Sunday, June 13, 2004

வாழ்க்கை

பால்ய பருவத்தில்
கட்டிய மணல் வீடு கரைந்த போது
பள்ளிப் பருவத்தில்
புத்தகம் நடுவே புதைந்த போது
கல்லூரிப் பருவத்தில்
காதலெனும் கானலில் கலந்த போது
அலுவல் பருவத்தே
கணிணி எண்களால் களைப்படைந்த போது
திருமணப் பருவத்தே
திருமதியின் திருவிளையாடலில் திகைத்த போது
நரைமுடி பருவத்தே
பிள்ளைப் பாசத்தால் மூப்படைந்த போது
சாகாட்டுப் பருவத்தே
வசித்த மண்ணை சுவாசித்த போது
யோசித்தேன்

ஏக்கத்தில் பாதி
தூக்கத்தில் மீதி

ஆமாம்
என் வாழ்க்கையை
யார் வாழ்ந்தது?

No comments: