Tuesday, August 31, 2004

ரிப்பளிக்கன் கன்வென்ஷன்

நியூயார்க்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்து விட்டது. அரிசோனா செனட்டர் ஜான் மெக்கெயினும், முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி ஜூலியானியும் முதல் நாளின் முக்கியப் பேச்சாளர்கள். ஜான் மெக்கெயினும்,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜான் கெர்ரியும் நல்ல நண்பர்கள். கெர்ரியின் வியட்நாம் போரில் பெற்ற மெடல்களைக் பற்றிய கீழ்த்தரமான தொலைக்காட்சி விளம்பரங்களைக் கண்டித்து புஷ்ஷிடம் பேசியவர் மெக்கெயின். மேலும் ரிப்பளிக்கன் கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு புஷ்ஷோடு உரசியவர் மெக்கெயின். கெர்ரியைப் போலவே வியட்நாம் யுத்ததில் பங்கு கொண்டு பிணைக்கைதியாய் பலநாட்கள் சித்திரவதை அனுபவித்தவர். அவரது கருத்துகளை மதிக்கும் அமெரிக்கர்கள் பலர்.

உன்னைப் பிடி என்னைப்பிடி'யென்று இருக்கும் தேர்தல் கணக்குகளைக் கண்டு புஷ் பதற ஆரம்பித்துவிட்டார். எப்பாடுபட்டாவது நடுத்தர மிதவாத மற்றும் முடிவு எடுக்காத மக்களின் ஓட்டைப் பெற மெக்கெயின் மற்றும் ஜூலியானியைப் பயன்படுத்த முடிவு செய்து களம் காணவும் வைத்து விட்டனர்.

முதலில் பேசிய மெக்கெயின் புஷ் புகழ் பாடினாலும் அடக்கியே வாசித்தார். எதிரி டெமாக்ரட்டுகளில்லை, தீவிரவாதிகளென்றார். புஷ்தான் நம்மை வழி நடத்தக்கூடியவரென்றார்.

ஆனால் ஜூலியானியோ சும்மா 'குளிர/உறைய' வைத்துவிட்டார் புஷ் புகழ் மழையில். இத் தேர்தலில் புஷ் ஜெயித்தால் 2008'ல் போட்டியிடமுடியாது. அப்போது ஜூலியானிதான் ரிப்பளிக்கன் தேர்வாக
அமையலாம். புஷ் தோற்றுவிட்டால் டெக்ஸாஸ் என்ணைக் கிணறுகளைப் பார்த்துக் கொள்ள கிளம்பி விடலாம். அப்புறமென்ன ஜூலியானி காட்டில் மழைதான்.

அதே போன்று கெர்ரியை, பில் கிளிண்டன் பின்புலத்தில் குழிபறிப்பாரென ஆருடம் சொல்கிறார்கள். கெர்ரி ஜெயித்தால் 2008'ல் மீண்டும் போட்டியிடுவார். தனது மனைவியை (ஹில்லாரியை) அப்போது
போட்டியிட வைக்கலாமென்று கிளிண்டனது அபிப்பிராயம். தலை சுற்றுகிறதா?

NBC சேனலுக்களித்த பேட்டியில் 'தீவிரவாதிகளுக்கெதிரான போரில் வெற்றி கிட்டுமா?" என்ற கேள்விக்கு 'கிட்டாது' என்று புஷ் உளற பற்றிக் கொண்டது. இன்று அதைத் திருத்திக் கொண்டார். அதே
போல் மற்றொரு பேட்டியில் 'ஈராக்கில் யுத்ததை தவறாக கணித்து விட்டோம்' என்றார்.

கெர்ரியும் சோடை போகவில்லை. அவரது ஈராக் யுத்தம் பற்றிய கொள்கை பச்சோந்தியை விட மோசமாக நிறம் மாறுகிறது.

ஆக இத்தேர்தலில் வேலையில்லா திண்டாட்டம், திணரும் வர்த்தகம், திரியும் மனித உறவுகள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னே நிற்பது தீவிரவாத ஒழிப்பு முத்திரையுடன் நடக்கும்
'ஈராக் யுத்தம்' என்ற கூத்து மட்டும்தான்.

Monday, August 30, 2004

கோபம்

உணர்வுகளின் ராட்சதன்தான்

உதட்டிலே அமிழ்தும்
உள்ளத்தில் வஞ்சமும்
உலகின் நியதியாகி
பிழைத்துக் கிடப்பதே
பிரதானமாகிப் போக

கெட்ட வார்த்தையென்றாலும்
பட்டவர்த்தனமான கோபம்
பிடிக்கின்றது

தெரியாத தேவதையைவிட
தெரிந்த சாத்தான் மேலல்லவோ?

Thursday, August 26, 2004

ஊர்க்குருவி (ஜீனியர் விகடன் கழுகாரின் முகமூடி!!!)

ஊர்க்குருவியார் ஒரு வாரமாய் தமிழகம் பறந்து, கையில் குடத்துடன் வந்து சேர்ந்தார். 'உஸ் அப்பாடா', என்றவுடன் தயாராயிருந்த கரும்பு ஜீஸை நீட்டினோம். ஒரே மடக்கில் காலி செய்து "எழுதிக்கொள்ளும்" என்றார்.

"என்ன கையில் குடம்? சிங்காரச் சென்னையில் நீர் பஞ்சமானதால் சைத்தான் குளத்திலிருந்து தேவாமிர்த நீரா?" வெனக் கிண்டினோம். ஊர்க்குருவியார் முறைத்தவுடன் அமைதியானோம். செய்தி முக்கியமல்லவா?

உலகத் தமிழரில் சிறந்தவர் யார் தெரியுமா? குருவியார் சவாலுக்கு அம்மா முன் கைமெய் பொத்திய தமிழக மந்திரிகளானோம்.

"வைகோ. இணைய சர்வே இது."

"அப்படியானால் குரு/அண்ணன் கலைஞர்?"

"தமிழகத் தமிழரே ஐந்தாம் இடத்தில் தள்ளி 'குலுக்கல்பட்டர்' ஆக்கிவிட்டனர்"

"குரு எட்டடியென்றால் சிஷ்யன்...?" ஐஸ் வைத்தோம். குருவியார் சிறிதே ஆசுவாசமடைந்தார்.

"பொடாவை போடா சொல்லிவிட்டதே தமிழக அரசு?" நாம் கிண்டினோம்.

"என்ன ஓய்? நக்ஸலைட் கத்தார் சொல்லவில்லையா? வாஞ்சிநாதன், பகத்சிங் போன்றோர் நேற்று தீவிரவாதிகள். இன்று தியாகிகள். உமது பப்ளிகேஷனை நீரே படிப்பதில்லையா?"

சிறிதே வெட்கமானோம். குருவியாரை சிறிதே கார்னர் செய்ய வினவினோம்,"ஆமாம் வைகோ ராஜபாளையம் சீருடை கட்வுட் பற்றிய உமது கருத்தென்ன?"

தனது முயற்சியில் சற்றும் அயராத பதில்,"சனநாயகத்தில் சகஜமப்பா! உமது சனநாயகத்தில் லல்லூ போனால் ராப்ரி. அம்மா போனால் ஓ.பன்னீர்செல்வம்."

"குருவியாரே அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன முடிச்சு?"

"அது சரி. வெங்கடேச பண்ணையார் தியாகியா?"

"குருவியாரே என்ன சொல்கிறீர்?"

"சும்மா பம்மாதேயும். பண்ணையார் என்கௌண்டர்ல பலன் என்ன? ராதிகா செல்வி திருச்செந்தூர் திமுக எம்.பி. முரட்டு பக்தரெல்லாம் சேவகம் செய்றாங்க."

"குழப்புகின்றீரே குருவியாரே?"

"புரியரவங்களுக்குப் புரியும். தடா பொடா'ன்னு பொருமுறீங்களே முதல்ல தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் எது தெரியுமா?"

"மதிமுக வா?" அப்பாவியாய் நோக்கினோம்.

கலகலவெனச் சிரித்தார் குருவியார். "அடடே ரொம்ப பயந்துட்டீங்களா? நம்ம ஜனநாயகப்படி ஆளுங்கட்சியெல்லாம் எதிர்கட்சிகளை எல்லாத்தையும் ஏதாவதொரு காரணம் காட்டி தடை செய்யணும்." புரியாமல் விழித்தோம்.

சப்ஜெக்ட் மாற்ற வேண்டி,"மதுர நியூஸ் ஏதும் உண்டா?" என்றோம்.

சினிமா ஜிகிடி (இளைய தளபதி விஜய்யின் படம் மதுர) அறியாத குருவியார், "ஓ...ஜெயலஷ்மி நியூஸ் ஏராளமாயுண்டு. கேளும். காக்கி சட்டைகளின் காமாக்னி பட்டவர்த்தனமாய் தெரியுது." இது பற்றி இராமேஸ்வரம் நிர்விலா கிட்ட கேட்டேன். "இதுவரை இந்திய சிப்பாய்களோட (குறிப்பா மணிப்பூர்) பெண்கொடுமை (வன்புணர்ச்சி) தெரியும். ஆனால் போலீஸ¤மா? தமிழ்நாட்டுல சட்ட ஒழுங்கு கேடுன்னு சொல்லிட்டு இந்திய ராணுவம் வந்துட்டா எங்க கற்புக்கு என்ன பாதுகாப்பு?", அப்படின்னு அவங்க கேட்டப்போ குன்றிப்போய்விட்டேன். நிதர்சனம் சுட்டது. "காக்கிச்சட்டைய்யும் ஆலீவ் உடையானதோ?", கவித்துவமானார் குருவியார்.

"என்ன இப்படி சொல்லிவிட்டீர். பங்களாதேஷை உருவாக்கவில்லையா நம் சிப்பாய்கள்? பலனென்ன இன்று? பார்டர் போர்சை பலி க(கொ)ண்டார். நதி பங்கீடு கூடாதென்றார். வேலியெதற்கென்றார். பெண் எழுத்தை (தஸ்லிமா நஸ்ரீன்) தடை கண்டார். சரி அதெல்லாம் விடும். உமது நவீன கவித்துவத்திற்கு விடைதான் என்ன?", அப்பாவியாய் கேட்டோம்.

"கணிதத்துக்கென்ன என்ன முக்கியம்? மெஜாரிட்டிதானே? எல்லாம் கணித ஆட்டமல்லவா? நீர் சொல்லும் 40,000 பெரிசா 5,00,000 பெரிசா?"

"வாழ்க்கை வயசுன்னா 5,00,000 வகுப்பில ரேங்குன்னா 40,000!", லாஜிக் திறமைமையைக் காட்ட குருவியார் மறுபடி காட்டமானார்.

மறுபடி பேச்சை மாற்ற,"சரி சரி வெளிநாட்டு விவகாரமுண்டோ?"

கடுப்பு மாறாத குருவியார் சொன்னார்,"சும்மா ஆரியன் மாதிரி பேசாதீர்".

லேட்டஸ்ட் அமிதாப்பச்சன், பிபாஷா பாசு பட வில்லனாய் நினைத்துவிட்டாரோ? "குருவியாரே நான் திராவிடன். என் மூக்கை (இந்திரா மற்றும் ஜெயவர்த்தனே மூக்கு போலல்லாமல்) நல்லா பாருங்க." என்றோம்.

"சும்மா இந்தியன் மாதிரி பேசாதீர். திராவிடனாய் பேசும்."

"அப்போ இந்தியன்னா (டைரக்டர் சங்கர் படமாய் நினைத்து) ஆரியனா குருவியாரே? கமலஹாசன் சொந்த ஊர் பள்ளத்தூர் தெரியுமா? திராவிடன்னா யார் தமிழன் மட்டுமா? திராவிடர்னா மலையாளி, கன்னடர், தெலுங்கரும் அடங்குவாரென எமது வரலாற்று ஆசிரியர் சொன்னாரே? அப்படின்னா காவேரியில ஏன் கர்நாடகம் தண்னீர் விடல? ஒரு காலத்துல கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டுல தமிழன்(?) குண்டு வைக்கப்போறதா பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதே? இதெல்லாம் ஏன்? கிருஷ்ணா நீர் ஏன் தமிழ்நாட்டுல பாயவில்லை? தமிழ்நாட்டுக்காரங்களை பட்டி'ன்னு ஏன் மலையாளிங்க ஏசுறாங்க?", கேள்விகளின் நாயகர்களாய் மூச்சிறைத்தது எமக்கு.

"வெப்பு தாங்கலை உமக்கு. இந்தா குடியும் என்னோட நீர்மோர். ரொம்பப் பேசினா பெரிய ஆளானதா நினைப்பா?"

பறந்துபோக எத்தனித்த குருவியார்க்கு கதவைத் திறந்தோம்.

ஆஹா...இந்த ஊர்க்குருவி போல் எத்தனை உயரப் பறக்க எத்தனித்த பருந்துகளோ இந்த நாட்டிலே?

கும்மென்று காற்றடித்தது கதவங்களைத் யாம் திறந்ததும்.

அப்புறம்தான் குருவியார் கொண்டு வந்து வைத்த குடத்தை நோக்கினோம்.

அடடே எத்தனை எத்தனை தீபங்கள்!!! அதுவும் இந்தக் காற்றுக்கு ஒன்று கூட அணையவேவில்லையே!!!

ஓ...அவைதான் குடத்தினுள்ளே இன்னும் இருக்கின்றனவல்லவா?

Sunday, August 22, 2004

அமெரிக்காவும் என் கிராமமும்

பச்சைக் குத்தி
கைம்பெண்ணாய்
ஜாக்கெட் களைந்த
என் பாட்டி
இளம்பெண்களாய் இங்கே
எம்முன்னே

அமெரிக்க கலாச்சாரத்துடன்
ஐக்கியமாய் பிள்ளைக்குச் செய்தேன்
அய்யனார் முன்னர்
காதுகுத்து கல்யாணம்

கிடா வெட்டி
பார்பகியூ
கியக்கு மேக்கு
பேசித் திசை காட்டும்
தேசம்

ப்ரியமானவனை
'அது'வென
அ·றிணையாக்கும்
சமூகவியல்

கானாவோ
கிராம கானமோ
கொப்பியா கொட்டியாடும்
டிஸ்கோத்தேக்கள்

இங்கே பிள்ளைகளை
பெயர்த்த பின்னும்
சிறிதே நிம்மதி

வேர் மறவுமோ செடிகள்?
கோடை விடுமுறை

பொழுது விடிந்த
சேதி சொன்ன
சேவல் விருந்து
நுங்கு பெயர்த்து
கவட்டைக் குச்சியில்
காலம் பெயரும்

கோடையின் வாடையில்
வானம் பார்த்து
வாடியது பூமி
மட்டுமல்ல
வயலின் ஏரும்
தறியின் தாரும்

எல்லையோரக்
காளியாட்டத்தின்
களைப்பினூடே
ஊர்க்குட்டை குழப்பி
மீன் பிடிக்கும்

பூவரச இலையில்
பூரண கொழுக்கட்டை
பழுத்த பலாசுளைகள்
தேனோடு திகட்டும்

பனையோலை
தார்க்குச்சியில்
விசிறியாய்
நிலமளக்கும்

பால் ஐஸோ
பதினைந்து காசு
சேமியா ஐஸோ
சீதாலஷ்மி பாக்டரி
பணம் பார்க்கும்

மாத விடுமுறையில்
சூரிய வெப்பத்தை
சுத்தமாய் ருசிபார்த்து
கரிய சரீரமும்
கிராம சாரீரமும்
என் பிள்ளைக்கு
என்று கிட்டுமோ???
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது

அவ்வை சொன்னாள். ஆனால் மானிடராய்ப் பிறந்தும் தனது பூதவுடலை நேசியாது கத்தியால் சரி செய்யும் கலிகாலமிது. பிளாஸ்டிச் சர்ஜரி ஒரு விபத்தால் விகாரமான முகத்தை சரி செய்வதென்றால் பரவாயில்லை. இயற்கையிலேயே விளைந்த விகாரத்தை என்றால் என்னைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளலாம்.

ஸ்ரீதேவியின் மூக்குக்கென்ன குறை வந்தது? கொஞ்சம் மொக்கை/மொன்னை தான். ஆனால் அரிவாள் மனை கூறு 'கிளி மூக்கல்லவா'?

அமெரிக்காவில் விடுமுறையைக் கழி(ளி)ப்பதை விட நடுத்தரவர்க்கத்து மாதுக்கள் இத்தகைய அறுவை சிகிச்சையில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். 'CTRL - C & CTRL - V' கணிணித்துறை தாண்டி மனித உடல்களிலும் வித்தை காண்பிப்பது கடந்த ஆறு வருடங்களில் 128%, அமெரிக்காவில் அதிகமாகியுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது 'சுலப தவணை' முறையும் இவ்வித சிகிச்சைக்குண்டு. அப்புறமென்ன?
பே வாட்ச் (Bay Watch) புகழ் பமீலா ஆண்டர்சன் மற்றும் பாப்பிசை மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் அறுத்துக் கட்டாத பாகமே உடம்பில் இல்லை எனலாம். ஏனிந்த எண்ணவோட்டம்?

பிரசித்தி பெற்ற அறுவைகள்(?) யாதெனப் பார்ப்போமா?

1. ABDOMINOPLASTY (Tummy Tuck): குவிமையமாயிருக்கும் வயிற்றை குழிமையமாக்கும் வித்(ந்)தை. தழும்புகள் ஆற 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகலாம்.
2. BREAST ENLARGEMENT (Augmentation Mammaplasty): மார்பக அளவுகளை அதிகப்படுத்த உதவும் சிகிச்சை. டயருக்கு காற்றடிப்பது போல சலைன் பலூன்களை விதைத்து செய்யப்படுவது. பமீலாவைச் சொல்வார்கள். இவர் 'இவ்விஷயம்' செய்வது மெத்தைத் துணியை மாற்றுவது போல...பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட விளைவு கிட்டவில்லையெனில் மீண்டும் மீண்டும் செய்யப்படவேண்டிய சிகிச்சையிது.
3. BREAST LIFT (Mastopexy): விளக்கம் தேவையில்லை.
4. CHEMICAL PEEL (Phenol and trichloroacetic acid [TCA]): முகச்சுருக்கமா? சூரியப் புள்ளிகளா? தோலையே ரசாயனத்தில் தோய்த்தெடுத்து 'பளபளா' செய்யும் தந்திரமிது. காலமமாக சுருக்கங்கள் மீண்டும் தோன்றும். எச்சரிக்கை: வெள்ளைத் தோலுக்கே பொறுத்தமானது
5. COLLAGEN / FAT INJECTIONS: உசிலைமணி முகத்துக்கு பாகவதர் பொலிவு தர வல்லது.
6. DERMABRASION: உதட்டோர சிம்ரன் மச்சம் ஓகே. ஆனால் பருக்கள்? கவலை கொள்ள வேண்டாம். காருக்கு மெழுகு தடவி மெருகேற்றுவது போல, 'உப்புத்தாள்' தேய்த்து, முக்கியமாய் வாயைச் சுற்றி 'தேய்த்து' மினுக்கச் செய்வார்கள்.
7. EAR SURGERY (Otoplasty): யானைக்காது குழந்தைகளா? கவலை வேண்டாம். நறுக்கி சரி செய்துவிடலாம்.
8. EYELID SURGERY (Blepharoplasty): கண்களுக்கு கீழ் 100 கிலோ பொன்னி அரிசி சாக்குப் பைகளா? 3 மணி நேரத்தில் காலி செய்யலாம்.
9. FACELIFT (Rhytidectomy): கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸை காதலிக்கின்றீர்களா? கல்யாணம் செய்யுமுன் மைக்கேல் டக்ளஸைப் போல் முகத்தை 'இவ்வாறு' சரி செய்யவும்.
10. FACIAL IMPLANTS: முகத்தையே முகம் மாற்றலாம்.
11. FOREHEAD LIFT (Browlift): முன்னெற்றிச் சுருக்கம் அறிவின் ஆழம் காட்டியதாய் சொன்ன காலம் மலையேறிப் போச்சு. 5 முறை ஊசியைச் சொருகியெடுத்தால் சுருக்கங்கள் சலவைச் செய்யப்படும்.
12. HAIR REPLACEMENT SURGERY: வழுக்கைத் தலைக்கு விடுதலை.
13. LASER FACIAL RESURFACING: கார்பந்டை-ஆக்ஸைடு மற்றூம் லேசர் மூலம் முகச்சலவை செய்வது.
14. LIPOSUCTION (Suction-Assisted Lipectomy): மிகச் சாதாரணமாகச் செய்யப்படுவது. அதிக கொழுப்பா? என் எழுத்தைத் தவிர மற்ற அனைத்து பாகங்களிலிருந்தும், உறிஞ்சியெடுத்துத் துப்பிவிடலாம்.
15. MALE BREAST REDUCTION (Gynecomastia): புரிந்திருக்குமே?
16: NOSE SURGERY (Rhinoplasty): மூக்கின் ஒடுக்கெடுப்பது.

ஆமாம்...ரஜினியின் கருப்பு உதட்டினை சிவப்பாக மாற்றும் சிகிச்சைப் பெயரரென்ன? தெரிந்தால் சொல்லுங்களேன்.

Thursday, August 19, 2004

பத்ரி அவர்களுக்கு பகிரங்க கடிதம்

இப்ப பகிரங்க கடிதம் எழுதுவதுதான் இணைய தர்மம். அநேகமாக ஒரு வாரத்திற்கும் மேலாக நீங்கள் இணையம் surf பண்ணவில்லை(!@#) போலிருக்கிறது. அல்லது???

இந்திய பட்ஜெட் என்றாலும், தினமலரின் அக்குறும்பு செய்தியெனிலும், அதே மலர் தாக்கப்பட்டால் எதிர்குரல் விடும் நடுநிலைச் சார்பெனிலும், கிரிக்கெட்டில் விதவிதமான வித்தியாசமான கருத்தென்றாலும், இந்திய விதிகளின் வியாக்கியானமென்றாலும், பன்னாட்டு மேதாவிகளின் நூல்களின் ஸ்பரிசத்தையும் நான் அடைவது "பத்ரி திசாரஸ்"தான்.

'வேலையத்த ஜப்பானியர்கள்' பதிவு படித்தவுடன் தோன்றியது 'ஓஹோ பத்ரிக்கும் வேலையில்லையோவென்று'. ஆமாம்...லூசுன்னா என்னங்க பத்ரி? கொஞ்சம் அவிழ்த்து விடுங்களேன்.

'எட்டுத்திக்கும் சென்று நல்லவை கொணர்ந்திங்கு சேர்' அப்படின்னு பாரதி ஜப்பானியர்க்கு சொல்லவில்லை (PUN INTENDED)

ரஜினி காதலால் ஜப்பான்/ஜப்பானியர்கள் இழந்ததென்ன? அமெரிக்க டாலரையே அள்ளி நிறுத்தும் ஜப்பானிய யென் நிலை தடுமாற்றம் கண்டு விட்டதா? அவரது 'தேச பக்தி' குறைந்து விட்டதா? தரக் கட்டுப்பாட்டின் கட்டுக் கோப்பு குலைந்து விட்டதா? தேனீயின் சுறுசுறுப்பு அகன்று விட்டதா? கருப்பு ரிப்பனை தலையிலே கட்டி உற்பத்தித்திறனை பன்மடங்காக்கும் "ஸ்டிரைக்" பாணி அமரத்துமாகிவிட்டதா? இப்ப திடீர்னு என்னதான் ஆச்சு?

வேலையத்தவர் ஜப்பானியரென்றால் மற்றவரெல்லாம் எம்மாத்திரம்?
'அவர்கள் போட்டிருக்கும் டி-ஷர்ட்', இதுதான் உம்ம பிரச்சினையா? விடுங்கள் பத்ரி. அமெரிக்காவில் செப்டம்பர் 11'ற்கு அப்புறம் 'ஓசாமா டி-ஷர்ட்' பிரபல்யமானதை விடக் கொடுமையா இது? விசேடமென்னவெனில் இந்தப்பக்கம் 'ஓசாமா டி-ஷர்ட்', அந்தப்பக்கம் 'அமெரிக்க கொடி', வித்தது ஒரே நாடு. அது சீனா.

ஜப்பானியர் தமிழ் படிப்பதில் பெருமை கொள்ளும் நீங்கள் அவரை பழந்தமிழ் இலக்கியங்கள், நவீனத் தமிழ் இலக்கியங்கள் படிக்கச் சொல்கிறீரே? ஏன் இப்பெருந் தண்டனை? மீனைப் போன்ற கண்களென்றால் தமிழருக்கே (தமிழ்நாட்டு) புரிவதில்லை. மீனாவின் கண்களில் ஜப்பானியர் பார்த்து விட்டுத்தான் போகட்டுமே?

அப்புறம் தனிநபர் தாக்குதலில் பத்ரியா? இவ்வளவு வியாக்கியானம் இதற்கு மட்டும்தானா?

அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தெ(பு)ரியவில்லை.

Wednesday, August 18, 2004

தொட்டிலும் கட்டிலும்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சில திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் மனதைத் தைத்தது "About Schmidt". ஜேக் நிக்கல்சன் நடித்து 2002'ல் வெளியான உணர்ச்சிச் சித்திரம். ரிட்டையரான ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியின் வைஸ் பிரசிடென்டின் வாழ்க்கையை அலசுவதே இத் திரைப்படம். சரியாக 120 நிமிடங்களில் திரைக்கதையை சொல்லிய பாங்கு அசத்த வைக்கிறது. நீளம் கருதி இவர்கள் வெட்டிய காட்சிகள் கூட ரசிக்கத்தக்கவவை (DVD புண்ணியம்).

23m வாரன் ஷ்மிட் உள்ளுக்குள் சோகம் புதைத்து, வெளியுலகிற்கு சாதாரணனாய் நாடகம் போட்டு வாழ்பவர். ஓய்வு பெற்ற பின் என்ன செய்வதெனத் தெரியாத போது, தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் மூலம் தான்ஜானியாவில் ஒரு சிறுவனை (நுடுகு) தத்தெடுக்கின்றார். ஆறு வயது நுடுகுவுக்கு கடிதம் எழுதி தனது அனுபவங்களை (பல சமயங்களில் பொய்யாக எழுதி) பகிர்ந்து கொள்வது, "வாய்ஸ் ஓவர்" என்ற கைவிடப் பட்ட உத்தியென்றாலும் பார்க்க சுவாரஸியமாயிருக்கிறது.

பின்னர், சில தினங்களிலேயே தனது மனைவியைப் பறி கொடுக்கிறார். இழந்த பின்னர் மனைவியை நினைத்து மருகும்போது, பல வருடங்களுக்கு முன்னர் தனது உயிர் நண்பனுடனான அவளது "உறவு" பத்திரப்படுத்தப்பட்ட சில கடிதங்களில் தெரிய வருகிறது. வெறுத்துப் போய் 'வாழ்க்கையைத் தேடி' தனது பயணத்தை RUV'ல் (நகரும் வீடு?) தொடங்குகிறார். சொந்த மகளே 'இப்போது வர வேண்டாம்' எனச் சொல்லுவதும், 'எப்போதுமில்லாத அக்கறை இப்ப எங்கேர்ந்து வந்தது' என்று கல்யாணத்தை நிறுத்தென தந்தை சொல்லும்போது மகள் பதில் தருவுதுமென சூடான நிதர்சனக் காட்சிகள் பல உண்டு. சில நேரங்களில் கதை ஆமை போல் தவழும்போது கைகொடுப்பது மிக நேர்த்தியான வசனங்களே.

'நான் வாழ்ந்து யாருக்கென்ன பயன்? நான் ஒரு தோல்வியுற்றவன்', என்று கிளைமாக்ஸில் தத்துவம் பேசும் போது நுடுகுவின் முதல் பதில் கடிதமொன்று தான்ஜானியாவிலிருந்து வருகிறது. அதில் ஒரு ஓவியம் இணைக்கப்படிருக்கிறது. ஒரு நெடிய உருவத்தின் கைகளை ஒரு சிறிய உருவம் பிடித்திருப்பது போல. ஷ்மிட்டின் கண்களில் வழியும் கண்ணீர் 'தான் ஏன் இன்னும் வாழவேண்டும், தான் இதுவரை சாதித்ததென்ன' எனபவற்றை சொல்லாமல் சொல்லும். டைரக்டர் அலெக்ஸாண்டர் பேயின் பெரைச் சொல்லாவிடில் மோட்சமில்லை எனக்கு.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் "முதியோர் இல்லங்கள்" அதிகமாவதாச் செவிவழியறிந்தேன். அமெரிக்காவில் சமீபத்தில் வீடற்றவர்க்கு ஆதரவளிக்கும் அரசாங்க இயக்கத்திற்கு எதேச்சையாக செல்ல நேரிட்டது. சோஷியல் செக்யூரிடி நம்பருடன் இங்கே பதிவு செய்து கொண்டால் குடும்பத்திற்கு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைக்கும். நமது தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட முதியோருக்கென நலத்திட்டங்கள் உள்ளனவா? தெரியவில்லை. 'தொட்டில் குழந்தைகள்' திட்டமறிவேன். மெல்ல 'கட்டில் முதியோர்' திட்டமும் வந்துவிடுமோ? கவலையாயிருக்கின்றது.

Sunday, August 15, 2004

நிதர்சனம்

தோல்பாவைக் கூத்து உலகத்தில் அழிந்து வருவதாய் திரு. இராமகிருஷ்ணன் வருந்தியிருந்தார். ஆனால் இணையத்தில் சிலர் அக்கலையை அழியாது காப்பாற்றி வருகின்றார்கள்.

தோல்பாவைக் கூத்து நடக்குது
ரொம்பப் புதுமையாக இருக்குது
நூலு ஒருத்தன் கையிலே
வாலு ஒருத்தன் கையிலே

puppet

விடுதலை தினத்தை கொண்டாடியோர்க்கு நன்றிகள்.

Saturday, August 14, 2004

வெறியுற்றதும் வெறுப்புற்றதும் - I

தமிழிணையக்
காதலர் கெஞ்சுவர்
அண்டை
நாட்டைப் பார்ப்பாயோ?
யாம் பார்க்கும் போது
ரெட்டையிலை ச(கா)ப்தம் காண்பார்

இணையப் பெருசுகள்
வழமை போல்
அறிவோ உணர்வோ
நடுநிலை கூடக்
காட்டாது

ஏகாந்தாமாய் ஒரிருவர்
ஏளனப்படுத்தப் படுவர்
ஜினிமா ஜிகிடி
தொடரும்
பின்அப்
பின்னூட்டங்களுடன்

துறவறத்தில்
போணியாகா விடில்
இல்லறம் திரும்பு
போலிக் காவிகளை களை
புணர்ச்சியாவது செய்யலாம்
புழையின்றிக் கூட...

கபளீகரம் கஷ்டமில்லை
கற்றும் தேர்வாரிலை
கவுளியை நம்புபவர்
க(நி)சத்தை நம்பிலர்

கோடம் போடு
கேதம் தந்ததாய்
கோ(ஷ)லமிடு
இருக்கும் ஒரேதுரும்பையும்
கோட்டை விட்டு
கோட்டைப் பிடிப்பதாய்
கோடம் செய்
கோஷ்டி கானம் கேள்...
ஏதோவொரு வினை

ஜியோ பாலிடிக்ஸ்
ஜிகிடி
கார்கிலில்
வன்புணர்ச்சி வராமலும்
களங்கப்படுத்திக்
களிப்பு

ஆக்கிரமிப்புக்கும்
அமைதிக்கும்
எண்(ண) வேறுபாடு தெரியாமல்
ஆசுவாசஞ் செய்
ஆச்சர்யம் கொள்
ஆசியமுஞ் செய்

புத்தன் பிறந்த மண்தான்
மங்குணியான அரசியல்தான்
பெரிய புத்தனிருந்தாலும்
சிறிய புத்தனின்
சிரிப்பொலி போதும்
சின்னாபின்னா மாக்கிட
சநாயகமென் பலவீனம்

14 ஆண்டுகளானாலும்
14 வயது கன்னியின்
களங்கம் களைவோம்
காலனின் கயிற்றிலே
சனநாயக மின்னும் தளைக்கும்
எப்பொருளுக்கும்
உட்பொருளுணர்

கடார நகரடைய
கடிகை பலவானதெனக்
கட்டியம் கூறாதே
கணக்கு பலவீனமாய்
கழுத்தறுக்கிறது

போரிலே பணம்
பார்த்தல் இயல்பு
அமைதிக்கு அதுவும்
பில்லியன் டாலரில்
செலவீனமென்பது திரிபு

தமிழ்க் கணித வரலாறு
பாடங்கள் படித்து வரவும்
கூடவே பெருமஞ்சள் கோழியின்
தர்க்கசாஸ்திர உற்சாகம்
தொலைக்காட்சியில் பார்க்கவும்

அடுத்தமுறை ராமர்படை
மாறுகைகால் கட்டி வரக்கூடாது
அம்புட்டுதான்
இந்தத்திரி இன்னுமெறியும்
ஆனால் அந்தப்புர(ற)ம்
அந்தோ கருகிவிட்டது...
கைவிட்டேன்...
இந்திய சுதந்திரதின வாழ்த்துக்கள்

உறைபனி ஊடே
தேயிலையோ வடிகொட்டையோ
சில்லிட்ட நீரைத்
தினமருந்திப் பின்
கடமையே கண்ணாய்
நவீன கருவிகளின்
நாகரிக வாடையுமின்றி
வடக்கைக் காக்கின்றார்

முப்பது ஆண்டுகளுக்கு
முன்பிறந்த கப்பல் நீர்மூழ்கியில்
வித விதமான
வேதிப்பொருள் சுவாசித்து
கடல் எல்லை
காப்பவர் தெற்கிலே

இவர்கள் ஆச்சாரம்
அனுஷ்டிக்கவில்லை
மேசைக்கு கீழே
கிம்பளம் நோக்கியதில்லை
காஷ்மீரிலிருந்து
கன்னியாகுமரி வரை
ஒண்ணரை வருடத்திற்கு
ஒருமுறை
குடும்பம் காண்பதில்
குதூகலம் அடைவார்

ரேஷணுண்டு ரம்மும்முண்டு
நாடோடி வாழ்க்கையுண்டு
அமைதியோ யுத்தமோ
உயிரை நாட்டிற்கு
உயிலாய் எழுதியதுமுண்டு

தேர்தலிலே அஞ்சலோட்டில்லை
அதுகுறித்து கவலையுமில்லை
சம்பள கமிஷனின்
லீலைகள் தெரியாது
ராமரோ அல்லாவோ
அயோத்தி அரசியலில் அக்கறையில்லை
தமிழும் இந்தியும் ஒன்றுதான்
சாதி சமயமும் தெரியாது

சுதந்திர நாளில்
இந்திய இறையாண்மைக்கு
இப்படி(டை)யாக
இறந்தவருக்கும்
இருப்பவருக்கும்
ஓய்வு பெற்றவர்க்கும்
பணிக்காக பிறந்தவருக்கும்
வீரவணக்கங்கள் !!!

வந்தேமாதரம் !!!
ஜெய்ஹிந்த் !!!
மேரா பாரத் மகான் !!!
அம்மி கொத்தும் சிற்பிகள்

அயலாராய்
எம்விழிகள்
பாவித்ததில்லை
இன்று
எதிரிகளாய்
பார்க்கப்படுகிறோம்
புள்ளிவிவரப்
புலிகட்கு
இலங்கை
ஆக்கிரமிக்க
வந்தது
வெறும்
60,000
இந்திய
ஆமிக்காரரா?
ஈராக்கை
ஏறெடுத்துப்பாரும்
4,00,000
அமெரிக்க
ஆமிக்காரர்
ஆட்டம்
போடுகிறார்
அங்கே
ஏவிய
கணைகளின்
கணக்கென்ன?
கனமென்ன?
படைகலன்களின்
பராக்கிரமமென்ன?
நடந்ததும்
நடப்பதும்
நடுநிலையார்க்கு
கண்கூடு
சிலை
வடிக்கும்
கலை
கொண்டு
சிற்பிகளே
வாருங்கள்
அம்மி
கொத்துவோம்

Friday, August 13, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - X

சலதளமடியே
மலஜலம் கழித்தோரே
குதமும்
கும்பியும்
குறியும்
நலமா?

சாகரத்தில்
சாக்கடையாய்
சங்கமதித்தோரே
டாலரும்
வெள்ளியுமாய்
அள்ளி
நீவிர்
நெருப்பள்ளி
யார் மீது
பூசுகின்றீர்?

சாரதியாய்
சாகசம்
காட்டினும்
ஜகடா
செய்வேன்
உண்மை தந்த
உன்மத்தத்தாலே

விழுந்ததாய்
வியாக்கியானம்
விளம்பு
மகளிர் கட்சி
யோனி திறந்து
மாட்சிமை காண்

தாதராய் வாழ
தகுதி பெற்றபின்
சனநாயகத்தை
சந்திசிரிக்க வை

திருப்தியா?
திலகம் வைப்பேன்
திரும்பு
மல ஆரத்தியென
மல்லுக் கட்டாதே
களிப்புற்றதும் களைப்புற்றதும் - IX

விட்ட குறையோ
தொட்ட குறையோ
ஆடிக் களிப்போமோ
தேடிக் களைப்போமோ

கிழித்தபுழையின்
கணக்கு காமிக்கின்றார்
நிருமலமா
காட்டினேன்
நிருவாணங்களே

வருந்தும்
வாக்கியம்
புரியாது
புழைகிழித்த
கேள்வியில்
புளங்கிதமடை

குவிமையம்
குறித்துப் பேசாதே
குறுக்காய்
கும்மியடி
குதக்கொழுப்புக்கு
குறைவாவுமக்கு?

சமரச
சமர்ப்பணம் செய்
சங்கறு
சமாதி கட்டு
பிடிக்காவிடில்
இறையாண்மை பேசு
சுற்றியிருக்கும்
சும்பப் புழைகள்
உசுப்பேற்றும்

உடலுக்கு
ஒன்பது
வாசல்
வியர்வைச்சுரப்பி
விட்டு
மற்றதனைத்தும்
அழுத்திப் புணர்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VIII

விவாதம்
பழகென்றால்
விதண்டாவாதம்
செய்கிறார்
வெகுசனமாய்
வெஞ்சனம்
செய்ததை
பறையடித்துப்
பாடுகிறார்

அப்பியாசம்
புரியா
அறிவிலி
நாதர்களுக்கு
பதவுரை
சொல்லும்
பாக்கியம்
வேண்டிலேன்

நித்திலம்
சுட்டாலும்
நிமலம்
போகுமோ?
நிராகரணம்
செய்யாதே
நிர்மூலரே
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VII

குணஷ்டை
குதர்க்கம்
குதூகலமில்லை
குரோதமா எங்களிடம்???
குண விரோதரே???

தக்கவிடை
நிறுவ வந்தேன்
தகனமாக்கி
விட்டீரே???

சமாதி
சமாப்தியல்ல
சயமாய்
என்சற்குணம்

துவாஜாரோகணம்
செய்கிறேன்
கொழுப்பிருந்தால்
வா

நிர்வாண
நிர்மாணம்
காட்டுவேன்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VI

தேடிக்
களைத்தேன்
தேமருதமருந்திக்
களித்தேன்

வியாச
விரக்திக்கும்
விகற்ப
வேட்டிற்கும்
வாக்கியார்த்தம்
வரவில்லை

எழுத்துப்
போக்கில்
இலக்கியம்தேடும்
இலௌகீகனார்

உன்மத்த
உச்சாட்டியம்
ஓட்டுவேன்
உசிதம்
காண்பேன்
போலி திருட்டாந்தம்
போக்குவேன்

கேதம் கொடுத்ததாய்
கேலிக்காதே
குஞ்சரம் நான்
குதம் பெயர்திடுவேன்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - V

காயவின்பம் தேடினால்
பெத்தாபுரம் போகலாம்
கவாத்து பெற்றவன்
களிக்க வந்தானோ?

யத்தனி
யதேஷ்டக்
கஷ்டமா?
மந்தத்திற்கும்
மருந்துண்டு
ஞானமந்தத்திற்கு?

மகத்துவம் பேசும்
மகராசிகளே
வெகுசன வேடத்திலே
தாமரைத் தனயனை
வெஞ்சனம் செய்ததார்?

தீக்குச்சியால்
தீபமேற்றலாம்
கொள்ளிக்குச்சியாக்கி
சிரமும் சொரியலாம்
சிரங்கு கிளறும்
குரங்குகளே

மார்ச்சரியம் காட்டும்
மகான்களே
மாந்மியம் பேசும்
மகராசிகளே
மத்தம் களைவீர்

ஜனனமோ
மரணமோ
வைராக்கியம்
சேருமிடம்
தாண்டும்
வரையில்தான்

Thursday, August 12, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - IV

தவறிழைத்தல்
தண்டிக்கக்கடவது
அம்பாரமாய்
ஆலீவுடை
துச்சாதனரென
அவதானிக்கும்
அக்கியானிகள்
அநேகம் பேர்

அகிம்சை
சோழமுத்திரை
சினி ஜிகிடி வார்த்தை
வாந்தியெடுத்து
அக்கிரகாரப்
பூணூலை
அரைஞாண்
கொடியாக்கிக்
களிப்பர்

அஞ்சிட்டன் மேலும்
அப்பழுக்குத் தேடி
அதமம் செய்வர்
அஞ்ஞாத வாசத்திலும்
அசௌரியம் கூறி
அஞ்சனம்
பூசுவர்

அநீதியென்னும் குரலை
அந்தியகிரியை செய்வர்
அப்புறமென்ன
அடக்குமுறையை
அறிந்தவர்
அவரன்றோ?
தமிழோவியப் பதிவுகள்

கிடைத்த சிறிது நேரத்திலே ஒரு விளையாட்டுக் கட்டுரை எழுதிப்பார்த்தேன். தமிழோவியத்தில். நேரமிருப்பின் எட்டிப் பாருங்களேன்.
அப்பியாசமும் வெளிவந்திருக்கிறது.
களிப்புற்றதும் களைப்புற்றதும் - III

இலக்கிய உபாதி
உச்சத்திலே
சொல்லாடல்
ஜோடனைகள்

ஏகோபித்த
ஏடணையாய்
பெண்டாளராம்
சண்டாளராம்

கூற்றுவனோடு
கூத்துகட்டவில்லை?
உயுக்கத்தில்
உதிரம் கொட்டவில்லை?

உவதியுடன்
உல்லாசமாம்...
உத்தரீயம் கலைக்கும்
உன்மத்தர்களாம்

ஊருக்குத்தான்
உபாசநம்
இவரது
இறையாண்மையும்
இட்லிப்பொடிதான்

களிப்புற்றதும் களைப்புற்றதும் - II

சேத்திரமென்றால்
சேவிக்கலாம்
குருச்சேத்திரத்தில்
சேதித்தல் திரிபல்ல

சுயம்பாகம் செய்தது
சம்போகத்திற்கா?
மான தத்தம்
செய்தோமே?

சமரசமாய் வந்து
சந்தி சிரித்தோமே?
சல்லாபம் பேசும்
சர்வகலாசாலைகளே
எரிவது எந்தன்
கும்பியோடு குதமும்

சரணாகதியடைந்து
சங்கறுத்தோரே இன்று
சவுந்தரியம்
சமைக்கின்றீரோ?

கிரம கிரந்தமிது
காயசித்தியாய்
காலம் கடத்தும்
காச காதகரே
களிப்புற்றதும் களைப்புற்றதும் - I

மகிதலம் கொண்டோர்
மகிமையறியவர்
மத்தியஸ்தமாய் கூறுவேன்
மதுரமாய் தோன்றாதுனக்கு

துவாரபாலகரை
தூஷித்தல் களிப்பு
லோகமே லோகாதயக்குழியா?
களைப்பு தாத்பரியம்

கூல ருசி
குருவியறியும்
தாசி ருசிக்கு
தபசு செய்திலேன்

சூரிய சூட்டுக்கு
சூரணமா?
சூரன் நான்
சூன்யனே...

மாந்மியமறியா
தற்குறிகளே
உங்குறி உனக்கெட்டாது
மாற்றானுக்கு மண்டியிடு

அப்பியாசம்

ஏகதேசக் கும்பலின்
விரை வீக்க விஷயத்தை
தேசமேலேற்றும் த்வனி

உபாதிக்கு ஔடதமுண்டு
பிச்சி உச்சிக்கு சூரணமேது?

சோபம் சேர்க்கத்தான்
சென்றான் சோதரன்
தக்கணியாய் பெற்றான்
தண்டமில்லை தகநம்

துராகிருதம் செய்து
துட்டனாய் துரோகமும் செய்து
துவி பாஷிதராய்
துவைதம் பேசுகிறார்

தௌகித்திரனின் பரிணயம்
பாஷாணத்தை பாணிக்கிரகணம்
செய்தவர் அறிவாரா?

பரிசனமே
பராமரிசம் செய்
பரதேசம் பார்த்துத் தெளி
பலிதமிது கடைசி

பரிசுத்த நாமம் வேண்டிலன்
பாண்டித்தியம் பயன்செய்ய
பரஞானத்தை
பரிகரித்தல் செய்கிலேன்

மோக மித்திரம்
மொத்த மந்திரமில்லை
தந்திரமாய்
யத்தனம் செய்யாதே

முகஸ்துதி முத்தியல்ல
மூட மதியாரே
மௌட்டியமே வேதனை
மௌலி களையுங்கள்

வநாந்தர வானரங்கள்
வர்த்தமானங்கள் தரும்
வந்தித்தல் செய்ய இறைஞ்சும்
நிந்தித்தால் விகடம் செய்யும்

வாதப்பிரதிவாதம் செய்
ஓதம் பேசும்
வாக்கியார்த்தம் செய்
வக்கிரலீலை செய்யும்

விடசெந்தை விரும்பியோரே
விடசுரமிதோ விசுவரூபமாய்
வேணுகானம் வேண்டாம்
அவலத்தில் அமலனும் உண்டு
அந்தகாரம் அகற்று...

புரியாவிடில்
பூஸ்திதி பற்றை
புன(ண)ர் விவாகம்
செய்...

Tuesday, August 10, 2004

பெண்ணுக்கு மரியாதை

அனைத்து நாட்டுப் படைகளிலும் பயிற்சியின் போது பெண்களுக்கு தரப்படவேண்டிய மரியாதை பிரதானமாக இருக்கும். எனது பயிற்சி அனுபவம் இதோ. கப்பலின் நுழைவாயிலில் (Gangway) அடியெடுத்து வைக்கும்போது ஆபீஸர்களுக்கு சல்யூட் வரவேற்பு தரப்படும். அதே மரியாதை கப்பலுக்கு வருகை தரும் பெண்களுக்கும் உண்டு. வயது வித்தியாசம் பாராமல் அடுத்தவரின் துணைவியாரை "மேடம்" என்றே விளிக்க வேண்டும். எவ்விடத்திலும் பெண்கள் வருகை தந்தால் கமாண்டிங் ஆபீஸரிலிருந்து, கடை நிலை ஊழியன் வரை எழுந்து நின்று மரியாதை தர வேண்டும். அவர்கள் அமர்ந்த பிறகே, அவர்கள் அமர வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகள் முடிந்தால், உண்ணும் போது கூட முதலில் குழந்தைகள், பெண்கள் பிறகே ஆண்கள் சாப்பிடுவார்கள். அனைத்திற்கும் மேலாக கப்பலையே "She" என்றுதான் விளிப்பார்கள். இது எவ்வளவு பேருக்குத் தெரியுமென நானறியேன். இது வெறும் இந்திய மகளிருக்குத்தானோ என்ற வெட்டிக் கேள்விகட்கு இங்கே விடையில்லை.

மற்றபடி "சேலை உருவுவதற்கு" பிரத்யேக பயிற்சி தரப்படுவதில்லை. ஒருவேளை அது களப் பயிற்சி (on the job training) எனக் கருதி விட்டு விட்டார்களோ என்னமோ?

இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களை விசாரிக்க வேண்டுமென்னும் கேள்வி மிக நியாயமானது. அப்படியாவது எங்கள் அரசாங்கத்திற்கு IPKF பற்றி ஞாபகப்படுத்தலாம். வியட்நாம் போரை எதிர்த்த அமெரிக்க மக்கள் கூட அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் வருடா வருடம் அப்போரில் உயிர் நீத்த இராணுவ மக்களுக்கு "Memorial" சென்று அஞ்சலி செய்கிறார்கள். அமைதிப்படை வீரர்களை இந்தியாவில் மக்கள் மட்டுமல்ல, அரசாங்கம் கூட புறக்கணித்து விட்டதென்பதே உண்மை.

இப்போது அட்டூழிய விசாரணக்கு வருவோம். வலைபதிவார்கள் குரலாய் அனைவரும் இந்திய அரசாங்கத்துக்கு மனுப் போடுவோம். என் பெயரும் அதில் கட்டாயமாய் இருக்கும்.

இல்லாவிடில் பூந்தமல்லியில் இன்னொரு சிறப்பு நீதிமன்றம் வைத்து விசாரணை செய்வோம். ஏனென்றால் தீர்ப்புகளைத்தான் நாம் வழக்கம் போல் சுகமாக மறந்து விடுவோமே?

சுந்தரவடிவேல் "சேலை உருவிகள்" என்றார். நான் அனைவரும் அப்படியல்ல என்றேன். வன்முறையில் உயிர் நீத்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் இறந்துபட்ட இராணுவத்தினருக்கும் (சேலை உருவாத) அநுதாபம் செய்யுங்கள் என்றேன். எனக்கு கிடைத்த பட்டங்கள் "நகைச்சுவையாளன்", "ஓப்பன் மைண்ட் இல்லாதவன்", "கண்மூடிய தேசப்பற்று உள்ளவன்", இன்னும் பல. ஏசுவோர் தாராளமாக ஏசிக்கொள்ளுங்கள்.

அமைதிப்படையை அம்மணப்படுத்தும் படை என்று சித்தரித்துக் காட்டும் விஷமத்தனமான பதிவு மதிக்கு "யதார்த்தமாய்" தோன்றுகிறது. ஓப்பன் மைண்ட் என்பது எதிர் வினையில் உள்ள தார்மீக நியாயங்களையும் ஏற்றுக் கொள்வதுதானே? இராணுவம் பற்றிய பதிவில் காந்தீயம், வெள்ளையுடை தேவதைகள், என்ற பின்னூட்டங்களால் நீர்த்துப் போகின்றது. திரும்பவும் சொல்கிறேன். வன்புணர்ச்சிக்குட்பட்ட சகோதரிகளுக்காக நான் விடுவது முதலைக் கண்ணீர் இல்லை. இவ்வழிச் செயல்களில் ஈடுபட்டவரை வன்மையாக கண்டிப்பது வெளிவேடமில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அமைதிப்படையை "ஆக்கிரமிப்புப் படை", "சேலை/குடல் உருவிகள்", (இன்னும் பல ஏசல்களுக்கு ஆயிரமாயிரம் வலைத்தளங்கள் உண்டு) என்று சொன்னால் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை ஏன் ரமணீதரன், மதி, வதனா, மெய்யப்பன், தங்கமணி போன்றவர்கள் எதிர்க்க வேண்டும்?

புலிகளை ஆதரிக்காததாய் சொல்பவர்கள் அவர்களது "வீர தீர பராக்கிரமங்களை" சொல்லும் இணையத்தளங்களுக்கு மட்டும் சுட்டிகள் கொடுப்பார்களாம். அடடே...ஒரு "நாங்கள் புலி எதிர்ப்பாளர்கள்" என்று "Disclaimer" போட்டு விடலாமே?

ஈராக் யுத்தத்தின் போது புஷ் சொன்னார்"Either you are with us. or else supporting the terrorist". அதேபோல் "நீங்கள் ஒன்று என் பக்கம். இல்லாவிட்டால் சேலை உருவிகள் பக்கம்" என்பது என்ன நியாயம்? இதைச் சொன்னால் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போடுகின்றேனாம்?

அப்புறம் எம்ஜியார் துப்பாக்கி கொடுத்தார். அதனால் நாங்கள் (அட புலிகள்'ங்க) சும்மா சுட்டுப் பார்த்தோம். குறுக்கே அமைதிப்படை வந்தது. ஒரு 1,200 பேர் செத்துப் போயிட்டாங்க அப்படின்னு கதை விடாதீங்க. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தாலும் பாடம் படிக்காத அப்பாவி இந்தியத் தமிழர்கள் நாங்கள்.

குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக அமர்ந்து நியாயம் கேட்டு நாம் தொடர்ந்து போராடுவோம். என்னாங்கய்யா ஆச்சு இணையத்துக்கு? ஜால்ராவுக்கு பழக்கமான செவிகளுக்கு எதிர்வினைகள் ஏமாற்றம் அளிக்கத்தான் செய்யும்.

என்ன கப்பற் படையிலிருந்த ஏழு வருடத்தில் ஒருமுறை கூட சேலை உருவ எனக்கு வாய்ப்பு கிட்டாத கோபம். அதைத்தான் வலைப்பதிவில் தீர்த்துக்கொல்கிறேன். அப்படின்னும் சொல்லுங்களேன். கூடிய சீக்கிரம் இணைய துச்சாதனன் என்ற பட்டமும் கொடுங்களேன்.

காத்திருக்கின்றேன்.
பெருமதிப்பிற்குரிய சுந்தர்வடிவேல்,

கும்பகோண தீ விபத்திற்கு இயலாமையில் எட்ட நின்று நான் மாரடித்தேன். நீங்கள் பல படி மேலே சென்று கலாம் வரை வலைபதிவாளர்களின் குரலை எடுத்துச் சென்றீர்கள். இறந்துபோன தளிர்களுக்காகவும், இனி இவ்வாறு நடக்கக் கூடாதெனும் உங்களின் மனித நேயம் வாழ்க !!!

அதே மனித நேயம் தங்களது "நம்மற்குரியர் அவ்வீரர்" பதிவிலும் காணப்பட்டது. என்ன ஒரே ஒரு வித்தியாசம். வல்வெட்டித்துறையில் வன்முறையில் இறந்து ஈழத்தமிழருக்காக மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. நடந்தது தவறு என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் உங்களின் ஒருவழி அணுகுமுறைதான் பலமாய் இடிக்கிறது.

NCC'ல் ஒரு ஹவில்தாரின் "கதை" கேட்டு அமைதிப்படையின் நோக்கத்தையே எடை போட்டு விட்டீர்களே? பேஷ்..பேஷ்...கதை கேட்டதற்கு வெட்கப்படுவதாய் பாவமன்னிப்பு வேறு கேட்டு விட்டீர்கள். நாணயத்தின் இருபுறத்தையும் சீர் தூக்கி எழுதவேண்டியது எழுத்தாளனின் சமூகக் கடமை. இணையத்தில் ஈழம் பற்றி பேசவே பல "தமிழ்நாட்டுத் தமிழர்கள்" அஞ்சுகின்றார்கள். தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்குகின்றார்கள். இதே பாலஸ்தீனம், அமெரிக்கா, ஈராக் என்றால் பத்தி பத்தியாக கதைக்கின்றார்கள். ஏனிந்த இழிநிலை?

மிகுந்த இழப்புகளைச் சந்தித்து, புலம் பெயர்ந்து, எழுதும் ஈழத்தமிழர்களின் பதிவுகளைப் படித்து வருகின்றேன். அவர்களின் கண்ணீரிலிருக்கும் சூடு, பிற தமிழர்களின் பதிவில் நீலியாக நீர்த்துத்தான் தெரிகிறது.

பல ஈழ இணையங்கள் புலிகள் வீரமாய் போரிட்டு இந்திய சிப்பாய்களைக் கொன்றதாக தெரிவிக்கின்றது. ஆறு வயது சிறுவனிலிருந்து, பெண்கள் வரை யாரையும் விடாத தற்கொலைப் புலிகள் மத்தியில் அமைதி காக்க வந்து, அவமானச் சின்னங்களுடன் திரும்பிய இந்திய இராணுவத்தின் கதையை "எல்லை தாண்டி எரிந்த சிறகுகளில்" எழுதினேன்.

யாராவது நூல் பிடித்து "அறிப்பூர்வமாகவோ", "உணர்வுப்பூர்வமாகவோ" எழுதுவார்களா என ஏங்கிய காலமுண்டு. மூக்கு சுந்தரின் பதிவு மிகவும் துணிகரமான ஒன்று. அவரெழுப்பிய பல நியாயமான கேள்விகட்கு பதில் காணும் தருணம் இது.

ஆமாம். ஆளாளுக்கு இந்திய இராணுவத்தை இழுக்காக்கிறார்களே? ஏன்? ஆக்கிரமிப்பு இராணுவமாம்...அமெரிக்கா குவைத்தில் கொண்ட காதலா இது? தேயிலைக்கும், காபிக்கொட்டைக்குமா இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது? யாழ்ப்பாணத்தை அடைய ஒரு மாதம் ஆனதாம்...ஐயா...ஆக்கிரமிப்பு செய்ய ஆசைப்பட்டிருந்தால் உண்மையிலேயே எவ்வளவு நாளாயிருக்கும்? யோசித்துப் பாருங்கள்.

வானவெளியிலிருந்து உணவுப்பொட்டலங்கள் போட்டவன்தானே IPKF அனுப்பிய ராஜீவ் காந்தி? ஜெயவர்த்தனேவின் அரசியல் சூதாட்டத்தில் விழுந்து, IPKF'க்காக தினமும் 2 கோடிக்கு குடிக்க/குண்டி கழுவ என்று அனைத்து ரேஷனும் பெங்களூரிலிருந்து இலங்கை எடுத்துப் போனோமே? அங்கே 1200 சிப்பாய்கள் இழந்தோமே? சுந்தரவடிவேல் இறந்தவர்கள் பெயர் தெரியுமா உமக்கு? நானும் இணையத்தில் தேடித் தேடி அலுத்து விட்டேன். 93 தளிர்களுக்கு ஒப்பாரி வைத்த உங்கள் உள்ளம் இப்போது கல்லாகி விட்டதா?

வல்வெட்டித்துறை வன்முறைக்கு ராஜீவின் சாவுக்கடியில் அசிங்கம் கண்டுபிடித்த அவலம் உங்களைப் போல் அதிமேதாவிகளாலேயே முடியும். இப்படி வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ராஜீவ் என்கின்ற ஆரியன், ஈழத் திராவிட தமிழர்களை அழிக்க நினைத்தான் எண்டு நினைப்போம். அது பிடிக்கவில்லையெனில் ராஜீவுக்கு பார்சிய ரத்தத்தை விட பார்ப்பனீய ரத்தம் அதிகமுள்ளதெனப் பேசுவோம். உங்களுக்குத்தான் எதிலுமே ஆதியும் அந்தமும் வேண்டுமே?

பாரத சமுதாயம் வாழ்கவே என்று பின்னூட்டம் வேறு விட்டிருக்கிறீர்கள்? பாரத சமுதாயம் பற்றி பேச உமக்கு என்ன தகுதி? NCC'ல் பணியாற்றியதா? IPKF பணியாற்றிய சமயத்தில் MP'யான வை.கோபால்சாமி கள்ளத்தோணி ஏறி பிரபாகரனை சந்தித்து சாதனை படைத்தார். பின்னர் பிரேமதாசா "இந்திய இராணுவமே வெளியேறு" சொன்னபின் வந்த IPKF கடைசிக் கலத்தை வரவேற்க கூடச் செல்லாத கோமான் அந்நாளைய முதல்வர் டாக்டர் கலைஞர். நான் இவ்விருவரையும் (உங்கள் கட்டுரை படித்தபின்) இன்று ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் டாக்டர் சுந்தரவடிவேல்...உம்மை...வார்த்தைகள் வரவில்லை.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ஒரே ஒரு ஈழ இணையத் தமிழனைக் எனக்கு காட்டுங்கள். ஆச்சரியமாக உங்களால் முடியாது.இன்னொரு நிதர்சனம். புலிகள் ஒத்துக்கொள்ளாத எந்த ஒரு தீர்வும் இலங்கைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காது.

மேலும் பதிவேன்.

Friday, August 06, 2004

மனித வாழ்க்கை

நடுத்தர வர்க்கத்தின்
வக்கிரத்தில்
நெருப்புக் கோழியாய்
முகம் புதைத்து

பிறர் நனவுக்காக
என் கனவுகளை
தாய்ப் பறவையாய்
உணவாக்கி

அவசர உலகில்
அவலங்களை அள்ளி விழுங்கி
கால்நடையாப் பின்னர்
அசை போட்டு

மன ரணங்கள்
முற்றிலும் ஆறு
முன்குரங்காய்
கீறிவிட்டு

எப்போதாவது
என்னையுமறியாமல்
மான் போல்
எம்பிக் குதித்து

காதல் விளக்கில்
விடியலைத்தேடி
விட்டிலாய் பூச்சியாய்
விழுந்து

சமுதாயச் சாக்கடையில்
சகலத்திலும்
புழுப் போல்
சமரசமாய் நெளிந்து

நிமிர்ந்து பார்க்கின்றேன்
நான்
நானாகவே
வாழவில்லை

சீய்...மனித வாழ்க்கையே...

Monday, August 02, 2004

மதுரை பாபாராஜ்

இது ஒரு சாமியார் கட்டுரை. வித்தியாசமாய் இவர் பூசை, புனஸ்காரமென்று ஊரை அடித்து உலையில் போடுபவரில்லை. தனது தனித்த தமிழ்த் திறமையால், பலரை அடித்துக் கட்டிப்போட்ட புதுக்கவிதை/மரபுக்கவிதை இயற்றும் சாமியார் இவர்.

சமீபத்தில் நண்பன் ராஜ், மதுரை பாபாராஜ் கவிதைகளில் சிலவற்றை அனுப்பியிருந்தான். பாபா தமிழ் இலக்கிய வட்டாரங்களில் மிகவும் பிரபலமான, ஆனால் ஆர்ப்பாட்டமே அறியாத மாமனிதர் இவர். ராஜ்க்கு தாய்மாமன் முறையானதால் எனக்கு இலகுவாக "அங்க்கிள்" ஆகிப் போனவர். அதென்னவோ அச்சிறு வயதில் எதோ ஒரு கோபத்தில் காவல்துறையினரை மட்டுமே "மாமா" என்று விளித்து வந்த காரணமாயிருக்கலாம்.

எட்டாவது படிக்கும் போதென நினைக்கிறேன். மதுரை தமிழ்ச் சங்கத்தில் கவிதை படிக்க வேண்டுமென, தலைப்பை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டான் ராஜ். நானும், ராஜும் கவிதை படிக்கவேண்டுமென்பது பாபா அவர்களின் ஆசை (ஆணை???). திரு பாபா அவர்கள் நான் கவிதை என்று கூறிக் கொண்டதை அப்போது படித்திருப்பாரென்னும் பலமான சந்தேகம் அன்று ஏற்பட்டது.

இருப்பினும் ஏதோ எழுதிச் சென்று சிறப்பாகப் படித்தது (தனி நடிப்பு - Mono Acting எனக்கு கை வந்த கலை) ஞாபகம் இருக்கிறது. கைம்பெண் மறுமணத்தை சிறுவனாய் மேசையைத் தட்டி, "மூடி உடைந்தால் நீவிர் ஜாடியை எறிவீரோ?" என்ற வரியை இரண்டு முறை திருப்பிச் சொல்லி கைத்தட்டலைப் பெற்ற போது நான் எங்கேயோ பறப்பதாய்ப் பட்டது. (இரண்டு முறை திருப்பிச் சொல்லி எனக்கு முன் பாடிய ஒரு புகழ் பெற்ற கவிஞர் கைத்தட்டல் பெற்றதை சிறுவனான நான் காப்பியடித்தேன்). தப்பாக எழுதி மொத்து வாங்கக் கூடாதெனெ கவிதையின் ஆரம்பத்திலேயே "இம்முயற்சி நடக்கத் துடிக்கும் ஒரு தவழும் குழந்தையின் கனவு. தவறி விழுந்தால் எள்ளி நகையாடாதீர். கைக்கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்", என்று சொல்லி விட்டேன். கைத்தட்டல் பாராட்டா, தூக்கி விடச் செய்த முயற்சியா நானறியேன். இக்கவிதை போல் பின்னர் எழுதிய பல கவிதைகளையும் நான் பத்திரப் படுத்தவில்லை. நேயர்கள் தப்பித்துக் கொண்டீர்கள். இன்றும் நான் எழுதுகிறேனென்றால் பாபா போன்றவர்கள் இன்றியமையா கிரியா ஊக்கிகளாக அமைந்த காரணத்தாலே என்றால் அது மிகையில்லை.

பாபாவின் கவிதைகளை சிறு வயதில் படித்து அர்த்தம் காண முயற்சி செய்திருக்கிறேன். இன்றும் முயற்சி செய்கிறேன். ஒரே ஒரு ஆதங்கம் இன்னும் மனதில் எழும்பி அடங்குகிறது. இம்மாமனிதரின் நிழலில் தமிழ் பயில ஒரு சிறிய சந்தர்ப்பம் கூட அமையவில்லையேயென்று...

மதுரையிலும், சென்னையிலும் இவரைச் சந்தித்தபோது மணித்துளிகளை வீணடித்து விட்டேனோவெனத் தோன்றுகிறது. இன்றும் அவரை நினைத்தால் ஒரு மரியாதை கலந்த பயம்தான் வருகிறது.

பாபாராஜ் அவர்கள் வலைப்பூவிற்கு வரப்போகிறாராம். நண்பன் ராஜ் சொன்னான். ஆஹா...இழந்த மணித்துளிகளை மீண்டும் பெறும் இன்பம் எனக்கு.

இதோ அவரின் சில கவிதைகள் (ராஜ் அனுப்பியது; அனுமதி கேட்கப் பயமானதால் அப்படியே வெளியிடுகிறேன்)

கைக்கிளை
============

திரைகடலோடி
திரவியம் தேடி
திசைக்கு ஒன்றாய்
பிள்ளைகள் விமானம் நோக்கி !கையசைத்து
வழியனுப்பிய
பெற்றோர்கள்
ஏக்கமுடன் காப்பகம் நோக்கி !

பெருந்தன்மை கோழைத்தனமல்ல
================================

பெருந்தன்மை இங்கே பெருங்கடலைப் போல
கரைகாணல் ஏது? கனிவும் - கருணையும்
கூட்டான வீரந்தான் ! கோழைத்தனமல்ல !
போற்றும் உலகம் புகழ்ந்து.

கொள்ளை அழகு
=================

பச்சை வயல்களில் பால்நிற நாரைகள்
இச்சை யுடனே இருந்தன - சட்டென
வெள்ளைச் சிறகை விரித்தன வானிலே!
கொள்ளை அழகெனக் கூறு.

இதுதான் வாழ்க்கையா?
========================

நாளை எனக்கென்ன? நாளை உனக்கென்ன?
கேள்வி துளைத்தெடுத்துக் கேட்கிறது - வாழ்க்கையிங்கு
நூலறுந்த பட்டமா? நூலேணி ஆட்டமா?
கோலத்தின் காட்சியென்ன கூறு.

மாலையாக்கும் அற்புதம்
=========================

சிங்காரப் பத்துவிரல் சேர்த்து நடம்புரிய
வண்ணவண்ணப் பூக்களை வாகாக - கண்கவரும்
மாலையாக்கி நம்மை மலைக்கவைக்கும் அற்புதத்தை
வாழ்க்கையாக்கி வாழ்கின்றார் பார்.

வாருங்கள் பாபா !!! உங்கள் எழுத்தை இணையத்தில் படிக்க ஆர்வமாயுள்ளேன். பின்னூட்டதிலாவது தைரியமாய் வினாவெழுப்பி உங்களிடமிருந்து தமிழ் கற்றுக்கொள்ள முயல்வேன்.

நன்றியுடன்,
வந்தியத்தேவன்.