Tuesday, November 16, 2004

எங்கே செல்லும் இந்த பாதை?

கடன் தராதால்
சிலுப்பிக் கொண்ட
பங்காளிகள்

கடனைத் தராமல்
ஒதுங்கப் பார்க்கும்
கருங்காலிகள்

உயிலில் அடிபட்டு
உறுமுகின்ற
உடன்பிறப்புக்கள்

தொடர்நாடக மோகத்தில்
அந்நியாமாகிப் போன
அக்கம்பக்கத்தோர்

எஞ்சியவை
மதம் மயக்கத்தில்
மிஞ்சியவை
லோகாதாயக் குழிகளில்

அப்பா நாளும் அரற்றுகின்றார்
தூக்குவதற்கு வேண்டுமே
நாலு பேரென்று

No comments: