Sunday, June 13, 2004

அழுகை

பிறந்த போது
தெரிந்த பாஷை

துன்பத்தின்
வெளிப்பாடா
அழுகை?
அதீத இன்பத்திலும்
கண்ணீர்

அழுகை
நாதமா?
நாராசமா?

சுகத்தின் சுவடுகளை
கண்ணீர் கலைக்குமா?

ஆண்களுக்கு அழுகை
அவலமா?
பெண்களுக்கு அழுகை
கவசமா?

அழுகை
அவசியமா?
அனாவசியமா?

எனக்கொரு
இலட்சியமுண்டு
சிதை செல்லுமுன்
நிம்மதியாய் ஓர்முறை
சிரித்து விட வேண்டும்

No comments: