Saturday, September 04, 2004

பின்னூட்டங்கள்

யதேச்சையாய் சுந்தரவடிவேல் அவர்களின் நண்பர் சுந்தர்ராஜனுக்கு பதிவின் பின்னூட்டங்களைப் படிக்க நேர்ந்தது. ஆச்சிமகன் பட்டையை கிளைப்பியிருக்கிறார். ஆச்சிமகன் சொல்வது இதுதான்:"வங்கதேச விடுதலைப்போரின் போதே இந்திய ராணுவத்தின் அட்டூழியங்கள் பற்றிய தகவல்கள் வெளியாயின. உள்நாட்டு கலவரங்களின் போது பணியமர்த்தப்படும் ராணுவம் தம் மக்களிடமே மிருகத்தனமாக நடந்து கொள்வதைத்தான் கண்டு வந்திருக்கிறோம். ராணுவத்திற்கும் - ஏன் காவல் துறைக்கும் கூட - மனித நாகரிகத்தையும் மனிதப் பண்புகளையும் பயிற்றுவிப்பது முதலாவது தேவை. அதில் அவர் தேறிய பிறகு ஆயுத பயிற்சி மேற்கொண்டால் போதும் என்ற நிலை வர வேண்டும்..."

மேலும் செ(சொ)ல்லும் ஆச்சிமகன்,"நான் ஒன்றும் சர்வாதிகார நாட்டில் வாழவில்லை. நமது தேச பக்தியை புலப்படுத்த நமது ராணுவத்தின் தவறுகளை மூடி மறைக்க வேண்டியதில்லை" என்று முழங்குகிறார்.

அவரது கருத்துகளுக்கு தலைவணங்குகின்றேன்.

தேசியப் பாதுகாப்பு பயிற்சிக்கூடத்தின் தலைமைக் கனவானாய் ஆச்சிமகன் ஆகக் கடவ. இருபத்தி ஓராம் நூற்றாண்டில் மனித நாகரிகம்/மனிதப் பண்பு பேசுமுன் தனது இணையப் பெயரையாவது மாற்றி வரட்டும். திருமலை ரா.கா.கி.'ல் கூறியது போல் நரகலை மிதிப்பது போலுள்ளது.

நல்லா ஜம்முன்னு சாப்பிட்டு, கும்முன்னு தூங்கி, தும்மல் சரித்திரம் எழுதுங்கள் ஆச்சிமகனாரே!!! அதை விட்டு விட்டு ராணுவப் பயிற்சியெல்லாம் உமக்கெதற்கு?

இன்னும் வேடிக்கை என்னவெனில் ஜனா என்பவர் சொல்லியது,"உண்மையை ஆண்மையுடன் அறிதலும், ஏற்றுக்கொள்வதும், வெளிப்படுத்துவதும் எல்லாராலும் முடியாத ஒன்று. அதை நீங்கள் செய்வதற்கு நன்றி. உங்களின் மத்த ஆக்கபூர்வமான பதிவுகளுக்கும் நன்றிகள்." இப்பின்னூட்டத்தின் மின்னஞ்சல் முகவரி sundara@email.com மற்றும் வலைப்பூ முகவரி http://sundaravadivel.blogspot.com/.

கண்டிப்பாக நண்பர் சுந்தரவடிவேல் தனக்குத் தானே 'தட்டிக் கொடுத்துக்கொள்ள' அவசியமில்லை. அப்படியெனில் ஜனா அல்லது ஜானா யார்? விஷமியோ?

இப்பதிவினால் என்ன லாபம் என்று கேட்போருக்கு...

எனக்கு 'கொள்கைச் சிங்கம்', 'கருத்து வெறி கொண்ட மிருகம்', போன்ற புதிய பட்டங்கள் சமீபத்தில் அளிக்கப்பட்டன.

இப்பதிவின் காரணமாய் முதலாவதாய் என் வலைப்பூவில் தோன்றும் ஆச்சிமகனின் சுட்டியோ, சுந்தரவடிவேலுவின் சுட்டியோ நான் நீக்க மாட்டேன்.

No comments: