Friday, January 14, 2005

கைமாறு

ஊழித் தாண்டவமது
உதவிக்கரம் நீட்ட பேராசைதான்

கிழிந்த ஆடை
சூட்டை மறந்த அடுப்பு
நசுங்கல் ஏனங்கள்
எலும்பு துருத்திய பிள்ளைகள்
இயலாமையின் சின்னங்களாய் இளித்தன

இரத்தமிழக்கும் பேனாவில்
நைந்து போன சாணித்தாளில் பிறந்தது
கடவுளைக் கண்டிக்கும் கவிதை

உலர்ந்த நாவில்
எஞ்சிய எச்சிலில்
கடனுக்கு ஸ்டாம்பு வாங்கி
வாரநாவலுக்கு அனுப்பியபோது
ஏளனமாய்ப் பார்த்தாள் மனைவி

அருமையான பதிவென்று
கடிதமுடன் காசோலை

சுநாமி நிவாரணத்துக்கு
பணம் கொடுத்து
இயலாமையை இகழ்ந்தேன்

கவிதைக்கு கண்டன கடிதங்கள்
அடுத்த இதழில் வந்ததை
காசு கொடுத்து படிக்க முடியவில்லை

No comments: