Friday, August 13, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - X

சலதளமடியே
மலஜலம் கழித்தோரே
குதமும்
கும்பியும்
குறியும்
நலமா?

சாகரத்தில்
சாக்கடையாய்
சங்கமதித்தோரே
டாலரும்
வெள்ளியுமாய்
அள்ளி
நீவிர்
நெருப்பள்ளி
யார் மீது
பூசுகின்றீர்?

சாரதியாய்
சாகசம்
காட்டினும்
ஜகடா
செய்வேன்
உண்மை தந்த
உன்மத்தத்தாலே

விழுந்ததாய்
வியாக்கியானம்
விளம்பு
மகளிர் கட்சி
யோனி திறந்து
மாட்சிமை காண்

தாதராய் வாழ
தகுதி பெற்றபின்
சனநாயகத்தை
சந்திசிரிக்க வை

திருப்தியா?
திலகம் வைப்பேன்
திரும்பு
மல ஆரத்தியென
மல்லுக் கட்டாதே

No comments: