Saturday, September 04, 2004

ரஷ்யாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்

இரு விமானங்கள், ஒரு சுரங்கப் பாதை குண்டுவெடிப்பு கடைசியாக முன்னூறுக்கும் அதிகமானோரை (அவற்றில் பாதி குழந்தைகள்) பலி கண்டது தீவிரவாதம். ரஷ்ய அதிபர் புடின் பொறி கலங்கிப் போய்விட்டார்.

புது முறையாக தீவிரவாதம் இப்போது ரஷ்யாவில் 'இறக்குமதி' செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது அல்-கொய்தா தீவிரவாதிகள் (சௌதி அரேபியாவைச் சேர்ந்தவர்) பங்கு பெற்றுள்ளார்களாம். ரஷ்யாவின் அதிரடிப்படையினர் அவசரம் காட்டியதால் இவ்வளவு சேதாரமெனச் சொல்லப்படுகின்றது. இருப்பினும் ஒரு பள்ளியில் குண்டுகளை விதைத்து ஆயிரக்கணக்கான மக்களை, குழந்தைகளை பிணைக்கைதிகளாய் வைப்பதற்கு ஒரு 'மனம்' வேண்டும்.

ஜம்மு காஷ்மீரில் ஆப்கானியர் மற்றும் பாகிஸ்தானியர் தீவிரவாத 'இறக்குமதி' காலங்காலமாக செய்து வருகின்றார்கள். மனித நேயம் மிக்கோரே!!! பாருங்கள் தீவிரவாதத்தின் கோரக் காட்சிகளை...

russia7 russia8russia9russia3

எங்கும், எப்பொழுதும், தீவிரவாதம் ஒரு தீர்வாகாது. புரிந்தால் சரி...

No comments: