Monday, May 24, 2004

வீட்டுக்கு வீடு (55 வார்த்தை சிறுகதை)

எனக்கு பொங்கிக்கொண்டு வந்தது. எம்மகன் பொண்டாட்டி வந்ததும் சுத்தமாக மாறிவிட்டிருந்தான். என்ன சொன்னாலும் இப்போது கேட்பதேயில்லை. என்னதான் தலையணை மந்திரமோ? எப்படியிருந்தவன் இப்படியாகி விட்டான்...

எதுவாகிலும் தங்கைக்கு ஒரு தேவையெனில் தமையன் கவனிக்க வேண்டாமோ? எவ்வளவு பணம் கேட்டுவிட்டாள்? எதற்கெடுத்தாலும் எகத்தாளமான பதில். எல்லாம் வந்தவளைச் சொல்ல வேண்டும். எம்பெருமானே...இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இன்னும் எவ்வளவு நாள் வைக்கப் போகிறாயோ?
எந்த வழியுமேயில்லையா என்று மகளை ஏறிட்ட போது சொன்னாள்...
"அம்மா பேச்சைக் கேட்டு ஆடறார்ம்மா"

1 comment:

சிறில் அலெக்ஸ் said...

கலக்க்கல்.. இப்பதான் பாத்தேன்