Monday, May 31, 2004

காதல் வைரம்

அகல உழுவதை விட
ஆழ உழுவது நன்று
வயலுக்கான வரிகள்
வாழ்க்கைக்கு ஒத்ததா?

ஆயினும்...
ஆழ உழுதாள்
அழுது பு(வி)தைத்தேன்
காதல் கரித்துண்டு

கண்ணீர் மழையுடன்
இயலாமை வெப்பம்
கலந்து பாய
கனன்றது கரித்துண்டு

அறுவடை நாளில்
அறுத்தேன் இதயத்தை
தெளிந்த நீரோட்டமாய்
தெரிந்தது வைரம்

காதல் பரிசெனெ
கழுத்தில் அணிவேனோ?
காசு பெறாதெனெ
தூசாய்க் களைவேனோ?

No comments: