Sunday, June 13, 2004

நன்றி

இனியவளே

இருந்தேன்
முன்பொரு காலத்தில்
சோலை வனமாய்

பசுமைப் போர்வை
புள்ளினங்களின் கானம்
மும்மாரி மழை
வாய்க்கால் வரப்பு
இன்னும் பல

காலம் கடந்தது

ஆசை மரங்களை
அறுத்தார்கள்
கிருமி நாசினியால்
விடமிட்டார்கள்
உரமிட்டு உயிர்
பறித்தார்கள்
செயற்கை மழை வேண்டி
மேகம் கலைத்தார்கள்

வாடினேன்
வதங்கினேன்
தேம்பினேன்
திணறினேன்

பசுமை பறந்தது
புள்ளினம் மறந்தது
மாரி ஓய்ந்தது
வாய்க்கால் காய்ந்தது

இன்று நான்
மேய்ந்த நிலமல்ல
காய்ந்த புலம்
நந்த வனமல்ல
வெந்த மனம்

திசை மாறிய மேகமே
நான் உன் நிலமல்ல
பாதை தவறிய பறவையே
நான் உன் பலமல்ல
விசை மாறிய கலமே
நான் உன் காற்றல்ல

இருப்பினும் நன்றி
இந்த
கடைசி நிமிடங்களில் என்னை
கடந்து போனதற்கு

No comments: