Friday, August 13, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - VI

தேடிக்
களைத்தேன்
தேமருதமருந்திக்
களித்தேன்

வியாச
விரக்திக்கும்
விகற்ப
வேட்டிற்கும்
வாக்கியார்த்தம்
வரவில்லை

எழுத்துப்
போக்கில்
இலக்கியம்தேடும்
இலௌகீகனார்

உன்மத்த
உச்சாட்டியம்
ஓட்டுவேன்
உசிதம்
காண்பேன்
போலி திருட்டாந்தம்
போக்குவேன்

கேதம் கொடுத்ததாய்
கேலிக்காதே
குஞ்சரம் நான்
குதம் பெயர்திடுவேன்

No comments: