Thursday, August 19, 2004

பத்ரி அவர்களுக்கு பகிரங்க கடிதம்

இப்ப பகிரங்க கடிதம் எழுதுவதுதான் இணைய தர்மம். அநேகமாக ஒரு வாரத்திற்கும் மேலாக நீங்கள் இணையம் surf பண்ணவில்லை(!@#) போலிருக்கிறது. அல்லது???

இந்திய பட்ஜெட் என்றாலும், தினமலரின் அக்குறும்பு செய்தியெனிலும், அதே மலர் தாக்கப்பட்டால் எதிர்குரல் விடும் நடுநிலைச் சார்பெனிலும், கிரிக்கெட்டில் விதவிதமான வித்தியாசமான கருத்தென்றாலும், இந்திய விதிகளின் வியாக்கியானமென்றாலும், பன்னாட்டு மேதாவிகளின் நூல்களின் ஸ்பரிசத்தையும் நான் அடைவது "பத்ரி திசாரஸ்"தான்.

'வேலையத்த ஜப்பானியர்கள்' பதிவு படித்தவுடன் தோன்றியது 'ஓஹோ பத்ரிக்கும் வேலையில்லையோவென்று'. ஆமாம்...லூசுன்னா என்னங்க பத்ரி? கொஞ்சம் அவிழ்த்து விடுங்களேன்.

'எட்டுத்திக்கும் சென்று நல்லவை கொணர்ந்திங்கு சேர்' அப்படின்னு பாரதி ஜப்பானியர்க்கு சொல்லவில்லை (PUN INTENDED)

ரஜினி காதலால் ஜப்பான்/ஜப்பானியர்கள் இழந்ததென்ன? அமெரிக்க டாலரையே அள்ளி நிறுத்தும் ஜப்பானிய யென் நிலை தடுமாற்றம் கண்டு விட்டதா? அவரது 'தேச பக்தி' குறைந்து விட்டதா? தரக் கட்டுப்பாட்டின் கட்டுக் கோப்பு குலைந்து விட்டதா? தேனீயின் சுறுசுறுப்பு அகன்று விட்டதா? கருப்பு ரிப்பனை தலையிலே கட்டி உற்பத்தித்திறனை பன்மடங்காக்கும் "ஸ்டிரைக்" பாணி அமரத்துமாகிவிட்டதா? இப்ப திடீர்னு என்னதான் ஆச்சு?

வேலையத்தவர் ஜப்பானியரென்றால் மற்றவரெல்லாம் எம்மாத்திரம்?
'அவர்கள் போட்டிருக்கும் டி-ஷர்ட்', இதுதான் உம்ம பிரச்சினையா? விடுங்கள் பத்ரி. அமெரிக்காவில் செப்டம்பர் 11'ற்கு அப்புறம் 'ஓசாமா டி-ஷர்ட்' பிரபல்யமானதை விடக் கொடுமையா இது? விசேடமென்னவெனில் இந்தப்பக்கம் 'ஓசாமா டி-ஷர்ட்', அந்தப்பக்கம் 'அமெரிக்க கொடி', வித்தது ஒரே நாடு. அது சீனா.

ஜப்பானியர் தமிழ் படிப்பதில் பெருமை கொள்ளும் நீங்கள் அவரை பழந்தமிழ் இலக்கியங்கள், நவீனத் தமிழ் இலக்கியங்கள் படிக்கச் சொல்கிறீரே? ஏன் இப்பெருந் தண்டனை? மீனைப் போன்ற கண்களென்றால் தமிழருக்கே (தமிழ்நாட்டு) புரிவதில்லை. மீனாவின் கண்களில் ஜப்பானியர் பார்த்து விட்டுத்தான் போகட்டுமே?

அப்புறம் தனிநபர் தாக்குதலில் பத்ரியா? இவ்வளவு வியாக்கியானம் இதற்கு மட்டும்தானா?

அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தெ(பு)ரியவில்லை.

No comments: