Friday, August 13, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - VIII

விவாதம்
பழகென்றால்
விதண்டாவாதம்
செய்கிறார்
வெகுசனமாய்
வெஞ்சனம்
செய்ததை
பறையடித்துப்
பாடுகிறார்

அப்பியாசம்
புரியா
அறிவிலி
நாதர்களுக்கு
பதவுரை
சொல்லும்
பாக்கியம்
வேண்டிலேன்

நித்திலம்
சுட்டாலும்
நிமலம்
போகுமோ?
நிராகரணம்
செய்யாதே
நிர்மூலரே

No comments: