Thursday, August 26, 2004

ஊர்க்குருவி (ஜீனியர் விகடன் கழுகாரின் முகமூடி!!!)

ஊர்க்குருவியார் ஒரு வாரமாய் தமிழகம் பறந்து, கையில் குடத்துடன் வந்து சேர்ந்தார். 'உஸ் அப்பாடா', என்றவுடன் தயாராயிருந்த கரும்பு ஜீஸை நீட்டினோம். ஒரே மடக்கில் காலி செய்து "எழுதிக்கொள்ளும்" என்றார்.

"என்ன கையில் குடம்? சிங்காரச் சென்னையில் நீர் பஞ்சமானதால் சைத்தான் குளத்திலிருந்து தேவாமிர்த நீரா?" வெனக் கிண்டினோம். ஊர்க்குருவியார் முறைத்தவுடன் அமைதியானோம். செய்தி முக்கியமல்லவா?

உலகத் தமிழரில் சிறந்தவர் யார் தெரியுமா? குருவியார் சவாலுக்கு அம்மா முன் கைமெய் பொத்திய தமிழக மந்திரிகளானோம்.

"வைகோ. இணைய சர்வே இது."

"அப்படியானால் குரு/அண்ணன் கலைஞர்?"

"தமிழகத் தமிழரே ஐந்தாம் இடத்தில் தள்ளி 'குலுக்கல்பட்டர்' ஆக்கிவிட்டனர்"

"குரு எட்டடியென்றால் சிஷ்யன்...?" ஐஸ் வைத்தோம். குருவியார் சிறிதே ஆசுவாசமடைந்தார்.

"பொடாவை போடா சொல்லிவிட்டதே தமிழக அரசு?" நாம் கிண்டினோம்.

"என்ன ஓய்? நக்ஸலைட் கத்தார் சொல்லவில்லையா? வாஞ்சிநாதன், பகத்சிங் போன்றோர் நேற்று தீவிரவாதிகள். இன்று தியாகிகள். உமது பப்ளிகேஷனை நீரே படிப்பதில்லையா?"

சிறிதே வெட்கமானோம். குருவியாரை சிறிதே கார்னர் செய்ய வினவினோம்,"ஆமாம் வைகோ ராஜபாளையம் சீருடை கட்வுட் பற்றிய உமது கருத்தென்ன?"

தனது முயற்சியில் சற்றும் அயராத பதில்,"சனநாயகத்தில் சகஜமப்பா! உமது சனநாயகத்தில் லல்லூ போனால் ராப்ரி. அம்மா போனால் ஓ.பன்னீர்செல்வம்."

"குருவியாரே அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன முடிச்சு?"

"அது சரி. வெங்கடேச பண்ணையார் தியாகியா?"

"குருவியாரே என்ன சொல்கிறீர்?"

"சும்மா பம்மாதேயும். பண்ணையார் என்கௌண்டர்ல பலன் என்ன? ராதிகா செல்வி திருச்செந்தூர் திமுக எம்.பி. முரட்டு பக்தரெல்லாம் சேவகம் செய்றாங்க."

"குழப்புகின்றீரே குருவியாரே?"

"புரியரவங்களுக்குப் புரியும். தடா பொடா'ன்னு பொருமுறீங்களே முதல்ல தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் எது தெரியுமா?"

"மதிமுக வா?" அப்பாவியாய் நோக்கினோம்.

கலகலவெனச் சிரித்தார் குருவியார். "அடடே ரொம்ப பயந்துட்டீங்களா? நம்ம ஜனநாயகப்படி ஆளுங்கட்சியெல்லாம் எதிர்கட்சிகளை எல்லாத்தையும் ஏதாவதொரு காரணம் காட்டி தடை செய்யணும்." புரியாமல் விழித்தோம்.

சப்ஜெக்ட் மாற்ற வேண்டி,"மதுர நியூஸ் ஏதும் உண்டா?" என்றோம்.

சினிமா ஜிகிடி (இளைய தளபதி விஜய்யின் படம் மதுர) அறியாத குருவியார், "ஓ...ஜெயலஷ்மி நியூஸ் ஏராளமாயுண்டு. கேளும். காக்கி சட்டைகளின் காமாக்னி பட்டவர்த்தனமாய் தெரியுது." இது பற்றி இராமேஸ்வரம் நிர்விலா கிட்ட கேட்டேன். "இதுவரை இந்திய சிப்பாய்களோட (குறிப்பா மணிப்பூர்) பெண்கொடுமை (வன்புணர்ச்சி) தெரியும். ஆனால் போலீஸ¤மா? தமிழ்நாட்டுல சட்ட ஒழுங்கு கேடுன்னு சொல்லிட்டு இந்திய ராணுவம் வந்துட்டா எங்க கற்புக்கு என்ன பாதுகாப்பு?", அப்படின்னு அவங்க கேட்டப்போ குன்றிப்போய்விட்டேன். நிதர்சனம் சுட்டது. "காக்கிச்சட்டைய்யும் ஆலீவ் உடையானதோ?", கவித்துவமானார் குருவியார்.

"என்ன இப்படி சொல்லிவிட்டீர். பங்களாதேஷை உருவாக்கவில்லையா நம் சிப்பாய்கள்? பலனென்ன இன்று? பார்டர் போர்சை பலி க(கொ)ண்டார். நதி பங்கீடு கூடாதென்றார். வேலியெதற்கென்றார். பெண் எழுத்தை (தஸ்லிமா நஸ்ரீன்) தடை கண்டார். சரி அதெல்லாம் விடும். உமது நவீன கவித்துவத்திற்கு விடைதான் என்ன?", அப்பாவியாய் கேட்டோம்.

"கணிதத்துக்கென்ன என்ன முக்கியம்? மெஜாரிட்டிதானே? எல்லாம் கணித ஆட்டமல்லவா? நீர் சொல்லும் 40,000 பெரிசா 5,00,000 பெரிசா?"

"வாழ்க்கை வயசுன்னா 5,00,000 வகுப்பில ரேங்குன்னா 40,000!", லாஜிக் திறமைமையைக் காட்ட குருவியார் மறுபடி காட்டமானார்.

மறுபடி பேச்சை மாற்ற,"சரி சரி வெளிநாட்டு விவகாரமுண்டோ?"

கடுப்பு மாறாத குருவியார் சொன்னார்,"சும்மா ஆரியன் மாதிரி பேசாதீர்".

லேட்டஸ்ட் அமிதாப்பச்சன், பிபாஷா பாசு பட வில்லனாய் நினைத்துவிட்டாரோ? "குருவியாரே நான் திராவிடன். என் மூக்கை (இந்திரா மற்றும் ஜெயவர்த்தனே மூக்கு போலல்லாமல்) நல்லா பாருங்க." என்றோம்.

"சும்மா இந்தியன் மாதிரி பேசாதீர். திராவிடனாய் பேசும்."

"அப்போ இந்தியன்னா (டைரக்டர் சங்கர் படமாய் நினைத்து) ஆரியனா குருவியாரே? கமலஹாசன் சொந்த ஊர் பள்ளத்தூர் தெரியுமா? திராவிடன்னா யார் தமிழன் மட்டுமா? திராவிடர்னா மலையாளி, கன்னடர், தெலுங்கரும் அடங்குவாரென எமது வரலாற்று ஆசிரியர் சொன்னாரே? அப்படின்னா காவேரியில ஏன் கர்நாடகம் தண்னீர் விடல? ஒரு காலத்துல கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டுல தமிழன்(?) குண்டு வைக்கப்போறதா பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதே? இதெல்லாம் ஏன்? கிருஷ்ணா நீர் ஏன் தமிழ்நாட்டுல பாயவில்லை? தமிழ்நாட்டுக்காரங்களை பட்டி'ன்னு ஏன் மலையாளிங்க ஏசுறாங்க?", கேள்விகளின் நாயகர்களாய் மூச்சிறைத்தது எமக்கு.

"வெப்பு தாங்கலை உமக்கு. இந்தா குடியும் என்னோட நீர்மோர். ரொம்பப் பேசினா பெரிய ஆளானதா நினைப்பா?"

பறந்துபோக எத்தனித்த குருவியார்க்கு கதவைத் திறந்தோம்.

ஆஹா...இந்த ஊர்க்குருவி போல் எத்தனை உயரப் பறக்க எத்தனித்த பருந்துகளோ இந்த நாட்டிலே?

கும்மென்று காற்றடித்தது கதவங்களைத் யாம் திறந்ததும்.

அப்புறம்தான் குருவியார் கொண்டு வந்து வைத்த குடத்தை நோக்கினோம்.

அடடே எத்தனை எத்தனை தீபங்கள்!!! அதுவும் இந்தக் காற்றுக்கு ஒன்று கூட அணையவேவில்லையே!!!

ஓ...அவைதான் குடத்தினுள்ளே இன்னும் இருக்கின்றனவல்லவா?

2 comments:

rajkumar said...

mikavum suvaiyaaka irukirathu

Anonymous said...

ÌÕŢ¡÷ À¾¢ø¸û ͼî ͼ þÕ츢ýÈÉ. «ôÀʧ «Å¨Ã ¦¼øÄ¢, ¸÷¿¡¼¸ ÜôÇ¢ Àì¸Óõ ¦¸¡ïºõ ÀÈì¸î ¦º¡øÖí¸û. ¦¼øĢ¢ø þó¾ò ¾¡Ê측Ãâý ¾¨Ä¢ø ²Ðõ Ò¾¢Â ¦¸¡õÒ Ó¨Çò¾¢Õ츢Ⱦ¡ ±ýÀ¨¾ô À¡÷òÐ ÅÃ¡øÖí¸û.

«ýÒ¼ý
º.¾¢ÕÁ¨Ä