Tuesday, August 31, 2004

ரிப்பளிக்கன் கன்வென்ஷன்

நியூயார்க்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்து விட்டது. அரிசோனா செனட்டர் ஜான் மெக்கெயினும், முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி ஜூலியானியும் முதல் நாளின் முக்கியப் பேச்சாளர்கள். ஜான் மெக்கெயினும்,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜான் கெர்ரியும் நல்ல நண்பர்கள். கெர்ரியின் வியட்நாம் போரில் பெற்ற மெடல்களைக் பற்றிய கீழ்த்தரமான தொலைக்காட்சி விளம்பரங்களைக் கண்டித்து புஷ்ஷிடம் பேசியவர் மெக்கெயின். மேலும் ரிப்பளிக்கன் கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு புஷ்ஷோடு உரசியவர் மெக்கெயின். கெர்ரியைப் போலவே வியட்நாம் யுத்ததில் பங்கு கொண்டு பிணைக்கைதியாய் பலநாட்கள் சித்திரவதை அனுபவித்தவர். அவரது கருத்துகளை மதிக்கும் அமெரிக்கர்கள் பலர்.

உன்னைப் பிடி என்னைப்பிடி'யென்று இருக்கும் தேர்தல் கணக்குகளைக் கண்டு புஷ் பதற ஆரம்பித்துவிட்டார். எப்பாடுபட்டாவது நடுத்தர மிதவாத மற்றும் முடிவு எடுக்காத மக்களின் ஓட்டைப் பெற மெக்கெயின் மற்றும் ஜூலியானியைப் பயன்படுத்த முடிவு செய்து களம் காணவும் வைத்து விட்டனர்.

முதலில் பேசிய மெக்கெயின் புஷ் புகழ் பாடினாலும் அடக்கியே வாசித்தார். எதிரி டெமாக்ரட்டுகளில்லை, தீவிரவாதிகளென்றார். புஷ்தான் நம்மை வழி நடத்தக்கூடியவரென்றார்.

ஆனால் ஜூலியானியோ சும்மா 'குளிர/உறைய' வைத்துவிட்டார் புஷ் புகழ் மழையில். இத் தேர்தலில் புஷ் ஜெயித்தால் 2008'ல் போட்டியிடமுடியாது. அப்போது ஜூலியானிதான் ரிப்பளிக்கன் தேர்வாக
அமையலாம். புஷ் தோற்றுவிட்டால் டெக்ஸாஸ் என்ணைக் கிணறுகளைப் பார்த்துக் கொள்ள கிளம்பி விடலாம். அப்புறமென்ன ஜூலியானி காட்டில் மழைதான்.

அதே போன்று கெர்ரியை, பில் கிளிண்டன் பின்புலத்தில் குழிபறிப்பாரென ஆருடம் சொல்கிறார்கள். கெர்ரி ஜெயித்தால் 2008'ல் மீண்டும் போட்டியிடுவார். தனது மனைவியை (ஹில்லாரியை) அப்போது
போட்டியிட வைக்கலாமென்று கிளிண்டனது அபிப்பிராயம். தலை சுற்றுகிறதா?

NBC சேனலுக்களித்த பேட்டியில் 'தீவிரவாதிகளுக்கெதிரான போரில் வெற்றி கிட்டுமா?" என்ற கேள்விக்கு 'கிட்டாது' என்று புஷ் உளற பற்றிக் கொண்டது. இன்று அதைத் திருத்திக் கொண்டார். அதே
போல் மற்றொரு பேட்டியில் 'ஈராக்கில் யுத்ததை தவறாக கணித்து விட்டோம்' என்றார்.

கெர்ரியும் சோடை போகவில்லை. அவரது ஈராக் யுத்தம் பற்றிய கொள்கை பச்சோந்தியை விட மோசமாக நிறம் மாறுகிறது.

ஆக இத்தேர்தலில் வேலையில்லா திண்டாட்டம், திணரும் வர்த்தகம், திரியும் மனித உறவுகள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னே நிற்பது தீவிரவாத ஒழிப்பு முத்திரையுடன் நடக்கும்
'ஈராக் யுத்தம்' என்ற கூத்து மட்டும்தான்.

Monday, August 30, 2004

கோபம்

உணர்வுகளின் ராட்சதன்தான்

உதட்டிலே அமிழ்தும்
உள்ளத்தில் வஞ்சமும்
உலகின் நியதியாகி
பிழைத்துக் கிடப்பதே
பிரதானமாகிப் போக

கெட்ட வார்த்தையென்றாலும்
பட்டவர்த்தனமான கோபம்
பிடிக்கின்றது

தெரியாத தேவதையைவிட
தெரிந்த சாத்தான் மேலல்லவோ?

Thursday, August 26, 2004

ஊர்க்குருவி (ஜீனியர் விகடன் கழுகாரின் முகமூடி!!!)

ஊர்க்குருவியார் ஒரு வாரமாய் தமிழகம் பறந்து, கையில் குடத்துடன் வந்து சேர்ந்தார். 'உஸ் அப்பாடா', என்றவுடன் தயாராயிருந்த கரும்பு ஜீஸை நீட்டினோம். ஒரே மடக்கில் காலி செய்து "எழுதிக்கொள்ளும்" என்றார்.

"என்ன கையில் குடம்? சிங்காரச் சென்னையில் நீர் பஞ்சமானதால் சைத்தான் குளத்திலிருந்து தேவாமிர்த நீரா?" வெனக் கிண்டினோம். ஊர்க்குருவியார் முறைத்தவுடன் அமைதியானோம். செய்தி முக்கியமல்லவா?

உலகத் தமிழரில் சிறந்தவர் யார் தெரியுமா? குருவியார் சவாலுக்கு அம்மா முன் கைமெய் பொத்திய தமிழக மந்திரிகளானோம்.

"வைகோ. இணைய சர்வே இது."

"அப்படியானால் குரு/அண்ணன் கலைஞர்?"

"தமிழகத் தமிழரே ஐந்தாம் இடத்தில் தள்ளி 'குலுக்கல்பட்டர்' ஆக்கிவிட்டனர்"

"குரு எட்டடியென்றால் சிஷ்யன்...?" ஐஸ் வைத்தோம். குருவியார் சிறிதே ஆசுவாசமடைந்தார்.

"பொடாவை போடா சொல்லிவிட்டதே தமிழக அரசு?" நாம் கிண்டினோம்.

"என்ன ஓய்? நக்ஸலைட் கத்தார் சொல்லவில்லையா? வாஞ்சிநாதன், பகத்சிங் போன்றோர் நேற்று தீவிரவாதிகள். இன்று தியாகிகள். உமது பப்ளிகேஷனை நீரே படிப்பதில்லையா?"

சிறிதே வெட்கமானோம். குருவியாரை சிறிதே கார்னர் செய்ய வினவினோம்,"ஆமாம் வைகோ ராஜபாளையம் சீருடை கட்வுட் பற்றிய உமது கருத்தென்ன?"

தனது முயற்சியில் சற்றும் அயராத பதில்,"சனநாயகத்தில் சகஜமப்பா! உமது சனநாயகத்தில் லல்லூ போனால் ராப்ரி. அம்மா போனால் ஓ.பன்னீர்செல்வம்."

"குருவியாரே அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன முடிச்சு?"

"அது சரி. வெங்கடேச பண்ணையார் தியாகியா?"

"குருவியாரே என்ன சொல்கிறீர்?"

"சும்மா பம்மாதேயும். பண்ணையார் என்கௌண்டர்ல பலன் என்ன? ராதிகா செல்வி திருச்செந்தூர் திமுக எம்.பி. முரட்டு பக்தரெல்லாம் சேவகம் செய்றாங்க."

"குழப்புகின்றீரே குருவியாரே?"

"புரியரவங்களுக்குப் புரியும். தடா பொடா'ன்னு பொருமுறீங்களே முதல்ல தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் எது தெரியுமா?"

"மதிமுக வா?" அப்பாவியாய் நோக்கினோம்.

கலகலவெனச் சிரித்தார் குருவியார். "அடடே ரொம்ப பயந்துட்டீங்களா? நம்ம ஜனநாயகப்படி ஆளுங்கட்சியெல்லாம் எதிர்கட்சிகளை எல்லாத்தையும் ஏதாவதொரு காரணம் காட்டி தடை செய்யணும்." புரியாமல் விழித்தோம்.

சப்ஜெக்ட் மாற்ற வேண்டி,"மதுர நியூஸ் ஏதும் உண்டா?" என்றோம்.

சினிமா ஜிகிடி (இளைய தளபதி விஜய்யின் படம் மதுர) அறியாத குருவியார், "ஓ...ஜெயலஷ்மி நியூஸ் ஏராளமாயுண்டு. கேளும். காக்கி சட்டைகளின் காமாக்னி பட்டவர்த்தனமாய் தெரியுது." இது பற்றி இராமேஸ்வரம் நிர்விலா கிட்ட கேட்டேன். "இதுவரை இந்திய சிப்பாய்களோட (குறிப்பா மணிப்பூர்) பெண்கொடுமை (வன்புணர்ச்சி) தெரியும். ஆனால் போலீஸ¤மா? தமிழ்நாட்டுல சட்ட ஒழுங்கு கேடுன்னு சொல்லிட்டு இந்திய ராணுவம் வந்துட்டா எங்க கற்புக்கு என்ன பாதுகாப்பு?", அப்படின்னு அவங்க கேட்டப்போ குன்றிப்போய்விட்டேன். நிதர்சனம் சுட்டது. "காக்கிச்சட்டைய்யும் ஆலீவ் உடையானதோ?", கவித்துவமானார் குருவியார்.

"என்ன இப்படி சொல்லிவிட்டீர். பங்களாதேஷை உருவாக்கவில்லையா நம் சிப்பாய்கள்? பலனென்ன இன்று? பார்டர் போர்சை பலி க(கொ)ண்டார். நதி பங்கீடு கூடாதென்றார். வேலியெதற்கென்றார். பெண் எழுத்தை (தஸ்லிமா நஸ்ரீன்) தடை கண்டார். சரி அதெல்லாம் விடும். உமது நவீன கவித்துவத்திற்கு விடைதான் என்ன?", அப்பாவியாய் கேட்டோம்.

"கணிதத்துக்கென்ன என்ன முக்கியம்? மெஜாரிட்டிதானே? எல்லாம் கணித ஆட்டமல்லவா? நீர் சொல்லும் 40,000 பெரிசா 5,00,000 பெரிசா?"

"வாழ்க்கை வயசுன்னா 5,00,000 வகுப்பில ரேங்குன்னா 40,000!", லாஜிக் திறமைமையைக் காட்ட குருவியார் மறுபடி காட்டமானார்.

மறுபடி பேச்சை மாற்ற,"சரி சரி வெளிநாட்டு விவகாரமுண்டோ?"

கடுப்பு மாறாத குருவியார் சொன்னார்,"சும்மா ஆரியன் மாதிரி பேசாதீர்".

லேட்டஸ்ட் அமிதாப்பச்சன், பிபாஷா பாசு பட வில்லனாய் நினைத்துவிட்டாரோ? "குருவியாரே நான் திராவிடன். என் மூக்கை (இந்திரா மற்றும் ஜெயவர்த்தனே மூக்கு போலல்லாமல்) நல்லா பாருங்க." என்றோம்.

"சும்மா இந்தியன் மாதிரி பேசாதீர். திராவிடனாய் பேசும்."

"அப்போ இந்தியன்னா (டைரக்டர் சங்கர் படமாய் நினைத்து) ஆரியனா குருவியாரே? கமலஹாசன் சொந்த ஊர் பள்ளத்தூர் தெரியுமா? திராவிடன்னா யார் தமிழன் மட்டுமா? திராவிடர்னா மலையாளி, கன்னடர், தெலுங்கரும் அடங்குவாரென எமது வரலாற்று ஆசிரியர் சொன்னாரே? அப்படின்னா காவேரியில ஏன் கர்நாடகம் தண்னீர் விடல? ஒரு காலத்துல கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டுல தமிழன்(?) குண்டு வைக்கப்போறதா பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதே? இதெல்லாம் ஏன்? கிருஷ்ணா நீர் ஏன் தமிழ்நாட்டுல பாயவில்லை? தமிழ்நாட்டுக்காரங்களை பட்டி'ன்னு ஏன் மலையாளிங்க ஏசுறாங்க?", கேள்விகளின் நாயகர்களாய் மூச்சிறைத்தது எமக்கு.

"வெப்பு தாங்கலை உமக்கு. இந்தா குடியும் என்னோட நீர்மோர். ரொம்பப் பேசினா பெரிய ஆளானதா நினைப்பா?"

பறந்துபோக எத்தனித்த குருவியார்க்கு கதவைத் திறந்தோம்.

ஆஹா...இந்த ஊர்க்குருவி போல் எத்தனை உயரப் பறக்க எத்தனித்த பருந்துகளோ இந்த நாட்டிலே?

கும்மென்று காற்றடித்தது கதவங்களைத் யாம் திறந்ததும்.

அப்புறம்தான் குருவியார் கொண்டு வந்து வைத்த குடத்தை நோக்கினோம்.

அடடே எத்தனை எத்தனை தீபங்கள்!!! அதுவும் இந்தக் காற்றுக்கு ஒன்று கூட அணையவேவில்லையே!!!

ஓ...அவைதான் குடத்தினுள்ளே இன்னும் இருக்கின்றனவல்லவா?

Sunday, August 22, 2004

அமெரிக்காவும் என் கிராமமும்

பச்சைக் குத்தி
கைம்பெண்ணாய்
ஜாக்கெட் களைந்த
என் பாட்டி
இளம்பெண்களாய் இங்கே
எம்முன்னே

அமெரிக்க கலாச்சாரத்துடன்
ஐக்கியமாய் பிள்ளைக்குச் செய்தேன்
அய்யனார் முன்னர்
காதுகுத்து கல்யாணம்

கிடா வெட்டி
பார்பகியூ
கியக்கு மேக்கு
பேசித் திசை காட்டும்
தேசம்

ப்ரியமானவனை
'அது'வென
அ·றிணையாக்கும்
சமூகவியல்

கானாவோ
கிராம கானமோ
கொப்பியா கொட்டியாடும்
டிஸ்கோத்தேக்கள்

இங்கே பிள்ளைகளை
பெயர்த்த பின்னும்
சிறிதே நிம்மதி

வேர் மறவுமோ செடிகள்?
கோடை விடுமுறை

பொழுது விடிந்த
சேதி சொன்ன
சேவல் விருந்து
நுங்கு பெயர்த்து
கவட்டைக் குச்சியில்
காலம் பெயரும்

கோடையின் வாடையில்
வானம் பார்த்து
வாடியது பூமி
மட்டுமல்ல
வயலின் ஏரும்
தறியின் தாரும்

எல்லையோரக்
காளியாட்டத்தின்
களைப்பினூடே
ஊர்க்குட்டை குழப்பி
மீன் பிடிக்கும்

பூவரச இலையில்
பூரண கொழுக்கட்டை
பழுத்த பலாசுளைகள்
தேனோடு திகட்டும்

பனையோலை
தார்க்குச்சியில்
விசிறியாய்
நிலமளக்கும்

பால் ஐஸோ
பதினைந்து காசு
சேமியா ஐஸோ
சீதாலஷ்மி பாக்டரி
பணம் பார்க்கும்

மாத விடுமுறையில்
சூரிய வெப்பத்தை
சுத்தமாய் ருசிபார்த்து
கரிய சரீரமும்
கிராம சாரீரமும்
என் பிள்ளைக்கு
என்று கிட்டுமோ???
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது

அவ்வை சொன்னாள். ஆனால் மானிடராய்ப் பிறந்தும் தனது பூதவுடலை நேசியாது கத்தியால் சரி செய்யும் கலிகாலமிது. பிளாஸ்டிச் சர்ஜரி ஒரு விபத்தால் விகாரமான முகத்தை சரி செய்வதென்றால் பரவாயில்லை. இயற்கையிலேயே விளைந்த விகாரத்தை என்றால் என்னைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளலாம்.

ஸ்ரீதேவியின் மூக்குக்கென்ன குறை வந்தது? கொஞ்சம் மொக்கை/மொன்னை தான். ஆனால் அரிவாள் மனை கூறு 'கிளி மூக்கல்லவா'?

அமெரிக்காவில் விடுமுறையைக் கழி(ளி)ப்பதை விட நடுத்தரவர்க்கத்து மாதுக்கள் இத்தகைய அறுவை சிகிச்சையில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். 'CTRL - C & CTRL - V' கணிணித்துறை தாண்டி மனித உடல்களிலும் வித்தை காண்பிப்பது கடந்த ஆறு வருடங்களில் 128%, அமெரிக்காவில் அதிகமாகியுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது 'சுலப தவணை' முறையும் இவ்வித சிகிச்சைக்குண்டு. அப்புறமென்ன?
பே வாட்ச் (Bay Watch) புகழ் பமீலா ஆண்டர்சன் மற்றும் பாப்பிசை மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் அறுத்துக் கட்டாத பாகமே உடம்பில் இல்லை எனலாம். ஏனிந்த எண்ணவோட்டம்?

பிரசித்தி பெற்ற அறுவைகள்(?) யாதெனப் பார்ப்போமா?

1. ABDOMINOPLASTY (Tummy Tuck): குவிமையமாயிருக்கும் வயிற்றை குழிமையமாக்கும் வித்(ந்)தை. தழும்புகள் ஆற 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகலாம்.
2. BREAST ENLARGEMENT (Augmentation Mammaplasty): மார்பக அளவுகளை அதிகப்படுத்த உதவும் சிகிச்சை. டயருக்கு காற்றடிப்பது போல சலைன் பலூன்களை விதைத்து செய்யப்படுவது. பமீலாவைச் சொல்வார்கள். இவர் 'இவ்விஷயம்' செய்வது மெத்தைத் துணியை மாற்றுவது போல...பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட விளைவு கிட்டவில்லையெனில் மீண்டும் மீண்டும் செய்யப்படவேண்டிய சிகிச்சையிது.
3. BREAST LIFT (Mastopexy): விளக்கம் தேவையில்லை.
4. CHEMICAL PEEL (Phenol and trichloroacetic acid [TCA]): முகச்சுருக்கமா? சூரியப் புள்ளிகளா? தோலையே ரசாயனத்தில் தோய்த்தெடுத்து 'பளபளா' செய்யும் தந்திரமிது. காலமமாக சுருக்கங்கள் மீண்டும் தோன்றும். எச்சரிக்கை: வெள்ளைத் தோலுக்கே பொறுத்தமானது
5. COLLAGEN / FAT INJECTIONS: உசிலைமணி முகத்துக்கு பாகவதர் பொலிவு தர வல்லது.
6. DERMABRASION: உதட்டோர சிம்ரன் மச்சம் ஓகே. ஆனால் பருக்கள்? கவலை கொள்ள வேண்டாம். காருக்கு மெழுகு தடவி மெருகேற்றுவது போல, 'உப்புத்தாள்' தேய்த்து, முக்கியமாய் வாயைச் சுற்றி 'தேய்த்து' மினுக்கச் செய்வார்கள்.
7. EAR SURGERY (Otoplasty): யானைக்காது குழந்தைகளா? கவலை வேண்டாம். நறுக்கி சரி செய்துவிடலாம்.
8. EYELID SURGERY (Blepharoplasty): கண்களுக்கு கீழ் 100 கிலோ பொன்னி அரிசி சாக்குப் பைகளா? 3 மணி நேரத்தில் காலி செய்யலாம்.
9. FACELIFT (Rhytidectomy): கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸை காதலிக்கின்றீர்களா? கல்யாணம் செய்யுமுன் மைக்கேல் டக்ளஸைப் போல் முகத்தை 'இவ்வாறு' சரி செய்யவும்.
10. FACIAL IMPLANTS: முகத்தையே முகம் மாற்றலாம்.
11. FOREHEAD LIFT (Browlift): முன்னெற்றிச் சுருக்கம் அறிவின் ஆழம் காட்டியதாய் சொன்ன காலம் மலையேறிப் போச்சு. 5 முறை ஊசியைச் சொருகியெடுத்தால் சுருக்கங்கள் சலவைச் செய்யப்படும்.
12. HAIR REPLACEMENT SURGERY: வழுக்கைத் தலைக்கு விடுதலை.
13. LASER FACIAL RESURFACING: கார்பந்டை-ஆக்ஸைடு மற்றூம் லேசர் மூலம் முகச்சலவை செய்வது.
14. LIPOSUCTION (Suction-Assisted Lipectomy): மிகச் சாதாரணமாகச் செய்யப்படுவது. அதிக கொழுப்பா? என் எழுத்தைத் தவிர மற்ற அனைத்து பாகங்களிலிருந்தும், உறிஞ்சியெடுத்துத் துப்பிவிடலாம்.
15. MALE BREAST REDUCTION (Gynecomastia): புரிந்திருக்குமே?
16: NOSE SURGERY (Rhinoplasty): மூக்கின் ஒடுக்கெடுப்பது.

ஆமாம்...ரஜினியின் கருப்பு உதட்டினை சிவப்பாக மாற்றும் சிகிச்சைப் பெயரரென்ன? தெரிந்தால் சொல்லுங்களேன்.

Thursday, August 19, 2004

பத்ரி அவர்களுக்கு பகிரங்க கடிதம்

இப்ப பகிரங்க கடிதம் எழுதுவதுதான் இணைய தர்மம். அநேகமாக ஒரு வாரத்திற்கும் மேலாக நீங்கள் இணையம் surf பண்ணவில்லை(!@#) போலிருக்கிறது. அல்லது???

இந்திய பட்ஜெட் என்றாலும், தினமலரின் அக்குறும்பு செய்தியெனிலும், அதே மலர் தாக்கப்பட்டால் எதிர்குரல் விடும் நடுநிலைச் சார்பெனிலும், கிரிக்கெட்டில் விதவிதமான வித்தியாசமான கருத்தென்றாலும், இந்திய விதிகளின் வியாக்கியானமென்றாலும், பன்னாட்டு மேதாவிகளின் நூல்களின் ஸ்பரிசத்தையும் நான் அடைவது "பத்ரி திசாரஸ்"தான்.

'வேலையத்த ஜப்பானியர்கள்' பதிவு படித்தவுடன் தோன்றியது 'ஓஹோ பத்ரிக்கும் வேலையில்லையோவென்று'. ஆமாம்...லூசுன்னா என்னங்க பத்ரி? கொஞ்சம் அவிழ்த்து விடுங்களேன்.

'எட்டுத்திக்கும் சென்று நல்லவை கொணர்ந்திங்கு சேர்' அப்படின்னு பாரதி ஜப்பானியர்க்கு சொல்லவில்லை (PUN INTENDED)

ரஜினி காதலால் ஜப்பான்/ஜப்பானியர்கள் இழந்ததென்ன? அமெரிக்க டாலரையே அள்ளி நிறுத்தும் ஜப்பானிய யென் நிலை தடுமாற்றம் கண்டு விட்டதா? அவரது 'தேச பக்தி' குறைந்து விட்டதா? தரக் கட்டுப்பாட்டின் கட்டுக் கோப்பு குலைந்து விட்டதா? தேனீயின் சுறுசுறுப்பு அகன்று விட்டதா? கருப்பு ரிப்பனை தலையிலே கட்டி உற்பத்தித்திறனை பன்மடங்காக்கும் "ஸ்டிரைக்" பாணி அமரத்துமாகிவிட்டதா? இப்ப திடீர்னு என்னதான் ஆச்சு?

வேலையத்தவர் ஜப்பானியரென்றால் மற்றவரெல்லாம் எம்மாத்திரம்?
'அவர்கள் போட்டிருக்கும் டி-ஷர்ட்', இதுதான் உம்ம பிரச்சினையா? விடுங்கள் பத்ரி. அமெரிக்காவில் செப்டம்பர் 11'ற்கு அப்புறம் 'ஓசாமா டி-ஷர்ட்' பிரபல்யமானதை விடக் கொடுமையா இது? விசேடமென்னவெனில் இந்தப்பக்கம் 'ஓசாமா டி-ஷர்ட்', அந்தப்பக்கம் 'அமெரிக்க கொடி', வித்தது ஒரே நாடு. அது சீனா.

ஜப்பானியர் தமிழ் படிப்பதில் பெருமை கொள்ளும் நீங்கள் அவரை பழந்தமிழ் இலக்கியங்கள், நவீனத் தமிழ் இலக்கியங்கள் படிக்கச் சொல்கிறீரே? ஏன் இப்பெருந் தண்டனை? மீனைப் போன்ற கண்களென்றால் தமிழருக்கே (தமிழ்நாட்டு) புரிவதில்லை. மீனாவின் கண்களில் ஜப்பானியர் பார்த்து விட்டுத்தான் போகட்டுமே?

அப்புறம் தனிநபர் தாக்குதலில் பத்ரியா? இவ்வளவு வியாக்கியானம் இதற்கு மட்டும்தானா?

அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தெ(பு)ரியவில்லை.

Wednesday, August 18, 2004

தொட்டிலும் கட்டிலும்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சில திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் மனதைத் தைத்தது "About Schmidt". ஜேக் நிக்கல்சன் நடித்து 2002'ல் வெளியான உணர்ச்சிச் சித்திரம். ரிட்டையரான ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியின் வைஸ் பிரசிடென்டின் வாழ்க்கையை அலசுவதே இத் திரைப்படம். சரியாக 120 நிமிடங்களில் திரைக்கதையை சொல்லிய பாங்கு அசத்த வைக்கிறது. நீளம் கருதி இவர்கள் வெட்டிய காட்சிகள் கூட ரசிக்கத்தக்கவவை (DVD புண்ணியம்).

23m வாரன் ஷ்மிட் உள்ளுக்குள் சோகம் புதைத்து, வெளியுலகிற்கு சாதாரணனாய் நாடகம் போட்டு வாழ்பவர். ஓய்வு பெற்ற பின் என்ன செய்வதெனத் தெரியாத போது, தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் மூலம் தான்ஜானியாவில் ஒரு சிறுவனை (நுடுகு) தத்தெடுக்கின்றார். ஆறு வயது நுடுகுவுக்கு கடிதம் எழுதி தனது அனுபவங்களை (பல சமயங்களில் பொய்யாக எழுதி) பகிர்ந்து கொள்வது, "வாய்ஸ் ஓவர்" என்ற கைவிடப் பட்ட உத்தியென்றாலும் பார்க்க சுவாரஸியமாயிருக்கிறது.

பின்னர், சில தினங்களிலேயே தனது மனைவியைப் பறி கொடுக்கிறார். இழந்த பின்னர் மனைவியை நினைத்து மருகும்போது, பல வருடங்களுக்கு முன்னர் தனது உயிர் நண்பனுடனான அவளது "உறவு" பத்திரப்படுத்தப்பட்ட சில கடிதங்களில் தெரிய வருகிறது. வெறுத்துப் போய் 'வாழ்க்கையைத் தேடி' தனது பயணத்தை RUV'ல் (நகரும் வீடு?) தொடங்குகிறார். சொந்த மகளே 'இப்போது வர வேண்டாம்' எனச் சொல்லுவதும், 'எப்போதுமில்லாத அக்கறை இப்ப எங்கேர்ந்து வந்தது' என்று கல்யாணத்தை நிறுத்தென தந்தை சொல்லும்போது மகள் பதில் தருவுதுமென சூடான நிதர்சனக் காட்சிகள் பல உண்டு. சில நேரங்களில் கதை ஆமை போல் தவழும்போது கைகொடுப்பது மிக நேர்த்தியான வசனங்களே.

'நான் வாழ்ந்து யாருக்கென்ன பயன்? நான் ஒரு தோல்வியுற்றவன்', என்று கிளைமாக்ஸில் தத்துவம் பேசும் போது நுடுகுவின் முதல் பதில் கடிதமொன்று தான்ஜானியாவிலிருந்து வருகிறது. அதில் ஒரு ஓவியம் இணைக்கப்படிருக்கிறது. ஒரு நெடிய உருவத்தின் கைகளை ஒரு சிறிய உருவம் பிடித்திருப்பது போல. ஷ்மிட்டின் கண்களில் வழியும் கண்ணீர் 'தான் ஏன் இன்னும் வாழவேண்டும், தான் இதுவரை சாதித்ததென்ன' எனபவற்றை சொல்லாமல் சொல்லும். டைரக்டர் அலெக்ஸாண்டர் பேயின் பெரைச் சொல்லாவிடில் மோட்சமில்லை எனக்கு.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் "முதியோர் இல்லங்கள்" அதிகமாவதாச் செவிவழியறிந்தேன். அமெரிக்காவில் சமீபத்தில் வீடற்றவர்க்கு ஆதரவளிக்கும் அரசாங்க இயக்கத்திற்கு எதேச்சையாக செல்ல நேரிட்டது. சோஷியல் செக்யூரிடி நம்பருடன் இங்கே பதிவு செய்து கொண்டால் குடும்பத்திற்கு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைக்கும். நமது தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட முதியோருக்கென நலத்திட்டங்கள் உள்ளனவா? தெரியவில்லை. 'தொட்டில் குழந்தைகள்' திட்டமறிவேன். மெல்ல 'கட்டில் முதியோர்' திட்டமும் வந்துவிடுமோ? கவலையாயிருக்கின்றது.

Sunday, August 15, 2004

நிதர்சனம்

தோல்பாவைக் கூத்து உலகத்தில் அழிந்து வருவதாய் திரு. இராமகிருஷ்ணன் வருந்தியிருந்தார். ஆனால் இணையத்தில் சிலர் அக்கலையை அழியாது காப்பாற்றி வருகின்றார்கள்.

தோல்பாவைக் கூத்து நடக்குது
ரொம்பப் புதுமையாக இருக்குது
நூலு ஒருத்தன் கையிலே
வாலு ஒருத்தன் கையிலே

puppet

விடுதலை தினத்தை கொண்டாடியோர்க்கு நன்றிகள்.

Saturday, August 14, 2004

வெறியுற்றதும் வெறுப்புற்றதும் - I

தமிழிணையக்
காதலர் கெஞ்சுவர்
அண்டை
நாட்டைப் பார்ப்பாயோ?
யாம் பார்க்கும் போது
ரெட்டையிலை ச(கா)ப்தம் காண்பார்

இணையப் பெருசுகள்
வழமை போல்
அறிவோ உணர்வோ
நடுநிலை கூடக்
காட்டாது

ஏகாந்தாமாய் ஒரிருவர்
ஏளனப்படுத்தப் படுவர்
ஜினிமா ஜிகிடி
தொடரும்
பின்அப்
பின்னூட்டங்களுடன்

துறவறத்தில்
போணியாகா விடில்
இல்லறம் திரும்பு
போலிக் காவிகளை களை
புணர்ச்சியாவது செய்யலாம்
புழையின்றிக் கூட...

கபளீகரம் கஷ்டமில்லை
கற்றும் தேர்வாரிலை
கவுளியை நம்புபவர்
க(நி)சத்தை நம்பிலர்

கோடம் போடு
கேதம் தந்ததாய்
கோ(ஷ)லமிடு
இருக்கும் ஒரேதுரும்பையும்
கோட்டை விட்டு
கோட்டைப் பிடிப்பதாய்
கோடம் செய்
கோஷ்டி கானம் கேள்...
ஏதோவொரு வினை

ஜியோ பாலிடிக்ஸ்
ஜிகிடி
கார்கிலில்
வன்புணர்ச்சி வராமலும்
களங்கப்படுத்திக்
களிப்பு

ஆக்கிரமிப்புக்கும்
அமைதிக்கும்
எண்(ண) வேறுபாடு தெரியாமல்
ஆசுவாசஞ் செய்
ஆச்சர்யம் கொள்
ஆசியமுஞ் செய்

புத்தன் பிறந்த மண்தான்
மங்குணியான அரசியல்தான்
பெரிய புத்தனிருந்தாலும்
சிறிய புத்தனின்
சிரிப்பொலி போதும்
சின்னாபின்னா மாக்கிட
சநாயகமென் பலவீனம்

14 ஆண்டுகளானாலும்
14 வயது கன்னியின்
களங்கம் களைவோம்
காலனின் கயிற்றிலே
சனநாயக மின்னும் தளைக்கும்
எப்பொருளுக்கும்
உட்பொருளுணர்

கடார நகரடைய
கடிகை பலவானதெனக்
கட்டியம் கூறாதே
கணக்கு பலவீனமாய்
கழுத்தறுக்கிறது

போரிலே பணம்
பார்த்தல் இயல்பு
அமைதிக்கு அதுவும்
பில்லியன் டாலரில்
செலவீனமென்பது திரிபு

தமிழ்க் கணித வரலாறு
பாடங்கள் படித்து வரவும்
கூடவே பெருமஞ்சள் கோழியின்
தர்க்கசாஸ்திர உற்சாகம்
தொலைக்காட்சியில் பார்க்கவும்

அடுத்தமுறை ராமர்படை
மாறுகைகால் கட்டி வரக்கூடாது
அம்புட்டுதான்
இந்தத்திரி இன்னுமெறியும்
ஆனால் அந்தப்புர(ற)ம்
அந்தோ கருகிவிட்டது...
கைவிட்டேன்...
இந்திய சுதந்திரதின வாழ்த்துக்கள்

உறைபனி ஊடே
தேயிலையோ வடிகொட்டையோ
சில்லிட்ட நீரைத்
தினமருந்திப் பின்
கடமையே கண்ணாய்
நவீன கருவிகளின்
நாகரிக வாடையுமின்றி
வடக்கைக் காக்கின்றார்

முப்பது ஆண்டுகளுக்கு
முன்பிறந்த கப்பல் நீர்மூழ்கியில்
வித விதமான
வேதிப்பொருள் சுவாசித்து
கடல் எல்லை
காப்பவர் தெற்கிலே

இவர்கள் ஆச்சாரம்
அனுஷ்டிக்கவில்லை
மேசைக்கு கீழே
கிம்பளம் நோக்கியதில்லை
காஷ்மீரிலிருந்து
கன்னியாகுமரி வரை
ஒண்ணரை வருடத்திற்கு
ஒருமுறை
குடும்பம் காண்பதில்
குதூகலம் அடைவார்

ரேஷணுண்டு ரம்மும்முண்டு
நாடோடி வாழ்க்கையுண்டு
அமைதியோ யுத்தமோ
உயிரை நாட்டிற்கு
உயிலாய் எழுதியதுமுண்டு

தேர்தலிலே அஞ்சலோட்டில்லை
அதுகுறித்து கவலையுமில்லை
சம்பள கமிஷனின்
லீலைகள் தெரியாது
ராமரோ அல்லாவோ
அயோத்தி அரசியலில் அக்கறையில்லை
தமிழும் இந்தியும் ஒன்றுதான்
சாதி சமயமும் தெரியாது

சுதந்திர நாளில்
இந்திய இறையாண்மைக்கு
இப்படி(டை)யாக
இறந்தவருக்கும்
இருப்பவருக்கும்
ஓய்வு பெற்றவர்க்கும்
பணிக்காக பிறந்தவருக்கும்
வீரவணக்கங்கள் !!!

வந்தேமாதரம் !!!
ஜெய்ஹிந்த் !!!
மேரா பாரத் மகான் !!!
அம்மி கொத்தும் சிற்பிகள்

அயலாராய்
எம்விழிகள்
பாவித்ததில்லை
இன்று
எதிரிகளாய்
பார்க்கப்படுகிறோம்
புள்ளிவிவரப்
புலிகட்கு
இலங்கை
ஆக்கிரமிக்க
வந்தது
வெறும்
60,000
இந்திய
ஆமிக்காரரா?
ஈராக்கை
ஏறெடுத்துப்பாரும்
4,00,000
அமெரிக்க
ஆமிக்காரர்
ஆட்டம்
போடுகிறார்
அங்கே
ஏவிய
கணைகளின்
கணக்கென்ன?
கனமென்ன?
படைகலன்களின்
பராக்கிரமமென்ன?
நடந்ததும்
நடப்பதும்
நடுநிலையார்க்கு
கண்கூடு
சிலை
வடிக்கும்
கலை
கொண்டு
சிற்பிகளே
வாருங்கள்
அம்மி
கொத்துவோம்

Friday, August 13, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - X

சலதளமடியே
மலஜலம் கழித்தோரே
குதமும்
கும்பியும்
குறியும்
நலமா?

சாகரத்தில்
சாக்கடையாய்
சங்கமதித்தோரே
டாலரும்
வெள்ளியுமாய்
அள்ளி
நீவிர்
நெருப்பள்ளி
யார் மீது
பூசுகின்றீர்?

சாரதியாய்
சாகசம்
காட்டினும்
ஜகடா
செய்வேன்
உண்மை தந்த
உன்மத்தத்தாலே

விழுந்ததாய்
வியாக்கியானம்
விளம்பு
மகளிர் கட்சி
யோனி திறந்து
மாட்சிமை காண்

தாதராய் வாழ
தகுதி பெற்றபின்
சனநாயகத்தை
சந்திசிரிக்க வை

திருப்தியா?
திலகம் வைப்பேன்
திரும்பு
மல ஆரத்தியென
மல்லுக் கட்டாதே
களிப்புற்றதும் களைப்புற்றதும் - IX

விட்ட குறையோ
தொட்ட குறையோ
ஆடிக் களிப்போமோ
தேடிக் களைப்போமோ

கிழித்தபுழையின்
கணக்கு காமிக்கின்றார்
நிருமலமா
காட்டினேன்
நிருவாணங்களே

வருந்தும்
வாக்கியம்
புரியாது
புழைகிழித்த
கேள்வியில்
புளங்கிதமடை

குவிமையம்
குறித்துப் பேசாதே
குறுக்காய்
கும்மியடி
குதக்கொழுப்புக்கு
குறைவாவுமக்கு?

சமரச
சமர்ப்பணம் செய்
சங்கறு
சமாதி கட்டு
பிடிக்காவிடில்
இறையாண்மை பேசு
சுற்றியிருக்கும்
சும்பப் புழைகள்
உசுப்பேற்றும்

உடலுக்கு
ஒன்பது
வாசல்
வியர்வைச்சுரப்பி
விட்டு
மற்றதனைத்தும்
அழுத்திப் புணர்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VIII

விவாதம்
பழகென்றால்
விதண்டாவாதம்
செய்கிறார்
வெகுசனமாய்
வெஞ்சனம்
செய்ததை
பறையடித்துப்
பாடுகிறார்

அப்பியாசம்
புரியா
அறிவிலி
நாதர்களுக்கு
பதவுரை
சொல்லும்
பாக்கியம்
வேண்டிலேன்

நித்திலம்
சுட்டாலும்
நிமலம்
போகுமோ?
நிராகரணம்
செய்யாதே
நிர்மூலரே
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VII

குணஷ்டை
குதர்க்கம்
குதூகலமில்லை
குரோதமா எங்களிடம்???
குண விரோதரே???

தக்கவிடை
நிறுவ வந்தேன்
தகனமாக்கி
விட்டீரே???

சமாதி
சமாப்தியல்ல
சயமாய்
என்சற்குணம்

துவாஜாரோகணம்
செய்கிறேன்
கொழுப்பிருந்தால்
வா

நிர்வாண
நிர்மாணம்
காட்டுவேன்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VI

தேடிக்
களைத்தேன்
தேமருதமருந்திக்
களித்தேன்

வியாச
விரக்திக்கும்
விகற்ப
வேட்டிற்கும்
வாக்கியார்த்தம்
வரவில்லை

எழுத்துப்
போக்கில்
இலக்கியம்தேடும்
இலௌகீகனார்

உன்மத்த
உச்சாட்டியம்
ஓட்டுவேன்
உசிதம்
காண்பேன்
போலி திருட்டாந்தம்
போக்குவேன்

கேதம் கொடுத்ததாய்
கேலிக்காதே
குஞ்சரம் நான்
குதம் பெயர்திடுவேன்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - V

காயவின்பம் தேடினால்
பெத்தாபுரம் போகலாம்
கவாத்து பெற்றவன்
களிக்க வந்தானோ?

யத்தனி
யதேஷ்டக்
கஷ்டமா?
மந்தத்திற்கும்
மருந்துண்டு
ஞானமந்தத்திற்கு?

மகத்துவம் பேசும்
மகராசிகளே
வெகுசன வேடத்திலே
தாமரைத் தனயனை
வெஞ்சனம் செய்ததார்?

தீக்குச்சியால்
தீபமேற்றலாம்
கொள்ளிக்குச்சியாக்கி
சிரமும் சொரியலாம்
சிரங்கு கிளறும்
குரங்குகளே

மார்ச்சரியம் காட்டும்
மகான்களே
மாந்மியம் பேசும்
மகராசிகளே
மத்தம் களைவீர்

ஜனனமோ
மரணமோ
வைராக்கியம்
சேருமிடம்
தாண்டும்
வரையில்தான்

Thursday, August 12, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - IV

தவறிழைத்தல்
தண்டிக்கக்கடவது
அம்பாரமாய்
ஆலீவுடை
துச்சாதனரென
அவதானிக்கும்
அக்கியானிகள்
அநேகம் பேர்

அகிம்சை
சோழமுத்திரை
சினி ஜிகிடி வார்த்தை
வாந்தியெடுத்து
அக்கிரகாரப்
பூணூலை
அரைஞாண்
கொடியாக்கிக்
களிப்பர்

அஞ்சிட்டன் மேலும்
அப்பழுக்குத் தேடி
அதமம் செய்வர்
அஞ்ஞாத வாசத்திலும்
அசௌரியம் கூறி
அஞ்சனம்
பூசுவர்

அநீதியென்னும் குரலை
அந்தியகிரியை செய்வர்
அப்புறமென்ன
அடக்குமுறையை
அறிந்தவர்
அவரன்றோ?