Monday, May 24, 2004

தனயன் (55 வார்த்தை சிறுகதை)

நினைக்கையில் எரிச்சலாய் வந்தது. என்னமாய் பிளான் பண்ணி வீட்டிலிருந்து காசு சுட்டு தலைவரின் பத்திரிக்கை வாங்கச் சென்றால் அனைத்து பிரதிகளும் விற்று தீர்ந்துவிட்டனவாம். இத்தனைக்கும் கடைகாரனிடம் சொல்லி வைத்திருந்தேன். அய்யோ...புதிய படச் செய்திகளுடன் பல போட்டோக்களும் வந்திருக்குமே. யார் கண்டா? கதைச்சுருக்கங்கூட இருந்திருக்கலாம். எவ்வளவு நாட்கள் கழித்து தலைவரின் படம்? அறிமுக கெட்டப்பே தூளாய் இருந்துச்சே!!! அந்தக் கடைக்காரன் வீட்டில் இழவு விழ...

"என்னடா பண்றே?" வீட்டினுள் நுழைந்த அப்பாவிடம் சொன்னேன்.

"நாளைய பரீட்சைக்கு படிக்கிறேம்ப்பா!"

No comments: