Wednesday, June 09, 2004

நன்மைகள்

இன்று எனக்கு
வித்தியாசமான விடியல்
அழுது வடியாமல்

திவ்ய சுகந்தம்
ஏற்றிய விளக்கு
புதிய ஆடை
மலர் மாலை

உச்சியிலமர்ந்தும்
உயிரெடுக்காத மனைவி
அருகே அமர்ந்தும்
அறுக்காத அலுவல் நண்பர்கள்
புறங்கூறா உறவினர் கூட

இவையனைத்தும் புதியது
முன்பின் அறியாதது
இத்தனை நன்மைகள்
இருப்பதை அறிந்திருந்தால்
எப்போதோ நான்
இறந்திருப்பேனே

வந்தியத்தேவன்

No comments: