Sunday, May 23, 2004

சொல்ல மறந்த கவிதை


பொங்கல் மறந்து
பீட்ஜா சாப்பிடும் பீடைகள்

பச்சை அட்டைக்காக
பலவும் துணிந்த பாவிகள்

மானமிழந்து தூதரகம் முன்னர்
விசாத் தவம் கிடந்த வீணர்கள்

நுனி நாக்கு ஆங்கிலம் பேசி
பொழுது போக்கு தமிழ் வளர்ப்பவர்கள்

தன்னையே அடகு வைத்து
டாலருக்கு சோரம்போன டாம்பீகர்கள்

கோக் பெப்சி குடித்து
காளிமார்க் தூற்றும் கபோதிகள்

திரைகடலோடி டமில் மழலைச்
செல்வங்கள் சேர்த்த ஓடுகாலிகள்

புரியாமல் வசைகள் பாடியிருப்பேனோ?
புலம் பெயரா விட்டால்...

பி.கு. தற்போது நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தில் கிட்டிய வசைகளில் சிலவற்றை உபயதாரர்கள் முன் அனுமதியின்றி உபயோகித்து இருக்கின்றேன்.

No comments: