Sunday, June 13, 2004

நான் யார்

நல்ல கேள்வி
விந்து தந்த
தந்தையைக் கேட்டேன்
விடை கிட்டவில்லை

விளைத்து களை(ளி)த்த
தாயைக் கேட்டேன்
விடை விளையவில்லை

வந்தார் சென்றார்
உற்றார் உறவினர்
நண்பர் நல்லவர்
நவிலவில்லை

படைத்த பாவி
விடை கொடுக்கவில்லை
விடை கிட்டியவன் சொன்னதோ
புரியவில்லை

வந்ததும் தெரியாமல்
வாழ்வதும் புரியாமல்
நாளும் யோசிக்கின்றேன்
நான் யார்?

No comments: