Friday, August 06, 2004

மனித வாழ்க்கை

நடுத்தர வர்க்கத்தின்
வக்கிரத்தில்
நெருப்புக் கோழியாய்
முகம் புதைத்து

பிறர் நனவுக்காக
என் கனவுகளை
தாய்ப் பறவையாய்
உணவாக்கி

அவசர உலகில்
அவலங்களை அள்ளி விழுங்கி
கால்நடையாப் பின்னர்
அசை போட்டு

மன ரணங்கள்
முற்றிலும் ஆறு
முன்குரங்காய்
கீறிவிட்டு

எப்போதாவது
என்னையுமறியாமல்
மான் போல்
எம்பிக் குதித்து

காதல் விளக்கில்
விடியலைத்தேடி
விட்டிலாய் பூச்சியாய்
விழுந்து

சமுதாயச் சாக்கடையில்
சகலத்திலும்
புழுப் போல்
சமரசமாய் நெளிந்து

நிமிர்ந்து பார்க்கின்றேன்
நான்
நானாகவே
வாழவில்லை

சீய்...மனித வாழ்க்கையே...

No comments: