Friday, August 13, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - V

காயவின்பம் தேடினால்
பெத்தாபுரம் போகலாம்
கவாத்து பெற்றவன்
களிக்க வந்தானோ?

யத்தனி
யதேஷ்டக்
கஷ்டமா?
மந்தத்திற்கும்
மருந்துண்டு
ஞானமந்தத்திற்கு?

மகத்துவம் பேசும்
மகராசிகளே
வெகுசன வேடத்திலே
தாமரைத் தனயனை
வெஞ்சனம் செய்ததார்?

தீக்குச்சியால்
தீபமேற்றலாம்
கொள்ளிக்குச்சியாக்கி
சிரமும் சொரியலாம்
சிரங்கு கிளறும்
குரங்குகளே

மார்ச்சரியம் காட்டும்
மகான்களே
மாந்மியம் பேசும்
மகராசிகளே
மத்தம் களைவீர்

ஜனனமோ
மரணமோ
வைராக்கியம்
சேருமிடம்
தாண்டும்
வரையில்தான்

No comments: