் இடத்தில் தள்ளி 'குலுக்கல்பட்டர்' ஆக்கிவிட்டனர்"
"குரு எட்டடியென்றால் சிஷ்யன்...?" ஐஸ் வைத்தோம். குருவியார் சிறிதே ஆசுவாசமடைந்தார்.
"பொடாவை போடா சொல்லிவிட்டதே தமிழக அரசு?" நாம் கிண்டினோம்.
"என்ன ஓய்? நக்ஸலைட் கத்தார் சொல்லவில்லையா? வாஞ்சிநாதன், பகத்சிங் போன்றோர் நேற்று தீவிரவாதிகள். இன்று தியாகிகள். உமது பப்ளிகேஷனை நீரே படிப்பதில்லையா?"
சிறிதே வெட்கமானோம். குருவியாரை சிறிதே கார்னர் செய்ய வினவினோம்,"ஆமாம் வைகோ ராஜபாளையம் சீருடை கட்வுட் பற்றிய உமது கருத்தென்ன?"
தனது முயற்சியில் சற்றும் அயராத பதில்,"சனநாயகத்தில் சகஜமப்பா! உமது சனநாயகத்தில் லல்லூ போனால் ராப்ரி. அம்மா போனால் ஓ.பன்னீர்செல்வம்."
"குருவியாரே அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன முடிச்சு?"
"அது சரி. வெங்கடேச பண்ணையார் தியாகியா?"
"குருவியாரே என்ன சொல்கிறீர்?"
"சும்மா பம்மாதேயும். பண்ணையார் என்கௌண்டர்ல பலன் என்ன? ராதிகா செல்வி திருச்செந்தூர் திமுக எம்.பி. முரட்டு பக்தரெல்லாம் சேவகம் செய்றாங்க."
"குழப்புகின்றீரே குருவியாரே?"
"புரியரவங்களுக்குப் புரியும். தடா பொடா'ன்னு பொருமுறீங்களே முதல்ல தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் எது தெரியுமா?"
"மதிமுக வா?" அப்பாவியாய் நோக்கினோம்.
கலகலவெனச் சிரித்தார் குருவியார். "அடடே ரொம்ப பயந்துட்டீங்களா? நம்ம ஜனநாயகப்படி ஆளுங்கட்சியெல்லாம் எதிர்கட்சிகளை எல்லாத்தையும் ஏதாவதொரு காரணம் காட்டி தடை செய்யணும்." புரியாமல் விழித்தோம்.
சப்ஜெக்ட் மாற்ற வேண்டி,"மதுர நியூஸ் ஏதும் உண்டா?" என்றோம்.
சினிமா ஜிகிடி (இளைய தளபதி விஜய்யின் படம் மதுர) அறியாத குருவியார், "ஓ...ஜெயலஷ்மி நியூஸ் ஏராளமாயுண்டு. கேளும். காக்கி சட்டைகளின் காமாக்னி பட்டவர்த்தனமாய் தெரியுது." இது பற்றி இராமேஸ்வரம் நிர்விலா கிட்ட கேட்டேன். "இதுவரை இந்திய சிப்பாய்களோட (குறிப்பா மணிப்பூர்) பெண்கொடுமை (வன்புணர்ச்சி) தெரியும். ஆனால் போலீஸ¤மா? தமிழ்நாட்டுல சட்ட ஒழுங்கு கேடுன்னு சொல்லிட்டு இந்திய ராணுவம் வந்துட்டா எங்க கற்புக்கு என்ன பாதுகாப்பு?", அப்படின்னு அவங்க கேட்டப்போ குன்றிப்போய்விட்டேன். நிதர்சனம் சுட்டது. "காக்கிச்சட்டைய்யும் ஆலீவ் உடையானதோ?", கவித்துவமானார் குருவியார்.
"என்ன இப்படி சொல்லிவிட்டீர். பங்களாதேஷை உருவாக்கவில்லையா நம் சிப்பாய்கள்? பலனென்ன இன்று? பார்டர் போர்சை பலி க(கொ)ண்டார். நதி பங்கீடு கூடாதென்றார். வேலியெதற்கென்றார். பெண் எழுத்தை (தஸ்லிமா நஸ்ரீன்) தடை கண்டார். சரி அதெல்லாம் விடும். உமது நவீன கவித்துவத்திற்கு விடைதான் என்ன?", அப்பாவியாய் கேட்டோம்.
"கணிதத்துக்கென்ன என்ன முக்கியம்? மெஜாரிட்டிதானே? எல்லாம் கணித ஆட்டமல்லவா? நீர் சொல்லும் 40,000 பெரிசா 5,00,000 பெரிசா?"
"வாழ்க்கை வயசுன்னா 5,00,000 வகுப்பில ரேங்குன்னா 40,000!", லாஜிக் திறமைமையைக் காட்ட குருவியார் மறுபடி காட்டமானார்.
மறுபடி பேச்சை மாற்ற,"சரி சரி வெளிநாட்டு விவகாரமுண்டோ?"
கடுப்பு மாறாத குருவியார் சொன்னார்,"சும்மா ஆரியன் மாதிரி பேசாதீர்".
லேட்டஸ்ட் அமிதாப்பச்சன், பிபாஷா பாசு பட வில்லனாய் நினைத்துவிட்டாரோ? "குருவியாரே நான் திராவிடன். என் மூக்கை (இந்திரா மற்றும் ஜெயவர்த்தனே மூக்கு போலல்லாமல்) நல்லா பாருங்க." என்றோம்.
"சும்மா இந்தியன் மாதிரி பேசாதீர். திராவிடனாய் பேசும்."
"அப்போ இந்தியன்னா (டைரக்டர் சங்கர் படமாய் நினைத்து) ஆரியனா குருவியாரே? கமலஹாசன் சொந்த ஊர் பள்ளத்தூர் தெரியுமா? திராவிடன்னா யார் தமிழன் மட்டுமா? திராவிடர்னா மலையாளி, கன்னடர், தெலுங்கரும் அடங்குவாரென எமது வரலாற்று ஆசிரியர் சொன்னாரே? அப்படின்னா காவேரியில ஏன் கர்நாடகம் தண்னீர் விடல? ஒரு காலத்துல கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டுல தமிழன்(?) குண்டு வைக்கப்போறதா பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதே? இதெல்லாம் ஏன்? கிருஷ்ணா நீர் ஏன் தமிழ்நாட்டுல பாயவில்லை? தமிழ்நாட்டுக்காரங்களை பட்டி'ன்னு ஏன் மலையாளிங்க ஏசுறாங்க?", கேள்விகளின் நாயகர்களாய் மூச்சிறைத்தது எமக்கு.
"வெப்பு தாங்கலை உமக்கு. இந்தா குடியும் என்னோட நீர்மோர். ரொம்பப் பேசினா பெரிய ஆளானதா நினைப்பா?"
பறந்துபோக எத்தனித்த குருவியார்க்கு கதவைத் திறந்தோம்.
ஆஹா...இந்த ஊர்க்குருவி போல் எத்தனை உயரப் பறக்க எத்தனித்த பருந்துகளோ இந்த நாட்டிலே?
கும்மென்று காற்றடித்தது கதவங்களைத் யாம் திறந்ததும்.
அப்புறம்தான் குருவியார் கொண்டு வந்து வைத்த குடத்தை நோக்கினோம்.
அடடே எத்தனை எத்தனை தீபங்கள்!!! அதுவும் இந்தக் காற்றுக்கு ஒன்று கூட அணையவேவில்லையே!!!
ஓ...அவைதான் குடத்தினுள்ளே இன்னும் இருக்கின்றனவல்லவா?
Sunday, August 22, 2004
அமெரிக்காவும் என் கிராமமும்
பச்சைக் குத்தி
கைம்பெண்ணாய்
ஜாக்கெட் களைந்த
என் பாட்டி
இளம்பெண்களாய் இங்கே
எம்முன்னே
அமெரிக்க கலாச்சாரத்துடன்
ஐக்கியமாய் பிள்ளைக்குச் செய்தேன்
அய்யனார் முன்னர்
காதுகுத்து கல்யாணம்
கிடா வெட்டி
பார்பகியூ
கியக்கு மேக்கு
பேசித் திசை காட்டும்
தேசம்
ப்ரியமானவனை
'அது'வென
அ·றிணையாக்கும்
சமூகவியல்
கானாவோ
கிராம கானமோ
கொப்பியா கொட்டியாடும்
டிஸ்கோத்தேக்கள்
இங்கே பிள்ளைகளை
பெயர்த்த பின்னும்
சிறிதே நிம்மதி
வேர் மறவுமோ செடிகள்?
பச்சைக் குத்தி
கைம்பெண்ணாய்
ஜாக்கெட் களைந்த
என் பாட்டி
இளம்பெண்களாய் இங்கே
எம்முன்னே
அமெரிக்க கலாச்சாரத்துடன்
ஐக்கியமாய் பிள்ளைக்குச் செய்தேன்
அய்யனார் முன்னர்
காதுகுத்து கல்யாணம்
கிடா வெட்டி
பார்பகியூ
கியக்கு மேக்கு
பேசித் திசை காட்டும்
தேசம்
ப்ரியமானவனை
'அது'வென
அ·றிணையாக்கும்
சமூகவியல்
கானாவோ
கிராம கானமோ
கொப்பியா கொட்டியாடும்
டிஸ்கோத்தேக்கள்
இங்கே பிள்ளைகளை
பெயர்த்த பின்னும்
சிறிதே நிம்மதி
வேர் மறவுமோ செடிகள்?
கோடை விடுமுறை
பொழுது விடிந்த
சேதி சொன்ன
சேவல் விருந்து
நுங்கு பெயர்த்து
கவட்டைக் குச்சியில்
காலம் பெயரும்
கோடையின் வாடையில்
வானம் பார்த்து
வாடியது பூமி
மட்டுமல்ல
வயலின் ஏரும்
தறியின் தாரும்
எல்லையோரக்
காளியாட்டத்தின்
களைப்பினூடே
ஊர்க்குட்டை குழப்பி
மீன் பிடிக்கும்
பூவரச இலையில்
பூரண கொழுக்கட்டை
பழுத்த பலாசுளைகள்
தேனோடு திகட்டும்
பனையோலை
தார்க்குச்சியில்
விசிறியாய்
நிலமளக்கும்
பால் ஐஸோ
பதினைந்து காசு
சேமியா ஐஸோ
சீதாலஷ்மி பாக்டரி
பணம் பார்க்கும்
மாத விடுமுறையில்
சூரிய வெப்பத்தை
சுத்தமாய் ருசிபார்த்து
கரிய சரீரமும்
கிராம சாரீரமும்
என் பிள்ளைக்கு
என்று கிட்டுமோ???
பொழுது விடிந்த
சேதி சொன்ன
சேவல் விருந்து
நுங்கு பெயர்த்து
கவட்டைக் குச்சியில்
காலம் பெயரும்
கோடையின் வாடையில்
வானம் பார்த்து
வாடியது பூமி
மட்டுமல்ல
வயலின் ஏரும்
தறியின் தாரும்
எல்லையோரக்
காளியாட்டத்தின்
களைப்பினூடே
ஊர்க்குட்டை குழப்பி
மீன் பிடிக்கும்
பூவரச இலையில்
பூரண கொழுக்கட்டை
பழுத்த பலாசுளைகள்
தேனோடு திகட்டும்
பனையோலை
தார்க்குச்சியில்
விசிறியாய்
நிலமளக்கும்
பால் ஐஸோ
பதினைந்து காசு
சேமியா ஐஸோ
சீதாலஷ்மி பாக்டரி
பணம் பார்க்கும்
மாத விடுமுறையில்
சூரிய வெப்பத்தை
சுத்தமாய் ருசிபார்த்து
கரிய சரீரமும்
கிராம சாரீரமும்
என் பிள்ளைக்கு
என்று கிட்டுமோ???
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது
அவ்வை சொன்னாள். ஆனால் மானிடராய்ப் பிறந்தும் தனது பூதவுடலை நேசியாது கத்தியால் சரி செய்யும் கலிகாலமிது. பிளாஸ்டிச் சர்ஜரி ஒரு விபத்தால் விகாரமான முகத்தை சரி செய்வதென்றால் பரவாயில்லை. இயற்கையிலேயே விளைந்த விகாரத்தை என்றால் என்னைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளலாம்.
ஸ்ரீதேவியின் மூக்குக்கென்ன குறை வந்தது? கொஞ்சம் மொக்கை/மொன்னை தான். ஆனால் அரிவாள் மனை கூறு 'கிளி மூக்கல்லவா'?
அமெரிக்காவில் விடுமுறையைக் கழி(ளி)ப்பதை விட நடுத்தரவர்க்கத்து மாதுக்கள் இத்தகைய அறுவை சிகிச்சையில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். 'CTRL - C & CTRL - V' கணிணித்துறை தாண்டி மனித உடல்களிலும் வித்தை காண்பிப்பது கடந்த ஆறு வருடங்களில் 128%, அமெரிக்காவில் அதிகமாகியுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது 'சுலப தவணை' முறையும் இவ்வித சிகிச்சைக்குண்டு. அப்புறமென்ன?
பே வாட்ச் (Bay Watch) புகழ் பமீலா ஆண்டர்சன் மற்றும் பாப்பிசை மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் அறுத்துக் கட்டாத பாகமே உடம்பில் இல்லை எனலாம். ஏனிந்த எண்ணவோட்டம்?
பிரசித்தி பெற்ற அறுவைகள்(?) யாதெனப் பார்ப்போமா?
1. ABDOMINOPLASTY (Tummy Tuck): குவிமையமாயிருக்கும் வயிற்றை குழிமையமாக்கும் வித்(ந்)தை. தழும்புகள் ஆற 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகலாம்.
2. BREAST ENLARGEMENT (Augmentation Mammaplasty): மார்பக அளவுகளை அதிகப்படுத்த உதவும் சிகிச்சை. டயருக்கு காற்றடிப்பது போல சலைன் பலூன்களை விதைத்து செய்யப்படுவது. பமீலாவைச் சொல்வார்கள். இவர் 'இவ்விஷயம்' செய்வது மெத்தைத் துணியை மாற்றுவது போல...பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட விளைவு கிட்டவில்லையெனில் மீண்டும் மீண்டும் செய்யப்படவேண்டிய சிகிச்சையிது.
3. BREAST LIFT (Mastopexy): விளக்கம் தேவையில்லை.
4. CHEMICAL PEEL (Phenol and trichloroacetic acid [TCA]): முகச்சுருக்கமா? சூரியப் புள்ளிகளா? தோலையே ரசாயனத்தில் தோய்த்தெடுத்து 'பளபளா' செய்யும் தந்திரமிது. காலமமாக சுருக்கங்கள் மீண்டும் தோன்றும். எச்சரிக்கை: வெள்ளைத் தோலுக்கே பொறுத்தமானது
5. COLLAGEN / FAT INJECTIONS: உசிலைமணி முகத்துக்கு பாகவதர் பொலிவு தர வல்லது.
6. DERMABRASION: உதட்டோர சிம்ரன் மச்சம் ஓகே. ஆனால் பருக்கள்? கவலை கொள்ள வேண்டாம். காருக்கு மெழுகு தடவி மெருகேற்றுவது போல, 'உப்புத்தாள்' தேய்த்து, முக்கியமாய் வாயைச் சுற்றி 'தேய்த்து' மினுக்கச் செய்வார்கள்.
7. EAR SURGERY (Otoplasty): யானைக்காது குழந்தைகளா? கவலை வேண்டாம். நறுக்கி சரி செய்துவிடலாம்.
8. EYELID SURGERY (Blepharoplasty): கண்களுக்கு கீழ் 100 கிலோ பொன்னி அரிசி சாக்குப் பைகளா? 3 மணி நேரத்தில் காலி செய்யலாம்.
9. FACELIFT (Rhytidectomy): கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸை காதலிக்கின்றீர்களா? கல்யாணம் செய்யுமுன் மைக்கேல் டக்ளஸைப் போல் முகத்தை 'இவ்வாறு' சரி செய்யவும்.
10. FACIAL IMPLANTS: முகத்தையே முகம் மாற்றலாம்.
11. FOREHEAD LIFT (Browlift): முன்னெற்றிச் சுருக்கம் அறிவின் ஆழம் காட்டியதாய் சொன்ன காலம் மலையேறிப் போச்சு. 5 முறை ஊசியைச் சொருகியெடுத்தால் சுருக்கங்கள் சலவைச் செய்யப்படும்.
12. HAIR REPLACEMENT SURGERY: வழுக்கைத் தலைக்கு விடுதலை.
13. LASER FACIAL RESURFACING: கார்பந்டை-ஆக்ஸைடு மற்றூம் லேசர் மூலம் முகச்சலவை செய்வது.
14. LIPOSUCTION (Suction-Assisted Lipectomy): மிகச் சாதாரணமாகச் செய்யப்படுவது. அதிக கொழுப்பா? என் எழுத்தைத் தவிர மற்ற அனைத்து பாகங்களிலிருந்தும், உறிஞ்சியெடுத்துத் துப்பிவிடலாம்.
15. MALE BREAST REDUCTION (Gynecomastia): புரிந்திருக்குமே?
16: NOSE SURGERY (Rhinoplasty): மூக்கின் ஒடுக்கெடுப்பது.
ஆமாம்...ரஜினியின் கருப்பு உதட்டினை சிவப்பாக மாற்றும் சிகிச்சைப் பெயரரென்ன? தெரிந்தால் சொல்லுங்களேன்.
அவ்வை சொன்னாள். ஆனால் மானிடராய்ப் பிறந்தும் தனது பூதவுடலை நேசியாது கத்தியால் சரி செய்யும் கலிகாலமிது. பிளாஸ்டிச் சர்ஜரி ஒரு விபத்தால் விகாரமான முகத்தை சரி செய்வதென்றால் பரவாயில்லை. இயற்கையிலேயே விளைந்த விகாரத்தை என்றால் என்னைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளலாம்.
ஸ்ரீதேவியின் மூக்குக்கென்ன குறை வந்தது? கொஞ்சம் மொக்கை/மொன்னை தான். ஆனால் அரிவாள் மனை கூறு 'கிளி மூக்கல்லவா'?
அமெரிக்காவில் விடுமுறையைக் கழி(ளி)ப்பதை விட நடுத்தரவர்க்கத்து மாதுக்கள் இத்தகைய அறுவை சிகிச்சையில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். 'CTRL - C & CTRL - V' கணிணித்துறை தாண்டி மனித உடல்களிலும் வித்தை காண்பிப்பது கடந்த ஆறு வருடங்களில் 128%, அமெரிக்காவில் அதிகமாகியுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது 'சுலப தவணை' முறையும் இவ்வித சிகிச்சைக்குண்டு. அப்புறமென்ன?
பே வாட்ச் (Bay Watch) புகழ் பமீலா ஆண்டர்சன் மற்றும் பாப்பிசை மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் அறுத்துக் கட்டாத பாகமே உடம்பில் இல்லை எனலாம். ஏனிந்த எண்ணவோட்டம்?
பிரசித்தி பெற்ற அறுவைகள்(?) யாதெனப் பார்ப்போமா?
1. ABDOMINOPLASTY (Tummy Tuck): குவிமையமாயிருக்கும் வயிற்றை குழிமையமாக்கும் வித்(ந்)தை. தழும்புகள் ஆற 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகலாம்.
2. BREAST ENLARGEMENT (Augmentation Mammaplasty): மார்பக அளவுகளை அதிகப்படுத்த உதவும் சிகிச்சை. டயருக்கு காற்றடிப்பது போல சலைன் பலூன்களை விதைத்து செய்யப்படுவது. பமீலாவைச் சொல்வார்கள். இவர் 'இவ்விஷயம்' செய்வது மெத்தைத் துணியை மாற்றுவது போல...பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட விளைவு கிட்டவில்லையெனில் மீண்டும் மீண்டும் செய்யப்படவேண்டிய சிகிச்சையிது.
3. BREAST LIFT (Mastopexy): விளக்கம் தேவையில்லை.
4. CHEMICAL PEEL (Phenol and trichloroacetic acid [TCA]): முகச்சுருக்கமா? சூரியப் புள்ளிகளா? தோலையே ரசாயனத்தில் தோய்த்தெடுத்து 'பளபளா' செய்யும் தந்திரமிது. காலமமாக சுருக்கங்கள் மீண்டும் தோன்றும். எச்சரிக்கை: வெள்ளைத் தோலுக்கே பொறுத்தமானது
5. COLLAGEN / FAT INJECTIONS: உசிலைமணி முகத்துக்கு பாகவதர் பொலிவு தர வல்லது.
6. DERMABRASION: உதட்டோர சிம்ரன் மச்சம் ஓகே. ஆனால் பருக்கள்? கவலை கொள்ள வேண்டாம். காருக்கு மெழுகு தடவி மெருகேற்றுவது போல, 'உப்புத்தாள்' தேய்த்து, முக்கியமாய் வாயைச் சுற்றி 'தேய்த்து' மினுக்கச் செய்வார்கள்.
7. EAR SURGERY (Otoplasty): யானைக்காது குழந்தைகளா? கவலை வேண்டாம். நறுக்கி சரி செய்துவிடலாம்.
8. EYELID SURGERY (Blepharoplasty): கண்களுக்கு கீழ் 100 கிலோ பொன்னி அரிசி சாக்குப் பைகளா? 3 மணி நேரத்தில் காலி செய்யலாம்.
9. FACELIFT (Rhytidectomy): கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸை காதலிக்கின்றீர்களா? கல்யாணம் செய்யுமுன் மைக்கேல் டக்ளஸைப் போல் முகத்தை 'இவ்வாறு' சரி செய்யவும்.
10. FACIAL IMPLANTS: முகத்தையே முகம் மாற்றலாம்.
11. FOREHEAD LIFT (Browlift): முன்னெற்றிச் சுருக்கம் அறிவின் ஆழம் காட்டியதாய் சொன்ன காலம் மலையேறிப் போச்சு. 5 முறை ஊசியைச் சொருகியெடுத்தால் சுருக்கங்கள் சலவைச் செய்யப்படும்.
12. HAIR REPLACEMENT SURGERY: வழுக்கைத் தலைக்கு விடுதலை.
13. LASER FACIAL RESURFACING: கார்பந்டை-ஆக்ஸைடு மற்றூம் லேசர் மூலம் முகச்சலவை செய்வது.
14. LIPOSUCTION (Suction-Assisted Lipectomy): மிகச் சாதாரணமாகச் செய்யப்படுவது. அதிக கொழுப்பா? என் எழுத்தைத் தவிர மற்ற அனைத்து பாகங்களிலிருந்தும், உறிஞ்சியெடுத்துத் துப்பிவிடலாம்.
15. MALE BREAST REDUCTION (Gynecomastia): புரிந்திருக்குமே?
16: NOSE SURGERY (Rhinoplasty): மூக்கின் ஒடுக்கெடுப்பது.
ஆமாம்...ரஜினியின் கருப்பு உதட்டினை சிவப்பாக மாற்றும் சிகிச்சைப் பெயரரென்ன? தெரிந்தால் சொல்லுங்களேன்.
Thursday, August 19, 2004
பத்ரி அவர்களுக்கு பகிரங்க கடிதம்
இப்ப பகிரங்க கடிதம் எழுதுவதுதான் இணைய தர்மம். அநேகமாக ஒரு வாரத்திற்கும் மேலாக நீங்கள் இணையம் surf பண்ணவில்லை(!@#) போலிருக்கிறது. அல்லது???
இந்திய பட்ஜெட் என்றாலும், தினமலரின் அக்குறும்பு செய்தியெனிலும், அதே மலர் தாக்கப்பட்டால் எதிர்குரல் விடும் நடுநிலைச் சார்பெனிலும், கிரிக்கெட்டில் விதவிதமான வித்தியாசமான கருத்தென்றாலும், இந்திய விதிகளின் வியாக்கியானமென்றாலும், பன்னாட்டு மேதாவிகளின் நூல்களின் ஸ்பரிசத்தையும் நான் அடைவது "பத்ரி திசாரஸ்"தான்.
'வேலையத்த ஜப்பானியர்கள்' பதிவு படித்தவுடன் தோன்றியது 'ஓஹோ பத்ரிக்கும் வேலையில்லையோவென்று'. ஆமாம்...லூசுன்னா என்னங்க பத்ரி? கொஞ்சம் அவிழ்த்து விடுங்களேன்.
'எட்டுத்திக்கும் சென்று நல்லவை கொணர்ந்திங்கு சேர்' அப்படின்னு பாரதி ஜப்பானியர்க்கு சொல்லவில்லை (PUN INTENDED)
ரஜினி காதலால் ஜப்பான்/ஜப்பானியர்கள் இழந்ததென்ன? அமெரிக்க டாலரையே அள்ளி நிறுத்தும் ஜப்பானிய யென் நிலை தடுமாற்றம் கண்டு விட்டதா? அவரது 'தேச பக்தி' குறைந்து விட்டதா? தரக் கட்டுப்பாட்டின் கட்டுக் கோப்பு குலைந்து விட்டதா? தேனீயின் சுறுசுறுப்பு அகன்று விட்டதா? கருப்பு ரிப்பனை தலையிலே கட்டி உற்பத்தித்திறனை பன்மடங்காக்கும் "ஸ்டிரைக்" பாணி அமரத்துமாகிவிட்டதா? இப்ப திடீர்னு என்னதான் ஆச்சு?
வேலையத்தவர் ஜப்பானியரென்றால் மற்றவரெல்லாம் எம்மாத்திரம்?
'அவர்கள் போட்டிருக்கும் டி-ஷர்ட்', இதுதான் உம்ம பிரச்சினையா? விடுங்கள் பத்ரி. அமெரிக்காவில் செப்டம்பர் 11'ற்கு அப்புறம் 'ஓசாமா டி-ஷர்ட்' பிரபல்யமானதை விடக் கொடுமையா இது? விசேடமென்னவெனில் இந்தப்பக்கம் 'ஓசாமா டி-ஷர்ட்', அந்தப்பக்கம் 'அமெரிக்க கொடி', வித்தது ஒரே நாடு. அது சீனா.
ஜப்பானியர் தமிழ் படிப்பதில் பெருமை கொள்ளும் நீங்கள் அவரை பழந்தமிழ் இலக்கியங்கள், நவீனத் தமிழ் இலக்கியங்கள் படிக்கச் சொல்கிறீரே? ஏன் இப்பெருந் தண்டனை? மீனைப் போன்ற கண்களென்றால் தமிழருக்கே (தமிழ்நாட்டு) புரிவதில்லை. மீனாவின் கண்களில் ஜப்பானியர் பார்த்து விட்டுத்தான் போகட்டுமே?
அப்புறம் தனிநபர் தாக்குதலில் பத்ரியா? இவ்வளவு வியாக்கியானம் இதற்கு மட்டும்தானா?
அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தெ(பு)ரியவில்லை.
இப்ப பகிரங்க கடிதம் எழுதுவதுதான் இணைய தர்மம். அநேகமாக ஒரு வாரத்திற்கும் மேலாக நீங்கள் இணையம் surf பண்ணவில்லை(!@#) போலிருக்கிறது. அல்லது???
இந்திய பட்ஜெட் என்றாலும், தினமலரின் அக்குறும்பு செய்தியெனிலும், அதே மலர் தாக்கப்பட்டால் எதிர்குரல் விடும் நடுநிலைச் சார்பெனிலும், கிரிக்கெட்டில் விதவிதமான வித்தியாசமான கருத்தென்றாலும், இந்திய விதிகளின் வியாக்கியானமென்றாலும், பன்னாட்டு மேதாவிகளின் நூல்களின் ஸ்பரிசத்தையும் நான் அடைவது "பத்ரி திசாரஸ்"தான்.
'வேலையத்த ஜப்பானியர்கள்' பதிவு படித்தவுடன் தோன்றியது 'ஓஹோ பத்ரிக்கும் வேலையில்லையோவென்று'. ஆமாம்...லூசுன்னா என்னங்க பத்ரி? கொஞ்சம் அவிழ்த்து விடுங்களேன்.
'எட்டுத்திக்கும் சென்று நல்லவை கொணர்ந்திங்கு சேர்' அப்படின்னு பாரதி ஜப்பானியர்க்கு சொல்லவில்லை (PUN INTENDED)
ரஜினி காதலால் ஜப்பான்/ஜப்பானியர்கள் இழந்ததென்ன? அமெரிக்க டாலரையே அள்ளி நிறுத்தும் ஜப்பானிய யென் நிலை தடுமாற்றம் கண்டு விட்டதா? அவரது 'தேச பக்தி' குறைந்து விட்டதா? தரக் கட்டுப்பாட்டின் கட்டுக் கோப்பு குலைந்து விட்டதா? தேனீயின் சுறுசுறுப்பு அகன்று விட்டதா? கருப்பு ரிப்பனை தலையிலே கட்டி உற்பத்தித்திறனை பன்மடங்காக்கும் "ஸ்டிரைக்" பாணி அமரத்துமாகிவிட்டதா? இப்ப திடீர்னு என்னதான் ஆச்சு?
வேலையத்தவர் ஜப்பானியரென்றால் மற்றவரெல்லாம் எம்மாத்திரம்?
'அவர்கள் போட்டிருக்கும் டி-ஷர்ட்', இதுதான் உம்ம பிரச்சினையா? விடுங்கள் பத்ரி. அமெரிக்காவில் செப்டம்பர் 11'ற்கு அப்புறம் 'ஓசாமா டி-ஷர்ட்' பிரபல்யமானதை விடக் கொடுமையா இது? விசேடமென்னவெனில் இந்தப்பக்கம் 'ஓசாமா டி-ஷர்ட்', அந்தப்பக்கம் 'அமெரிக்க கொடி', வித்தது ஒரே நாடு. அது சீனா.
ஜப்பானியர் தமிழ் படிப்பதில் பெருமை கொள்ளும் நீங்கள் அவரை பழந்தமிழ் இலக்கியங்கள், நவீனத் தமிழ் இலக்கியங்கள் படிக்கச் சொல்கிறீரே? ஏன் இப்பெருந் தண்டனை? மீனைப் போன்ற கண்களென்றால் தமிழருக்கே (தமிழ்நாட்டு) புரிவதில்லை. மீனாவின் கண்களில் ஜப்பானியர் பார்த்து விட்டுத்தான் போகட்டுமே?
அப்புறம் தனிநபர் தாக்குதலில் பத்ரியா? இவ்வளவு வியாக்கியானம் இதற்கு மட்டும்தானா?
அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தெ(பு)ரியவில்லை.
Wednesday, August 18, 2004
தொட்டிலும் கட்டிலும்
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சில திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் மனதைத் தைத்தது "About Schmidt". ஜேக் நிக்கல்சன் நடித்து 2002'ல் வெளியான உணர்ச்சிச் சித்திரம். ரிட்டையரான ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியின் வைஸ் பிரசிடென்டின் வாழ்க்கையை அலசுவதே இத் திரைப்படம். சரியாக 120 நிமிடங்களில் திரைக்கதையை சொல்லிய பாங்கு அசத்த வைக்கிறது. நீளம் கருதி இவர்கள் வெட்டிய காட்சிகள் கூட ரசிக்கத்தக்கவவை (DVD புண்ணியம்).
வாரன் ஷ்மிட் உள்ளுக்குள் சோகம் புதைத்து, வெளியுலகிற்கு சாதாரணனாய் நாடகம் போட்டு வாழ்பவர். ஓய்வு பெற்ற பின் என்ன செய்வதெனத் தெரியாத போது, தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் மூலம் தான்ஜானியாவில் ஒரு சிறுவனை (நுடுகு) தத்தெடுக்கின்றார். ஆறு வயது நுடுகுவுக்கு கடிதம் எழுதி தனது அனுபவங்களை (பல சமயங்களில் பொய்யாக எழுதி) பகிர்ந்து கொள்வது, "வாய்ஸ் ஓவர்" என்ற கைவிடப் பட்ட உத்தியென்றாலும் பார்க்க சுவாரஸியமாயிருக்கிறது.
பின்னர், சில தினங்களிலேயே தனது மனைவியைப் பறி கொடுக்கிறார். இழந்த பின்னர் மனைவியை நினைத்து மருகும்போது, பல வருடங்களுக்கு முன்னர் தனது உயிர் நண்பனுடனான அவளது "உறவு" பத்திரப்படுத்தப்பட்ட சில கடிதங்களில் தெரிய வருகிறது. வெறுத்துப் போய் 'வாழ்க்கையைத் தேடி' தனது பயணத்தை RUV'ல் (நகரும் வீடு?) தொடங்குகிறார். சொந்த மகளே 'இப்போது வர வேண்டாம்' எனச் சொல்லுவதும், 'எப்போதுமில்லாத அக்கறை இப்ப எங்கேர்ந்து வந்தது' என்று கல்யாணத்தை நிறுத்தென தந்தை சொல்லும்போது மகள் பதில் தருவுதுமென சூடான நிதர்சனக் காட்சிகள் பல உண்டு. சில நேரங்களில் கதை ஆமை போல் தவழும்போது கைகொடுப்பது மிக நேர்த்தியான வசனங்களே.
'நான் வாழ்ந்து யாருக்கென்ன பயன்? நான் ஒரு தோல்வியுற்றவன்', என்று கிளைமாக்ஸில் தத்துவம் பேசும் போது நுடுகுவின் முதல் பதில் கடிதமொன்று தான்ஜானியாவிலிருந்து வருகிறது. அதில் ஒரு ஓவியம் இணைக்கப்படிருக்கிறது. ஒரு நெடிய உருவத்தின் கைகளை ஒரு சிறிய உருவம் பிடித்திருப்பது போல. ஷ்மிட்டின் கண்களில் வழியும் கண்ணீர் 'தான் ஏன் இன்னும் வாழவேண்டும், தான் இதுவரை சாதித்ததென்ன' எனபவற்றை சொல்லாமல் சொல்லும். டைரக்டர் அலெக்ஸாண்டர் பேயின் பெரைச் சொல்லாவிடில் மோட்சமில்லை எனக்கு.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் "முதியோர் இல்லங்கள்" அதிகமாவதாச் செவிவழியறிந்தேன். அமெரிக்காவில் சமீபத்தில் வீடற்றவர்க்கு ஆதரவளிக்கும் அரசாங்க இயக்கத்திற்கு எதேச்சையாக செல்ல நேரிட்டது. சோஷியல் செக்யூரிடி நம்பருடன் இங்கே பதிவு செய்து கொண்டால் குடும்பத்திற்கு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைக்கும். நமது தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட முதியோருக்கென நலத்திட்டங்கள் உள்ளனவா? தெரியவில்லை. 'தொட்டில் குழந்தைகள்' திட்டமறிவேன். மெல்ல 'கட்டில் முதியோர்' திட்டமும் வந்துவிடுமோ? கவலையாயிருக்கின்றது.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சில திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் மனதைத் தைத்தது "About Schmidt". ஜேக் நிக்கல்சன் நடித்து 2002'ல் வெளியான உணர்ச்சிச் சித்திரம். ரிட்டையரான ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியின் வைஸ் பிரசிடென்டின் வாழ்க்கையை அலசுவதே இத் திரைப்படம். சரியாக 120 நிமிடங்களில் திரைக்கதையை சொல்லிய பாங்கு அசத்த வைக்கிறது. நீளம் கருதி இவர்கள் வெட்டிய காட்சிகள் கூட ரசிக்கத்தக்கவவை (DVD புண்ணியம்).
பின்னர், சில தினங்களிலேயே தனது மனைவியைப் பறி கொடுக்கிறார். இழந்த பின்னர் மனைவியை நினைத்து மருகும்போது, பல வருடங்களுக்கு முன்னர் தனது உயிர் நண்பனுடனான அவளது "உறவு" பத்திரப்படுத்தப்பட்ட சில கடிதங்களில் தெரிய வருகிறது. வெறுத்துப் போய் 'வாழ்க்கையைத் தேடி' தனது பயணத்தை RUV'ல் (நகரும் வீடு?) தொடங்குகிறார். சொந்த மகளே 'இப்போது வர வேண்டாம்' எனச் சொல்லுவதும், 'எப்போதுமில்லாத அக்கறை இப்ப எங்கேர்ந்து வந்தது' என்று கல்யாணத்தை நிறுத்தென தந்தை சொல்லும்போது மகள் பதில் தருவுதுமென சூடான நிதர்சனக் காட்சிகள் பல உண்டு. சில நேரங்களில் கதை ஆமை போல் தவழும்போது கைகொடுப்பது மிக நேர்த்தியான வசனங்களே.
'நான் வாழ்ந்து யாருக்கென்ன பயன்? நான் ஒரு தோல்வியுற்றவன்', என்று கிளைமாக்ஸில் தத்துவம் பேசும் போது நுடுகுவின் முதல் பதில் கடிதமொன்று தான்ஜானியாவிலிருந்து வருகிறது. அதில் ஒரு ஓவியம் இணைக்கப்படிருக்கிறது. ஒரு நெடிய உருவத்தின் கைகளை ஒரு சிறிய உருவம் பிடித்திருப்பது போல. ஷ்மிட்டின் கண்களில் வழியும் கண்ணீர் 'தான் ஏன் இன்னும் வாழவேண்டும், தான் இதுவரை சாதித்ததென்ன' எனபவற்றை சொல்லாமல் சொல்லும். டைரக்டர் அலெக்ஸாண்டர் பேயின் பெரைச் சொல்லாவிடில் மோட்சமில்லை எனக்கு.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் "முதியோர் இல்லங்கள்" அதிகமாவதாச் செவிவழியறிந்தேன். அமெரிக்காவில் சமீபத்தில் வீடற்றவர்க்கு ஆதரவளிக்கும் அரசாங்க இயக்கத்திற்கு எதேச்சையாக செல்ல நேரிட்டது. சோஷியல் செக்யூரிடி நம்பருடன் இங்கே பதிவு செய்து கொண்டால் குடும்பத்திற்கு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைக்கும். நமது தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட முதியோருக்கென நலத்திட்டங்கள் உள்ளனவா? தெரியவில்லை. 'தொட்டில் குழந்தைகள்' திட்டமறிவேன். மெல்ல 'கட்டில் முதியோர்' திட்டமும் வந்துவிடுமோ? கவலையாயிருக்கின்றது.
Sunday, August 15, 2004
நிதர்சனம்
தோல்பாவைக் கூத்து உலகத்தில் அழிந்து வருவதாய் திரு. இராமகிருஷ்ணன் வருந்தியிருந்தார். ஆனால் இணையத்தில் சிலர் அக்கலையை அழியாது காப்பாற்றி வருகின்றார்கள்.
தோல்பாவைக் கூத்து நடக்குது
ரொம்பப் புதுமையாக இருக்குது
நூலு ஒருத்தன் கையிலே
வாலு ஒருத்தன் கையிலே
விடுதலை தினத்தை கொண்டாடியோர்க்கு நன்றிகள்.
தோல்பாவைக் கூத்து உலகத்தில் அழிந்து வருவதாய் திரு. இராமகிருஷ்ணன் வருந்தியிருந்தார். ஆனால் இணையத்தில் சிலர் அக்கலையை அழியாது காப்பாற்றி வருகின்றார்கள்.
தோல்பாவைக் கூத்து நடக்குது
ரொம்பப் புதுமையாக இருக்குது
நூலு ஒருத்தன் கையிலே
வாலு ஒருத்தன் கையிலே
விடுதலை தினத்தை கொண்டாடியோர்க்கு நன்றிகள்.
Subscribe to:
Posts (Atom)
