Thursday, August 12, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - I

மகிதலம் கொண்டோர்
மகிமையறியவர்
மத்தியஸ்தமாய் கூறுவேன்
மதுரமாய் தோன்றாதுனக்கு

துவாரபாலகரை
தூஷித்தல் களிப்பு
லோகமே லோகாதயக்குழியா?
களைப்பு தாத்பரியம்

கூல ருசி
குருவியறியும்
தாசி ருசிக்கு
தபசு செய்திலேன்

சூரிய சூட்டுக்கு
சூரணமா?
சூரன் நான்
சூன்யனே...

மாந்மியமறியா
தற்குறிகளே
உங்குறி உனக்கெட்டாது
மாற்றானுக்கு மண்டியிடு

No comments: