Thursday, September 09, 2004

இயல்பும் திரிபும்

விஞ்ஞானத்தால் அஞ்ஞானம் போக்கி
ஊர் போற்றும் உபாத்தியார்
பிள்ளையின் கேள்விக்கு சிடுசிடுப்பார்

பிணி நீக்கிக் களி காண்பார்
பெருமருத்துவர் பெயரும் கண்டார்
சளியிருந்தால் வரத்தான் செய்யுமென்பார்
தளர்ந்து கிடந்த தந்தையை நோக்கி

வீடு மறந்து நாட்டை கவனிக்கும் சேவகி
இல்லாதவனை விட்டு பெருமாளுக்கு பிச்சையிடும் பக்தன்
இச்செயல்கள் இயல்புகளா இல்லை திரிபுகளா?

No comments: