Monday, June 07, 2004

இருட்டு ரோஜாக்கள்

ஒருசாண் வயிற்றுக்கும்
ஒட்டுத் துணிக்கும்
சந்தையில் விற்பனை
சதைப் பிண்டங்கள்

சிபியின் தசையையும்
சிலாகித்து சமைத்து
சாப்பிடப் பார்க்கும்
சாக்கடைச் சமுதாயம்

பகலிலே பாராமுகம்
இரவிலே இளிக்கும்
வக்கிரச் சமூகத்தின்
வற்றாத வடிகால்கள்

மண்ணுலக உயிர்களின்
தாகப்பசி தீர்ப்பதால்
நீரின் மானம்
நீர்த்துப் போவதில்லை

எத்தனையோ ஈரல்களில்
சுருங்கி விரிவதால்
காற்று என்றுமே
கற்பு இழப்பதில்லை

வையத்து நெளிகளில்
விழுந்து எழுவதால்
சூரியன் எப்போதும்
சோரம் போனதில்லை

மானம் என்பது
மனதில் உள்ளது
இருளிலும் இவர்கள்
கற்பு ரோஜாக்கள்

No comments: