Saturday, August 14, 2004

வெறியுற்றதும் வெறுப்புற்றதும் - I

தமிழிணையக்
காதலர் கெஞ்சுவர்
அண்டை
நாட்டைப் பார்ப்பாயோ?
யாம் பார்க்கும் போது
ரெட்டையிலை ச(கா)ப்தம் காண்பார்

இணையப் பெருசுகள்
வழமை போல்
அறிவோ உணர்வோ
நடுநிலை கூடக்
காட்டாது

ஏகாந்தாமாய் ஒரிருவர்
ஏளனப்படுத்தப் படுவர்
ஜினிமா ஜிகிடி
தொடரும்
பின்அப்
பின்னூட்டங்களுடன்

துறவறத்தில்
போணியாகா விடில்
இல்லறம் திரும்பு
போலிக் காவிகளை களை
புணர்ச்சியாவது செய்யலாம்
புழையின்றிக் கூட...

கபளீகரம் கஷ்டமில்லை
கற்றும் தேர்வாரிலை
கவுளியை நம்புபவர்
க(நி)சத்தை நம்பிலர்

கோடம் போடு
கேதம் தந்ததாய்
கோ(ஷ)லமிடு
இருக்கும் ஒரேதுரும்பையும்
கோட்டை விட்டு
கோட்டைப் பிடிப்பதாய்
கோடம் செய்
கோஷ்டி கானம் கேள்...
ஏதோவொரு வினை

ஜியோ பாலிடிக்ஸ்
ஜிகிடி
கார்கிலில்
வன்புணர்ச்சி வராமலும்
களங்கப்படுத்திக்
களிப்பு

ஆக்கிரமிப்புக்கும்
அமைதிக்கும்
எண்(ண) வேறுபாடு தெரியாமல்
ஆசுவாசஞ் செய்
ஆச்சர்யம் கொள்
ஆசியமுஞ் செய்

புத்தன் பிறந்த மண்தான்
மங்குணியான அரசியல்தான்
பெரிய புத்தனிருந்தாலும்
சிறிய புத்தனின்
சிரிப்பொலி போதும்
சின்னாபின்னா மாக்கிட
சநாயகமென் பலவீனம்

14 ஆண்டுகளானாலும்
14 வயது கன்னியின்
களங்கம் களைவோம்
காலனின் கயிற்றிலே
சனநாயக மின்னும் தளைக்கும்
எப்பொருளுக்கும்
உட்பொருளுணர்

கடார நகரடைய
கடிகை பலவானதெனக்
கட்டியம் கூறாதே
கணக்கு பலவீனமாய்
கழுத்தறுக்கிறது

போரிலே பணம்
பார்த்தல் இயல்பு
அமைதிக்கு அதுவும்
பில்லியன் டாலரில்
செலவீனமென்பது திரிபு

தமிழ்க் கணித வரலாறு
பாடங்கள் படித்து வரவும்
கூடவே பெருமஞ்சள் கோழியின்
தர்க்கசாஸ்திர உற்சாகம்
தொலைக்காட்சியில் பார்க்கவும்

அடுத்தமுறை ராமர்படை
மாறுகைகால் கட்டி வரக்கூடாது
அம்புட்டுதான்
இந்தத்திரி இன்னுமெறியும்
ஆனால் அந்தப்புர(ற)ம்
அந்தோ கருகிவிட்டது...
கைவிட்டேன்...
இந்திய சுதந்திரதின வாழ்த்துக்கள்

உறைபனி ஊடே
தேயிலையோ வடிகொட்டையோ
சில்லிட்ட நீரைத்
தினமருந்திப் பின்
கடமையே கண்ணாய்
நவீன கருவிகளின்
நாகரிக வாடையுமின்றி
வடக்கைக் காக்கின்றார்

முப்பது ஆண்டுகளுக்கு
முன்பிறந்த கப்பல் நீர்மூழ்கியில்
வித விதமான
வேதிப்பொருள் சுவாசித்து
கடல் எல்லை
காப்பவர் தெற்கிலே

இவர்கள் ஆச்சாரம்
அனுஷ்டிக்கவில்லை
மேசைக்கு கீழே
கிம்பளம் நோக்கியதில்லை
காஷ்மீரிலிருந்து
கன்னியாகுமரி வரை
ஒண்ணரை வருடத்திற்கு
ஒருமுறை
குடும்பம் காண்பதில்
குதூகலம் அடைவார்

ரேஷணுண்டு ரம்மும்முண்டு
நாடோடி வாழ்க்கையுண்டு
அமைதியோ யுத்தமோ
உயிரை நாட்டிற்கு
உயிலாய் எழுதியதுமுண்டு

தேர்தலிலே அஞ்சலோட்டில்லை
அதுகுறித்து கவலையுமில்லை
சம்பள கமிஷனின்
லீலைகள் தெரியாது
ராமரோ அல்லாவோ
அயோத்தி அரசியலில் அக்கறையில்லை
தமிழும் இந்தியும் ஒன்றுதான்
சாதி சமயமும் தெரியாது

சுதந்திர நாளில்
இந்திய இறையாண்மைக்கு
இப்படி(டை)யாக
இறந்தவருக்கும்
இருப்பவருக்கும்
ஓய்வு பெற்றவர்க்கும்
பணிக்காக பிறந்தவருக்கும்
வீரவணக்கங்கள் !!!

வந்தேமாதரம் !!!
ஜெய்ஹிந்த் !!!
மேரா பாரத் மகான் !!!
அம்மி கொத்தும் சிற்பிகள்

அயலாராய்
எம்விழிகள்
பாவித்ததில்லை
இன்று
எதிரிகளாய்
பார்க்கப்படுகிறோம்
புள்ளிவிவரப்
புலிகட்கு
இலங்கை
ஆக்கிரமிக்க
வந்தது
வெறும்
60,000
இந்திய
ஆமிக்காரரா?
ஈராக்கை
ஏறெடுத்துப்பாரும்
4,00,000
அமெரிக்க
ஆமிக்காரர்
ஆட்டம்
போடுகிறார்
அங்கே
ஏவிய
கணைகளின்
கணக்கென்ன?
கனமென்ன?
படைகலன்களின்
பராக்கிரமமென்ன?
நடந்ததும்
நடப்பதும்
நடுநிலையார்க்கு
கண்கூடு
சிலை
வடிக்கும்
கலை
கொண்டு
சிற்பிகளே
வாருங்கள்
அம்மி
கொத்துவோம்

Friday, August 13, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - X

சலதளமடியே
மலஜலம் கழித்தோரே
குதமும்
கும்பியும்
குறியும்
நலமா?

சாகரத்தில்
சாக்கடையாய்
சங்கமதித்தோரே
டாலரும்
வெள்ளியுமாய்
அள்ளி
நீவிர்
நெருப்பள்ளி
யார் மீது
பூசுகின்றீர்?

சாரதியாய்
சாகசம்
காட்டினும்
ஜகடா
செய்வேன்
உண்மை தந்த
உன்மத்தத்தாலே

விழுந்ததாய்
வியாக்கியானம்
விளம்பு
மகளிர் கட்சி
யோனி திறந்து
மாட்சிமை காண்

தாதராய் வாழ
தகுதி பெற்றபின்
சனநாயகத்தை
சந்திசிரிக்க வை

திருப்தியா?
திலகம் வைப்பேன்
திரும்பு
மல ஆரத்தியென
மல்லுக் கட்டாதே
களிப்புற்றதும் களைப்புற்றதும் - IX

விட்ட குறையோ
தொட்ட குறையோ
ஆடிக் களிப்போமோ
தேடிக் களைப்போமோ

கிழித்தபுழையின்
கணக்கு காமிக்கின்றார்
நிருமலமா
காட்டினேன்
நிருவாணங்களே

வருந்தும்
வாக்கியம்
புரியாது
புழைகிழித்த
கேள்வியில்
புளங்கிதமடை

குவிமையம்
குறித்துப் பேசாதே
குறுக்காய்
கும்மியடி
குதக்கொழுப்புக்கு
குறைவாவுமக்கு?

சமரச
சமர்ப்பணம் செய்
சங்கறு
சமாதி கட்டு
பிடிக்காவிடில்
இறையாண்மை பேசு
சுற்றியிருக்கும்
சும்பப் புழைகள்
உசுப்பேற்றும்

உடலுக்கு
ஒன்பது
வாசல்
வியர்வைச்சுரப்பி
விட்டு
மற்றதனைத்தும்
அழுத்திப் புணர்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VIII

விவாதம்
பழகென்றால்
விதண்டாவாதம்
செய்கிறார்
வெகுசனமாய்
வெஞ்சனம்
செய்ததை
பறையடித்துப்
பாடுகிறார்

அப்பியாசம்
புரியா
அறிவிலி
நாதர்களுக்கு
பதவுரை
சொல்லும்
பாக்கியம்
வேண்டிலேன்

நித்திலம்
சுட்டாலும்
நிமலம்
போகுமோ?
நிராகரணம்
செய்யாதே
நிர்மூலரே
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VII

குணஷ்டை
குதர்க்கம்
குதூகலமில்லை
குரோதமா எங்களிடம்???
குண விரோதரே???

தக்கவிடை
நிறுவ வந்தேன்
தகனமாக்கி
விட்டீரே???

சமாதி
சமாப்தியல்ல
சயமாய்
என்சற்குணம்

துவாஜாரோகணம்
செய்கிறேன்
கொழுப்பிருந்தால்
வா

நிர்வாண
நிர்மாணம்
காட்டுவேன்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VI

தேடிக்
களைத்தேன்
தேமருதமருந்திக்
களித்தேன்

வியாச
விரக்திக்கும்
விகற்ப
வேட்டிற்கும்
வாக்கியார்த்தம்
வரவில்லை

எழுத்துப்
போக்கில்
இலக்கியம்தேடும்
இலௌகீகனார்

உன்மத்த
உச்சாட்டியம்
ஓட்டுவேன்
உசிதம்
காண்பேன்
போலி திருட்டாந்தம்
போக்குவேன்

கேதம் கொடுத்ததாய்
கேலிக்காதே
குஞ்சரம் நான்
குதம் பெயர்திடுவேன்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - V

காயவின்பம் தேடினால்
பெத்தாபுரம் போகலாம்
கவாத்து பெற்றவன்
களிக்க வந்தானோ?

யத்தனி
யதேஷ்டக்
கஷ்டமா?
மந்தத்திற்கும்
மருந்துண்டு
ஞானமந்தத்திற்கு?

மகத்துவம் பேசும்
மகராசிகளே
வெகுசன வேடத்திலே
தாமரைத் தனயனை
வெஞ்சனம் செய்ததார்?

தீக்குச்சியால்
தீபமேற்றலாம்
கொள்ளிக்குச்சியாக்கி
சிரமும் சொரியலாம்
சிரங்கு கிளறும்
குரங்குகளே

மார்ச்சரியம் காட்டும்
மகான்களே
மாந்மியம் பேசும்
மகராசிகளே
மத்தம் களைவீர்

ஜனனமோ
மரணமோ
வைராக்கியம்
சேருமிடம்
தாண்டும்
வரையில்தான்

Thursday, August 12, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - IV

தவறிழைத்தல்
தண்டிக்கக்கடவது
அம்பாரமாய்
ஆலீவுடை
துச்சாதனரென
அவதானிக்கும்
அக்கியானிகள்
அநேகம் பேர்

அகிம்சை
சோழமுத்திரை
சினி ஜிகிடி வார்த்தை
வாந்தியெடுத்து
அக்கிரகாரப்
பூணூலை
அரைஞாண்
கொடியாக்கிக்
களிப்பர்

அஞ்சிட்டன் மேலும்
அப்பழுக்குத் தேடி
அதமம் செய்வர்
அஞ்ஞாத வாசத்திலும்
அசௌரியம் கூறி
அஞ்சனம்
பூசுவர்

அநீதியென்னும் குரலை
அந்தியகிரியை செய்வர்
அப்புறமென்ன
அடக்குமுறையை
அறிந்தவர்
அவரன்றோ?
தமிழோவியப் பதிவுகள்

கிடைத்த சிறிது நேரத்திலே ஒரு விளையாட்டுக் கட்டுரை எழுதிப்பார்த்தேன். தமிழோவியத்தில். நேரமிருப்பின் எட்டிப் பாருங்களேன்.
அப்பியாசமும் வெளிவந்திருக்கிறது.
களிப்புற்றதும் களைப்புற்றதும் - III

இலக்கிய உபாதி
உச்சத்திலே
சொல்லாடல்
ஜோடனைகள்

ஏகோபித்த
ஏடணையாய்
பெண்டாளராம்
சண்டாளராம்

கூற்றுவனோடு
கூத்துகட்டவில்லை?
உயுக்கத்தில்
உதிரம் கொட்டவில்லை?

உவதியுடன்
உல்லாசமாம்...
உத்தரீயம் கலைக்கும்
உன்மத்தர்களாம்

ஊருக்குத்தான்
உபாசநம்
இவரது
இறையாண்மையும்
இட்லிப்பொடிதான்

களிப்புற்றதும் களைப்புற்றதும் - II

சேத்திரமென்றால்
சேவிக்கலாம்
குருச்சேத்திரத்தில்
சேதித்தல் திரிபல்ல

சுயம்பாகம் செய்தது
சம்போகத்திற்கா?
மான தத்தம்
செய்தோமே?

சமரசமாய் வந்து
சந்தி சிரித்தோமே?
சல்லாபம் பேசும்
சர்வகலாசாலைகளே
எரிவது எந்தன்
கும்பியோடு குதமும்

சரணாகதியடைந்து
சங்கறுத்தோரே இன்று
சவுந்தரியம்
சமைக்கின்றீரோ?

கிரம கிரந்தமிது
காயசித்தியாய்
காலம் கடத்தும்
காச காதகரே
களிப்புற்றதும் களைப்புற்றதும் - I

மகிதலம் கொண்டோர்
மகிமையறியவர்
மத்தியஸ்தமாய் கூறுவேன்
மதுரமாய் தோன்றாதுனக்கு

துவாரபாலகரை
தூஷித்தல் களிப்பு
லோகமே லோகாதயக்குழியா?
களைப்பு தாத்பரியம்

கூல ருசி
குருவியறியும்
தாசி ருசிக்கு
தபசு செய்திலேன்

சூரிய சூட்டுக்கு
சூரணமா?
சூரன் நான்
சூன்யனே...

மாந்மியமறியா
தற்குறிகளே
உங்குறி உனக்கெட்டாது
மாற்றானுக்கு மண்டியிடு

அப்பியாசம்

ஏகதேசக் கும்பலின்
விரை வீக்க விஷயத்தை
தேசமேலேற்றும் த்வனி

உபாதிக்கு ஔடதமுண்டு
பிச்சி உச்சிக்கு சூரணமேது?

சோபம் சேர்க்கத்தான்
சென்றான் சோதரன்
தக்கணியாய் பெற்றான்
தண்டமில்லை தகநம்

துராகிருதம் செய்து
துட்டனாய் துரோகமும் செய்து
துவி பாஷிதராய்
துவைதம் பேசுகிறார்

தௌகித்திரனின் பரிணயம்
பாஷாணத்தை பாணிக்கிரகணம்
செய்தவர் அறிவாரா?

பரிசனமே
பராமரிசம் செய்
பரதேசம் பார்த்துத் தெளி
பலிதமிது கடைசி

பரிசுத்த நாமம் வேண்டிலன்
பாண்டித்தியம் பயன்செய்ய
பரஞானத்தை
பரிகரித்தல் செய்கிலேன்

மோக மித்திரம்
மொத்த மந்திரமில்லை
தந்திரமாய்
யத்தனம் செய்யாதே

முகஸ்துதி முத்தியல்ல
மூட மதியாரே
மௌட்டியமே வேதனை
மௌலி களையுங்கள்

வநாந்தர வானரங்கள்
வர்த்தமானங்கள் தரும்
வந்தித்தல் செய்ய இறைஞ்சும்
நிந்தித்தால் விகடம் செய்யும்

வாதப்பிரதிவாதம் செய்
ஓதம் பேசும்
வாக்கியார்த்தம் செய்
வக்கிரலீலை செய்யும்

விடசெந்தை விரும்பியோரே
விடசுரமிதோ விசுவரூபமாய்
வேணுகானம் வேண்டாம்
அவலத்தில் அமலனும் உண்டு
அந்தகாரம் அகற்று...

புரியாவிடில்
பூஸ்திதி பற்றை
புன(ண)ர் விவாகம்
செய்...

Tuesday, August 10, 2004

பெண்ணுக்கு மரியாதை

அனைத்து நாட்டுப் படைகளிலும் பயிற்சியின் போது பெண்களுக்கு தரப்படவேண்டிய மரியாதை பிரதானமாக இருக்கும். எனது பயிற்சி அனுபவம் இதோ. கப்பலின் நுழைவாயிலில் (Gangway) அடியெடுத்து வைக்கும்போது ஆபீஸர்களுக்கு சல்யூட் வரவேற்பு தரப்படும். அதே மரியாதை கப்பலுக்கு வருகை தரும் பெண்களுக்கும் உண்டு. வயது வித்தியாசம் பாராமல் அடுத்தவரின் துணைவியாரை "மேடம்" என்றே விளிக்க வேண்டும். எவ்விடத்திலும் பெண்கள் வருகை தந்தால் கமாண்டிங் ஆபீஸரிலிருந்து, கடை நிலை ஊழியன் வரை எழுந்து நின்று மரியாதை தர வேண்டும். அவர்கள் அமர்ந்த பிறகே, அவர்கள் அமர வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகள் முடிந்தால், உண்ணும் போது கூட முதலில் குழந்தைகள், பெண்கள் பிறகே ஆண்கள் சாப்பிடுவார்கள். அனைத்திற்கும் மேலாக கப்பலையே "She" என்றுதான் விளிப்பார்கள். இது எவ்வளவு பேருக்குத் தெரியுமென நானறியேன். இது வெறும் இந்திய மகளிருக்குத்தானோ என்ற வெட்டிக் கேள்விகட்கு இங்கே விடையில்லை.

மற்றபடி "சேலை உருவுவதற்கு" பிரத்யேக பயிற்சி தரப்படுவதில்லை. ஒருவேளை அது களப் பயிற்சி (on the job training) எனக் கருதி விட்டு விட்டார்களோ என்னமோ?

இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களை விசாரிக்க வேண்டுமென்னும் கேள்வி மிக நியாயமானது. அப்படியாவது எங்கள் அரசாங்கத்திற்கு IPKF பற்றி ஞாபகப்படுத்தலாம். வியட்நாம் போரை எதிர்த்த அமெரிக்க மக்கள் கூட அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் வருடா வருடம் அப்போரில் உயிர் நீத்த இராணுவ மக்களுக்கு "Memorial" சென்று அஞ்சலி செய்கிறார்கள். அமைதிப்படை வீரர்களை இந்தியாவில் மக்கள் மட்டுமல்ல, அரசாங்கம் கூட புறக்கணித்து விட்டதென்பதே உண்மை.

இப்போது அட்டூழிய விசாரணக்கு வருவோம். வலைபதிவார்கள் குரலாய் அனைவரும் இந்திய அரசாங்கத்துக்கு மனுப் போடுவோம். என் பெயரும் அதில் கட்டாயமாய் இருக்கும்.

இல்லாவிடில் பூந்தமல்லியில் இன்னொரு சிறப்பு நீதிமன்றம் வைத்து விசாரணை செய்வோம். ஏனென்றால் தீர்ப்புகளைத்தான் நாம் வழக்கம் போல் சுகமாக மறந்து விடுவோமே?

சுந்தரவடிவேல் "சேலை உருவிகள்" என்றார். நான் அனைவரும் அப்படியல்ல என்றேன். வன்முறையில் உயிர் நீத்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் இறந்துபட்ட இராணுவத்தினருக்கும் (சேலை உருவாத) அநுதாபம் செய்யுங்கள் என்றேன். எனக்கு கிடைத்த பட்டங்கள் "நகைச்சுவையாளன்", "ஓப்பன் மைண்ட் இல்லாதவன்", "கண்மூடிய தேசப்பற்று உள்ளவன்", இன்னும் பல. ஏசுவோர் தாராளமாக ஏசிக்கொள்ளுங்கள்.

அமைதிப்படையை அம்மணப்படுத்தும் படை என்று சித்தரித்துக் காட்டும் விஷமத்தனமான பதிவு மதிக்கு "யதார்த்தமாய்" தோன்றுகிறது. ஓப்பன் மைண்ட் என்பது எதிர் வினையில் உள்ள தார்மீக நியாயங்களையும் ஏற்றுக் கொள்வதுதானே? இராணுவம் பற்றிய பதிவில் காந்தீயம், வெள்ளையுடை தேவதைகள், என்ற பின்னூட்டங்களால் நீர்த்துப் போகின்றது. திரும்பவும் சொல்கிறேன். வன்புணர்ச்சிக்குட்பட்ட சகோதரிகளுக்காக நான் விடுவது முதலைக் கண்ணீர் இல்லை. இவ்வழிச் செயல்களில் ஈடுபட்டவரை வன்மையாக கண்டிப்பது வெளிவேடமில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அமைதிப்படையை "ஆக்கிரமிப்புப் படை", "சேலை/குடல் உருவிகள்", (இன்னும் பல ஏசல்களுக்கு ஆயிரமாயிரம் வலைத்தளங்கள் உண்டு) என்று சொன்னால் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை ஏன் ரமணீதரன், மதி, வதனா, மெய்யப்பன், தங்கமணி போன்றவர்கள் எதிர்க்க வேண்டும்?

புலிகளை ஆதரிக்காததாய் சொல்பவர்கள் அவர்களது "வீர தீர பராக்கிரமங்களை" சொல்லும் இணையத்தளங்களுக்கு மட்டும் சுட்டிகள் கொடுப்பார்களாம். அடடே...ஒரு "நாங்கள் புலி எதிர்ப்பாளர்கள்" என்று "Disclaimer" போட்டு விடலாமே?

ஈராக் யுத்தத்தின் போது புஷ் சொன்னார்"Either you are with us. or else supporting the terrorist". அதேபோல் "நீங்கள் ஒன்று என் பக்கம். இல்லாவிட்டால் சேலை உருவிகள் பக்கம்" என்பது என்ன நியாயம்? இதைச் சொன்னால் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போடுகின்றேனாம்?

அப்புறம் எம்ஜியார் துப்பாக்கி கொடுத்தார். அதனால் நாங்கள் (அட புலிகள்'ங்க) சும்மா சுட்டுப் பார்த்தோம். குறுக்கே அமைதிப்படை வந்தது. ஒரு 1,200 பேர் செத்துப் போயிட்டாங்க அப்படின்னு கதை விடாதீங்க. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தாலும் பாடம் படிக்காத அப்பாவி இந்தியத் தமிழர்கள் நாங்கள்.

குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக அமர்ந்து நியாயம் கேட்டு நாம் தொடர்ந்து போராடுவோம். என்னாங்கய்யா ஆச்சு இணையத்துக்கு? ஜால்ராவுக்கு பழக்கமான செவிகளுக்கு எதிர்வினைகள் ஏமாற்றம் அளிக்கத்தான் செய்யும்.

என்ன கப்பற் படையிலிருந்த ஏழு வருடத்தில் ஒருமுறை கூட சேலை உருவ எனக்கு வாய்ப்பு கிட்டாத கோபம். அதைத்தான் வலைப்பதிவில் தீர்த்துக்கொல்கிறேன். அப்படின்னும் சொல்லுங்களேன். கூடிய சீக்கிரம் இணைய துச்சாதனன் என்ற பட்டமும் கொடுங்களேன்.

காத்திருக்கின்றேன்.
பெருமதிப்பிற்குரிய சுந்தர்வடிவேல்,

கும்பகோண தீ விபத்திற்கு இயலாமையில் எட்ட நின்று நான் மாரடித்தேன். நீங்கள் பல படி மேலே சென்று கலாம் வரை வலைபதிவாளர்களின் குரலை எடுத்துச் சென்றீர்கள். இறந்துபோன தளிர்களுக்காகவும், இனி இவ்வாறு நடக்கக் கூடாதெனும் உங்களின் மனித நேயம் வாழ்க !!!

அதே மனித நேயம் தங்களது "நம்மற்குரியர் அவ்வீரர்" பதிவிலும் காணப்பட்டது. என்ன ஒரே ஒரு வித்தியாசம். வல்வெட்டித்துறையில் வன்முறையில் இறந்து ஈழத்தமிழருக்காக மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. நடந்தது தவறு என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் உங்களின் ஒருவழி அணுகுமுறைதான் பலமாய் இடிக்கிறது.

NCC'ல் ஒரு ஹவில்தாரின் "கதை" கேட்டு அமைதிப்படையின் நோக்கத்தையே எடை போட்டு விட்டீர்களே? பேஷ்..பேஷ்...கதை கேட்டதற்கு வெட்கப்படுவதாய் பாவமன்னிப்பு வேறு கேட்டு விட்டீர்கள். நாணயத்தின் இருபுறத்தையும் சீர் தூக்கி எழுதவேண்டியது எழுத்தாளனின் சமூகக் கடமை. இணையத்தில் ஈழம் பற்றி பேசவே பல "தமிழ்நாட்டுத் தமிழர்கள்" அஞ்சுகின்றார்கள். தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்குகின்றார்கள். இதே பாலஸ்தீனம், அமெரிக்கா, ஈராக் என்றால் பத்தி பத்தியாக கதைக்கின்றார்கள். ஏனிந்த இழிநிலை?

மிகுந்த இழப்புகளைச் சந்தித்து, புலம் பெயர்ந்து, எழுதும் ஈழத்தமிழர்களின் பதிவுகளைப் படித்து வருகின்றேன். அவர்களின் கண்ணீரிலிருக்கும் சூடு, பிற தமிழர்களின் பதிவில் நீலியாக நீர்த்துத்தான் தெரிகிறது.

பல ஈழ இணையங்கள் புலிகள் வீரமாய் போரிட்டு இந்திய சிப்பாய்களைக் கொன்றதாக தெரிவிக்கின்றது. ஆறு வயது சிறுவனிலிருந்து, பெண்கள் வரை யாரையும் விடாத தற்கொலைப் புலிகள் மத்தியில் அமைதி காக்க வந்து, அவமானச் சின்னங்களுடன் திரும்பிய இந்திய இராணுவத்தின் கதையை "எல்லை தாண்டி எரிந்த சிறகுகளில்" எழுதினேன்.

யாராவது நூல் பிடித்து "அறிப்பூர்வமாகவோ", "உணர்வுப்பூர்வமாகவோ" எழுதுவார்களா என ஏங்கிய காலமுண்டு. மூக்கு சுந்தரின் பதிவு மிகவும் துணிகரமான ஒன்று. அவரெழுப்பிய பல நியாயமான கேள்விகட்கு பதில் காணும் தருணம் இது.

ஆமாம். ஆளாளுக்கு இந்திய இராணுவத்தை இழுக்காக்கிறார்களே? ஏன்? ஆக்கிரமிப்பு இராணுவமாம்...அமெரிக்கா குவைத்தில் கொண்ட காதலா இது? தேயிலைக்கும், காபிக்கொட்டைக்குமா இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது? யாழ்ப்பாணத்தை அடைய ஒரு மாதம் ஆனதாம்...ஐயா...ஆக்கிரமிப்பு செய்ய ஆசைப்பட்டிருந்தால் உண்மையிலேயே எவ்வளவு நாளாயிருக்கும்? யோசித்துப் பாருங்கள்.

வானவெளியிலிருந்து உணவுப்பொட்டலங்கள் போட்டவன்தானே IPKF அனுப்பிய ராஜீவ் காந்தி? ஜெயவர்த்தனேவின் அரசியல் சூதாட்டத்தில் விழுந்து, IPKF'க்காக தினமும் 2 கோடிக்கு குடிக்க/குண்டி கழுவ என்று அனைத்து ரேஷனும் பெங்களூரிலிருந்து இலங்கை எடுத்துப் போனோமே? அங்கே 1200 சிப்பாய்கள் இழந்தோமே? சுந்தரவடிவேல் இறந்தவர்கள் பெயர் தெரியுமா உமக்கு? நானும் இணையத்தில் தேடித் தேடி அலுத்து விட்டேன். 93 தளிர்களுக்கு ஒப்பாரி வைத்த உங்கள் உள்ளம் இப்போது கல்லாகி விட்டதா?

வல்வெட்டித்துறை வன்முறைக்கு ராஜீவின் சாவுக்கடியில் அசிங்கம் கண்டுபிடித்த அவலம் உங்களைப் போல் அதிமேதாவிகளாலேயே முடியும். இப்படி வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ராஜீவ் என்கின்ற ஆரியன், ஈழத் திராவிட தமிழர்களை அழிக்க நினைத்தான் எண்டு நினைப்போம். அது பிடிக்கவில்லையெனில் ராஜீவுக்கு பார்சிய ரத்தத்தை விட பார்ப்பனீய ரத்தம் அதிகமுள்ளதெனப் பேசுவோம். உங்களுக்குத்தான் எதிலுமே ஆதியும் அந்தமும் வேண்டுமே?

பாரத சமுதாயம் வாழ்கவே என்று பின்னூட்டம் வேறு விட்டிருக்கிறீர்கள்? பாரத சமுதாயம் பற்றி பேச உமக்கு என்ன தகுதி? NCC'ல் பணியாற்றியதா? IPKF பணியாற்றிய சமயத்தில் MP'யான வை.கோபால்சாமி கள்ளத்தோணி ஏறி பிரபாகரனை சந்தித்து சாதனை படைத்தார். பின்னர் பிரேமதாசா "இந்திய இராணுவமே வெளியேறு" சொன்னபின் வந்த IPKF கடைசிக் கலத்தை வரவேற்க கூடச் செல்லாத கோமான் அந்நாளைய முதல்வர் டாக்டர் கலைஞர். நான் இவ்விருவரையும் (உங்கள் கட்டுரை படித்தபின்) இன்று ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் டாக்டர் சுந்தரவடிவேல்...உம்மை...வார்த்தைகள் வரவில்லை.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ஒரே ஒரு ஈழ இணையத் தமிழனைக் எனக்கு காட்டுங்கள். ஆச்சரியமாக உங்களால் முடியாது.இன்னொரு நிதர்சனம். புலிகள் ஒத்துக்கொள்ளாத எந்த ஒரு தீர்வும் இலங்கைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காது.

மேலும் பதிவேன்.

Friday, August 06, 2004

மனித வாழ்க்கை

நடுத்தர வர்க்கத்தின்
வக்கிரத்தில்
நெருப்புக் கோழியாய்
முகம் புதைத்து

பிறர் நனவுக்காக
என் கனவுகளை
தாய்ப் பறவையாய்
உணவாக்கி

அவசர உலகில்
அவலங்களை அள்ளி விழுங்கி
கால்நடையாப் பின்னர்
அசை போட்டு

மன ரணங்கள்
முற்றிலும் ஆறு
முன்குரங்காய்
கீறிவிட்டு

எப்போதாவது
என்னையுமறியாமல்
மான் போல்
எம்பிக் குதித்து

காதல் விளக்கில்
விடியலைத்தேடி
விட்டிலாய் பூச்சியாய்
விழுந்து

சமுதாயச் சாக்கடையில்
சகலத்திலும்
புழுப் போல்
சமரசமாய் நெளிந்து

நிமிர்ந்து பார்க்கின்றேன்
நான்
நானாகவே
வாழவில்லை

சீய்...மனித வாழ்க்கையே...

Monday, August 02, 2004

மதுரை பாபாராஜ்

இது ஒரு சாமியார் கட்டுரை. வித்தியாசமாய் இவர் பூசை, புனஸ்காரமென்று ஊரை அடித்து உலையில் போடுபவரில்லை. தனது தனித்த தமிழ்த் திறமையால், பலரை அடித்துக் கட்டிப்போட்ட புதுக்கவிதை/மரபுக்கவிதை இயற்றும் சாமியார் இவர்.

சமீபத்தில் நண்பன் ராஜ், மதுரை பாபாராஜ் கவிதைகளில் சிலவற்றை அனுப்பியிருந்தான். பாபா தமிழ் இலக்கிய வட்டாரங்களில் மிகவும் பிரபலமான, ஆனால் ஆர்ப்பாட்டமே அறியாத மாமனிதர் இவர். ராஜ்க்கு தாய்மாமன் முறையானதால் எனக்கு இலகுவாக "அங்க்கிள்" ஆகிப் போனவர். அதென்னவோ அச்சிறு வயதில் எதோ ஒரு கோபத்தில் காவல்துறையினரை மட்டுமே "மாமா" என்று விளித்து வந்த காரணமாயிருக்கலாம்.

எட்டாவது படிக்கும் போதென நினைக்கிறேன். மதுரை தமிழ்ச் சங்கத்தில் கவிதை படிக்க வேண்டுமென, தலைப்பை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டான் ராஜ். நானும், ராஜும் கவிதை படிக்கவேண்டுமென்பது பாபா அவர்களின் ஆசை (ஆணை???). திரு பாபா அவர்கள் நான் கவிதை என்று கூறிக் கொண்டதை அப்போது படித்திருப்பாரென்னும் பலமான சந்தேகம் அன்று ஏற்பட்டது.

இருப்பினும் ஏதோ எழுதிச் சென்று சிறப்பாகப் படித்தது (தனி நடிப்பு - Mono Acting எனக்கு கை வந்த கலை) ஞாபகம் இருக்கிறது. கைம்பெண் மறுமணத்தை சிறுவனாய் மேசையைத் தட்டி, "மூடி உடைந்தால் நீவிர் ஜாடியை எறிவீரோ?" என்ற வரியை இரண்டு முறை திருப்பிச் சொல்லி கைத்தட்டலைப் பெற்ற போது நான் எங்கேயோ பறப்பதாய்ப் பட்டது. (இரண்டு முறை திருப்பிச் சொல்லி எனக்கு முன் பாடிய ஒரு புகழ் பெற்ற கவிஞர் கைத்தட்டல் பெற்றதை சிறுவனான நான் காப்பியடித்தேன்). தப்பாக எழுதி மொத்து வாங்கக் கூடாதெனெ கவிதையின் ஆரம்பத்திலேயே "இம்முயற்சி நடக்கத் துடிக்கும் ஒரு தவழும் குழந்தையின் கனவு. தவறி விழுந்தால் எள்ளி நகையாடாதீர். கைக்கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்", என்று சொல்லி விட்டேன். கைத்தட்டல் பாராட்டா, தூக்கி விடச் செய்த முயற்சியா நானறியேன். இக்கவிதை போல் பின்னர் எழுதிய பல கவிதைகளையும் நான் பத்திரப் படுத்தவில்லை. நேயர்கள் தப்பித்துக் கொண்டீர்கள். இன்றும் நான் எழுதுகிறேனென்றால் பாபா போன்றவர்கள் இன்றியமையா கிரியா ஊக்கிகளாக அமைந்த காரணத்தாலே என்றால் அது மிகையில்லை.

பாபாவின் கவிதைகளை சிறு வயதில் படித்து அர்த்தம் காண முயற்சி செய்திருக்கிறேன். இன்றும் முயற்சி செய்கிறேன். ஒரே ஒரு ஆதங்கம் இன்னும் மனதில் எழும்பி அடங்குகிறது. இம்மாமனிதரின் நிழலில் தமிழ் பயில ஒரு சிறிய சந்தர்ப்பம் கூட அமையவில்லையேயென்று...

மதுரையிலும், சென்னையிலும் இவரைச் சந்தித்தபோது மணித்துளிகளை வீணடித்து விட்டேனோவெனத் தோன்றுகிறது. இன்றும் அவரை நினைத்தால் ஒரு மரியாதை கலந்த பயம்தான் வருகிறது.

பாபாராஜ் அவர்கள் வலைப்பூவிற்கு வரப்போகிறாராம். நண்பன் ராஜ் சொன்னான். ஆஹா...இழந்த மணித்துளிகளை மீண்டும் பெறும் இன்பம் எனக்கு.

இதோ அவரின் சில கவிதைகள் (ராஜ் அனுப்பியது; அனுமதி கேட்கப் பயமானதால் அப்படியே வெளியிடுகிறேன்)

கைக்கிளை
============

திரைகடலோடி
திரவியம் தேடி
திசைக்கு ஒன்றாய்
பிள்ளைகள் விமானம் நோக்கி !கையசைத்து
வழியனுப்பிய
பெற்றோர்கள்
ஏக்கமுடன் காப்பகம் நோக்கி !

பெருந்தன்மை கோழைத்தனமல்ல
================================

பெருந்தன்மை இங்கே பெருங்கடலைப் போல
கரைகாணல் ஏது? கனிவும் - கருணையும்
கூட்டான வீரந்தான் ! கோழைத்தனமல்ல !
போற்றும் உலகம் புகழ்ந்து.

கொள்ளை அழகு
=================

பச்சை வயல்களில் பால்நிற நாரைகள்
இச்சை யுடனே இருந்தன - சட்டென
வெள்ளைச் சிறகை விரித்தன வானிலே!
கொள்ளை அழகெனக் கூறு.

இதுதான் வாழ்க்கையா?
========================

நாளை எனக்கென்ன? நாளை உனக்கென்ன?
கேள்வி துளைத்தெடுத்துக் கேட்கிறது - வாழ்க்கையிங்கு
நூலறுந்த பட்டமா? நூலேணி ஆட்டமா?
கோலத்தின் காட்சியென்ன கூறு.

மாலையாக்கும் அற்புதம்
=========================

சிங்காரப் பத்துவிரல் சேர்த்து நடம்புரிய
வண்ணவண்ணப் பூக்களை வாகாக - கண்கவரும்
மாலையாக்கி நம்மை மலைக்கவைக்கும் அற்புதத்தை
வாழ்க்கையாக்கி வாழ்கின்றார் பார்.

வாருங்கள் பாபா !!! உங்கள் எழுத்தை இணையத்தில் படிக்க ஆர்வமாயுள்ளேன். பின்னூட்டதிலாவது தைரியமாய் வினாவெழுப்பி உங்களிடமிருந்து தமிழ் கற்றுக்கொள்ள முயல்வேன்.

நன்றியுடன்,
வந்தியத்தேவன்.