Monday, July 26, 2004

இலட்சியம்

முதலே
தெரியாதபோது
எதற்கும்
முடிவென்பதேது?

மழைத்துளிக்கு
மணல் முடிவு
ஆறுக்கு
கடல் முடிவு
நீருக்கு
எது முடிவு?

பிறப்பு
இறப்பு
உடலுக்கு
ஆன்மாவிற்கு
அழிவேது?

பழையவற்றைப்
பார்க்க
விரும்பவில்லை
நாளையிருப்பதை
நம்பவில்லை
இன்றுவாழ்கிறேன்
இதுநிஜம்

இன்றே
வாழ்ந்துவிடு
இருக்கும்வரை
வாழவிடு!

No comments: