Saturday, April 08, 2006

விவாதக் கூ(கு)த்துகள்

உருப்படியாக ஏதாவது எழுதலாமென்று பார்த்தால் "மறுபடியும்" பாணியில் சிலருக்காவது பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கின்றது. ஏனென்று கேட்டீர்களானால் இது விவாதமாம். இதில் ஜெயிப்பதற்காகவாவது நான் பதில் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

முதலில் தொண்டரடிப்பொடியிலிருந்து ஆரம்பிக்கின்றேன். http://rozavasanth.blogspot.com/2006/04/2_07.html#114441917406986733 கண்ணிருந்தும் குருடரான கார்த்திக்ரமாஸ் கேட்கின்றார்:

** இந்திய_தமிழக_மீனவர்களை காக்கும் பொறுப்பு யாருடையது? [இனி உங்களையும் "இந்தியத்_திமிழக_மீனவ்ர்கள்" என்றே குறிப்பிட வேண்டுகிறேன்] கேள்வி இவ்வளவுதான். சிறந்த விடையை கீழே வந்தியத்தேவன் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கலாம். நியாயமாக , யதார்த்தமாக சிந்திப்பவர்கள் மற்றதை தெரிந்தெடுக்கலாம்.

1) இந்திய அரசினுடையது
2) இலங்கை அரசினுடையது
3) இலங்கை மீனவர்களுடையது
4) புலிகளுடையது :-)
5) யாருடையதுமில்லை

வந்தியத்தேவன் நீட்டிமுழக்கி எழுதிய இரண்டு தாக்கல் பதிவுகளிலுமாகட்டும், மூன்று தகவல் பதிவுகளிலும் ஆகட்டும். மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் எங்காவது உள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லவும். **

பிரச்சினை மற்றும் தீர்வுகளை மூன்று பதிவுகளாய் தெளிவாக எழுதியும் இந்த மண்டூகத்திற்கு புரியவில்லையாம். பாவம். புரியாத இப்பிள்ளைக்கு யாராவது பதிலை எடுத்து ஊட்டி விடவும். பல்லிருந்தால் பாவம் ஊட்டி விடும் உங்கள் விரல்களை கடித்து விடப்போகின்றார்.

மண்டூகத்தின் இரண்டாவது பிதற்றல்:

**கடற்படையும்,கோஸ்ட் கார்டும் சேர்ந்துபணியாற்றவேண்டும் அப்படியே பணீயாற்றினாலும், மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எதும் செய்யமுடியாது. என்ன பித்தலாட்டமான வாதம்? **

(ரோஸாவசந்த் போல ஆத்திரத்தை அடக்க முடியவில்லை) மனநிலை பிறழ்ந்தவரோடு கூட பேசிப் புரியவைத்து விடலாம். இந்த தொண்டரடிப்பொடியை எவ்வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை. இந்திய முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவரின் உத்தரவின்றி ஒன்றுமே நடவாது (பாதுகாப்பு படைகள் குறித்து) என்பதை இந்த மரமண்டைக்கு எவ்வாறு புரிய வைப்பது?

மண்டூகத்தின் மூன்றாவது பிதற்றல்:

**இது எப்படி இருக்கிறது என்றால், நடந்த 300 படகுஇகளின் விரட்ட்லையும் , பல சந்தர்பங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுகளியும் கணக்கில் கொண்டு பார்த்தால், போலீஸ் குடியிருபில் புகுந்து ஒரு பெண்ணை வன்புணர்வு செய்யும்ப்போதோ அல்லது ஒரு நபரை கொலை செய்யும்போதோ , தமிழக அரசின் உத்தரவு அல்லது ஐ.கின் உத்தரவு இல்லாமல் "எதுவம் செய்ய முடியாது" என்று சொல்வது போல் உள்ளது.**

(இப்போது இந்த மண்டூகத்தை என்னவென்று விளிக்க அடைமொழிகள் அளிக்குமாறு ரோஸாவிடம் விண்ணப்பிக்க வேண்டியதுதான்!). போலீஸ் எவ்வாறு செயல்படுமென்று ஆழ்ந்து ஆராய்ந்திருக்கின்றீர்கள் மிஸ்டர் ரமாஸ். அதை கடற்படை மற்றும் கடற்பாதுகாப்புப் படைகளோடு ஒப்புமை வேறு படுத்திப்பார்க்கின்றீர்கள். சபாஷ். அருமையான விவாதம். போலீஸ் குடியிருப்பை விடுங்கள். (இந்த ஹைபோதெடிகல் எடுத்துக்காட்டிற்கு மன்னிக்கவும்...) உங்கள் மனைவியை ஒருவர் வன்புணர்ந்ததாக எடுத்துக் கொள்வோம். நீங்கள் (இந்தியாவில் இருப்பதான கற்பனையுடன்) சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் கொதித்துப் போய் போலீஸ் ஸ்டேஷன் ஓடுகின்றீர்கள். அங்கே பொறுப்பில் இருப்பவர் என்ன கூறுவார்? "ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுங்க ஸார். நடவடிக்கை எடுக்கிறோம்". இதாவது புரிகின்றதா?

மண்டூகத்தின் நான்காவது பிதற்றல்:

** ஐந்து பதிவுகளில் எங்காவது சுடுவதை கண்டித்திருக்கிறாரா வந்தியத்தேவன்? **

ஓ! இந்த மண்டூகத்திற்கு தமிழ் வாசிக்கவே வராது போலிருக்கின்றது. எத்தனை இடங்களில் இதைப் பற்றி விவரமாக எழுதியிருக்கின்றேன் என்று எனக்கும், படித்த நடுநிலை வாசகர்க்களுக்கும் தெரியும். அதனால் கார்த்திக்ரமாஸ் என்ற மண்டூகத்திற்கு இனிமேல் இவ்விஷயத்தில் என்னிடமிருந்து பதில் கிடையாது.

அடுத்ததாக ஆசான் ரோஸாவசந்தைப் பார்ப்போம். http://rozavasanth.blogspot.com/2006/04/2_07.html வழக்கமான அடைமொழிகள் இல்லாத ரோஸாவின் பதிவு, அவர் இன்னமும் கொஞ்சமாவது, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, சராசரி மனநலத்திலாவது இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்துவதாவே இருக்கின்றது. மேலும் ஆத்திரத்தை அடக்கவேண்டுமென்ற பொதுப்புத்தியும் கொஞ்சம் தற்சமயம் வந்திருப்பதாவே தெரிகின்றது. எனவே இவரோடு, இச்சமயத்தில் பேசலாமென்றும் எனக்குத் தோன்றுகின்றது. நெற்வயல் புகுந்த மதயானையாய், வழக்கம் போல் விஸ்தீரமாய் அதகளம் செய்யாமல் எனக்குத் தெரிந்த வரையில் முதல் முறையாய் குறிப்பிட்ட கருத்துக்கள் குறித்து ரோஸா பேசுவதும் வரவேற்கக் கூடியதே. அதற்கான பாராட்டுகளையும் நான் அவருக்கு தெரியப்படுத்துவதில் தயக்கமேதுமில்லை எனக்கு.

எனது பதிவுகளில் நான் ரோஸா ஒரு புலி ஆதரவாளர் என்று எங்காவது கூறி இருக்கின்றேனா? தமிழ் தேசியம் பேசும் வாதிகள் என்ற எனது முதல் பதிவில் கூறியிருப்பதை வைத்து அது ரோஸாவை நோக்கிக் கூறியது என்று அவர் அர்த்தப்படுத்திக் கொண்டால் (சம்பந்ததப்பட்ட பதிவில் தனக்கு வந்த பின்னூட்டுகளைப் படித்துப் பார்த்தபின்) யாரென்ன செய்ய முடியும்? எப்படியோ வலைப்பதிவு வாசகர்களுக்கு தான் ஒரு புலி எதிர்ப்பாளன், தமிழ் தேசியம் எதிர்ப்பாளன் என்று ரோஸாவசந்த் "தெளிவாக" அறிவித்து விட்டார். அதற்காகவாவது எனது பதிவுகளுக்கு ரோஸாவும், படிக்கும் நீங்களும் நன்றி கூறலாம். முடையேதுமில்லை.

சிரிப்பினை அடக்கிக் கொண்டு ரோஸாவின் இச்செய்தியினைப் படிக்கவும்:

** டெகான் க்ரோனிகிள் இணையதளத்திற்கு ஒருமுறை கூட போயிராத நான், செய்திக்கான ஒரு சுட்டியை அளிக்கவே இந்து இணையதளத்தில் தேடினேன். **

படித்த செய்தி டெக்கான் க்ரோனிகிள் செய்தித்தாளில். ஆனால் அவர்களது இணையதளம் நீங்கள் சென்றதில்லை. அதனால் இந்து இணையதளத்தில் "சுட்டி கொடுப்பதற்காக கண்களில் பிநாயில் ஊற்றித்" தேடினீர்கள். ஆமாம் டெக்கான் க்ரோனிகிள் இணையதளம் செல்ல என்ன சென்னையிலிருந்து பல்லவன் பஸ் பிடிக்க வேண்டுமா? "பஸ் நம்பர் தெரியாது; பஸ் ஸ்டாண்ட் தெரியாது; ரூட் தெரியாது;" ஆஹா என்ன சொல்ல வருகின்றீர்கள் ரோஸா? இந்து இணையதளத்தில் தேடுமதே நேரம்தானே டெக்கான் க்ரோனிக்கிள் இணையதளம் செல்வதற்கும்?

இன்னும் என்னவெல்லாம் சால்ஜாப்பு ஜல்லி அடிக்கப் போகின்றீர்கள்? உங்களது பிரச்சினை என்ன தெரியுமா? அனைத்திற்கும் "ஆதாரம்" கேட்டுத் தொங்குவது. எங்காவது, எதற்காகவாவது நான் உங்களை ஆதாரத்தை கொடுங்கள் என்று எனது பதிவுகளில் கேட்டிருக்கின்றேனா? அதுதான் எனது விவாதத்தின் பலம். உங்களது பலவீனம்.

மேலும் விரிவாக எழுதப்போகின்றேன் என்று கூறிய பின்னாலும் டிராலர் கணக்குக்கு கூட என்னிடம் ஆதாரம் கேட்ட உங்களது என்குறித்த முதல் பதிவு புன்முறுவலை வரவைத்தது. என்னைப் பொறுத்த வரையில் ரோஸா போன்ற சக வலைப்பதிவர் எழுதும் போது, அதுவும் ரோஸா போன்ற ஆதாரம் கேட்கும் ஆறுமுகங்கள் எழுதும்போது, செய்தியை அப்படியே உள்வாங்கி, பிரச்சினையை முழுதாகப் பார்த்து, முடிந்தால் கருத்து தெரிவிப்பதே எனது பாணி.

**இன்னமும் கூட என்னால் டெகான் க்ரோனிகிள் இணையதளத்தில் செய்தியின் சுட்டியை தரமுடியாததால், **

எனக்கு விருப்பமிருந்தால் வெறுமனே உங்களைப்போல் இதை வைத்தே தொங்கமுடியும். ஆனால் உங்களால் சுட்டி கூட கொடுக்க முடியாது. இருப்பினும் உங்களோடு விவாதம் செய்யும் அடுத்தவர் மட்டும் ஆதாரம் காட்ட வேண்டும். பரவாயில்லை. நான் வெற்று ஆதாரம் கேட்டு தொங்குபவனில்லை. எனக்கு நீங்கள் டெக்கான் க்ரோனிக்கிளில் படித்தேன் என்ற செய்தி ஒன்றே போதும். உங்கள் செய்தியை அப்படியே எடுத்துக் கொண்டேன்.

**Sri Lankan Navy men started chasing nearly 300 boats carrying fishermen from Rameswaram who are trying to cast their nets in Lankan waters near Katchadeevu. The fishermen were chased Sri Lankan Navy men through Indian waters up to the Danushkodi coast. **

உங்கள் பதிவை நான் சரியாகப் படிக்கவில்லையா? ரோஸா மூளை மழுங்கிவிடாமல் (ஸாரி இதைவிட நல்ல வார்த்தை தேடியும் கிடைக்கவில்லை) தமிழ்ப்படுத்தினாரா? கச்சத்தீவினில், இலங்கை கடலெல்லையில் வலை வீசினர் என்று டெக்கான் க்ரோனிக்கிள் தெளிவாகத் தெரிவிக்கின்றது. இதை ரோஸா தெளிவாகத் தெரிந்து கொள்ளாவிடினும் (வசதியாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக "சொல்லப்படும்" என்று திரித்துக் கொண்டார்) எனது அனுமானத்தில் (சுட்டிகள் ரோஸா கொடுக்காவிட்டாலும்) பிரச்சினையின் ஆழம் தெரிந்த நான், ஆதாரங்களுடன், விரிவாக எழுதினேன். இது படித்த வாசகர்களுக்கு (பிரச்சினையின் பால் அரசியல் போன்ற என்னவொரு கருத்துக் கண்ணாடிகள் அணிந்த, அணியாத) தெரியும்.

ரோஸாவிற்கு இலங்கை கடலெல்லையில் மீன் பிடித்தார்கள் என்பதை "சொல்லப்படும்" என்று திரிக்க முடியும். ஆனால் அதே டெக்கான் க்ரோனிக்கிள் கூறிய இந்திய கடலெல்லையான தனுஷ்கோடி வரை இலங்கை கடற்படை ஊடுருவியது என்பதை எடுத்துக் கொண்டு "சலம்பல்" செய்ய முடியும். நிகழ்வுக்கு சுட்டியும் கொடுக்க இயலாது. How Convinient? எந்த அடிப்படையில் இந்த வாள்வீச்சு? கடலெல்லைகள், அடிப்படை பிரச்சினை குறித்த புரிதல், தீர்வுகள் குறித்த தெளிவு, இது போன்ற காரணிகளின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் எழுதுவதுதான் ரோஸாவின் பாங்கு என்பது அவரது பதிவுகளிலிருந்து புலனாவது வெள்ளிடை மலை.

இலங்கை அதிகார வர்க்கம் முதல் இந்தியாவில் SB சவான் முதற்கொண்டு, IK குஜரால் வரை 1974-76 ஒப்பந்த ஷரத்துகளுக்கு (கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலாமென்ற) எதிராகவே இருந்து வந்தனர். எனது தொடரை படித்தவர் இதை அறிவர். எனவே இலங்கை கடற்படை சுட்டதை நான் எங்குமே நியாயப்படுத்தவில்லை (கார்த்திக் மண்டூகத்திற்கு மட்டுமே புரியவில்லை). ஐ.நா. விதிகளைக் கூட நான் சுட்டியிருந்தேன். என்னிடம் ஏகப்பட்ட "ஆதாரங்கள்" இருந்தும் படிக்கும் வாசகர்களை அலைக்கழிக்க விரும்பாமல் சாரத்தைச் சொல்லிச் செல்வது என் வழக்கம். ஆனால் ரோஸா தான் சொல்வதிற்கு அடிப்படை ஆதாரம் கூடக் கொடுக்க முடியாமல் அடுத்தவரை ஆதாரம் கொடுக்கச் சொல்வது இணையத்தில் இது முதல் முறையல்ல.

**கச்சத்தீவு அருகில் (இலங்கை கடற்பரப்பில்) மீன் பிடிக்கவும், வலைகளை கச்சத்தீவில் காயப்போடவும் அதே 1974 ஒப்பந்தப் படி தமிழகத்து மீனவர்களுக்கு முழு உரிமை இருப்பதை வந்தியத்தேவனும் அறிந்து வைத்திருக்கிறார். தனது 5 பதிவுகளில் இரண்டு இடங்களில் இதை குறிப்பிடுகிறார்.**

ரோஸா இத்தகவல் எப்போது உமக்குத் தெரியும்? எனது பதிவுகளைப் படித்த பின்னர் தானே? இல்லை கடற்படை என்ன புடுங்கிக் கொண்டிருந்ததா என்ற கேள்வி கேட்ட போதே நீங்கள் அறிந்ததா?

நான் கூறுகின்றேன். உங்களுக்கு உண்மையான பிரச்சினை குறித்த அக்கறை சிறிதுமில்லை. உமக்கு தேவைப்பட்டது ஒரு செய்தித்தாளின், உமக்கு தேவைப்பட்ட ஓர் சிறு அறிவிப்பு.

அறிவுஜீவியாய் கொதித்தெழுமுன் அடிப்படை அறிவோடு, வழக்கமாக சண்டியர் பாணி சண்டை விடுத்து கொஞ்சமாவது இப்பிரச்சினை குறித்து சிந்தித்திருக்கலாம்.

நீங்கள் பிரச்சினையாய் கருதுவதை விடுத்து வெட்டியாய் தொங்குகையில், நடைமுறைத் தீர்வுகளோடு வந்தியத்தேவன் உங்களை அணுகுகின்றான். இது நீங்கள் அறிந்திராத பாணி. வாதத்தில் வெற்றி பெற வேண்டுமென்பதில் எனது அக்கறையில்லை. காத்திரமான பிரச்சினையை, நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வுகளுடன் அணுக வேண்டுமென்பதே எனது பார்வை.

சரி வெறுத்துப் போய் இவ்விவாதத்திற்குள் ரோஸா போல் நுழைகின்றேன். ரோஸா கூறியது:

**இலங்கை கடற்படை இந்திய கடற்பரப்பில் நுழைவதற்கும், இந்திய கடற்பரப்பில்-சில நேரங்களில் கடற்கரை வரை கூட வந்து- இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை, அங்கே தயாராக இருக்கும் இந்திய கடற்படை எப்படி அனுமதிக்கிறது?**

இதற்கு ஆதாரமென்ன? எவ்வளவு முறை இது நிகழ்ந்தது? ரோஸா ஆதாரங்கள் தரவேண்டும்.

**இந்த அட்டூழியம் குறித்து, எது எதற்கோ கூக்குரல் இடுபவர்கள் - பத்திரிகை டீவி, அரசியல் கட்சிகள், தொடங்கி வலைப்பதிவுகள் வரை -யாரும் முனகுவது கூட இல்லையே, ஏன்?**

நல்ல கேள்வி ரோஸா. ஆமாம் ஏன் இலங்கைத் தமிழ் (ஈழ) வலைப்பதிவர்கள் கூட (இலங்கை மீனவர்கள் பிரச்சினை உட்பட) உமக்கோ, எமக்கோ அணுவளவு கருத்துக்கூட தெரிவிக்கவில்லை. ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது. உங்களது இந்த ஆதங்கத்தில் ஒத்துப்போவதில் எனக்குப் பிரச்சினையில்லை.

**இந்தியாவுடன் எந்தவிதத்திலும் வலிமையில் ஒப்பிடமுடியாத ஒரு அந்நிய நாட்டுபடை, உறுப்பை நுழைப்பதை பற்றி இந்தியா ஏன் மௌனமாய் இருக்கிறது?' என்ற கேள்வியை மட்டும் கேட்டிருந்தேன். சம்பவம் நடந்து இந்த ஒரு வாரத்தில் என்ன கண்டனம், நடவடிக்கை நடந்திருக்கிறது? அது குறித்து ,மேற்படி செய்திகளே இல்லை.**

இலங்கையில் மீனவர் பிரச்சினை குறித்த அடிப்படைப் புரிதல் கூட இந்திய மீனவர்கள் பற்றி நம்மிடையே கிடையாதென்ற வருத்தத்தை எனது பதிவுகளில் நான் கோடிட்டுக் காட்டியிருக்கின்றேன். இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து செயல்களையும் உங்களைப் போலவே நானும் வன்மையாக கண்டிக்கின்றேன். ஆமாம். கேனத்தனமாய் நான் பதில் கூறினேன் என்றீர்களே, அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா? எது கேனத்தனம்? இலங்கை எல்லையில் மீன் பிடித்ததை "சொல்லப்படும்" என்று திரித்து விட்டு, இந்திய எல்லைக்கு வந்து இலங்கை கடற்படை வந்து சுட்டது என்பதை மட்டும் (எந்தவித ஆதாரமின்றி) பிடித்துக் கொண்டு தொங்குவதை எவ்வாறு விளிப்பது? உங்களைப் போல வாதம் செய்வதில் எனக்கு பேரலுப்பு உண்டாகின்றது.

** திறந்த மனதுடன் வாசிக்கும் வாசகர், அவர் பதிவில் தேடி, நான் சொல்வது போல பிரச்சனை திசை திருப்பப் பட்டுள்ளதா இல்லையா என்று பரிசீலித்து கொள்ளாலாம். **

ரோஸா நீங்கள் பிரச்சினை குறித்து அதிகம் அக்கறை காட்டியது போல் தெரியவில்லை. எனது நோக்கம் பிரச்சினையை ஒருமுகமாகப் பார்க்காமல் ஹோலிஸ்டிக் அப்ரோச்' ஆக, விலாவரியாக விளக்க வேண்டும் என்று பிரச்சினை குறித்த அக்கறையோடு பதிவுகள் செய்தேன். வெற்று சவடாலகளை புறந்தள்ளி பிரச்சினையின் வேர்களை ஆராய்ந்து, எனக்கு உண்மையெனப் பட்டதை தயங்காமல், ஆதாரங்களுடன் தீர்வுகளையும் முன்வைத்தேன்.

**ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரையில் வசிக்கும், கண்தெரியாத மீனவர் அருள் சேசுராஜ் பல இடங்களில் 'சிங்கள கடற்படையின் எந்த நேரத்திலும் தாக்கலாம்' என்ற ஆபத்தை பற்றியே பிரதானமாய் பேசுகிறார். **

எனது பதிவுகளை மீள்வாசிப்பு செய்யச் சொன்னேன். கடலெல்லைகள் குறித்து நான் கொடுத்த சுட்டிகளைச் சொடுக்கிப் படித்தீரா ரோஸா? தெரியவில்லை. இந்தியா -இலங்கை கடலெல்லைகள் சர்வதேச ஒப்பந்தங்களைத் தாண்டியது. இரு நாடுகளும் (அமெரிக்கா ஒத்துக் கொள்ளாவிட்டாலும்) தமது கடலெல்லைகளைத் தாமாகவே மறுபரிசீலனை செய்து வரைந்து கொண்டன. இராமேஸ்வரம் கடற்கரை இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள பகுதி. வெறும் 7 கிமீ தாண்டினால் இலங்கை கடலெல்லையில் பிரவேசிக்க முடியும். இத்தகவலை நினைவிலிருந்து எழுதுகின்றேன். ஆக அருள் சேசுராஜ் (சாதாரண படகென்றாலும்) எங்கே மீன்பிடித்தார்? இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையில் ஊடுறுவும் சுமார் 1000 டிராலர்களை அந்நாட்டு கடற்படை விரட்டும் போது கிராஸ்பயரில் (crossfire) மாட்டினாரா? சத்தியமாகக் கேட்கின்றேன். இந்த கேள்விகள் உங்கள் மனதில் எழவே இல்லையா?

**அநியாயமானதாக இருந்தாலும், நிருபமா ராவ் சொன்னதாக பத்ரி எழுதிய பதில் கொஞ்சமாவது நான் பேசிய பிரச்சனையுடன் தொடர்புள்ளது. பத்ரி தான் ஒரு மெஸெஞ்சர் மட்டும்தான் என்று சொல்லி அந்த கருத்துடன் தனக்கு சம்பந்தமில்லை என்கிறார். ஆனால் வந்தியதேவன் அதை வசமாக பற்றிக்கொண்டார். **

ரோஸா கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். பத்ரி சொன்னதை நான் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டிய அவசியமேயில்லை. தமிழக அரசின் முடிவுகள் பற்றிய பதிவைப் படியுங்கள். கோஸ்ட்கார்டு ரெகுலேஷன்ஸ் படி படகுகளை ப்ளோரசெண்ட் பெயிண்ட் அடிக்க வேண்டுமென்று விளக்கியிருந்தேன். அருள் சேசுராஜ் செய்திருந்தாரா? அடையாள அட்டை வைத்திருந்தாரா? இந்திய எல்லைக்குள்தான் மீன் பிடித்தாரா?

இக்கேள்விகளைக் கூட பிரச்சினை குறித்த அடிப்படை அக்கறையின்றி நான் கேட்பதாகத் திரிக்கக்கூடும். ஒரு கட்டுமரத்தில் மீன் பிடித்த கண்ணிழந்த மீனவரை சிலோன்காரன் சுட்டுட்டான். ஆனால் வந்தியத்தேவன் சொகுசாக கேள்விகள் கேட்கின்றான். இந்திய கடற்படை எந்த **ரை புடுங்கிக்கொண்டு இருக்கின்றது?

சரி உங்கள் வாதப்படி பிரச்சினை இப்படிப் பார்ப்போம். நாங்கள் (இந்திய மீனவர்கள்) இலங்கை கடலெல்லையில் மீன் பிடிப்போம். இந்திய/தமிழக அரசு கூறியதுபடி அடையாள அட்டைகளோ, ப்ளோரோசெண்ட் பெயிண்ட்டோ அடிக்க மாட்டோம். அடையாளத்திற்காக கூட இந்திய தேசியக் கொடியை படகில் ஏற்ற மாட்டோம். டிராலர்களால் கடற்கொள்ளை இலங்கை எல்லைகளில் செய்வோம். ஆனால் பதிலுக்கு இலங்கை கடற்படையோ, இலங்கை மீனவர்களோ ஒன்றுமே செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் இந்திய கடற்படை/இந்திய கடற்பாதுகாப்புப் படைகளை வைத்து இலங்கையை காயடிக்க வேண்டும். என்ன சரிதானா ரோஸா?

ரோஸாவிற்கு கடைசியாக:

1. இந்த விவாததிதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து எனக்கு கிஞ்சித்தும் அக்கறையில்லை.
2. உங்களது பாராட்டையோ, அங்கீகாரத்தையோ வேறு எதையுமே எதிர்பார்த்து இத்தொடர் கட்டமைக்கப்படவில்லை. எனக்கு அதற்கான அத்தியாவசியமும் இல்லை.
3. தீர்வுகளையும் முன் வைத்தது கூட அறிந்தும் அறியாமலும் நீங்கள் நான் மீண்டும் எழுத வந்த காரணம் குறித்தே உங்களுக்கு முதன்மையான கேள்வியென்றால், உங்களோடு விவாதம் செய்வ(த)தற்காக நான் வெட்கித் தலை குனிகின்றேன்.
4. இப்பிரச்சினையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட சக-வலைப்பதிவர்களின் (இலங்கை/இந்தியா) "Ignorance is bliss" என்ற அடைப்படியில் மௌனம் காப்பது உங்களைப் போலவே எனக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
5. கடற்படைக்கு ஸ்ரீகாந்த் மின்னஞ்சல் அனுப்பியது ஒரு முதல் படி. ஆனால் அவர் குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், மீன் வளத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு மின்னஞ்சல் செய்திருந்தால் சரியான முயற்சி.
6. இவற்றைச் செய்து வலைப்பதிவர்கள் சார்பாக விண்ணப்பம் தமிழிணைய குமுகாயமாக அனுப்பும் நோக்கில் நான் முயற்சிகள் எடுக்கின்றேன்.
7. பிரச்சினைகளைப் பற்றி ஓரளவு தெரிந்த நான் திறந்த மனதுடன் சொல்கின்றேன். இந்திய கடற்படையில் லெப்டினெண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நான் வெற்று சவடால்களைத் தாண்டி, காத்திரமான பிரச்சினைக்கு அனைத்து வலைப்பதிவர்கள் சார்பாக இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து மேற்சொன்ன முயற்சியைச் செய்ய விழைகின்றேன்.

ஆதரவு உண்டா உங்களிடமிருந்து?

5 comments:

Anonymous said...

Excellent analysis. very impressed.I agree with you in all the aspects.lot of information are new to me and I believe for most of the people. After a long time Vanthiathevan opened his voice. Welcome back. Write frequently.

regards
venkat Muthusamy

Voice on Wings said...

இந்த விவாதத்தில் Deccan Chronicle இணையத் தளத்தைப் பற்றி என்னால்் உறுதி செய்ய முடியும். ரோஸாவின் முதல் பதிவைப் படித்த பின், இணையத்திலும் Deccan Chronicleஇன் இந்தப் பக்கத்தில் அதே செய்தியைப் படித்து உறுதி செய்து கொண்டேன். ஆனால், இந்தப் பக்கம் ஒவ்வொரு நாளும் மாற்றப்படுவதால், மற்றும் இந்த நாளிதழின் தளத்தில் archives சேமிக்கப்படாததால், அந்த செய்திக் குறிப்புக்கு நிரந்தர சுட்டி அளிப்பது இயலாதவொன்றே. வேண்டுமானால், (ரோஸாவோ, வேறு யாராவதோ) அந்த செய்தியை scan செய்து வலையேற்றலாம்.

முப்படைத் தலைவரின் உத்தரவு வரும் வரை இந்தியத் தற்காப்புப் படைகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என்ற உங்களின் வாதம் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை. நம் எல்லைக்குள் ஊடுருவும் ஒரு அந்நிய நாட்டு கடற்ப்படையை தடுத்து, அதன் அராஜகத்தை த் தடுக்கும் அதிகாரம் ஒரு இந்திய ரோந்துக் கப்பலின் தலைவருக்கு நிச்சயமாக இருக்கும் என்பதுதான் என் கணிப்பு. இதற்கு ஆதரவாக என்னால் சுட்டி எதுவும் கொடுக்க இயலாது. பொது புத்தி அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தே இது. ஒவ்வொரு சிறு ஊடுருவலையும் தடுக்க குடியரசு தலைவரின் அனுமதி தேவைப்படுமானால், அவர் இதற்கே தனது முழு நேரத்தையும் செலவழிக்க வேண்டியதுதான். நாடெங்கிலுமுள்ள பள்ளிகளுக்கெல்லாம் சென்று, வருங்கால இந்தியா பற்றிய தனது சொற்பொழிவுகளை்யெல்லாம்யெயெஃஎஎஎஎ் வழங்குவதற்கெல்லாம் நேரம் கிடைக்காமல் போகும் அவருக்கு.

The question is why is the Indian defence setup turning a blind eye, when its own citizens are at peril in the hands of an alien force that doesn't hesitate to violate its sovereignity, to carry out its misdeeds? What amazes me more is why do you take pains to come to its defense (looks like you have written some 5 odd posts after doing a lot of research), and justify this inaction. I'm clueless about both these questions.

I can only partially answer the first question - the Indian administration's general apathy towards the welfare and safety of its poor citizens. I dont suspect any Tamil - anti-Tamil sentiments though, like Roza. I think it's just plain apathy of the Indian administration, that is to blame. Even fishermen near Indo-Pak border face such difficulties. They get arrested, not sure if they get killed. In case of our fishermen though, even their life is in constant danger.

Voice on Wings said...

I confess I missed out this piece of info in your post:
//இந்திய கடற்படையில் லெப்டினெண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நான்//
and that sort of answers my second question as well :)

While I salute the spirit inside every person who has served the armed forces, my (first) question still remains. The failure of the Indian Navy to protect the lives of our fishermen is a glaring lapse, that cannot be defended by any amount of browbeating. If a pleasure boat full of rich / upper middle class travellers was similarly caught and its inmates shot at, all hell would have broken loose and heads would have rolled. The Indian ruling establishment would willingly trade dreaded terrorists in exchange for a (hijacked) flight full of rich / upper middle class passengers. But it is under no such compulsion to defend the lives of the poor. There lies the bitter truth.

SnackDragon said...

உங்கள் காழ்ப்பை எந்த அளவுக்கு காட்முடியும் என்பதற்கு உதாரணமாய் இந்தப்பதிவை எடுத்துக்கொள்கிறேன். வாசிக்கும் யாருக்கும் காழ்ப்பு யாருக்கு அக்கறை யாருக்கு என்று நன்றாக விளங்கக்கூடிய அளவுக்கு தெளிவாக எழுதியதற்கு கோடி நன்றிகள். என் மனைவியை உதாரணமாக பய்ன்படுத்தியதற்கு ஸ்பெசல் நன்றிகள். விவாதக்குடும்பி என்று மீண்டும் நிருப்பித்துள்ளீர்கள் லெப்டிநண்டு ;-).

வாசிப்பவர்களுக்காக மட்டும் இதை, என்னைத் திட்டி தீர்ந்தபின்னாவது முதலில் எழுதுய 5 பதிவுகளில் எங்கே கண்டித்துள்ளீர்கள் என்று காப்பி பேஸ்ட் செய்திருக்கலாம். முடியாதா? ;-)
மிக்க நன்றி , மண்டூகத்துக்கு புரிந்தது. கடற்படைக்கு ஜே போட்டு விடுகிறேன்.

நான் கேட்பது நடந்து கொண்டிருக்கும்போது ஒரு சூறையாடலை கண்ணால் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா என்ற கேள்வியையும் , அதில் உள்ள நியாயத்தையும் வழக்கம் போலவே, வன்புணர்ச்சி நடந்த பிறகு என்ற மாதிரி "கம்ப்ளையிண்டு எழுதிக் கொடு" என்று நக்கல்டித்து திரித்தற்கும் ரொம்ப டேங்க்ஸ். வேறூ என்ன எல்லோருக்கும் மனைவிகள் இருக்கின்றார்கள். புத்திசாலி வந்தியத்தேவன் சொல்வது போல் இருந்தால் சமூகத்தில் எல்லோரும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதுதான் என்று ஆகிறது. அவர் சொல்வது போல கம்பிளையின்டு எழுதிகொடுக்கிற வரைக்கும் பார்த்துக்கொன்டு சும்மா ருக்கவேண்டியதுதான். லெப்டிநண்டும் அப்படி இருப்பாரென நம்புகிறேன். (இதாவது புரியுதா?)
நன்றி. மண்டூகத்தையும் ஒரு பொர்ட்டாய் எண்ணி பதிலளித்தமைக்கு.

SnackDragon said...
This comment has been removed by a blog administrator.