Thursday, August 12, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - II

சேத்திரமென்றால்
சேவிக்கலாம்
குருச்சேத்திரத்தில்
சேதித்தல் திரிபல்ல

சுயம்பாகம் செய்தது
சம்போகத்திற்கா?
மான தத்தம்
செய்தோமே?

சமரசமாய் வந்து
சந்தி சிரித்தோமே?
சல்லாபம் பேசும்
சர்வகலாசாலைகளே
எரிவது எந்தன்
கும்பியோடு குதமும்

சரணாகதியடைந்து
சங்கறுத்தோரே இன்று
சவுந்தரியம்
சமைக்கின்றீரோ?

கிரம கிரந்தமிது
காயசித்தியாய்
காலம் கடத்தும்
காச காதகரே

No comments: