Thursday, August 12, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - IV

தவறிழைத்தல்
தண்டிக்கக்கடவது
அம்பாரமாய்
ஆலீவுடை
துச்சாதனரென
அவதானிக்கும்
அக்கியானிகள்
அநேகம் பேர்

அகிம்சை
சோழமுத்திரை
சினி ஜிகிடி வார்த்தை
வாந்தியெடுத்து
அக்கிரகாரப்
பூணூலை
அரைஞாண்
கொடியாக்கிக்
களிப்பர்

அஞ்சிட்டன் மேலும்
அப்பழுக்குத் தேடி
அதமம் செய்வர்
அஞ்ஞாத வாசத்திலும்
அசௌரியம் கூறி
அஞ்சனம்
பூசுவர்

அநீதியென்னும் குரலை
அந்தியகிரியை செய்வர்
அப்புறமென்ன
அடக்குமுறையை
அறிந்தவர்
அவரன்றோ?

No comments: