பறை இழந்தவன் கைபோலே
வள்ளுவன் எழுதா வாக்கியம்
அரைஞாண் அரணில் கோவணம்
Tuesday, March 08, 2005
Sunday, February 27, 2005
இயந்திர நட்டங்கள்
எங்கேயோ பார்த்து ரசித்தது
நீலம்பாரித்து பாதரசமிழந்த
விழித்திரையில் பிம்பமாய்
எப்போதோ கேட்டு மகிழ்ந்தது
தேய்ந்து சுரங்கெட்ட
செவியில் திகிரியாய்
என்றும் உணர்ந்து சுகித்தது
திகட்டி இராசயனமறந்த
தசையில் தீண்டலாய்
எவரோ ஊட்டி களித்தது
சுவைகெட்டு சாத்வீகமில்லா
நாவரும்பில் காளானாய்
எக்காலமும் நுகர்ந்து முகிழ்த்தது
வியர்வையுறைந்து நாற்றமுணரா
மூக்கில் முக்தியாய்
ஆற்றல் தருவதே இயந்திரம்
இயந்திரங்களா தீர்வு
பயனில்லா யந்திரத்திற்கு
வருவதைதான் முடிவு செய்யவில்லை
கருணை வையுங்கள் தயவுடன்
தருக்குடன் போவதையாவது
நீலம்பாரித்து பாதரசமிழந்த
விழித்திரையில் பிம்பமாய்
எப்போதோ கேட்டு மகிழ்ந்தது
தேய்ந்து சுரங்கெட்ட
செவியில் திகிரியாய்
என்றும் உணர்ந்து சுகித்தது
திகட்டி இராசயனமறந்த
தசையில் தீண்டலாய்
எவரோ ஊட்டி களித்தது
சுவைகெட்டு சாத்வீகமில்லா
நாவரும்பில் காளானாய்
எக்காலமும் நுகர்ந்து முகிழ்த்தது
வியர்வையுறைந்து நாற்றமுணரா
மூக்கில் முக்தியாய்
ஆற்றல் தருவதே இயந்திரம்
இயந்திரங்களா தீர்வு
பயனில்லா யந்திரத்திற்கு
வருவதைதான் முடிவு செய்யவில்லை
கருணை வையுங்கள் தயவுடன்
தருக்குடன் போவதையாவது
Tuesday, February 08, 2005
ஓட்டமும் சில உண்மைகளும்
நீர்த்துவாலையாய் அணுக்கள்
ஓடையைப் போல் துவங்கும்
வாழ்க்கையின் ஓட்டம்
எதிர்கால ஏக்கங்கள்
எதுவும் தெரியாமல்
நீர்க்குடத்தில் நிம்மதியாய்
உண்ண உணவு
உறைய இடம்
உடுப்பதை உதறி
அருவியாய் வேகம்பிடித்து
தலைகீழ் பயணம்
அந்தோ கொடியறுந்தது
மலைகளைப் போல்
வேகம் தாங்கும்
அன்னையின் நேசம்
ஆர்ப்பரித்து அடங்கி
அகண்ட காவிரியாய்
நிதானமாய் சிலநேரம்
முடிவு தெரிந்தாலும்
கரிப்பு இலக்கினை
மறக்கச் செய்த துணையாறு
போகின்ற போக்கில்
முளை விட்டுப் போன
சில கிளையாறுகள்
இறுதியை எய்ய
சாக்கடை நோய்கள்
சங்கமித்து உதவும்
பள்ளத்தை நோக்கியே
பாய்ந்து விட்டோமா
குறுகுறுக்கும் மனம்
நதியாவது பரவாயில்லை
அணையால் அவ்வப்போது
வந்த பாதை திரும்பிப் பார்க்கும்
மனித ஓட்டத்தை மறிப்பதென்ன?
பிரிவென்பதும் அணைதான்
வாழ்வின் துலாக்கோலாய்
ஓடையைப் போல் துவங்கும்
வாழ்க்கையின் ஓட்டம்
எதிர்கால ஏக்கங்கள்
எதுவும் தெரியாமல்
நீர்க்குடத்தில் நிம்மதியாய்
உண்ண உணவு
உறைய இடம்
உடுப்பதை உதறி
அருவியாய் வேகம்பிடித்து
தலைகீழ் பயணம்
அந்தோ கொடியறுந்தது
மலைகளைப் போல்
வேகம் தாங்கும்
அன்னையின் நேசம்
ஆர்ப்பரித்து அடங்கி
அகண்ட காவிரியாய்
நிதானமாய் சிலநேரம்
முடிவு தெரிந்தாலும்
கரிப்பு இலக்கினை
மறக்கச் செய்த துணையாறு
போகின்ற போக்கில்
முளை விட்டுப் போன
சில கிளையாறுகள்
இறுதியை எய்ய
சாக்கடை நோய்கள்
சங்கமித்து உதவும்
பள்ளத்தை நோக்கியே
பாய்ந்து விட்டோமா
குறுகுறுக்கும் மனம்
நதியாவது பரவாயில்லை
அணையால் அவ்வப்போது
வந்த பாதை திரும்பிப் பார்க்கும்
மனித ஓட்டத்தை மறிப்பதென்ன?
பிரிவென்பதும் அணைதான்
வாழ்வின் துலாக்கோலாய்
Thursday, January 27, 2005
காட்சிப் பிழைகள்
தட்ஸ்தமிழ்.காம் தளத்தில் வெளியான சிறுகதை
(சுனாமிக்கு முன்னாள் எழுதியது)
காலை நான்கு மணிக்கு ஏர்போர்ட் சவாரி ஆரம்பித்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டிருந்தது. எங்காவது ஓரமாக ஒதுங்கி டீ குடிக்கலாமென்றாலும் முடியவில்லை. எப்போதோ பிய்த்துப் போட்ட இட்லி சீரணமாகி வயிறு கரபுரவென்று சத்தம் போட ஆரம்பித்தது.
இன்று யார் முகத்தில் முழித்தேன்? ஓய்வின்றி சவாரிகள்தான். பெரம்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு முதிய தம்பதியை இறக்கி விட்டவுடன், இன்றைக்கு இதுவே கடைசி சவாரியென்று எனக்குள் முடிவு செய்து கொண்டேன்.
ஆனாலும் லட்சுமி தேவி என்னை விடுவதாகத் தெரியவில்லை. ஒரு இளம்பெண்ணும், வாலிபனும் கைகாட்டி ஆட்டோவை நிறுத்தச் சொன்னார்கள். அவர்களது சைகை ஏதோ அவசரத்தில் இருப்பது போல் தோன்றியது. நிறுத்துவது போல் வேகம் பிடிக்கும் பல்லவனைப் போல தப்பிக்க மனம் சொன்னாலும், முடியாமல் ஆட்டோவை நிறுத்தினேன்.
"மெரினா பீச் போகணும்", வாலிபன்தான் பேசினான்.
அடச்சே இதுதான் அவசரமா? ஏன் பஸ்ஸ¤ல போகக்கூடாதா?
"மீட்டர் சார்ஜ்தான். பரவாயில்லையா?", வேண்டா வெறுப்பாய்ச் சொன்னேன். சென்னைவாசிகள் பெரும்பாலும் 'பேசிக்கலாம்ப்பா' என்றுதான் சொல்வார்கள்.
அப்படிச் சொன்னால் ஜீட் விடலாமென்று நினைத்தேன்.
"பரவாயில்லை. போகலாம்." வாலிபனின் பதில் ஏமாற்றமாக இருந்தது. இருவரும் ஆட்டோவினுள் ஏறிக் கொண்டார்கள்.
சென்னையில் கொஞ்சம் காசு அதிகமாக உள்ளவர்கள் இப்போதெல்லாம் கால் டாக்ஸியைத்தான் கூப்பிடுகின்றார்கள். என்னைப் போல் சூடு வைக்காமல் நியாயமாய் ஆட்டோ ஓட்டுபவர்களையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றார்கள். மதுரையில் பட்டப் படிப்பு படித்து, சென்னையில் வேலை கிடைக்காமல் அலையும்போது, நந்தாலால் சேட்டின் புத்திமதி மற்றும் கருணையோடு இப்போது ஆட்டோ ஓட்டுகின்றேன். நேர்மையால் நன்மை கிட்டாமல் இல்லை. ஷேர்டு வேனில் இடம் கிடைக்காதோர், பள்ளிக் குழந்தைகளென்று ரெகுலர் சவாரி கிடைப்பதால் கையைக் கடிக்காமல் நாள் ஓடுகின்றது.
உள்ளூர ஓடிய சிந்தனைகளை பின்சீட்டில் நடந்த உரையாடல் கலைத்தது. ஓட்டும்போது பொதுவாக ஒட்டுகேட்கும் வழக்கம் எனக்கில்லை. யாராவது வலிய பேச்சுக் கொடுத்தாலொழிய பதில் பேசாமல் பெரும்பாலும் போக்குவரத்திலேயே என் கவனம் இருக்கும். இருப்பினும் ஆரம்பத்தில் முணுமுணுப்பாய் பேசியவர்கள் நடு நடுவே உரத்தும் பேச ஆரம்பித்தார்கள். என்னையும் மீறி அந்த ஜோடியின் உரையாடலில் ஆர்வம் கூடியது.
ரியர் வியூ கண்ணாடியை லேசாக நகர்த்தி அவர்களை மேலோட்டமாக நோட்டமிட்டேன். அவர்களோ தமது பேச்சிலேயே கவனமாக இருந்தார்கள். வழக்கமாக மெரீனா செல்லும் ஜோடிகள் போலின்றி அவர்கள் இருவரும் நெருங்கி கைகோர்த்து அமர்ந்திருக்கவில்லை. இந்தப் பெண்ணோ தன் கைகளை முன்னே கோர்த்து, தலையைக் கவிழ்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். இளைஞனோ சற்றே அவள் பக்கம் திரும்பி கிசுகிசுப்பாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
"... ஒரு வழியாய் நிச்சயம் முடிஞ்சாச்சு...", பெண் கூறினாள்.
"... இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நானும் நம்பலே பிரியா..."
எப்படித்தான் அவர்கள் பேச்சில் மூழ்கினேனோ தெரியாது. ஓவர்டேக் செய்ய முயன்ற வெள்ளை அம்பாசடரை சைடு கொடுக்காமல் ஏறத்தாழ இடித்திருப்பேன்.
"ஏய்... கஸ்மாலம் ரோட்டைப் பாத்து ஓட்டுமே", அம்பாசடர் டிரைவர் தலையை நீட்டி திட்டியதும் அவமானமாயிருந்தது. ஜோடி கேட்டிருக்குமோவென மீண்டும் கண்ணாடியை நோக்கினேன். இச்சம்பவத்தில் பின்சீட்டுக்காரர்கள் அதிக அக்கறை காட்டியது மாதிரி தெரியவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்.
மாலை வேளையானதால் வெளியே போக்குவரத்து அதிகமாகிவிட்டிருந்தது. இரண்டு சக்கர வாகனங்கள் விட்டால் ஆட்டோ உள்ளேயே வந்து விடுவார்கள் போல் உரசியபடி சென்றார்கள்.
"பத்திரிக்கையெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா?"
"ஆமாம் செல்வா."
"கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட தனியா பேசவே முடியாதோன்னு நினைச்சேன்"
"இனிமே இப்படி சந்திக்க முடியுமென்று எனக்கும் தோணல"
இப்போது அவர்களது பேச்சின் உள்ளர்த்தம் ஓரளவு புரிய ஆரம்பித்தது. 'அடப் பாவிங்களா... என்ன பட்டணம் வாழ்வுடா இது? நிச்சயமான பொண்ண எவனோ ஒருத்தன் பீச்சுக்குத் தள்ளிட்டுப் போறான். இந்தப் பொம்பளையும் கூடப் போகுதே?'
உள்ளுணர்வு நமக்கெதுக்கு வம்புபென்று எச்சரித்தது. கடைசி சவாரி இப்படியா முடியவேண்டும்? எரிச்சல் படர்ந்தது.
ஒருவழியாய் பீச் வந்தாயிற்று. ஒழியுங்கள் சனியன்களா என்று மனதில் சபித்தபடி மீட்டர் காசு வாங்கினேன்.
"இந்தாப்பா...இதை வச்சுக்க", என்று மேலும் ஐந்து ரூபாயை என் கையில் திணித்தான். மனக்குரங்கை அதற்கு மேல் அடக்க முடியவில்லை.
"மீட்டருக்கு மேல வேண்டாம் சார். நிச்சயமான ஒரு பொண்ணை இப்படி தள்ளிக்கிட்டு வந்திருக்கீங்களே... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஏம்மா இது உன்னோட வாழ்க்கைப் பிரச்சினை இல்லே? உனக்கெதுக்குடா இதெல்லாம்...பொத்திக்கிட்டு போன்னு வேணாலும் சொல்லுங்க. சீய் இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்றபடி ஆட்டோவினுள் நுழையும் போது இளைஞனின் குரல் தடுத்தது.
"நீங்க எங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போலிருக்கு. நாங்கதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். அவசர அவசரமா நிச்சயம் நடந்ததால எங்களுக்குள்ள பேசிக்க அதிக நேரமில்லை. அதான் கல்யாணத்துக்கு முன்னாடி பீச்சுல சந்திக்கலாம்னு முடிவு செஞ்சோம். வர பதினைஞ்சு வடபழனியில எங்க கல்யாணம். முடிஞ்சா நீங்க கண்டிப்பா வரணும்."
செருப்பாலடித்த மாதிரியிருந்தது. "மன்னிச்சுக்குங்க சார். அம்மா நீங்களும் தான். தப்பா புரிஞ்சுக்கிட்டேன்", திக்கித் திணறி பேசி, திரும்பிப் பார்க்காமல் ஆட்டோவைக் கிளப்பி அவசரமாய் இடத்தைக் காலி பண்ணினேன்.
பீச்சில் இளஞ்சூட்டு மணலை கிளறியபடி செல்வா பேசினான், "இனிமே உங்க அப்பாவிடம் பேசி புண்ணியமில்லை. வர்ற பதினைஞ்சாம் தேதி காலை பத்து மணிக்கு பிரண்ட்ஸோட வடபழனி வந்துடறேன். நீயும் கரெக்டா வந்துடு. தாலி கட்டிய கையோட ரெஜிஸ்டர் ஆபீஸ் போயிடலாம். ஏற்கெனவே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். இதுதான் நம்ம காதல் பிழைக்க ஒரே வழி. சரியா பிரியா?"
(சுனாமிக்கு முன்னாள் எழுதியது)
காலை நான்கு மணிக்கு ஏர்போர்ட் சவாரி ஆரம்பித்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டிருந்தது. எங்காவது ஓரமாக ஒதுங்கி டீ குடிக்கலாமென்றாலும் முடியவில்லை. எப்போதோ பிய்த்துப் போட்ட இட்லி சீரணமாகி வயிறு கரபுரவென்று சத்தம் போட ஆரம்பித்தது.
இன்று யார் முகத்தில் முழித்தேன்? ஓய்வின்றி சவாரிகள்தான். பெரம்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு முதிய தம்பதியை இறக்கி விட்டவுடன், இன்றைக்கு இதுவே கடைசி சவாரியென்று எனக்குள் முடிவு செய்து கொண்டேன்.
ஆனாலும் லட்சுமி தேவி என்னை விடுவதாகத் தெரியவில்லை. ஒரு இளம்பெண்ணும், வாலிபனும் கைகாட்டி ஆட்டோவை நிறுத்தச் சொன்னார்கள். அவர்களது சைகை ஏதோ அவசரத்தில் இருப்பது போல் தோன்றியது. நிறுத்துவது போல் வேகம் பிடிக்கும் பல்லவனைப் போல தப்பிக்க மனம் சொன்னாலும், முடியாமல் ஆட்டோவை நிறுத்தினேன்.
"மெரினா பீச் போகணும்", வாலிபன்தான் பேசினான்.
அடச்சே இதுதான் அவசரமா? ஏன் பஸ்ஸ¤ல போகக்கூடாதா?
"மீட்டர் சார்ஜ்தான். பரவாயில்லையா?", வேண்டா வெறுப்பாய்ச் சொன்னேன். சென்னைவாசிகள் பெரும்பாலும் 'பேசிக்கலாம்ப்பா' என்றுதான் சொல்வார்கள்.
அப்படிச் சொன்னால் ஜீட் விடலாமென்று நினைத்தேன்.
"பரவாயில்லை. போகலாம்." வாலிபனின் பதில் ஏமாற்றமாக இருந்தது. இருவரும் ஆட்டோவினுள் ஏறிக் கொண்டார்கள்.
சென்னையில் கொஞ்சம் காசு அதிகமாக உள்ளவர்கள் இப்போதெல்லாம் கால் டாக்ஸியைத்தான் கூப்பிடுகின்றார்கள். என்னைப் போல் சூடு வைக்காமல் நியாயமாய் ஆட்டோ ஓட்டுபவர்களையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றார்கள். மதுரையில் பட்டப் படிப்பு படித்து, சென்னையில் வேலை கிடைக்காமல் அலையும்போது, நந்தாலால் சேட்டின் புத்திமதி மற்றும் கருணையோடு இப்போது ஆட்டோ ஓட்டுகின்றேன். நேர்மையால் நன்மை கிட்டாமல் இல்லை. ஷேர்டு வேனில் இடம் கிடைக்காதோர், பள்ளிக் குழந்தைகளென்று ரெகுலர் சவாரி கிடைப்பதால் கையைக் கடிக்காமல் நாள் ஓடுகின்றது.
உள்ளூர ஓடிய சிந்தனைகளை பின்சீட்டில் நடந்த உரையாடல் கலைத்தது. ஓட்டும்போது பொதுவாக ஒட்டுகேட்கும் வழக்கம் எனக்கில்லை. யாராவது வலிய பேச்சுக் கொடுத்தாலொழிய பதில் பேசாமல் பெரும்பாலும் போக்குவரத்திலேயே என் கவனம் இருக்கும். இருப்பினும் ஆரம்பத்தில் முணுமுணுப்பாய் பேசியவர்கள் நடு நடுவே உரத்தும் பேச ஆரம்பித்தார்கள். என்னையும் மீறி அந்த ஜோடியின் உரையாடலில் ஆர்வம் கூடியது.
ரியர் வியூ கண்ணாடியை லேசாக நகர்த்தி அவர்களை மேலோட்டமாக நோட்டமிட்டேன். அவர்களோ தமது பேச்சிலேயே கவனமாக இருந்தார்கள். வழக்கமாக மெரீனா செல்லும் ஜோடிகள் போலின்றி அவர்கள் இருவரும் நெருங்கி கைகோர்த்து அமர்ந்திருக்கவில்லை. இந்தப் பெண்ணோ தன் கைகளை முன்னே கோர்த்து, தலையைக் கவிழ்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். இளைஞனோ சற்றே அவள் பக்கம் திரும்பி கிசுகிசுப்பாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
"... ஒரு வழியாய் நிச்சயம் முடிஞ்சாச்சு...", பெண் கூறினாள்.
"... இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நானும் நம்பலே பிரியா..."
எப்படித்தான் அவர்கள் பேச்சில் மூழ்கினேனோ தெரியாது. ஓவர்டேக் செய்ய முயன்ற வெள்ளை அம்பாசடரை சைடு கொடுக்காமல் ஏறத்தாழ இடித்திருப்பேன்.
"ஏய்... கஸ்மாலம் ரோட்டைப் பாத்து ஓட்டுமே", அம்பாசடர் டிரைவர் தலையை நீட்டி திட்டியதும் அவமானமாயிருந்தது. ஜோடி கேட்டிருக்குமோவென மீண்டும் கண்ணாடியை நோக்கினேன். இச்சம்பவத்தில் பின்சீட்டுக்காரர்கள் அதிக அக்கறை காட்டியது மாதிரி தெரியவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்.
மாலை வேளையானதால் வெளியே போக்குவரத்து அதிகமாகிவிட்டிருந்தது. இரண்டு சக்கர வாகனங்கள் விட்டால் ஆட்டோ உள்ளேயே வந்து விடுவார்கள் போல் உரசியபடி சென்றார்கள்.
"பத்திரிக்கையெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா?"
"ஆமாம் செல்வா."
"கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட தனியா பேசவே முடியாதோன்னு நினைச்சேன்"
"இனிமே இப்படி சந்திக்க முடியுமென்று எனக்கும் தோணல"
இப்போது அவர்களது பேச்சின் உள்ளர்த்தம் ஓரளவு புரிய ஆரம்பித்தது. 'அடப் பாவிங்களா... என்ன பட்டணம் வாழ்வுடா இது? நிச்சயமான பொண்ண எவனோ ஒருத்தன் பீச்சுக்குத் தள்ளிட்டுப் போறான். இந்தப் பொம்பளையும் கூடப் போகுதே?'
உள்ளுணர்வு நமக்கெதுக்கு வம்புபென்று எச்சரித்தது. கடைசி சவாரி இப்படியா முடியவேண்டும்? எரிச்சல் படர்ந்தது.
ஒருவழியாய் பீச் வந்தாயிற்று. ஒழியுங்கள் சனியன்களா என்று மனதில் சபித்தபடி மீட்டர் காசு வாங்கினேன்.
"இந்தாப்பா...இதை வச்சுக்க", என்று மேலும் ஐந்து ரூபாயை என் கையில் திணித்தான். மனக்குரங்கை அதற்கு மேல் அடக்க முடியவில்லை.
"மீட்டருக்கு மேல வேண்டாம் சார். நிச்சயமான ஒரு பொண்ணை இப்படி தள்ளிக்கிட்டு வந்திருக்கீங்களே... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஏம்மா இது உன்னோட வாழ்க்கைப் பிரச்சினை இல்லே? உனக்கெதுக்குடா இதெல்லாம்...பொத்திக்கிட்டு போன்னு வேணாலும் சொல்லுங்க. சீய் இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்றபடி ஆட்டோவினுள் நுழையும் போது இளைஞனின் குரல் தடுத்தது.
"நீங்க எங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போலிருக்கு. நாங்கதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். அவசர அவசரமா நிச்சயம் நடந்ததால எங்களுக்குள்ள பேசிக்க அதிக நேரமில்லை. அதான் கல்யாணத்துக்கு முன்னாடி பீச்சுல சந்திக்கலாம்னு முடிவு செஞ்சோம். வர பதினைஞ்சு வடபழனியில எங்க கல்யாணம். முடிஞ்சா நீங்க கண்டிப்பா வரணும்."
செருப்பாலடித்த மாதிரியிருந்தது. "மன்னிச்சுக்குங்க சார். அம்மா நீங்களும் தான். தப்பா புரிஞ்சுக்கிட்டேன்", திக்கித் திணறி பேசி, திரும்பிப் பார்க்காமல் ஆட்டோவைக் கிளப்பி அவசரமாய் இடத்தைக் காலி பண்ணினேன்.
பீச்சில் இளஞ்சூட்டு மணலை கிளறியபடி செல்வா பேசினான், "இனிமே உங்க அப்பாவிடம் பேசி புண்ணியமில்லை. வர்ற பதினைஞ்சாம் தேதி காலை பத்து மணிக்கு பிரண்ட்ஸோட வடபழனி வந்துடறேன். நீயும் கரெக்டா வந்துடு. தாலி கட்டிய கையோட ரெஜிஸ்டர் ஆபீஸ் போயிடலாம். ஏற்கெனவே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். இதுதான் நம்ம காதல் பிழைக்க ஒரே வழி. சரியா பிரியா?"
Wednesday, January 26, 2005
நினைக்க மறந்தவை
வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது
பாலைவனத்தில் மழை அறியாதது
அமெரிக்க பாலைவனத்தில் மழை
புஷ் வெற்றியாலென ஆத்திக அமெரிக்கர் களிக்கவில்லை
காகிதக் கப்பல் செய்ய நேரமெனக்கில்லை
என் பிள்ளையும் கவலையுறவில்லை
வேர் மறந்த செடியோ?
கேள்வியும் எழவில்லை
அரையிருட்டில் மனைவியின் குரல்
நாட்குறிப்பு மூளையிலோடியது
புணர்ச்சிக்கான நாளில்லையிது
எரிச்சலுடன் எழும்பினேன்
'பேடியோ' ஆன முன்னாள் திண்ணையில்
இருளின் நிறத்தில் பூனை
குப்பைப் பைகளின் கதகதப்பில்
சுருட்டிய டாலராய்
மழைத்துளிகள் மேனியில் மினுத்தது
பூனையும் என்னைப் போலவே எரிச்சலில்
ஏனெழுப்பினாய் என்று
இயலாமையில் என்னைப்போலவே
ஆனால் மௌனம் தொலைத்த அதன்
ஈனஸ்வர அழுகை
சகுனம் பார்க்கும்
மனைவியின் மனதிலும் ஈரமுண்டானது
ஓ... மழையின் மகிமையோ?
ஒரு காலத்தில் செல்லமாய் வாழ்ந்திருக்க வேண்டும்
கொழுப்பில்லா பாலை திருப்தியாய் நக்கியது
தினமும் அண்டுமோவென்ற கவலையெனக்கு
கிரீன் கார்டும், அடுத்த ஒப்பந்த வேலையும்
மனதை ஆட்கொள்ள மறந்தேபோனேன்
விதவையாய் காப்பகத்தில் இட்ட அம்மாவை
பாலைவனத்தில் மழை அறியாதது
அமெரிக்க பாலைவனத்தில் மழை
புஷ் வெற்றியாலென ஆத்திக அமெரிக்கர் களிக்கவில்லை
காகிதக் கப்பல் செய்ய நேரமெனக்கில்லை
என் பிள்ளையும் கவலையுறவில்லை
வேர் மறந்த செடியோ?
கேள்வியும் எழவில்லை
அரையிருட்டில் மனைவியின் குரல்
நாட்குறிப்பு மூளையிலோடியது
புணர்ச்சிக்கான நாளில்லையிது
எரிச்சலுடன் எழும்பினேன்
'பேடியோ' ஆன முன்னாள் திண்ணையில்
இருளின் நிறத்தில் பூனை
குப்பைப் பைகளின் கதகதப்பில்
சுருட்டிய டாலராய்
மழைத்துளிகள் மேனியில் மினுத்தது
பூனையும் என்னைப் போலவே எரிச்சலில்
ஏனெழுப்பினாய் என்று
இயலாமையில் என்னைப்போலவே
ஆனால் மௌனம் தொலைத்த அதன்
ஈனஸ்வர அழுகை
சகுனம் பார்க்கும்
மனைவியின் மனதிலும் ஈரமுண்டானது
ஓ... மழையின் மகிமையோ?
ஒரு காலத்தில் செல்லமாய் வாழ்ந்திருக்க வேண்டும்
கொழுப்பில்லா பாலை திருப்தியாய் நக்கியது
தினமும் அண்டுமோவென்ற கவலையெனக்கு
கிரீன் கார்டும், அடுத்த ஒப்பந்த வேலையும்
மனதை ஆட்கொள்ள மறந்தேபோனேன்
விதவையாய் காப்பகத்தில் இட்ட அம்மாவை
Friday, January 21, 2005
வலைப்பூ நண்பர்களுக்கு
ஞாநியைப் பற்றிய எனது இரண்டு பதிவுகளை ரோஸாவஸந்த் என்பவர் பாராட்டி பின்னூட்டங்கள் இட்டிருந்தார். பின்னர் அப்பின்னூட்டங்களை நீக்கும்படி தனியஞ்சலில் கடிதம் எழுதியிருந்தார். பின்னூட்டம் இடுவதும், அதை நீக்கும்படி கோருவதும் அவரது தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட நான் விரும்பவில்லை.
எனது பதிவுகளில் அவரது பின்னூட்டங்கள் தானாக நீக்கப்பட்டிருந்தது. யார் நீக்கினார்கள்? எவ்வாறு நீக்கினார்கள் என்று இன்றும் விளங்கவில்லை. பின்னூட்டம் விட்டவரே அழிக்க முடியுமா? பிளாக்கரின் தொழில்நுட்பம் விளங்கவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக கோபமாக அவர் இன்னொரு பின்னூட்டமும் விட்டிருக்கின்றார். அவரது கோபம் படிப்பவர்க்கு ஏதோ நானே அவரது பின்னூட்டங்களை நீக்கியது போன்ற பிரமையை ஏற்படுத்தலாம். ஆனால் நான் அவரது பின்னூட்டங்களை நீக்கவில்லை.
அவரது வேண்டுகோளின் பெயரில் நானே நீக்க நினைத்திருந்தேன். வலைப்பூ என்பது எனது வாசஸ்தலம். அங்கே புழங்குவது எனது உரிமை. அதை விமர்சனம் செய்ய யாவர்க்கும் உரிமை உண்டு. ஆனால் தானே விமர்சனம் செய்து, பின்னர் பின்னூட்டத்தை அழிக்கும் உரிமையும் அவர்க்கே உண்டென்பது ஆபத்தானது.
பின்னூட்டத்தைப் போலவே நாளை நமது வலைப்பதிவுகளையும் 'ஹேக்' செய்யமுடிமோ?
எனது பதிவுகளில் அவரது பின்னூட்டங்கள் தானாக நீக்கப்பட்டிருந்தது. யார் நீக்கினார்கள்? எவ்வாறு நீக்கினார்கள் என்று இன்றும் விளங்கவில்லை. பின்னூட்டம் விட்டவரே அழிக்க முடியுமா? பிளாக்கரின் தொழில்நுட்பம் விளங்கவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக கோபமாக அவர் இன்னொரு பின்னூட்டமும் விட்டிருக்கின்றார். அவரது கோபம் படிப்பவர்க்கு ஏதோ நானே அவரது பின்னூட்டங்களை நீக்கியது போன்ற பிரமையை ஏற்படுத்தலாம். ஆனால் நான் அவரது பின்னூட்டங்களை நீக்கவில்லை.
அவரது வேண்டுகோளின் பெயரில் நானே நீக்க நினைத்திருந்தேன். வலைப்பூ என்பது எனது வாசஸ்தலம். அங்கே புழங்குவது எனது உரிமை. அதை விமர்சனம் செய்ய யாவர்க்கும் உரிமை உண்டு. ஆனால் தானே விமர்சனம் செய்து, பின்னர் பின்னூட்டத்தை அழிக்கும் உரிமையும் அவர்க்கே உண்டென்பது ஆபத்தானது.
பின்னூட்டத்தைப் போலவே நாளை நமது வலைப்பதிவுகளையும் 'ஹேக்' செய்யமுடிமோ?
Friday, January 14, 2005
ஞான சூன்யத்தின் பார்வைகள்
வெ.சா. மற்றும் ஞாநி அவர்களின் கடிதங்கள் 6/1/05 திண்ணை பதிவில் படித்தவுடன் விவரிக்க இயலாத வியப்புக்கு உள்ளானேன். கருத்து சுதந்திரம் என்ற பதமே அர்த்தம் இழந்து சைபர் மற்றும் அவதூறு சட்டங்களின் கட்டமைப்பில் சங்கடங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றதோ என்ற ஐயப்பாடே எனக்குள் மேலோங்குகின்றது.
நாணயத்தின் இருபக்கங்கள் போல எக்கருத்திற்கும் எதிர்வினையுண்டு. ஞானி சொல்வது போல் 'பொது நாகரீகத்திற்கு' உட்பட்டு தாம் வேண்டும் எதிர்வினையைப் பதிய யாவர்க்கும் உரிமையுண்டு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த நாகரீகத்தின் வரையறை யாது? நாகரிகம் என்பதே ஒப்புநோக்குவதன்றோ? நிர்வாண உலகில் கோவணம் கட்டியிருப்பது நாகரீகம் என்பது ஒவ்வாமைதானே? ஆப்கானிஸ்தான் ஆடையலங்காரத்தை 'ஆர்மானி' கலாச்சாரத்துடன் ஒப்பிட முடியுமா?
முதலில் திரு. ஞாநி அவர்களின் கடிதத்தைப் பார்ப்போம். 'ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை' என்று மாயவரத்தான் அவர்கள் திண்ணையில் கடிதம் வெளியிட்டார். அதற்கு பதில் சொல்லியிருக்கும் ஞானி அவர்கள், திண்ணை மின்னிதழும், மாயவரத்தானும் 'பகிரங்க மன்னிப்பு' கேட்க வேண்டுமென 'அன்புடன்' மிரட்டியிருக்கின்றார். இங்கு நான் யாருக்கும் வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால் இருவரது கருத்துகளையும் சீர் நோக்கிப் பார்ப்போம்.
மாயவரத்தான் தனது கடிதத்தில் ஞாநியின் 'பார்ப்பனீய எதிர்ப்பை' அவரது 'இயலாமையே' காரணமென்று இடித்துரைத்திருந்தார். ஞானி போன்ற இலக்கியவாதிகளின் இயலாமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு வாரப்பத்திரிக்கைக்கு மூடுவிழா நடந்ததையும் குறிப்பிட்டு எழுதினார்.
அதற்கு ஞாநியிடமிருந்து வந்த பதில் அணுகுண்டு அவரது முப்பதாண்டுகால பத்திரிக்கை அனுபவத்தையே கேள்விக்குறியாக்குகின்றது. முதலில் நான் சொல்ல விரும்புவது மாயவரத்தான் என்ற 'போர்வையில்' யாருமில்லை. அவர் தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார். அவரது பெயர் கி.ரமேஷ்குமார். அவரது ரூபக்குறிப்பை இந்த வலைப்பூ சுட்டியில் காணலாம். ஏறத்தாழ ஞாநியின் பத்திரிக்கை அனுபவ காலத்தை தனது வயதாக கொண்டிருக்கும் மாயவரத்தான் தனது கண்ணோட்டத்தில் ஞாநியை கண்டனம் செய்து கடிதம் எழுதினார். அதற்கு பதிலாக 'சைபர் மற்றும் அவதூறு சட்டங்களை' பாய்ச்சுவேன் என்று சீறுகின்றார் ஞாநி. எனக்குத் தெரிந்த வகையில் தேர்ந்த கடைநிலை அரசியல்வாதியின் நிலைப்பாடுதான் இது. எதிர்வினையை எதிரி வினையாய் பாவிப்பதுதான் அவரது முப்பதாண்டுகால பத்திரிக்கை அனுபவமா? பத்திரிக்கை சுதந்திரத்தை கடைச்சரக்காய் பயன்படுத்தும் ஜெ'யின் புகழ் பாடும் ஞாநியின் உள்மனது புரிகின்றது.
ஜூனியர் போஸ்ட் வார இதழின் ஆசிரியராய் 30 ஆயிரம் பிரதிகளை 80 ஆயிரம் பிரதிகளாய் விற்பனையை உயர்த்தியதாய் ஞாநி தெரிவிக்கின்றார். அவரது திட்ட மேலாண்மை திறனுக்கு வாழ்த்து தெரிவிப்போம். அதே சமயம் சட்டங்களைப் பாய்ச்சுவேன் என்னும் அவரது உயர்மனப்பிறள்விற்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்.
இதற்கு பதிலாக மாயவரத்தானும், திண்ணையும் மன்னிப்பு கேட்ட கடிதங்களை ஞாநி படித்தாராவெனத் தெரியவில்லை. வெ.சா. கடிதம் போலவே பகடிக்கு சிறிதும் குறை வைக்காமல் அவர்களது பதில் கடிதங்கள் இருக்கின்றன. ஞாநியின் புகழுக்கு ஏற்பட்ட இழுக்கு களையப்பட்டதில் எமக்கும் மகிழ்ச்சியே!
'நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்' என்று எம்ஜியார் போல பாடத் தோன்றுகின்றது. ஞாநியின் 'சபாஷ் ஜெ' கட்டுரைக்கு எனது எதிர் வினையை that's Tamil.com வலைத்தளத்தில் பதிந்திருந்தேன். என்மீது சைபர் சட்டத்தை ஞாநி இன்னும் பாய்ச்சவில்லை.
இம்மாதிரி அரை வேக்காட்டு கட்டு-உரைகளுக்கு எதிர்வினை எழுதி எனது நேரத்தையும், படிக்கும் வாசகர் நேரத்தையும் வீணாக்கியமைக்காக...
ஞாநி அவர்களே இந்த ஞான சூனியத்தை மன்னியுங்கள்!!!
நாணயத்தின் இருபக்கங்கள் போல எக்கருத்திற்கும் எதிர்வினையுண்டு. ஞானி சொல்வது போல் 'பொது நாகரீகத்திற்கு' உட்பட்டு தாம் வேண்டும் எதிர்வினையைப் பதிய யாவர்க்கும் உரிமையுண்டு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த நாகரீகத்தின் வரையறை யாது? நாகரிகம் என்பதே ஒப்புநோக்குவதன்றோ? நிர்வாண உலகில் கோவணம் கட்டியிருப்பது நாகரீகம் என்பது ஒவ்வாமைதானே? ஆப்கானிஸ்தான் ஆடையலங்காரத்தை 'ஆர்மானி' கலாச்சாரத்துடன் ஒப்பிட முடியுமா?
முதலில் திரு. ஞாநி அவர்களின் கடிதத்தைப் பார்ப்போம். 'ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை' என்று மாயவரத்தான் அவர்கள் திண்ணையில் கடிதம் வெளியிட்டார். அதற்கு பதில் சொல்லியிருக்கும் ஞானி அவர்கள், திண்ணை மின்னிதழும், மாயவரத்தானும் 'பகிரங்க மன்னிப்பு' கேட்க வேண்டுமென 'அன்புடன்' மிரட்டியிருக்கின்றார். இங்கு நான் யாருக்கும் வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால் இருவரது கருத்துகளையும் சீர் நோக்கிப் பார்ப்போம்.
மாயவரத்தான் தனது கடிதத்தில் ஞாநியின் 'பார்ப்பனீய எதிர்ப்பை' அவரது 'இயலாமையே' காரணமென்று இடித்துரைத்திருந்தார். ஞானி போன்ற இலக்கியவாதிகளின் இயலாமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு வாரப்பத்திரிக்கைக்கு மூடுவிழா நடந்ததையும் குறிப்பிட்டு எழுதினார்.
அதற்கு ஞாநியிடமிருந்து வந்த பதில் அணுகுண்டு அவரது முப்பதாண்டுகால பத்திரிக்கை அனுபவத்தையே கேள்விக்குறியாக்குகின்றது. முதலில் நான் சொல்ல விரும்புவது மாயவரத்தான் என்ற 'போர்வையில்' யாருமில்லை. அவர் தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார். அவரது பெயர் கி.ரமேஷ்குமார். அவரது ரூபக்குறிப்பை இந்த வலைப்பூ சுட்டியில் காணலாம். ஏறத்தாழ ஞாநியின் பத்திரிக்கை அனுபவ காலத்தை தனது வயதாக கொண்டிருக்கும் மாயவரத்தான் தனது கண்ணோட்டத்தில் ஞாநியை கண்டனம் செய்து கடிதம் எழுதினார். அதற்கு பதிலாக 'சைபர் மற்றும் அவதூறு சட்டங்களை' பாய்ச்சுவேன் என்று சீறுகின்றார் ஞாநி. எனக்குத் தெரிந்த வகையில் தேர்ந்த கடைநிலை அரசியல்வாதியின் நிலைப்பாடுதான் இது. எதிர்வினையை எதிரி வினையாய் பாவிப்பதுதான் அவரது முப்பதாண்டுகால பத்திரிக்கை அனுபவமா? பத்திரிக்கை சுதந்திரத்தை கடைச்சரக்காய் பயன்படுத்தும் ஜெ'யின் புகழ் பாடும் ஞாநியின் உள்மனது புரிகின்றது.
ஜூனியர் போஸ்ட் வார இதழின் ஆசிரியராய் 30 ஆயிரம் பிரதிகளை 80 ஆயிரம் பிரதிகளாய் விற்பனையை உயர்த்தியதாய் ஞாநி தெரிவிக்கின்றார். அவரது திட்ட மேலாண்மை திறனுக்கு வாழ்த்து தெரிவிப்போம். அதே சமயம் சட்டங்களைப் பாய்ச்சுவேன் என்னும் அவரது உயர்மனப்பிறள்விற்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்.
இதற்கு பதிலாக மாயவரத்தானும், திண்ணையும் மன்னிப்பு கேட்ட கடிதங்களை ஞாநி படித்தாராவெனத் தெரியவில்லை. வெ.சா. கடிதம் போலவே பகடிக்கு சிறிதும் குறை வைக்காமல் அவர்களது பதில் கடிதங்கள் இருக்கின்றன. ஞாநியின் புகழுக்கு ஏற்பட்ட இழுக்கு களையப்பட்டதில் எமக்கும் மகிழ்ச்சியே!
'நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்' என்று எம்ஜியார் போல பாடத் தோன்றுகின்றது. ஞாநியின் 'சபாஷ் ஜெ' கட்டுரைக்கு எனது எதிர் வினையை that's Tamil.com வலைத்தளத்தில் பதிந்திருந்தேன். என்மீது சைபர் சட்டத்தை ஞாநி இன்னும் பாய்ச்சவில்லை.
இம்மாதிரி அரை வேக்காட்டு கட்டு-உரைகளுக்கு எதிர்வினை எழுதி எனது நேரத்தையும், படிக்கும் வாசகர் நேரத்தையும் வீணாக்கியமைக்காக...
ஞாநி அவர்களே இந்த ஞான சூனியத்தை மன்னியுங்கள்!!!
கைமாறு
ஊழித் தாண்டவமது
உதவிக்கரம் நீட்ட பேராசைதான்
கிழிந்த ஆடை
சூட்டை மறந்த அடுப்பு
நசுங்கல் ஏனங்கள்
எலும்பு துருத்திய பிள்ளைகள்
இயலாமையின் சின்னங்களாய் இளித்தன
இரத்தமிழக்கும் பேனாவில்
நைந்து போன சாணித்தாளில் பிறந்தது
கடவுளைக் கண்டிக்கும் கவிதை
உலர்ந்த நாவில்
எஞ்சிய எச்சிலில்
கடனுக்கு ஸ்டாம்பு வாங்கி
வாரநாவலுக்கு அனுப்பியபோது
ஏளனமாய்ப் பார்த்தாள் மனைவி
அருமையான பதிவென்று
கடிதமுடன் காசோலை
சுநாமி நிவாரணத்துக்கு
பணம் கொடுத்து
இயலாமையை இகழ்ந்தேன்
கவிதைக்கு கண்டன கடிதங்கள்
அடுத்த இதழில் வந்ததை
காசு கொடுத்து படிக்க முடியவில்லை
உதவிக்கரம் நீட்ட பேராசைதான்
கிழிந்த ஆடை
சூட்டை மறந்த அடுப்பு
நசுங்கல் ஏனங்கள்
எலும்பு துருத்திய பிள்ளைகள்
இயலாமையின் சின்னங்களாய் இளித்தன
இரத்தமிழக்கும் பேனாவில்
நைந்து போன சாணித்தாளில் பிறந்தது
கடவுளைக் கண்டிக்கும் கவிதை
உலர்ந்த நாவில்
எஞ்சிய எச்சிலில்
கடனுக்கு ஸ்டாம்பு வாங்கி
வாரநாவலுக்கு அனுப்பியபோது
ஏளனமாய்ப் பார்த்தாள் மனைவி
அருமையான பதிவென்று
கடிதமுடன் காசோலை
சுநாமி நிவாரணத்துக்கு
பணம் கொடுத்து
இயலாமையை இகழ்ந்தேன்
கவிதைக்கு கண்டன கடிதங்கள்
அடுத்த இதழில் வந்ததை
காசு கொடுத்து படிக்க முடியவில்லை
Saturday, December 25, 2004
தமிழ்நாட்டில் நிலநடுக்கம்???
இப்போதுதான் கேள்விப்பட்டேன். இன்று (சற்று முன்னர்) சென்னை, கடலூர் மற்றும் காரைக்காலில் நிலநடுக்கம் ஏற்பட்டதென்று. இங்கு எனக்கு தமிழ் சேனல்கள் பார்க்கும் வாய்ப்பு கிடையாது. திருவல்லிக்கேணியில் கடல் நீர் புகுந்து விட்டதாக கவலையுடன் உறவினர் கூறினர். மெரினாவில் காலை நடைக்கு சென்றவர் காணாமல் போனதாகவும் சொல்கின்றனர். இணையத்தில் செய்தி எதுவும் இல்லை. விபரம் அறிந்தோர் செய்தி பரிமாறிக் கொள்வீர்களா?
கவலையாக இருக்கின்றது.
கவலையாக இருக்கின்றது.
Wednesday, December 22, 2004
சபாஷ் ஞாநி
திரு. ஞாநி அவர்களின் கட்டுரையைப் படித்தேன். அவரும், சின்னக்குத்தூசியும் இணைந்து சங்கராச்சாரியாரை முன்னர் எடுத்த பேட்டியில் இருக்கும் 'சரக்கு', இக்கட்டுரையில் சுத்தமாக இல்லையென்கின்ற ஆதங்கம் பிடுங்கித் தின்கின்றது. வலைபூக்களில் இக்கட்டுரையை விமர்சனம் செய்த சிலர் 'தட்டையாக இருக்கின்றது' என்றார்கள். உண்மைதான். ஞாநியின் எழுத்து வன்மையைப் பற்றி அறிந்த பலருக்கும் இந்த வாசிப்பு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
அனைத்து ஊடகங்களிலும் வரும் மறுப்பை (Disclaimer) நானும் முன்னரே சொல்லி விடுகின்றேன்(!!). தீபாவளி கொண்டாடாத குடும்பத்தில் உதித்தவன் நான். முத்திரை குத்த விரும்புவோரின் விருப்பத்திற்காக இதை முன்னரே சொல்லியாக வேண்டும். இக்கட்டுரை பச்சையாகவோ, மஞ்சளாகவோ, காவியாகவோ, கறுப்பாகவோ பார்வையில் பட்டால், அது உங்கள் கண்களின் குற்றமே தவிர எனது நிறமதுவல்ல.
ஞாநியின் கட்டுரை ஆரம்பமே வித்தியாசமாக இருக்கின்றது. "கிரிமினல் சங்கராச்சாரி. நாம் சொல்லவில்லை! அரசே சொல்லுகிறது!" அப்படியென்றால் இதுவரை அரசு சொன்னதை எல்லாம் வேத வாக்காக ஞாநி எடுத்துக் கொண்டார் போலிருக்கின்றது. ஆமாம்...ஒரு கிரிமினலை அரசு இயந்திரம் எவ்வாறு கையாளவேண்டும்? கைது செய்யப்போன அதிகாரிகள் காலணிகளை கழட்டிவிட்டு, மிகவும் பவ்யமாக கைகட்டி 'கைது' செய்து சொகுசாக அழைத்து வந்திருக்கின்றார்கள். மேலும் சிறையில் காவியுடுத்தி, பூஜை புனஸ்காரத்திற்கு ஏற்பாடு செய்து, தண்டத்தோடு உலவ வகை செய்து, பிராமண அதிகாரியை மேற்பார்வை பார்க்கச் செய்து, பிராமண கைதியை விட்டு சமைக்கச் செய்து என்று ஏகத்திற்கும் சலுகைப் பட்டியல் நீளுகின்றது. ஒரு கொலைக் குற்றத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு 'கிரிமினலை' அரசு நடத்தும் விதம் 'பாராட்டுதற்குரியதுதான்'. இல்லையா ஞாநி அவர்களே? இக்குற்றத்தையே நீங்களோ அல்லது நானோ செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கணித்துறையில் திட்ட மேலாளராக இருக்கும் எனக்கு மடிக்கணி (laptop) கொடுத்து, இணைய இணைப்புத் தந்து சிறைச்சாலையில் உலவ விடுமா இந்த அரசு? ஜெயலலிதா அரசின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி ஞாநி ஏன் வெளிப்படையாகச் சாடாது பூடகமாய் மௌனம் காக்க வேண்டும்?
அதே சமயம் தனது கேள்வி-பதில் பகுதியில், 'சங்கர மடம் காப்பாற்றப் படவேண்டும்', 'சங்கர மடத்தில் வருமான வரித்துறை சோதனையிட வேண்டி தனது அமைச்சரை கருணாநிதி பணிக்கவில்லை', 'அப்பு முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் ஆள்; அதனால் கருணாநிதிக்கும் இவ்வழக்கில் உள்நோக்கம் இருக்கலாம்' என்று கருணாநிதியின் இரட்டை வேடத்தைக் கவனமாகக் கலைக்கின்றார் ஞாநி. அவை யாவுமே கருணாநிதியைப் பற்றி மிகச் சரியான கருத்துகள்தாம். ஆனால் சங்கராச்சாரிக்காக சனிக்கிழமை நீதிமன்றம் கூடியதிலிருந்து, தனிப்பட்ட செஸ்னா விமானம், டயோட்டா குவாலிஸில் பயணம், போலீஸ் அவர் மீது சுட்டுவிரல் கூடப் படாமல் நடத்தும் விதம், தனது அரசியல் வாழ்விலேயே எடுத்த வேதனையான முடிவு என்று ஜெயலலிதா டில்லியில் கொடுத்த அறிக்கை என்று அரசின் இரட்டை நிலைப்பாட்டினை ஞாநி ஏற்றுக் கொள்கிறாரா? அரசாங்கத்திற்கு தெரியாமல் இத்தகைய சலுகைகள் 'கிரிமினல்' சங்கராச்சாரிக்கு கிட்டியிருக்குமா?
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கிய அப்துல் நாசர் மஹ்தனிக்கு கால் வலியென்று கேரள மருத்துவமனையில் சிகிச்சை கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தமிழக அரசு செய்த பதில் மனுவில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதியும் தரப்பட்டது. அம்மனுவை தாக்கல் செய்த தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராயிருந்த முனீர் ஹோதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காரணமென்ன? தமிழக முதல்வருக்கே இத்தகவல் தெரியாததுதானாம். முனீர் ஹோதா ஆகஸ்ட் மாத இறுதியில் சஸ்பெண்ட் ஆனார். ஆனால் அவர் அரசின் சார்பில் பதில் மனு பிப்ரவரி மாதத்திலேயே தாக்கல் செய்து விட்டார். ஐந்து மாதங்களாக முதல்வர் என்ன செய்தார்? 'தீவிரவாதி' மஹ்தனிக்கு ஒரு நியாயம். 'கிரிமினல்' சங்கராச்சாரிக்கு அதே அரசாங்கம் வேறு 'நியாயம்' படிக்கின்றது. இது ஜெயலலிதா அரசாங்கத்தின் இரட்டை வேடமில்லையா?
இக்கைது வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வு என்று ஞானி சொல்வதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆஹா எத்தகைய அபார கண்டுபிடிப்பு? இதை ஞாநி சொல்லித்தான் ஞாலம் அறிய வேண்டுமா? கருணாநிதி முதலமைச்சராய் இருந்தால் இக்கைதை நிறைவேற்றியிருப்பாரா என்று விஷமத்தனமான கேள்வி வேறு. அவரும் சராசரி அரசியல்வாதிதான். தனக்குச் சாதகமென்றால் கண்டிப்பாய் செய்திருப்பார். ஆட்சிக்கலைப்பு என்ற பதம் கருணாநிதிக்குப் புதிதில்லை. மேலும் சங்கராச்சாரிக்கு ஓட்டு வங்கியில்லையென்பதையும் தாங்கள் அறிவீர்கள். திமுக ஒரு பிராந்தியக்கட்சி தான். தேசீயக்கட்சியா என்ன மற்ற மாநிலங்கள் பற்றி கருணாநிதி கவலைப்பட? ஏன் ஜெயலலிதாவே பிஜேபி ஆட்சி மத்தியில் இருந்தால் சங்கராச்சாரி மீது கை வைத்திருப்பாரா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தானே?
ஜெயேந்திரர் கைது பற்றி ஜெயலலிதாவை புகழ்ந்து எழுதிய ஞாநியின் கரம், நீதிபதியிலிருந்து, ஜனாதிபதி வரை காஞ்சியில் நமஸ்கரித்த சம்பவங்கள் கூறி வழக்கின் எதிர்காலப் போக்கு பற்றி சந்தேகங்கள் கிளறுகின்றது. ஜெயலலிதா திருந்தியது (?) போல் ஏன் நீதிபதிகளும், குடியசுத் தலைவரும் திருந்தக் கூடாது? திருந்த வாய்ப்புத்தான் கொடுத்துப் பார்ப்போமே! நீதி தனது வழியில் பயணித்து உண்மையை நிலை நாட்டட்டும். இதற்கு ஐ.நா.வின் உலக நீதிமன்றம் அவசியமில்லை.
ஜெ துதி பாட முடிவு செய்த பின்னர் அதை கருத்தில் வடிக்க ஞாநி அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. கருணாநிதி பேசுவது போலி பகுத்தறிவு, வீராணம் தண்ணீர், வீரப்ப சம்ஹாரம் என்று 'கடவுள் பக்தை'யின் சாதனைகளை பட்டியலிட 'பகுத்தறிவு பகலவன்' ஞாநி தேவையில்லை. அமைச்சர் 'ஓ' பன்னீர் செல்வமே பொதும். வீராணம் திட்டம் கிடப்பில் போடப்பட வேண்டியது, அதில் ஊழல் செய்து தமிழகத்தில் லஞ்ச லாவண்யத்தே அறிமுகப்படுத்தியவர் கருணாநிதியென்று காலம் காலமாய் எம்ஜியாரும், ஜெயலலிதாவும் அரசியல் பேசியதை ஞாநி சுலபமாக மறந்து விட்டாரா? இன்று அதே வீராணத்தில் இருந்து (சிறிய) குழாய் போட்டு சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வந்த போது இத்திட்டத்திற்கு முன்னோடியான கருணாநிதி (ஊழல் புரிந்திருப்பினும்) ம(றை)றக்கப்படுகின்றார்.
உயிரோடு பிடித்து, பல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிப்பதை விட்டு விட்டு, பொறியில் சிக்கிய எலியான வீரப்பனை 'என்கௌண்டர்' வதம் கண்டு பலருக்கும் புனர்வாழ்வளித்த ஜெ சரணம் பாடுங்கள் ஞாநி! ஆமாம் ஜெவின் முரட்டுப் பிடிவாதம் எல்லா பகுத்தறிவாளர்களாலும் (குறிப்பாக பெரியார் திராவிட கழக அன்பர்கள்), எல்லா அசல் பக்தர்களாலும் பாராட்டப்பட வேண்டியதே! வர வர இடதுசாரிகள் மற்றும் பகுத்தறிவாதிகளின் நிலைப்பாடும், திராவிடத் திராபைகள் போலவே திரிந்து போய், என் சிற்றறிவிற்கு எட்டமாட்டேன் என்கின்றது.
பாவம்...கருணாநிதி மதித்ததால் 'மகாப் பெரியவா'ளையும் ஞாநி விட்டு வைக்கவில்லை. பகுத்தறிவை முன்னிறுத்தி மகாப்பெரியவாளின் தீண்டாமை மற்றும் வருணாசிரமத்தை கண்டிக்க வேண்டிய ஞாநி, கருணாநிதியை நிந்தித்து, ஜெ துதி பாடுவது சகிக்கவில்லை. (தனது கேள்வி-பதில் பகுதியில் பெரியவாளை தனது பாணியில் சாடியிருக்கின்றார். சபாஷ்!)
சட்டத்திற்கு முன்னர் யாரும் 'பெரியவா/சின்னவா' இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் தண்டனை அடைந்தே தீர வேண்டுமென்று முழங்கவேண்டிய ஞாநி, தனது கட்டுரையில் கருணாநிதியை சாடுவதில்தான் அதீத சிரத்தை காட்டியிருக்கின்றார்.
சங்கரராமன் பற்றி ஊடகங்களின் வழியே தான் அறிந்தவற்றை அழகாக தொகுத்திருக்கின்றார் ஞாநி. பிறகு நாம் அறியாத ஒரு அரிய உண்மையையும் அகழ்வாராய்ந்து சொல்கின்றார். "ஓட்டையும், பணத்தையும் தவிர எந்த லௌகீக சக்தியும் நம்முடைய அரசியல்வாதிகளை கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் வகையறாக்களை இயக்குவதாக நான் கருதவில்லை." சபாஷ்! ஞாநி சரியான கண்டுபிடிப்பு! நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டியது. உங்களது புதிய 'நடுநிலைமை சங்கடம்' புரிகின்றது.
ஜெயலலிதாவை சாடும் சாக்கில் கொஞ்சம் அள்ளிப் போடவும் ஞாநி தயங்கவில்லை. "தன்னை விட உயர்ந்தவர் என்று ஜெயலலிதா அவர் நம்புகின்ற கடவுளைத் தவிர வேறு எவரையும் கருதுவதாக எனக்குத் தெரியவில்லை", என்று பிரஸ்தாபம் செய்கின்றார். கோவில் கோவிலாக சுற்றி, புலிப் பலி கொடுத்து, யானைத் தானம் கொடுத்து மறுபடி சென்ற தேர்தலில் சட்டசபையை வளைக்காவிடில், கடவுளரும் ஜெ பிடியிலிருந்து தப்பித்திருக்க முடியாதென்பது நிதர்சனம். பணிக்கரின் கணக்குப்படி ஜெ சென்றது பலருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம். பாவம் நீதி கேட்கும் கண்ணகி சிலை கூடத் தப்பவில்லை.
கருணாநிதியியாகட்டும், ஏனைய அரசியல்வாதிகளாகட்டும், அவர்களது குறி மக்களின் ஓட்டு மட்டும்தான்; வேறில்லை. இதைச் சொல்ல ஒரு மூடன் போதும். ஞாநி போல் ஒருமூத்த பத்திரிக்கையாளர் தேவையில்லை. அதே போல் பத்திரிக்கைக்கு வாசகர்கள் தேவை. தொலைக்காட்சிக்கு பார்வையாளர்கள் தேவை. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினராகட்டும், ஏனைய அரசியல்வாதிகளாகட்டும் அனைவருமே சந்தர்ப்பவாதிகள்தாம். திராவிடக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஜெயலலிதாவுக்கு சென்றதும், அவரது மந்திரிகள் அலகு குத்தி தேர் இழுத்தனர். ஜெ'க்கு பச்சை என்றால் கருணாநிதிக்கு மஞ்சள் நிறத்தின் மீது (மூட)நம்பிக்கை. எல்லாம் காலத்தின் கோலம். இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, தனித் தமிழ்நாடு போன்ற வீர தீரக் குறிக்கோள்களை திராவிடக் கட்சிகள் தொலைத்து வெகு காலமாகி விட்டன. தேவைப்படும்போது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி இக்கொள்கைகளை திராவிடக் கட்சிகள் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததுதான். அதனால் கருணாநிதி சன் டிவியில் தீபாவளி கொண்டாடச் சொல்கிறாரென்று ஞாநி விசனப்பட வேண்டாம்.
ஜெயேந்திரர் கொலைக் குற்றம் புரிந்தாரா? அனுராதா ரமணிடம் முறைகேடாக நடந்து கொண்டாரா? ராதா கிருஷ்ணனை கொல்ல கூலிப்படை ஏவினாரா? ஸ்ரீரங்கம் உஷாவுடன் அவருக்கிருந்த தொடர்பென்ன? மடத்தின் நிதி நிர்வாகத்தில் மோசடி நடந்ததா? இது போன்ற பல கேள்விகட்கு நீதிமன்றம் முறைப்படி பதில் காணட்டும். சாமியாரைக் கைது செய்ததால் ஏதோ ஜெயலலலிதா 'நல்ல அரசியல்வாதி'யாகவும் (தைரியலட்சுமி?), கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் தைரியமாக இதைச் செய்திருக்க முடியாதென்று முடிவு கட்டி அவரை 'கோழை அரசியல்வாதி' என்று ஞாநி வருணிக்க விழைவதுதான் காலத்தின் கட்டாயமோ?
போகிற போக்கில் RSS'யையும் விட்டு வைக்கவில்லை ஞாநி. அதிகாரம் கிட்டுமானால் பைபிள், குரானையும் பற்றி கூட அவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்களாம். அவ்வாறே நடக்கட்டும். பெரியார் திராவிடக் கழக அன்பர்களும் பைபிள், குரானையும் பற்றி பேசட்டும். எவ்வளவு நாட்கள்தான் (சோதா) இந்து மதத்தையே கிண்டலடித்து பகுத்தறிவு வளர்ப்பது? மேற்கூறியது நடந்தால் ஞாநிய்¢ன் வாயில் சர்க்கரை போடுவோம்.
'பொது வாழ்க்கையில் உள்ள எந்தப் பிரமுகரும் இனி எந்த மதத்தின் நடவடிக்கைகளுடன் பங்கேற்பதை நிறுத்திக் கொள்வோம் என்று அறிவிக்க வேண்டும்' என்ற ஞாநியின் கருத்து கட்டாயம் நடைமுறைப் படுத்த வேண்டியது. சங்கரமட சரணாகதியாகட்டும், நோன்புக் கஞ்சியாகட்டும், பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையாகட்டும் மதத்தை நினைவுபடுத்தும் எத்தகைய நிகழ்வுகளிலும் பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் பங்கேற்கக் கூடாதென்று 'சத்தியப் பிரமாணம்' வாயிலாக உறுதிமொழி எடுக்க வேண்டும். கட்டுரையின் இறுதியில் முக்கியமான விஷயத்திற்கு வருகின்றார் ஞாநி. ஞாநி+சின்னக்குத்தூசியின் செவ்விக்கு தவறான உள்நோக்கு காட்டியமைக்காக சோ மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றார். இந்த விவரத்தை கட்டு-உரையின் முகப்பிலேயே கூறியிருந்தால், படிக்க நினைத்து நேர விரயம் செய்யாமல் பல வாசகர்கள் தப்பித்திருக்கலாம்.
அனைத்து ஊடகங்களிலும் வரும் மறுப்பை (Disclaimer) நானும் முன்னரே சொல்லி விடுகின்றேன்(!!). தீபாவளி கொண்டாடாத குடும்பத்தில் உதித்தவன் நான். முத்திரை குத்த விரும்புவோரின் விருப்பத்திற்காக இதை முன்னரே சொல்லியாக வேண்டும். இக்கட்டுரை பச்சையாகவோ, மஞ்சளாகவோ, காவியாகவோ, கறுப்பாகவோ பார்வையில் பட்டால், அது உங்கள் கண்களின் குற்றமே தவிர எனது நிறமதுவல்ல.
ஞாநியின் கட்டுரை ஆரம்பமே வித்தியாசமாக இருக்கின்றது. "கிரிமினல் சங்கராச்சாரி. நாம் சொல்லவில்லை! அரசே சொல்லுகிறது!" அப்படியென்றால் இதுவரை அரசு சொன்னதை எல்லாம் வேத வாக்காக ஞாநி எடுத்துக் கொண்டார் போலிருக்கின்றது. ஆமாம்...ஒரு கிரிமினலை அரசு இயந்திரம் எவ்வாறு கையாளவேண்டும்? கைது செய்யப்போன அதிகாரிகள் காலணிகளை கழட்டிவிட்டு, மிகவும் பவ்யமாக கைகட்டி 'கைது' செய்து சொகுசாக அழைத்து வந்திருக்கின்றார்கள். மேலும் சிறையில் காவியுடுத்தி, பூஜை புனஸ்காரத்திற்கு ஏற்பாடு செய்து, தண்டத்தோடு உலவ வகை செய்து, பிராமண அதிகாரியை மேற்பார்வை பார்க்கச் செய்து, பிராமண கைதியை விட்டு சமைக்கச் செய்து என்று ஏகத்திற்கும் சலுகைப் பட்டியல் நீளுகின்றது. ஒரு கொலைக் குற்றத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு 'கிரிமினலை' அரசு நடத்தும் விதம் 'பாராட்டுதற்குரியதுதான்'. இல்லையா ஞாநி அவர்களே? இக்குற்றத்தையே நீங்களோ அல்லது நானோ செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கணித்துறையில் திட்ட மேலாளராக இருக்கும் எனக்கு மடிக்கணி (laptop) கொடுத்து, இணைய இணைப்புத் தந்து சிறைச்சாலையில் உலவ விடுமா இந்த அரசு? ஜெயலலிதா அரசின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி ஞாநி ஏன் வெளிப்படையாகச் சாடாது பூடகமாய் மௌனம் காக்க வேண்டும்?
அதே சமயம் தனது கேள்வி-பதில் பகுதியில், 'சங்கர மடம் காப்பாற்றப் படவேண்டும்', 'சங்கர மடத்தில் வருமான வரித்துறை சோதனையிட வேண்டி தனது அமைச்சரை கருணாநிதி பணிக்கவில்லை', 'அப்பு முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் ஆள்; அதனால் கருணாநிதிக்கும் இவ்வழக்கில் உள்நோக்கம் இருக்கலாம்' என்று கருணாநிதியின் இரட்டை வேடத்தைக் கவனமாகக் கலைக்கின்றார் ஞாநி. அவை யாவுமே கருணாநிதியைப் பற்றி மிகச் சரியான கருத்துகள்தாம். ஆனால் சங்கராச்சாரிக்காக சனிக்கிழமை நீதிமன்றம் கூடியதிலிருந்து, தனிப்பட்ட செஸ்னா விமானம், டயோட்டா குவாலிஸில் பயணம், போலீஸ் அவர் மீது சுட்டுவிரல் கூடப் படாமல் நடத்தும் விதம், தனது அரசியல் வாழ்விலேயே எடுத்த வேதனையான முடிவு என்று ஜெயலலிதா டில்லியில் கொடுத்த அறிக்கை என்று அரசின் இரட்டை நிலைப்பாட்டினை ஞாநி ஏற்றுக் கொள்கிறாரா? அரசாங்கத்திற்கு தெரியாமல் இத்தகைய சலுகைகள் 'கிரிமினல்' சங்கராச்சாரிக்கு கிட்டியிருக்குமா?
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கிய அப்துல் நாசர் மஹ்தனிக்கு கால் வலியென்று கேரள மருத்துவமனையில் சிகிச்சை கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தமிழக அரசு செய்த பதில் மனுவில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதியும் தரப்பட்டது. அம்மனுவை தாக்கல் செய்த தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராயிருந்த முனீர் ஹோதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காரணமென்ன? தமிழக முதல்வருக்கே இத்தகவல் தெரியாததுதானாம். முனீர் ஹோதா ஆகஸ்ட் மாத இறுதியில் சஸ்பெண்ட் ஆனார். ஆனால் அவர் அரசின் சார்பில் பதில் மனு பிப்ரவரி மாதத்திலேயே தாக்கல் செய்து விட்டார். ஐந்து மாதங்களாக முதல்வர் என்ன செய்தார்? 'தீவிரவாதி' மஹ்தனிக்கு ஒரு நியாயம். 'கிரிமினல்' சங்கராச்சாரிக்கு அதே அரசாங்கம் வேறு 'நியாயம்' படிக்கின்றது. இது ஜெயலலிதா அரசாங்கத்தின் இரட்டை வேடமில்லையா?
இக்கைது வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வு என்று ஞானி சொல்வதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆஹா எத்தகைய அபார கண்டுபிடிப்பு? இதை ஞாநி சொல்லித்தான் ஞாலம் அறிய வேண்டுமா? கருணாநிதி முதலமைச்சராய் இருந்தால் இக்கைதை நிறைவேற்றியிருப்பாரா என்று விஷமத்தனமான கேள்வி வேறு. அவரும் சராசரி அரசியல்வாதிதான். தனக்குச் சாதகமென்றால் கண்டிப்பாய் செய்திருப்பார். ஆட்சிக்கலைப்பு என்ற பதம் கருணாநிதிக்குப் புதிதில்லை. மேலும் சங்கராச்சாரிக்கு ஓட்டு வங்கியில்லையென்பதையும் தாங்கள் அறிவீர்கள். திமுக ஒரு பிராந்தியக்கட்சி தான். தேசீயக்கட்சியா என்ன மற்ற மாநிலங்கள் பற்றி கருணாநிதி கவலைப்பட? ஏன் ஜெயலலிதாவே பிஜேபி ஆட்சி மத்தியில் இருந்தால் சங்கராச்சாரி மீது கை வைத்திருப்பாரா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தானே?
ஜெயேந்திரர் கைது பற்றி ஜெயலலிதாவை புகழ்ந்து எழுதிய ஞாநியின் கரம், நீதிபதியிலிருந்து, ஜனாதிபதி வரை காஞ்சியில் நமஸ்கரித்த சம்பவங்கள் கூறி வழக்கின் எதிர்காலப் போக்கு பற்றி சந்தேகங்கள் கிளறுகின்றது. ஜெயலலிதா திருந்தியது (?) போல் ஏன் நீதிபதிகளும், குடியசுத் தலைவரும் திருந்தக் கூடாது? திருந்த வாய்ப்புத்தான் கொடுத்துப் பார்ப்போமே! நீதி தனது வழியில் பயணித்து உண்மையை நிலை நாட்டட்டும். இதற்கு ஐ.நா.வின் உலக நீதிமன்றம் அவசியமில்லை.
ஜெ துதி பாட முடிவு செய்த பின்னர் அதை கருத்தில் வடிக்க ஞாநி அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. கருணாநிதி பேசுவது போலி பகுத்தறிவு, வீராணம் தண்ணீர், வீரப்ப சம்ஹாரம் என்று 'கடவுள் பக்தை'யின் சாதனைகளை பட்டியலிட 'பகுத்தறிவு பகலவன்' ஞாநி தேவையில்லை. அமைச்சர் 'ஓ' பன்னீர் செல்வமே பொதும். வீராணம் திட்டம் கிடப்பில் போடப்பட வேண்டியது, அதில் ஊழல் செய்து தமிழகத்தில் லஞ்ச லாவண்யத்தே அறிமுகப்படுத்தியவர் கருணாநிதியென்று காலம் காலமாய் எம்ஜியாரும், ஜெயலலிதாவும் அரசியல் பேசியதை ஞாநி சுலபமாக மறந்து விட்டாரா? இன்று அதே வீராணத்தில் இருந்து (சிறிய) குழாய் போட்டு சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வந்த போது இத்திட்டத்திற்கு முன்னோடியான கருணாநிதி (ஊழல் புரிந்திருப்பினும்) ம(றை)றக்கப்படுகின்றார்.
உயிரோடு பிடித்து, பல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிப்பதை விட்டு விட்டு, பொறியில் சிக்கிய எலியான வீரப்பனை 'என்கௌண்டர்' வதம் கண்டு பலருக்கும் புனர்வாழ்வளித்த ஜெ சரணம் பாடுங்கள் ஞாநி! ஆமாம் ஜெவின் முரட்டுப் பிடிவாதம் எல்லா பகுத்தறிவாளர்களாலும் (குறிப்பாக பெரியார் திராவிட கழக அன்பர்கள்), எல்லா அசல் பக்தர்களாலும் பாராட்டப்பட வேண்டியதே! வர வர இடதுசாரிகள் மற்றும் பகுத்தறிவாதிகளின் நிலைப்பாடும், திராவிடத் திராபைகள் போலவே திரிந்து போய், என் சிற்றறிவிற்கு எட்டமாட்டேன் என்கின்றது.
பாவம்...கருணாநிதி மதித்ததால் 'மகாப் பெரியவா'ளையும் ஞாநி விட்டு வைக்கவில்லை. பகுத்தறிவை முன்னிறுத்தி மகாப்பெரியவாளின் தீண்டாமை மற்றும் வருணாசிரமத்தை கண்டிக்க வேண்டிய ஞாநி, கருணாநிதியை நிந்தித்து, ஜெ துதி பாடுவது சகிக்கவில்லை. (தனது கேள்வி-பதில் பகுதியில் பெரியவாளை தனது பாணியில் சாடியிருக்கின்றார். சபாஷ்!)
சட்டத்திற்கு முன்னர் யாரும் 'பெரியவா/சின்னவா' இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் தண்டனை அடைந்தே தீர வேண்டுமென்று முழங்கவேண்டிய ஞாநி, தனது கட்டுரையில் கருணாநிதியை சாடுவதில்தான் அதீத சிரத்தை காட்டியிருக்கின்றார்.
சங்கரராமன் பற்றி ஊடகங்களின் வழியே தான் அறிந்தவற்றை அழகாக தொகுத்திருக்கின்றார் ஞாநி. பிறகு நாம் அறியாத ஒரு அரிய உண்மையையும் அகழ்வாராய்ந்து சொல்கின்றார். "ஓட்டையும், பணத்தையும் தவிர எந்த லௌகீக சக்தியும் நம்முடைய அரசியல்வாதிகளை கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் வகையறாக்களை இயக்குவதாக நான் கருதவில்லை." சபாஷ்! ஞாநி சரியான கண்டுபிடிப்பு! நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டியது. உங்களது புதிய 'நடுநிலைமை சங்கடம்' புரிகின்றது.
ஜெயலலிதாவை சாடும் சாக்கில் கொஞ்சம் அள்ளிப் போடவும் ஞாநி தயங்கவில்லை. "தன்னை விட உயர்ந்தவர் என்று ஜெயலலிதா அவர் நம்புகின்ற கடவுளைத் தவிர வேறு எவரையும் கருதுவதாக எனக்குத் தெரியவில்லை", என்று பிரஸ்தாபம் செய்கின்றார். கோவில் கோவிலாக சுற்றி, புலிப் பலி கொடுத்து, யானைத் தானம் கொடுத்து மறுபடி சென்ற தேர்தலில் சட்டசபையை வளைக்காவிடில், கடவுளரும் ஜெ பிடியிலிருந்து தப்பித்திருக்க முடியாதென்பது நிதர்சனம். பணிக்கரின் கணக்குப்படி ஜெ சென்றது பலருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம். பாவம் நீதி கேட்கும் கண்ணகி சிலை கூடத் தப்பவில்லை.
கருணாநிதியியாகட்டும், ஏனைய அரசியல்வாதிகளாகட்டும், அவர்களது குறி மக்களின் ஓட்டு மட்டும்தான்; வேறில்லை. இதைச் சொல்ல ஒரு மூடன் போதும். ஞாநி போல் ஒருமூத்த பத்திரிக்கையாளர் தேவையில்லை. அதே போல் பத்திரிக்கைக்கு வாசகர்கள் தேவை. தொலைக்காட்சிக்கு பார்வையாளர்கள் தேவை. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினராகட்டும், ஏனைய அரசியல்வாதிகளாகட்டும் அனைவருமே சந்தர்ப்பவாதிகள்தாம். திராவிடக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஜெயலலிதாவுக்கு சென்றதும், அவரது மந்திரிகள் அலகு குத்தி தேர் இழுத்தனர். ஜெ'க்கு பச்சை என்றால் கருணாநிதிக்கு மஞ்சள் நிறத்தின் மீது (மூட)நம்பிக்கை. எல்லாம் காலத்தின் கோலம். இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, தனித் தமிழ்நாடு போன்ற வீர தீரக் குறிக்கோள்களை திராவிடக் கட்சிகள் தொலைத்து வெகு காலமாகி விட்டன. தேவைப்படும்போது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி இக்கொள்கைகளை திராவிடக் கட்சிகள் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததுதான். அதனால் கருணாநிதி சன் டிவியில் தீபாவளி கொண்டாடச் சொல்கிறாரென்று ஞாநி விசனப்பட வேண்டாம்.
ஜெயேந்திரர் கொலைக் குற்றம் புரிந்தாரா? அனுராதா ரமணிடம் முறைகேடாக நடந்து கொண்டாரா? ராதா கிருஷ்ணனை கொல்ல கூலிப்படை ஏவினாரா? ஸ்ரீரங்கம் உஷாவுடன் அவருக்கிருந்த தொடர்பென்ன? மடத்தின் நிதி நிர்வாகத்தில் மோசடி நடந்ததா? இது போன்ற பல கேள்விகட்கு நீதிமன்றம் முறைப்படி பதில் காணட்டும். சாமியாரைக் கைது செய்ததால் ஏதோ ஜெயலலலிதா 'நல்ல அரசியல்வாதி'யாகவும் (தைரியலட்சுமி?), கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் தைரியமாக இதைச் செய்திருக்க முடியாதென்று முடிவு கட்டி அவரை 'கோழை அரசியல்வாதி' என்று ஞாநி வருணிக்க விழைவதுதான் காலத்தின் கட்டாயமோ?
போகிற போக்கில் RSS'யையும் விட்டு வைக்கவில்லை ஞாநி. அதிகாரம் கிட்டுமானால் பைபிள், குரானையும் பற்றி கூட அவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்களாம். அவ்வாறே நடக்கட்டும். பெரியார் திராவிடக் கழக அன்பர்களும் பைபிள், குரானையும் பற்றி பேசட்டும். எவ்வளவு நாட்கள்தான் (சோதா) இந்து மதத்தையே கிண்டலடித்து பகுத்தறிவு வளர்ப்பது? மேற்கூறியது நடந்தால் ஞாநிய்¢ன் வாயில் சர்க்கரை போடுவோம்.
'பொது வாழ்க்கையில் உள்ள எந்தப் பிரமுகரும் இனி எந்த மதத்தின் நடவடிக்கைகளுடன் பங்கேற்பதை நிறுத்திக் கொள்வோம் என்று அறிவிக்க வேண்டும்' என்ற ஞாநியின் கருத்து கட்டாயம் நடைமுறைப் படுத்த வேண்டியது. சங்கரமட சரணாகதியாகட்டும், நோன்புக் கஞ்சியாகட்டும், பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையாகட்டும் மதத்தை நினைவுபடுத்தும் எத்தகைய நிகழ்வுகளிலும் பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் பங்கேற்கக் கூடாதென்று 'சத்தியப் பிரமாணம்' வாயிலாக உறுதிமொழி எடுக்க வேண்டும். கட்டுரையின் இறுதியில் முக்கியமான விஷயத்திற்கு வருகின்றார் ஞாநி. ஞாநி+சின்னக்குத்தூசியின் செவ்விக்கு தவறான உள்நோக்கு காட்டியமைக்காக சோ மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றார். இந்த விவரத்தை கட்டு-உரையின் முகப்பிலேயே கூறியிருந்தால், படிக்க நினைத்து நேர விரயம் செய்யாமல் பல வாசகர்கள் தப்பித்திருக்கலாம்.
தனிமனித தோப்புகளும், மற(ர)த்தமிழர்களும்
திரு சுப. வீர பாண்டியன் அவர்களின் பாஞ்சாலத்திற்கு ஒரு நீதி, பைந்தமிழ் நாட்டிற்கொரு நீதியா என்ற கட்டுரை படித்தேன். அவரது குமுறல் மிகவும் நியாமானதொன்று.
பஞ்சாபியர், கன்னடர், மராத்தியர் மற்றும் தெலுங்கர் நடத்திய மாநாடுகளையும், அதற்கு மைய அரசு செய்த உதவிகளையும் தெளிவாகக் குறிப்பிட்டு தமிழென்றால் அதே அரசின் மாற்றாந்தாய் மனப்பாங்கினையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றார். தமிழ் விழாக்களென்றால் பாரபட்சமாய் நடவடிக்கைகளை எடுத்து வரும் மைய அரசினை கண்டிக்க அந்நாளைய மாநில அரசுகள் முன் வராத கயமைத்தன்மையையும் அவர் சாடத் தவறவில்லை. இருப்பினும் முத்தாய்ப்பாய் அவர் கூறியது சிறிதே ஆச்சர்யம் தருகின்றது. "இந்திய அரசு தமிழர்களை அந்நியமாகவே பார்க்குமானால், தமிழர்களும் இந்திய அரசை அந்நியமாகத்தானே பார்க்க முடியும்?" இதுதான் சுப.வீ. கட்டுரையின் சாரம்சமா? இந்திய அரசு தமிழர்களை அந்நியமாகப் பார்க்க காரணமென்ன? 'வடக்கு வாழ்கின்றது, தெற்கு தேய்கின்றதென்ற' வாதத்திற்கு இன்றும் வலுவுண்டா?
தனிக்கட்சி ஆட்சியென்று இல்லாமல் மத்தியிலே கூட்டாட்சி என்பதே இன்றைய நிதர்சனமாகிப் போனது. பிராந்தியக் கட்சிகளின் பேச்சு மத்தியில் எடுபடும் காலத்தில் பிரிவினையால் விளையும் பயன்தான் என்ன? தமிழை 'செம்மொழி'யாக்கி 'வரலாற்று சாதனை' படைத்த கால கட்டத்தில் பேசும் பேச்சா இது? சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எந்த மைய அரசும் செய்ய விரும்பாத அல்லது செய்ய மறுத்த 'செயற்கரிய செயல்' அல்லவா இச்சாதனை? இன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இலங்கைக்கு படை அனுப்ப மாட்டோம் மென்று 'சுயம்பு வெளியுறவுத்துறை அமைச்சரான' திரு வைகோ மூலம் கருத்து தெரிவித்ததாய் ஊடகங்கள் வாயிலாக அறிய நேர்ந்தேன். ஆஹா...இன்று தமிழனின் 'பவர்' மையத்தில் எப்படிப்பட்டதென்று கண்டிப்பாய் சுப.வீ அறிந்திருப்பார். இன்று மட்டும் உலகத்தமிழ் மாநாடோ, சைவ விழாவோ, முருகன் விழாவோ நடத்துவதாய் இப்போதைய தமிழகத் தலைவர் யாராவது அறிவிக்கட்டும். பின்னர் பாருங்கள் சுப.வீ... பகை நாடென்ன, நம்மைக் கண்டு சிரிப்பாய் சிரிக்கும் நகை நாடுகளிலிருந்து கூட 'தமிழர்கள்' கலந்து கொள்ள மத்திய அரசு ஆவன செய்யும். தன் கையால் குத்து விளக்கேற்றி பிரதம மந்திரி அவர்கள் ஓரிரு வார்த்தைகள் உடைந்த தமிழும் பேசுவார். அப்புறம் தமிழுணர்வு தானாக வளரலாம். பிறகெதற்கு பிரிவினை எச்சரிக்கை?
எட்டு கோடி தமிழர்களின் எடுப்பாய் செயல்பட வேண்டிய ஆளும் மாநில கட்சிகளின் நிலைப்பாடே இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம். சுப.வீ அவர்களின் கட்டுரைப்படி தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைக்காலத்தில் கழகங்களே மாறி மாறி ஆட்சி செய்தன. எதற்கெல்லாமோ 'அடைப்பு' நடத்தி தினவாழக்கையை பாழடித்த கழகங்கள் தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டும் காந்தாரியாய் கண்கள் கட்டி இருந்த ரகசியமென்ன? இன்று திடீரென்று தமிழ்ப்பற்றுடன் உலவும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவரது முன்னாள் உடன் பிறவா சகோதரி ஜெயலலிதா அவர்கள் தமிழ் கொடுமைக்கெதிராக என்ன செய்தார்கள்? அவரது தற்போதைய உடன் பிறவா சகோதரர் திரு. தொல்மா என்ன செய்தார்? கள்ளத்தோணி ஏறிச் சென்று தனது 'நாட்டுப் பற்றை' பறைசாற்றிய திரு. வைகோ'வாவது பரவாயில்லை. தமிழுக்கு மற்றும் தமிழருக்கு நிகழும் கொடுமைகளை எதிர்த்து அவ்வப்போது குரல் கொடுத்தார். அவரது பேச்சும் தமிழ்நாட்டின் பிரிவினையை ஒட்டி அமைந்ததில் வியப்பில்லை. 'போடா' சட்டத்திற்கு அரசாங்கமே 'போடா' சொன்ன பின்னர் இப்போது பல அரசியல்வாதிகளும் தைரியமாக தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைகளை உணர்ச்சிப் பூர்வமாக பேச முன் வருவார்கள். சுப. வீ நினைப்பது போல் அப்போது தமிழுக்கு நேர்ந்த இழுக்குகள் துடைக்கப் படலாம். கனவு காண்பதென்பது தமிழனின் பிறப்புரிமை. வாருங்கள் கண்களை அகல விரித்து கனவு காண்போம்.
நமது தமிழனின் இன்னொரு தனிச்சிறப்பு 'தனிமனித தோப்புகளாக' வாழ்வதுதான். இவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் இணைந்தால் வேறொரு தமிழனைக் கவிழ்ப்பதற்காகவென்று அவதானித்துக் கொள்ளலாம். பிரதமராக திரு. மூப்பனார் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியபோது நமது தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை நமக்குத் தெரிந்த விஷயம்தானே? மலிவான அரசியல் காரணங்கள், சுயலாபங்கள், தனிமனித துதிகள் போன்றவையே தமிழ்த் தலைவர்களின் ஆக்கங்கள் என்றாகிவிட்டது. காவிரி நீர்ப்பிரச்சினையில் நமது மாண்புமிகு MP'க்கள் மற்றும் MLA'க்களின் செயல்பாடுகள் நாடறிந்ததுதானே? இன்று தமிழக மத்திய மந்திரிகளின் துறைகள் எவ்வாறு பெறப்பட்டன? எதிர்காலத்தில் 'மாநிலத்தை' ஆள வேண்டிப் போடப்பட்ட அச்சாரம்தானே இப்போதைய மாநில கூட்டணிகள்? இவர்கள்தான் தமிழுக்கு நிகழ்ந்த கொடுமையைப் பற்றி கவலைப்பட போகின்றார்கள்?
மத்திய அரசாங்கத்தில் முன்னெப்போதுமின்றி அதிகபட்சமாக தமிழக அமைச்சர்கள் இப்போது இருக்கின்றார்கள். இருப்பினும் தமிழ்க்கொடுமைகளை நினைத்து தனித் தமிழ்நாடு அடைந்தோமென்றே வைத்துக் கொள்வோம். இதே கழகத் தலைவர்கள் தனித்தமிழ்நாட்டை ஆண்டால் நாமிழந்த தமிழ் உணர்வுகள் தழைத்து விடுமா? மாறாக தமிழ்நாட்டினையே அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டது போலாகாதா? இந்தி தெரிந்தால் மத்திய மந்திரி வாய்ப்புக் கிட்டுமென்பது கலைஞர் குடும்பத்தில் தான் நடக்கும். அதற்காக தமிழ் தெரிந்தவர்கள் விசனப்பட தேவையில்லை. கழகங்களுக்கு மாற்று கூட்டணி ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கின்றது. மாற்றான் தோளிலேயே சவாரி செய்து பழக்கப்பட்ட காங்கிரஸோ சொந்தக் கால்களையே மறந்து விட்டது. உதிரிக் கட்சிகளோ 'கழகங்களின் சத்துணவில்' காலமோட்டுகின்றது. எனவே இந்திய அரசு தமிழர்களை அந்நியப்படுத்துகின்றது என்று கூறுவதைவிட நமது தமிழ் அரசியல் தலைவர்களே நம்மை அந்நியப்படுத்திவிட்டார்கள் என்பதே சரி. இந்தியாவுடன் கூடியிருக்கும் போதே கொண்டாட்டம் போடும் இந்தக் கழைக்கூத்தாடிகளிடம் பிரிந்த தமிழ்நாட்டினைக் வேறு கொடுக்க வேண்டுமா?
இப்போதைய உடனடித் தேவை தமிழுக்கென்று ஒரு மாநாடல்ல. 'தமிழனென்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா' என்ற ஏட்டளவுப் பெருமைமையை நடைமுறைப் படுத்த அனைத்து தமிழரும் முயலவேண்டும். இதற்காக தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து ஆரவாரம் செய்ய வேண்டாம். கூட்டம் கூட்டி பிரிவினைக் கோஷமும் போடவேண்டாம். அரசியல் பேதமின்றி அனைத்து தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும் ஒன்று கூடி நம்மிடையே தமிழுணர்வு வளர்க்க நடைமுறைப் படுத்தக் கூடிய 'செயல்முறைத் திட்டம்' ஒன்றினை வரையலாம். இன்றைய தொழில் சார்ந்த நவீன கல்வி முறையில் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட தமிழ் ஆசான்களின் பங்களிப்பு இம்முயற்சிக்கு பெரிதும் உதவும். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தனிப்பாட வருமானமுமின்றி, கூலிக்கு மாரடிக்காமல் உண்மையாய் தமிழ் புகட்டும் ஆசான்கள் இன்னும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருக்கின்றார்கள். அவர்களைக் கொண்டு மாணவ சமுதாயத்திடையே மீண்டும் தமிழுணர்வு புகட்டப்பட வேண்டும். அதை விடுத்து மூலையில் உட்கார்ந்து 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்று முகாரி பாடுவதால் பயன் ஒன்றும் விளையப் போவதில்லை.
இன்று கணித்துறை வளர்ந்து விருட்சமாய் நிற்கின்றது. இத்துறையால் நன்மைகள் மற்றும் தீமைகள் கலந்தே உள்ளன. இணையத்திலும், வலைப்பூக்களிலும் சத்தமின்றி ஒரு 'தமிழ்ப் புரட்சி' நடந்து வருகின்றது. வருமானமோ, லாபமோ பாராமல் சிலநேரங்களில் தங்கள் கைக்காசைப் போட்டு பலர் இணைய தமிழின் வளர்ச்சிக்கு தேவையான எழுத்துருக்கள், செயலிகள், நிரலிகள் என்று உருவாக்கிப் பாடுபடுகின்றார்கள். அச்சு ஊடகங்களில் இல்லாத இந்த இணைய கருத்துச் சுதந்திரம் கண்டிப்பாக எதிர்கால தமிழ் மற்றும் தமிழுணர்வு வளர கண்டிப்பாக உதவும்.
அதன் தீமையாக தமிழறிவு சோறு போடுமா என்று கூசாமல் பேசும் 'வல்லுநர்களை'யும் இந்நாளில் காணலாம். ஆனால் ஆங்கிலம் குறைவாகவே அறிந்த சீனாவில், பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கிளைகளைத் திறக்கின்றன. கணிபொறி செய்யும் IBM நிறுவனக் கிளையன்றை லெனோவா என்ற சீன நிறுவனம் வாங்கியிருக்கின்றது. இதெல்லாம் தமிழறிவு சோறு போடுமாவென்று குதர்க்கம் பேசும் அந்த 'வல்லுநர்களின்' கண்களுக்கு தெரியாமலில்லை. மெல்ல அவர்களும் திருந்துவார்கள் என்று நம்புவோம்.
நுனி நாக்கு ஆங்கிலம் தெரிந்தால் பன்னாட்டு நிறுவனமொன்றின் 'வாடிக்கையாளர் சேவை மையத்தில்' (Customer Call Center) வயிறு கழுவலாமென்று நினைக்கும் இன்றைய இளைய சமுதாயத்தில் தமிழுணர்வை உடனடியாக ஏற்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. ஆனால் மணி கட்ட வேண்டிய தருணமிது. ஆக்கபூர்வமாக சிந்தித்து, செயல்பட ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் முன் வருமா?
பஞ்சாபியர், கன்னடர், மராத்தியர் மற்றும் தெலுங்கர் நடத்திய மாநாடுகளையும், அதற்கு மைய அரசு செய்த உதவிகளையும் தெளிவாகக் குறிப்பிட்டு தமிழென்றால் அதே அரசின் மாற்றாந்தாய் மனப்பாங்கினையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றார். தமிழ் விழாக்களென்றால் பாரபட்சமாய் நடவடிக்கைகளை எடுத்து வரும் மைய அரசினை கண்டிக்க அந்நாளைய மாநில அரசுகள் முன் வராத கயமைத்தன்மையையும் அவர் சாடத் தவறவில்லை. இருப்பினும் முத்தாய்ப்பாய் அவர் கூறியது சிறிதே ஆச்சர்யம் தருகின்றது. "இந்திய அரசு தமிழர்களை அந்நியமாகவே பார்க்குமானால், தமிழர்களும் இந்திய அரசை அந்நியமாகத்தானே பார்க்க முடியும்?" இதுதான் சுப.வீ. கட்டுரையின் சாரம்சமா? இந்திய அரசு தமிழர்களை அந்நியமாகப் பார்க்க காரணமென்ன? 'வடக்கு வாழ்கின்றது, தெற்கு தேய்கின்றதென்ற' வாதத்திற்கு இன்றும் வலுவுண்டா?
தனிக்கட்சி ஆட்சியென்று இல்லாமல் மத்தியிலே கூட்டாட்சி என்பதே இன்றைய நிதர்சனமாகிப் போனது. பிராந்தியக் கட்சிகளின் பேச்சு மத்தியில் எடுபடும் காலத்தில் பிரிவினையால் விளையும் பயன்தான் என்ன? தமிழை 'செம்மொழி'யாக்கி 'வரலாற்று சாதனை' படைத்த கால கட்டத்தில் பேசும் பேச்சா இது? சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எந்த மைய அரசும் செய்ய விரும்பாத அல்லது செய்ய மறுத்த 'செயற்கரிய செயல்' அல்லவா இச்சாதனை? இன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இலங்கைக்கு படை அனுப்ப மாட்டோம் மென்று 'சுயம்பு வெளியுறவுத்துறை அமைச்சரான' திரு வைகோ மூலம் கருத்து தெரிவித்ததாய் ஊடகங்கள் வாயிலாக அறிய நேர்ந்தேன். ஆஹா...இன்று தமிழனின் 'பவர்' மையத்தில் எப்படிப்பட்டதென்று கண்டிப்பாய் சுப.வீ அறிந்திருப்பார். இன்று மட்டும் உலகத்தமிழ் மாநாடோ, சைவ விழாவோ, முருகன் விழாவோ நடத்துவதாய் இப்போதைய தமிழகத் தலைவர் யாராவது அறிவிக்கட்டும். பின்னர் பாருங்கள் சுப.வீ... பகை நாடென்ன, நம்மைக் கண்டு சிரிப்பாய் சிரிக்கும் நகை நாடுகளிலிருந்து கூட 'தமிழர்கள்' கலந்து கொள்ள மத்திய அரசு ஆவன செய்யும். தன் கையால் குத்து விளக்கேற்றி பிரதம மந்திரி அவர்கள் ஓரிரு வார்த்தைகள் உடைந்த தமிழும் பேசுவார். அப்புறம் தமிழுணர்வு தானாக வளரலாம். பிறகெதற்கு பிரிவினை எச்சரிக்கை?
எட்டு கோடி தமிழர்களின் எடுப்பாய் செயல்பட வேண்டிய ஆளும் மாநில கட்சிகளின் நிலைப்பாடே இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம். சுப.வீ அவர்களின் கட்டுரைப்படி தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைக்காலத்தில் கழகங்களே மாறி மாறி ஆட்சி செய்தன. எதற்கெல்லாமோ 'அடைப்பு' நடத்தி தினவாழக்கையை பாழடித்த கழகங்கள் தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டும் காந்தாரியாய் கண்கள் கட்டி இருந்த ரகசியமென்ன? இன்று திடீரென்று தமிழ்ப்பற்றுடன் உலவும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவரது முன்னாள் உடன் பிறவா சகோதரி ஜெயலலிதா அவர்கள் தமிழ் கொடுமைக்கெதிராக என்ன செய்தார்கள்? அவரது தற்போதைய உடன் பிறவா சகோதரர் திரு. தொல்மா என்ன செய்தார்? கள்ளத்தோணி ஏறிச் சென்று தனது 'நாட்டுப் பற்றை' பறைசாற்றிய திரு. வைகோ'வாவது பரவாயில்லை. தமிழுக்கு மற்றும் தமிழருக்கு நிகழும் கொடுமைகளை எதிர்த்து அவ்வப்போது குரல் கொடுத்தார். அவரது பேச்சும் தமிழ்நாட்டின் பிரிவினையை ஒட்டி அமைந்ததில் வியப்பில்லை. 'போடா' சட்டத்திற்கு அரசாங்கமே 'போடா' சொன்ன பின்னர் இப்போது பல அரசியல்வாதிகளும் தைரியமாக தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைகளை உணர்ச்சிப் பூர்வமாக பேச முன் வருவார்கள். சுப. வீ நினைப்பது போல் அப்போது தமிழுக்கு நேர்ந்த இழுக்குகள் துடைக்கப் படலாம். கனவு காண்பதென்பது தமிழனின் பிறப்புரிமை. வாருங்கள் கண்களை அகல விரித்து கனவு காண்போம்.
நமது தமிழனின் இன்னொரு தனிச்சிறப்பு 'தனிமனித தோப்புகளாக' வாழ்வதுதான். இவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் இணைந்தால் வேறொரு தமிழனைக் கவிழ்ப்பதற்காகவென்று அவதானித்துக் கொள்ளலாம். பிரதமராக திரு. மூப்பனார் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியபோது நமது தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை நமக்குத் தெரிந்த விஷயம்தானே? மலிவான அரசியல் காரணங்கள், சுயலாபங்கள், தனிமனித துதிகள் போன்றவையே தமிழ்த் தலைவர்களின் ஆக்கங்கள் என்றாகிவிட்டது. காவிரி நீர்ப்பிரச்சினையில் நமது மாண்புமிகு MP'க்கள் மற்றும் MLA'க்களின் செயல்பாடுகள் நாடறிந்ததுதானே? இன்று தமிழக மத்திய மந்திரிகளின் துறைகள் எவ்வாறு பெறப்பட்டன? எதிர்காலத்தில் 'மாநிலத்தை' ஆள வேண்டிப் போடப்பட்ட அச்சாரம்தானே இப்போதைய மாநில கூட்டணிகள்? இவர்கள்தான் தமிழுக்கு நிகழ்ந்த கொடுமையைப் பற்றி கவலைப்பட போகின்றார்கள்?
மத்திய அரசாங்கத்தில் முன்னெப்போதுமின்றி அதிகபட்சமாக தமிழக அமைச்சர்கள் இப்போது இருக்கின்றார்கள். இருப்பினும் தமிழ்க்கொடுமைகளை நினைத்து தனித் தமிழ்நாடு அடைந்தோமென்றே வைத்துக் கொள்வோம். இதே கழகத் தலைவர்கள் தனித்தமிழ்நாட்டை ஆண்டால் நாமிழந்த தமிழ் உணர்வுகள் தழைத்து விடுமா? மாறாக தமிழ்நாட்டினையே அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டது போலாகாதா? இந்தி தெரிந்தால் மத்திய மந்திரி வாய்ப்புக் கிட்டுமென்பது கலைஞர் குடும்பத்தில் தான் நடக்கும். அதற்காக தமிழ் தெரிந்தவர்கள் விசனப்பட தேவையில்லை. கழகங்களுக்கு மாற்று கூட்டணி ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கின்றது. மாற்றான் தோளிலேயே சவாரி செய்து பழக்கப்பட்ட காங்கிரஸோ சொந்தக் கால்களையே மறந்து விட்டது. உதிரிக் கட்சிகளோ 'கழகங்களின் சத்துணவில்' காலமோட்டுகின்றது. எனவே இந்திய அரசு தமிழர்களை அந்நியப்படுத்துகின்றது என்று கூறுவதைவிட நமது தமிழ் அரசியல் தலைவர்களே நம்மை அந்நியப்படுத்திவிட்டார்கள் என்பதே சரி. இந்தியாவுடன் கூடியிருக்கும் போதே கொண்டாட்டம் போடும் இந்தக் கழைக்கூத்தாடிகளிடம் பிரிந்த தமிழ்நாட்டினைக் வேறு கொடுக்க வேண்டுமா?
இப்போதைய உடனடித் தேவை தமிழுக்கென்று ஒரு மாநாடல்ல. 'தமிழனென்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா' என்ற ஏட்டளவுப் பெருமைமையை நடைமுறைப் படுத்த அனைத்து தமிழரும் முயலவேண்டும். இதற்காக தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து ஆரவாரம் செய்ய வேண்டாம். கூட்டம் கூட்டி பிரிவினைக் கோஷமும் போடவேண்டாம். அரசியல் பேதமின்றி அனைத்து தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும் ஒன்று கூடி நம்மிடையே தமிழுணர்வு வளர்க்க நடைமுறைப் படுத்தக் கூடிய 'செயல்முறைத் திட்டம்' ஒன்றினை வரையலாம். இன்றைய தொழில் சார்ந்த நவீன கல்வி முறையில் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட தமிழ் ஆசான்களின் பங்களிப்பு இம்முயற்சிக்கு பெரிதும் உதவும். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தனிப்பாட வருமானமுமின்றி, கூலிக்கு மாரடிக்காமல் உண்மையாய் தமிழ் புகட்டும் ஆசான்கள் இன்னும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருக்கின்றார்கள். அவர்களைக் கொண்டு மாணவ சமுதாயத்திடையே மீண்டும் தமிழுணர்வு புகட்டப்பட வேண்டும். அதை விடுத்து மூலையில் உட்கார்ந்து 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்று முகாரி பாடுவதால் பயன் ஒன்றும் விளையப் போவதில்லை.
இன்று கணித்துறை வளர்ந்து விருட்சமாய் நிற்கின்றது. இத்துறையால் நன்மைகள் மற்றும் தீமைகள் கலந்தே உள்ளன. இணையத்திலும், வலைப்பூக்களிலும் சத்தமின்றி ஒரு 'தமிழ்ப் புரட்சி' நடந்து வருகின்றது. வருமானமோ, லாபமோ பாராமல் சிலநேரங்களில் தங்கள் கைக்காசைப் போட்டு பலர் இணைய தமிழின் வளர்ச்சிக்கு தேவையான எழுத்துருக்கள், செயலிகள், நிரலிகள் என்று உருவாக்கிப் பாடுபடுகின்றார்கள். அச்சு ஊடகங்களில் இல்லாத இந்த இணைய கருத்துச் சுதந்திரம் கண்டிப்பாக எதிர்கால தமிழ் மற்றும் தமிழுணர்வு வளர கண்டிப்பாக உதவும்.
அதன் தீமையாக தமிழறிவு சோறு போடுமா என்று கூசாமல் பேசும் 'வல்லுநர்களை'யும் இந்நாளில் காணலாம். ஆனால் ஆங்கிலம் குறைவாகவே அறிந்த சீனாவில், பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கிளைகளைத் திறக்கின்றன. கணிபொறி செய்யும் IBM நிறுவனக் கிளையன்றை லெனோவா என்ற சீன நிறுவனம் வாங்கியிருக்கின்றது. இதெல்லாம் தமிழறிவு சோறு போடுமாவென்று குதர்க்கம் பேசும் அந்த 'வல்லுநர்களின்' கண்களுக்கு தெரியாமலில்லை. மெல்ல அவர்களும் திருந்துவார்கள் என்று நம்புவோம்.
நுனி நாக்கு ஆங்கிலம் தெரிந்தால் பன்னாட்டு நிறுவனமொன்றின் 'வாடிக்கையாளர் சேவை மையத்தில்' (Customer Call Center) வயிறு கழுவலாமென்று நினைக்கும் இன்றைய இளைய சமுதாயத்தில் தமிழுணர்வை உடனடியாக ஏற்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. ஆனால் மணி கட்ட வேண்டிய தருணமிது. ஆக்கபூர்வமாக சிந்தித்து, செயல்பட ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் முன் வருமா?
Wednesday, December 01, 2004
Hum Tum (நானும் நீயும்) 05/28/04
மெல்லிய காதல் கதையை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கலந்து 'ரிச்சாகக்' கொடுப்பது இந்தித் திரையுலகிற்கு புதிதில்லை. அரைத்த மசாலாவையே மீண்டும் அரைப்பதிற்கு கோலிவுட்டிற்கு சற்றும் சளைத்ததில்லை பாலிவுட். இப்படத்திலும் நாயகர், நாயகி நியூயார்க் பயணிக்கும் போது ஆரம்பத்திலேயே ஏற்படும் அலுப்பைத் தவிர்க்க முடியவில்லை.
அமெரிக்காவிற்கு படிக்கச் செல்லும் கரண் கபூர் (செய்ப் அலி கான்) மற்றும் ரியா (ராணி முகர்ஜி) ஆம்ஸ்டெர்டாமில் ஆறு மணி நேரம் ஒன்றாக செலவிட நேருகின்றது. வாழ்க்கையை பார்ப்பதில் கரணுக்கும், ரியாவுக்கும் ஒற்றுமை என்பது எள்ளளவும் கிடையாது. 'எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும்' என்ற பழமைத் தத்துவம் உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்குமே! இருப்பினும் கதையை சின்ன சின்ன சம்பவங்கள் மூலம் அலுப்புத் தட்டாமல் எடுத்துச் சென்றிருக்கும் பாங்கு அலாதியானது. குணால் கோலியின் இயக்கத்தில் யாஷ் ராஜ் பேனரில் வெளியான மற்றுமொரு வெற்றிச் சித்திரமே ஹம் தும்.
கரணுக்கு நாடுகள், மதங்கள் போன்ற உலகப் பிரிவினைகளைவிட ஆண்-பெண் வேற்றுமையே பெரிதாகப் படுகின்றது. இக்கருத்தையே தனது ஹம் தும் என்ற கேலிச்சித்திரம் மூலம் வெளிப்படுத்துகின்றான். இக்கார்ட்டூன் முன்னணி நாளிதழில் வெளியாகி புகழும் பெறுகின்றது. திரைப்படத்தில் தேவைப்படும்போது கேலிச்சித்திரத்தின் பாத்திரங்களே கதையை நகர்த்துவது வித்தியாச முயற்சி.
ஆர்ம்ஸ்டர்டாமில் விளையாட்டாய் (நட்பாய்?) கரண், ரியாவை முத்தமிடுகின்றான். பிறகென்ன கன்னம் பழுக்கின்றது. அதிலிருந்து இருவரும் எங்கு சந்தித்தாலும் ஏதாவதொரு அசம்பாவிதம் நடக்கின்றது.
பிளாஷ்பேக் பார்த்தே அலுத்துப்போன ரசிகப் பெருமக்களுக்களை கருத்தில் கொண்டு ஆறு மாதங்கள்/ஒரு வருடம்/ பத்து வருடங்கள் கழித்துதென்று படம் எதிர்காலத்திலேயே பயணிக்கின்றது. இக்காலகட்டத்தில் ரியாவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் சற்றே யூகிக்கும்படியிருந்தாலும் அதிக சினிமாத்தனம் கலக்காமல் இயல்பாய் இருக்கின்றது. முக்கால்வாசிப்படத்தில் வழக்கமான 'சாக்லேட் ஹீரோ' பிம்பத்தை தக்க வைத்து மீதிப் பகுதியில் முதிர்ச்சியான இளைஞனாக கரண் வேடத்தை செய்ப் அருமையாகச் செய்திருக்கின்றார். ராணியும் சளைக்காமல் நடிப்பில் ஈடு கொடுக்கின்றார்.
அவ்வப்போது ஆண்-பெண் உறவுமுறையில் யார் பெரியவர் என்ற கேள்விக்கு கேலிச்சித்திரம் மூலம் விடை கொடுப்பது அசத்தல். உதாரணமாக 'வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப் பின்னும் ஒரு பெண்ணிருப்பாள் என்பது உண்மைதான். வெற்றி பெறாத ஆணை எந்தப் பெண் விரட்டப் போகின்றாள்?'
சிறப்பு வேடத்தில் செய்ப்பின் அப்பாவாக ரிஷி கபூரும், நட்புக்காக அபிஷேக் பச்சனும் வந்து போகின்றனர்.
ஹாலிவுட் ரசிகர்களுக்கு இப்படம் பில்லி கிரிஸ்டல் மற்றும் மெக் ரையான் நடித்த ‘When Harry Met Sally’ படத்தின் வாடை அடிக்கலாம். ஆனால் பாலிவுட்/கோலிவுட்டில் இதெல்லாம் பழகிப் போன சமாச்சாரமல்லவா? கிளைமாக்ஸை கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். கடைசி அரைமணி நேரம் இழுவை தேவையில்லை.
அசம்பாவிதங்கள் தாண்டி கரணும், ரியாவும் இணைகின்றார்களா என்பதை வெள்ளித்திரையில் காணவும். (இப்படித்தான் சினிமா விமர்சனத்தை முடிக்க வேண்டுமென யார் சொன்னதென்று நறநறக்க வேண்டாம்!)
Tuesday, November 16, 2004
எங்கே செல்லும் இந்த பாதை?
கடன் தராதால்
சிலுப்பிக் கொண்ட
பங்காளிகள்
கடனைத் தராமல்
ஒதுங்கப் பார்க்கும்
கருங்காலிகள்
உயிலில் அடிபட்டு
உறுமுகின்ற
உடன்பிறப்புக்கள்
தொடர்நாடக மோகத்தில்
அந்நியாமாகிப் போன
அக்கம்பக்கத்தோர்
எஞ்சியவை
மதம் மயக்கத்தில்
மிஞ்சியவை
லோகாதாயக் குழிகளில்
அப்பா நாளும் அரற்றுகின்றார்
தூக்குவதற்கு வேண்டுமே
நாலு பேரென்று
சிலுப்பிக் கொண்ட
பங்காளிகள்
கடனைத் தராமல்
ஒதுங்கப் பார்க்கும்
கருங்காலிகள்
உயிலில் அடிபட்டு
உறுமுகின்ற
உடன்பிறப்புக்கள்
தொடர்நாடக மோகத்தில்
அந்நியாமாகிப் போன
அக்கம்பக்கத்தோர்
எஞ்சியவை
மதம் மயக்கத்தில்
மிஞ்சியவை
லோகாதாயக் குழிகளில்
அப்பா நாளும் அரற்றுகின்றார்
தூக்குவதற்கு வேண்டுமே
நாலு பேரென்று
Wednesday, November 03, 2004
பாபாராஜ் கவிதைகள்
கை, கால்களை உதைத்து மகிழும் பிஞ்சிற்கு முதன்முறை 'குப்புறத்' திரும்பும் போது இனம்புரியாத ஒரு மகிழ்வேற்படும். அதே நிலைதான் தவழும் போதும், தடுமாறி நடக்கும் போதும், பின்னர் உலக நிகழ்வுகள் கண்டு ஓடும்போதும். ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரிடமிருந்தேனும் ஏதேனும் ஒரு வகை உதவி தேவைப்படுகின்றது.
வெகு நாட்களுக்கு முன்னர் கவிஞர் பாபாராஜ் பதில் மடல் அனுப்பியிருந்தார். தக்க சமயத்தில் அது குறித்து எழுத ஆசைப்பட்டதால் சிறிதே தாமதமாகிவிட்டது. தம்பியாய் பாவித்து அவர் எழுதிய மடல் ஓடும் குழந்தைக்கு சிறகு தந்தது போலிருந்தது. காலம் நகர்த்தும் காய்களாக இருந்தாலும், தமிழுணர்வால் என்னை அணைத்துக் கொள்கின்றார். எனது பொழுதுபோக்குத் தமிழிலும் அழகு கண்டு ஊக்கப்படுத்துகின்றார். ஊக்கம் தந்த தைரியத்தில் இன்று வலைப்பூவில் நூறு பதிவுகளைத் தாண்டி விட்டேன். எழுதுவதற்கு இதை விட நல்ல விடயம் கிடைக்காதென்றுதான் இன்றுவரை காத்திருந்தேன்.
அவரது சில கவிதை நல்முத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். பகைவனையும் நண்பனாக்கும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. ஆனால் இவரின் கவிதையைப் படியுங்கள்.
பகைவனையும் நண்பனாக்கு !
பகைவனையும் நண்பனாக்கும் பக்குவத்தை ஏற்று
சிகரத்தை நோக்கித்தான் செல்க -- புகைச்சல்
எரிச்சலை விட்டுவிடு ! என்றென்றும் இங்கே
பெருந்தன்மைப் பண்புகளைப் பேண் .
பகைவனை நண்பனாக்கும் பெருந்தன்மை வேண்டுமென்னும் கவிஞர், அப்பண்பினையும் யாதென்று விளக்குகின்றார். கனிவும், கருணையும் கூட்டான வீரமென்று காந்தீயத்திற்கு புது விளக்கம் தருகின்றார்.
பெருந்தன்மை கோழைத்தனமல்ல !
பெருந்தன்மை இங்கே பெருங்கடலைப் போல
கரைகாணல் ஏது ? கனிவும் - கருணையும்
கூட்டான வீரந்தான் ! கோழைத் தனமல்ல !
போற்றும் உலகம் புகழ்ந்து
சோர்ந்து போகும் நேரங்களில் புத்துயிர் ஊட்டும் கவிதைகள் 'எங்கே? எப்படி?' மற்றும் 'நிழலல்ல உண்மை'. நம்பிக்கைதான் நாற்று என்று கட்டியம் கூறும் கவிஞர், இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்காதே என்னும் நிதர்சனமும் காட்டுகின்றார்.
எங்கே ? எப்படி ?
என்னென்ன சாதனைகள் எங்கெங்கே தோன்றுமோ ?
என்னென்ன வேதனைகள் எங்கெங்கே ஊன்றுமோ ?
மண்ணகத்து மக்களெல்லாம் வாழ்க்கையிலே ஏந்துகின்ற
நம்பிக்கை மட்டுந்தான் நாற்று.
நிழலல்ல உண்மை !
இழந்ததை எண்ணி இருப்பதை விட்டுப்
புலம்பாதே என்றே புகன்று - வலமா ?
இடமா ? எதையும் எதிர்கொள் ! தடையைக்
கடந்துவிடு ! வாழ்க களித்து.
சுதந்திர இந்தியாவின் படமாய் அந்நிய நாடுகளில் அடிக்கடி காட்டப்படுவது 'நடுத்தெரு வாசிகளும்', 'பாம்பாட்டிகளும்'தான். பாம்பாட்டி பாடாவது பரவாயில்லை. ஆனால் நடுத்தெருவாசிகளின் அவலமோ கொடுமையிலும் கொடுமை. கவிஞரும் குமுறுகின்றார்:
கொடுமை !
விடியலைத் தேடும் விழிகளின் ஏக்கம்
நடுத்தெரு வாசியின் நற்றமிழ்ப் பிஞ்சின்
துடிப்பை உணர்ந்தால் துடிக்கும் இதயம்
கொடுமை இதுவென்று கூறு.
இன்று புத்தகங்கள் குறித்து பல்வேறு சர்ச்சகைகளே கிளப்பப்படும்போது, கவிஞரின் நோக்கோ 'மனிதன் மனிதனாக வாழவழி காட்டும் தினமாக', உலக புத்தக நாளைக் குறிப்பிடுகின்றார்.
உலகப்புத்தக நாள் ! 23.04.04
அறிவுச் சுடரேற்றி ஆக்கபூர்வ வாழ்வின்
நெறியில் நடைபோட நித்தம் - சிறப்பாய்
மனிதன் மனிதனாக வாழவழி காட்டும்
புனிதநாள் இந்தநாள் ! போற்று.
மென்மையும், கடுமையும் அடுத்தடுத்து தமிழ் குழைத்து தரும் வித்தை பாபாராஜுக்கு கை வந்த கலை. 'அ·றிணையாய் மாற்று' என்று தலைப்பிட்டு, துளையிட்ட மூங்கிலை சிலாகிக்கும் போது ஏற்படும் குழப்ப முடிச்சை அடுத்த இரண்டு வரிகளில் காணாமல் அடிக்கின்றார்.
அஃறிணையாய் மாற்று !
துளையிட்ட மூங்கிலில் தோன்றுவது கானம் !
மலைக்கவைத்து நெஞ்சை மயக்கும் - துளைகொண்ட
மேனியுள்ள மாந்தரின் வேடமெல்லாம் வக்கிரங்கள் !
மானிடனை அஃறிணையாய் மாற்று.
மத நல்லிணக்கம் அமைதிக்கு அடிப்படை என்று பகர்கின்றார் இதோ:
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்று !
அனைத்துமத நல்லிணக்கம் அன்றாடம் பூத்துக்
கனிந்துவிட்டால் நல்லமைதி காண்போம் -- அனைவரும்
ஏட்டளவில் இந்தியராய் இன்றி , இமையனால்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்று.
சொற்களை செட்டுக் கட்டி இல்லறம், இன்ப துன்பம், பிள்ளைப்பேறு, முதுமை, கூட்டை விட்டுப் ப(இ) றத்தல் என்ற ஒரு வாழ்க்கையே எட்டு வரிகளில் கண்முன் நிறுத்துகின்றார்.
புறப்படத்தயாராய்
ஆண்பெண் படைப்பு அற்புதப்படைப்பு
படிப்படியாக வளர்ச்சிப் பயணம்
இல்லறக் கூட்டில் இணைந்திடும் பறவைகள்
இன்பமும் துன்பமும் கூட்டின் நிகழ்வுகள்
குழந்தைத் தளிர்கள் வாழ்க்கையின் விழுதுகள்
விழுதுகள் அமைக்கும் தனித்தனி வாழ்க்கை
தாயும் தந்தையும் முதுமையின் நிழலில்
கூட்டைவிட்டுப் புறப்படத்தயாராய் !
பி.கு. வலைப்பூ வடிவம் தந்து, தமிழ்ச் செயலிகள் மற்றும் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தி, உதைத்த உந்துசக்தியான திரு. சுந்தரராஜனுக்கு நன்றி !!!
வெகு நாட்களுக்கு முன்னர் கவிஞர் பாபாராஜ் பதில் மடல் அனுப்பியிருந்தார். தக்க சமயத்தில் அது குறித்து எழுத ஆசைப்பட்டதால் சிறிதே தாமதமாகிவிட்டது. தம்பியாய் பாவித்து அவர் எழுதிய மடல் ஓடும் குழந்தைக்கு சிறகு தந்தது போலிருந்தது. காலம் நகர்த்தும் காய்களாக இருந்தாலும், தமிழுணர்வால் என்னை அணைத்துக் கொள்கின்றார். எனது பொழுதுபோக்குத் தமிழிலும் அழகு கண்டு ஊக்கப்படுத்துகின்றார். ஊக்கம் தந்த தைரியத்தில் இன்று வலைப்பூவில் நூறு பதிவுகளைத் தாண்டி விட்டேன். எழுதுவதற்கு இதை விட நல்ல விடயம் கிடைக்காதென்றுதான் இன்றுவரை காத்திருந்தேன்.
அவரது சில கவிதை நல்முத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். பகைவனையும் நண்பனாக்கும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. ஆனால் இவரின் கவிதையைப் படியுங்கள்.
பகைவனையும் நண்பனாக்கு !
பகைவனையும் நண்பனாக்கும் பக்குவத்தை ஏற்று
சிகரத்தை நோக்கித்தான் செல்க -- புகைச்சல்
எரிச்சலை விட்டுவிடு ! என்றென்றும் இங்கே
பெருந்தன்மைப் பண்புகளைப் பேண் .
பகைவனை நண்பனாக்கும் பெருந்தன்மை வேண்டுமென்னும் கவிஞர், அப்பண்பினையும் யாதென்று விளக்குகின்றார். கனிவும், கருணையும் கூட்டான வீரமென்று காந்தீயத்திற்கு புது விளக்கம் தருகின்றார்.
பெருந்தன்மை கோழைத்தனமல்ல !
பெருந்தன்மை இங்கே பெருங்கடலைப் போல
கரைகாணல் ஏது ? கனிவும் - கருணையும்
கூட்டான வீரந்தான் ! கோழைத் தனமல்ல !
போற்றும் உலகம் புகழ்ந்து
சோர்ந்து போகும் நேரங்களில் புத்துயிர் ஊட்டும் கவிதைகள் 'எங்கே? எப்படி?' மற்றும் 'நிழலல்ல உண்மை'. நம்பிக்கைதான் நாற்று என்று கட்டியம் கூறும் கவிஞர், இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்காதே என்னும் நிதர்சனமும் காட்டுகின்றார்.
எங்கே ? எப்படி ?
என்னென்ன சாதனைகள் எங்கெங்கே தோன்றுமோ ?
என்னென்ன வேதனைகள் எங்கெங்கே ஊன்றுமோ ?
மண்ணகத்து மக்களெல்லாம் வாழ்க்கையிலே ஏந்துகின்ற
நம்பிக்கை மட்டுந்தான் நாற்று.
நிழலல்ல உண்மை !
இழந்ததை எண்ணி இருப்பதை விட்டுப்
புலம்பாதே என்றே புகன்று - வலமா ?
இடமா ? எதையும் எதிர்கொள் ! தடையைக்
கடந்துவிடு ! வாழ்க களித்து.
சுதந்திர இந்தியாவின் படமாய் அந்நிய நாடுகளில் அடிக்கடி காட்டப்படுவது 'நடுத்தெரு வாசிகளும்', 'பாம்பாட்டிகளும்'தான். பாம்பாட்டி பாடாவது பரவாயில்லை. ஆனால் நடுத்தெருவாசிகளின் அவலமோ கொடுமையிலும் கொடுமை. கவிஞரும் குமுறுகின்றார்:
கொடுமை !
விடியலைத் தேடும் விழிகளின் ஏக்கம்
நடுத்தெரு வாசியின் நற்றமிழ்ப் பிஞ்சின்
துடிப்பை உணர்ந்தால் துடிக்கும் இதயம்
கொடுமை இதுவென்று கூறு.
இன்று புத்தகங்கள் குறித்து பல்வேறு சர்ச்சகைகளே கிளப்பப்படும்போது, கவிஞரின் நோக்கோ 'மனிதன் மனிதனாக வாழவழி காட்டும் தினமாக', உலக புத்தக நாளைக் குறிப்பிடுகின்றார்.
உலகப்புத்தக நாள் ! 23.04.04
அறிவுச் சுடரேற்றி ஆக்கபூர்வ வாழ்வின்
நெறியில் நடைபோட நித்தம் - சிறப்பாய்
மனிதன் மனிதனாக வாழவழி காட்டும்
புனிதநாள் இந்தநாள் ! போற்று.
மென்மையும், கடுமையும் அடுத்தடுத்து தமிழ் குழைத்து தரும் வித்தை பாபாராஜுக்கு கை வந்த கலை. 'அ·றிணையாய் மாற்று' என்று தலைப்பிட்டு, துளையிட்ட மூங்கிலை சிலாகிக்கும் போது ஏற்படும் குழப்ப முடிச்சை அடுத்த இரண்டு வரிகளில் காணாமல் அடிக்கின்றார்.
அஃறிணையாய் மாற்று !
துளையிட்ட மூங்கிலில் தோன்றுவது கானம் !
மலைக்கவைத்து நெஞ்சை மயக்கும் - துளைகொண்ட
மேனியுள்ள மாந்தரின் வேடமெல்லாம் வக்கிரங்கள் !
மானிடனை அஃறிணையாய் மாற்று.
மத நல்லிணக்கம் அமைதிக்கு அடிப்படை என்று பகர்கின்றார் இதோ:
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்று !
அனைத்துமத நல்லிணக்கம் அன்றாடம் பூத்துக்
கனிந்துவிட்டால் நல்லமைதி காண்போம் -- அனைவரும்
ஏட்டளவில் இந்தியராய் இன்றி , இமையனால்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்று.
சொற்களை செட்டுக் கட்டி இல்லறம், இன்ப துன்பம், பிள்ளைப்பேறு, முதுமை, கூட்டை விட்டுப் ப(இ) றத்தல் என்ற ஒரு வாழ்க்கையே எட்டு வரிகளில் கண்முன் நிறுத்துகின்றார்.
புறப்படத்தயாராய்
ஆண்பெண் படைப்பு அற்புதப்படைப்பு
படிப்படியாக வளர்ச்சிப் பயணம்
இல்லறக் கூட்டில் இணைந்திடும் பறவைகள்
இன்பமும் துன்பமும் கூட்டின் நிகழ்வுகள்
குழந்தைத் தளிர்கள் வாழ்க்கையின் விழுதுகள்
விழுதுகள் அமைக்கும் தனித்தனி வாழ்க்கை
தாயும் தந்தையும் முதுமையின் நிழலில்
கூட்டைவிட்டுப் புறப்படத்தயாராய் !
பி.கு. வலைப்பூ வடிவம் தந்து, தமிழ்ச் செயலிகள் மற்றும் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தி, உதைத்த உந்துசக்தியான திரு. சுந்தரராஜனுக்கு நன்றி !!!
Tuesday, November 02, 2004
அமெரிக்கா - தேர்தல்
நவம்பர் 3, 2004 2:32 AM ET
மிசிகன், மின்னசோட்டா, ஹவாய் கெர்ரிக்கு:
நிலைமை:
புஷ்: 249
கெர்ரி: 242
ஓஹையோவில் புஷ் இன்னும் முன்னணி. அநேகமாக கெர்ரி ஓஹையோவில் மறு-கணக்கு கோரலாம். விஸ்கான்ஸினில் 10 ஓட்டுகள் கெர்ரிக்குக் கிடைக்கலாம்.
ஆனால் அயோவாவில் 7 வோட்டுகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஓட்டு இயந்திரப் பழுதுகளாலும், தேர்தல் அதிகாரிகளின் 'அதீத பணியாலும்' முடிவு ஒத்திபோடப்பட்டிருக்கின்றது.
ஆஹா மண்டை காய்கிறது. துணை ஜனாதிபதிக்குப் போட்டியிடும் எட்வர்ட்ஸ் முஷ்டி உயர்த்தி கூறினார்,"Every vote counts. And every vote will be counted."
"மறுபடியும்"???
மிசிகன், மின்னசோட்டா, ஹவாய் கெர்ரிக்கு:
நிலைமை:
புஷ்: 249
கெர்ரி: 242
ஓஹையோவில் புஷ் இன்னும் முன்னணி. அநேகமாக கெர்ரி ஓஹையோவில் மறு-கணக்கு கோரலாம். விஸ்கான்ஸினில் 10 ஓட்டுகள் கெர்ரிக்குக் கிடைக்கலாம்.
ஆனால் அயோவாவில் 7 வோட்டுகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஓட்டு இயந்திரப் பழுதுகளாலும், தேர்தல் அதிகாரிகளின் 'அதீத பணியாலும்' முடிவு ஒத்திபோடப்பட்டிருக்கின்றது.
ஆஹா மண்டை காய்கிறது. துணை ஜனாதிபதிக்குப் போட்டியிடும் எட்வர்ட்ஸ் முஷ்டி உயர்த்தி கூறினார்,"Every vote counts. And every vote will be counted."
"மறுபடியும்"???
அமெரிக்கா - தேர்தல்
நவம்பர் 3, 2004 1:38 AM ET
வாஷிங்டன் மாநிலம் கெர்ரிக்கு:
நிலைமை:
புஷ்: 249
கெர்ரி: 211
ஓஹையோவில் புஷ் இன்னும் முன்னணி...
வாஷிங்டன் மாநிலம் கெர்ரிக்கு:
நிலைமை:
புஷ்: 249
கெர்ரி: 211
ஓஹையோவில் புஷ் இன்னும் முன்னணி...
அமெரிக்கா - தேர்தல்
நவம்பர் 3, 2004 1:21 AM ET
நியூ ஹாம்ப்ஷயர் கெர்ரிக்கு:
நிலைமை:
புஷ்: 249
கெர்ரி: 200
ஓஹையோவில் புஷ் முன்னணி...
நியூ ஹாம்ப்ஷயர் கெர்ரிக்கு:
நிலைமை:
புஷ்: 249
கெர்ரி: 200
ஓஹையோவில் புஷ் முன்னணி...
அமெரிக்கா - தேர்தல்
நவம்பர் 3, 2004 1:00 AM ET
அலாஸ்கா புஷ்ஷ¥க்கு:
நிலைமை:
புஷ்: 249
கெர்ரி: 195
ஓஹையோ (20 பாப்புலர் ஓட்டுகள்) யாருக்குக் போகும்???
அலாஸ்கா புஷ்ஷ¥க்கு:
நிலைமை:
புஷ்: 249
கெர்ரி: 195
ஓஹையோ (20 பாப்புலர் ஓட்டுகள்) யாருக்குக் போகும்???
அமெரிக்கா - தேர்தல்
நவம்பர் 3, 2004 00:42 ET
ஓரெகான் கெர்ரிக்கு
நிலைமை:
புஷ்: 246
கெர்ரி: 195
ஓஹையோ யாருக்குக் போகும்???
ஓரெகான் கெர்ரிக்கு
நிலைமை:
புஷ்: 246
கெர்ரி: 195
ஓஹையோ யாருக்குக் போகும்???
Subscribe to:
Posts (Atom)
